Wednesday 30 April 2014

பரசுராமன்

பரசுராமன் காஷ்மீர் அழகுநகர் மலர்தலையுலகு ஸ்ரீநகர் அழகுநதி அல்லஃநந்தா! பாமீர் பள்ளத்தாக்கு மானஸசரவம் அல்லஃநந்தன் பரசுராமன் பரசுராமன்: பரசுராமனுக்குப் பல பெயர்கள் உண்டு; சில - முசுகுந்தன், விச்சிக்கோ, வைச்சிரவசு, நன்னன், பொறையன், திரையன், கணையன், கணைக்கால் இரும்பொறை, மாறீசன், மாடன், மாடப்பன், மாடேசன், மகிடன், இந்திரன், வஜ்ரகன், வஜ்ரநந்தி, சந்திரமௌளி, பிம்பிசாரன், பீஷ்மன், அசோகன், துர்யோதனன், அசுவத்ஆமான், முக்கண்ணான், கறைமிடற்றண்ணல், பிறைநுதலான், ஏறூர்ந்தான், பூக்கேழ் ஊரன், நெய்தல்நாடன், உத்தரன், துருவன், மனு, காசியப்பன், நக்கன், மகாவீர், தீர்த்தங்கரன், ஆதிரையான், கணிச்சி, மோரியன், மௌரியன், செஞ்சடைவானவன், . .. . நந்தர்கள், நீர்ப்பூசல் குறித்துப் பல தொல்தமிழ்ப்பாடல்கள் உள்ளன. அல்லஃநந்தா என்ற ஒரு அலெக்சாந்தன்; ஆரியவரசன் பிரகத்தனின் உதவியுடன் சிந்துப் பகுதியைக் கைப்பற்றினான். பிரகத்தனின் மனைவியுடன் புணர்ந்து ஹெலன் என்ற சத்தியவதியைப் மகளாகப் பெற்றான். சத்தியவதியைப் போரசின் மகன் சந்திரகொற்றனுடன் புணரவைத்துச் சந்திரகொற்றனுக்கு மணம்செய்துவைத்தான். தனது முன்னோன் அல்லஃநந்தாவால் வென்றெடுக்கப்பட்ட சிந்துப்பகுதியை ஆரியவரசன் பிரகத்தனுக்குக் கொடுத்தான். சந்திரகொற்றனின் தங்கை பிரிதாவுக்குத் திருமணப்பரிசாகக்கொடுக்கப்பட்ட காசியைத் தனதாக்கிக் கொண்டான். சத்தியவதியோ திருமணத்துக்கு முன்னரே பராசரன் என்ற மற்றொரு அந்நியனைப் புணர்ந்து வியாசனைப் பெற்றதை மறைத்துவிட்டாள். அக்காலத்தில் நாடுகள் பெண்ணுக்குரியதாகவே கருதப்பட்டன; ஆண்கள்- தந்தை, உடன்பிறந்தோர், தாய்மாமன், மகன் போன்றோர் முறையே அப்பெண்ணுக்குரிய நாட்டின் பாதுகாவலர்களாக இருப்பர். சந்திரகொற்றனின் மகன் கரவேலன் மீது குற்றம்சுமத்தி நாடுகடத்தினான். சத்தியவதியின் தாய்மாமன் விசுவாமித்திரனையும் நாடுகடத்திவிட்டான். சந்திரகொற்றனின் தங்கை பிரிதாவுக்கு நாட்டின்மீது எந்த உரிமையும் கொடுக்க முடியாது எனப் பிடிவாதம் செய்து; தனது மகள் சத்தியவதிக்குப் பிறக்கும் மகனுக்கே சந்திரகொற்றனின் நாடுகள் சொந்தம் என உறுதிமொழியையும் சந்திரகொற்றனிடம் பெற்றிருந்தான் அல்லஃநந்தா. அன்றுமுதலே பெண்கள் தங்களது மேன்மையையும் மதிப்பையும் இழந்தனர். ஆண்வழிச்சமுதாயம் உருவாக்கப்பட்டது. அலஃநந்தாவின் மகள் சத்தியவதி என்ற ஹெலனுக்கும் சந்திரகொற்றனுக்கும் பிறந்ததாகக் கருதப்படும் பிம்பிசாரன் என்ற பரசுராம துர்யோதனன்; தனது தாய்மூலமாக நாட்டைப் பெற்றான். இவனது சிற்றப்பனே மாபாரத விதுரன்; போரசுக்கும் அரேபிய அடிமைப் பெண்ணுக்கும் பிறந்ததால் சூத்திரனாக; சந்திர குலத்தவனாகக் கருதப்பட்டான். இவனது மகனே செழியன்; செழியனின் மகனே யயாதி. சந்திரகொற்றனின் தங்கை பிரிதாவை திருமணம் செய்திருந்த சூரியகுலச் சோழன் இளஞ்சேத்சென்னி; கரிகால்சோழன் என்ற மகனையும் நல்லியற்பாவை என்ற மகளையும் பெற்றிருந்தான்; மனைவி பிரிதா என்ற ப்ருந்த= துளசியின் நாட்டை இழந்து தெற்கே சென்று ஒரு நாட்டை உருவாக்கி வாழ்ந்தனர். முன்னரே சத்தியவதிக்குப் பிறந்த வியாசனால் உருவாக்கப்பட்ட சோழநாட்டுக்குக் காவலனாக ஒரு வீரன் தேடப்பட்டான். அச்சோழநாடே சீத்தநாடு- சீத்த= பண்படுத்தப்படாத; நிலத்தை உழுது பண்படுத்தியதால் கிடைத்த நாடே சீத்தை எனப்பட்டது. அதற்கு நடத்தப்பட்ட சுயம்வரம்= போட்டியில் விசுவாமித்திரருடன் சென்று பலரையும் வென்ற இராமன்= கரிகால்சோழன் ஆட்செய்யும் உரிமையப் பெற்றான். சோழநாட்டையும் கைப்பற்ற விசுவாமித்திரனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்த அல்லஃநந்தா என்ற வசிட்டன்; தனது பேரனும் வளர்ப்புமகனுமான பரசுராம முசுகுந்த துர்யோதனனை ஏவிக் கரிகால்சோழனின் தங்கையைப் புணர்ந்து கெடுக்கச் செய்தான். அந்தப் பெண்ணை மணந்துகொள்வதாக நடித்துச் சேத்சென்னி ஆண்டுவந்த தொண்டைநாட்டைச் சீதனமாக= பரிசனமாகப் பெற்றுக்கொண்டான். ஆயினும் திருமணத்தின்போது பாணிக்கிரணத்துக்கு வராமல் ஏமாற்றினான். இந்தத் தகாத செயலால் வசிட்ட அல்ஃநந்தாவுக்கும் பரசுராமனுக்கும் மனவேற்றுமை ஏற்பட்டது. இந்நிலையில் பரசுராமன் தன்னை இந்திரனாக அறிவித்துக்கொண்டு சோழநாட்டின்மீது வரிவிதித்தான். இதனால் சேத்சென்னி தனது மகன் கரிகால்சோழனை இந்திரனாக்க முயன்றான். அதற்கான வேள்வியை அல்லஃநாந்தா என்ற யமதக்கினியின் துணையுடன் செய்த யாகத்தில் பலியிடப்பட இருந்த பசுவை அல்லது குதிரையைப் பரசுராமன் கவர்ந்து சென்றான். இதனால் வேள்வி தடைப்பட்டது. மீண்டும் வேள்விசெய்ய முயன்றபோது தன்னால் கெடுக்கப்பட்டு நிறைசூலியாக இருந்த கரிகால்சோழனின் தங்கையை யாககுண்டத்தில் வீசி; சோழநாடும் தனக்கே உரியது எனப் பூசலிட்டுச் சோழரை நாடுகடத்தித் தண்டணை விதித்தான். சோழநாட்டைச் சத்திரியனல்லாத விதுரனுக்குக் கொடுத்தனர். விதுரன் தனது மகன் செழியனை அரசனாக்கினான். செழியனைத் துணையாக்கிக்கொண்ட பரசுராம மாறீசன் இலங்கையைக் கைப்பற்றிச் செழியனுக்குக் கொடுத்துவிட்டுச் சோழநாட்டையும் தன்வசப்படுத்தி இந்திரனாக மதுரையில் வாழ்ந்தான். பரசுராமன்மீது வெறுப்புற்ற நல்லியற்பாவை; அவளது அண்ணன் கரிகால்சோழனின் துணையுடன் போரிட்டுப் பரசுராமனைத் துரத்தியடித்தாள். இந்நிலையில் செழியனுக்குத் துணையாக மாறீசனாக இருந்து சோழநாட்டை ஆட்சிசெய்வதற்கான ஆரங்களையும் மணிமுடிகளையும் கைப்பற்றிய செழியன் இலங்கையில் மறைந்து வாழ்ந்தான். தண்டனைக்காலம் முடிந்தபின்னரும் நாட்டை ஒப்படைக்காத இராவண செழியன்மீது கரிகால்சோழ இராமனும் அவனது தங்கை மகன் செங்குட்டுவ இலக்குவனும் போர்தொடுத்து வென்று சோழநாட்டை மீண்டும் பெற்றனர். இன்றைய ஒடிஸ்சா நகருக்கு ஓடிய பரசுராமன் அங்கும் தனது ஆட்சியை நிறுவிக்கொண்டு மகேந்திரமலையில் சோழருக்கு எதிராகச் செயல்பட்டான். இதனை எதிர்த்த சந்திரகொற்றனின் முதல்மனைவியின் மகனான கரவேலன் பரசுராம பிம்பிசாரனை அங்கிருந்து விரட்டியடித்தான். தப்பிச்சென்ற பரசுராமன் காஷ்மீரில் தனது முப்பாட்டன் அலெக்சாந்தனால் கைப்பற்றப்பட்ட அல்லஃசாந்திரியா எனப் பெயரிடப்பட்ட நாட்டைப்பெற்று ஒரு தலைநகரை நிறுவித் தனது பாட்டன்மாரின் நினைவாக வாழ்ந்துவந்தான். இந்த அலெக்சாந்தன் சந்திரகொற்றனின் தந்தை போராஸுடன் போரிட்டுக் கைப்பற்றியதுதான் சிந்துப்பகுதியும் காஷ்மீர் நகரமும். சூரியகுலச் சோழருடன் பலமுறை போரிட்டுத் தோல்வியுற்றதாகத் தொல்தமிழ்ப் பாடல்கள் குறிப்பிட்டிருந்த போதிலும் சோழர் எவரும் பரசுராமனைக் கொலைசெய்ய விரும்பவில்லை. காரணம் பரசுராமனால் கெடுக்கப்பட்ட தமிழ்ப்பெண் நல்லியற்பாவையின் நலன் கருத்தியே எனத் தெரிகிறது. பாவையும் அமணத்தில் சேர்ந்து துறவுமேற்கொண்டு தீர்த்தங்கரியாக வாழ்ந்தாள். அதனை எதிர்த்த பரசுராமன் மகாவீரனாக ஆரியவரசன் பிரகத்தனின் துணையுடன் தேர்தல்நடத்தித் திர்த்தங்கரப்பதவியைக் கைப்பற்றினான். செங்குட்டுவனும் பரசுராமனை வென்றிருந்தபோதிலும் கொலைசெய்ய விரும்பாமல் விட்டுவிட்டதைக் காண்கிறோம். ஆனால் வடமொழிநூல்கள் பிம்பிசாரனை அவனது மகன் அஜாதச்சத்ரு பட்டினிபோட்டுக் கொன்றதாகக் குறிப்பிடுகின்றன. பாவையும் பரசுராம முசுகுந்தனை நீக்கித் தனிமையில் தனது மகன் செங்குட்டுவனின் துணையுடன் சோழரின் போர்த்தெய்வம்- கொற்றவையாக வாழ்ந்து பரசுராமனுடனும் போரிட்டதாகப் பல பாடல்களும் மாபாரதமும் குறிப்பிடுகின்றன. மாபாரதம் என்பது ஒரு தொகுப்புநூல். முதலில் ஜெயம் என வியாசனால் இயற்றப்பட்டு 8000 பாடல்களுடன் தமிழில் இருந்தது. அதனை அழித்துப் பலமுறை மாற்றியும் சேர்த்தும் திருத்தியும் 196 000 பாடல்களுக்குமேல் பெருக்கிவிட்டனர். மாபாரதம்-வனபருவம்."ஜமதக்கினி முனிவருக்கு ஐந்துபுதல்வர்கள் உண்டு; கடைசி மகனே பரசுராமன். [இத்தகவல் சரியானதல்ல], தங்களது தந்தையின் கட்டளைப்படி நான்கு புதல்வர்கள் ரேணுகாவின் தலையை வெட்டிக்கொண்டுவர மறுத்துவிட்டதால் மனம் பேதளிக்கும்படி முனிவன் சபித்துவிட்டான், இதனால் பரசுராமன் ரேணுகாவின் தலையை வெட்டி எடுத்துவர நதிக்கரைக்குச் சென்றான், தலையை வெட்டிக்கொண்டுவந்து ஜமதக்கினியிடம் ஒப்படைத்தான். தனது ஆணையை நிறைவேற்றிய பரசுராமனுக்கு இரண்டு வரங்கள் தர ஒப்புக்கொண்டார். அதன்படி தனது சகோதரர்களை பழையநிலைக்குத் திரும்பிவர வேண்டினான், அது நிறை வேற்றப்பட்டது. அடுத்ததாக ரேணுகாவை உயிர்ப்பிக்க வேண்டினான், இதற்கு அவளது உடல்தேவைப்பட்டது. நதிக்கரைக்கு தேடிச்சென்ற பரசுராமன் திகைத்துப்போனான்; ரேணுகாவின் உடல் காணப்படவில்லை." (இதனால் தடுமாறிய பரசுராமன் ரேணுகாவைப்போன்ற தோற்றம்கொண்ட அவளது தங்கையும் கரிகால்சோழனின் மனைவியுமான அங்கலம்மா= இலக்குமியின் தலையைத் தனது பரசு என்னும் வஜ்ராயுதத்தால் வெட்டி உடலை எடுத்துச்செல்ல முயன்றான். இதனைக் கண்டு திகைத்த சிறுமியரும் பிறரும் தடுத்தனர். சினமுற்ற பரசுராமன் ஏழு கன்னிப்பெண்= கன்னிமாையும் தனது பரசு என்னும் கருவியால் தாக்கிக் கொன்றான். உடலை எடுத்துச்சென்று சமதக்கினியிடன் ஒப்படைத்தான். உடலைக் கண்ணுற்ற ஜமதக்கினி ரேணுகாவின் உடல் அல்ல என்பதை அறிந்தவுடன் பதற்றமடைந்தார்; ஆயினும் துணைவி ரேணுகாவின் தலையுடன் உடலை ஒட்டவைத்தும் உயிர் கொடுக்க முடியவில்லை. நதிக்கரையில் பரசுராமன் நடத்திய கொலைவெறித் தாக்குதலால் அச்சமுற்ற பலரால் செய்தி பரவியதால் சினமுற்ற கூட்டம் சமதக்கினியின் குடிலுக்கு விரைந்தது. சந்தடியைக் கேட்ட ரிஷி தனது புதல்வர்களை மறைந்து ஓடிவிட உத்தரவிட்டார். சமதக்கினியைச் சோழநாட்டின் மக்கள் கொலைசெய்தனர்) மாபாரதம்- சாந்திபருவம். 'எனது தந்தைக்குத் தெரியாமல் பசுவைக் கவர்ந்து கொண்டனர்,' எனப் பரசுராமன் சினமுற்று அர்ச்சுனனின் 1000 கைகளை வெட்டினான். அர்ச்சுனனின் மகன் இதற்குப் பலி வாங்கினான். பரசுராமன் 'திமிர் மூர்க்கத்தனம் படைத்த அவனுடைய (இளஞ்சேத்சென்னியின்) புதல்வர்கள்தான் எனது தந்தையைக் கொன்றார்கள்' எனச் சினமுற்றான். காஞ்சிப்புறாணத்தில் காஞ்சிநகரில் உள்ள கோயில்களைப்பற்றிய தகவல்கள் உள்ளன. அவற்றில் "பரசுராம சுரம்" என ஒருகோயில் காஞ்சிக்கு அருகில் திருமால்பூரில் பல்லூரில் உள்ளது. [குடிமல்லத்திலும் ஒரு பரசுராம சுரம் என்ற கோயொல் உள்ளது] பரசுராமனின் செயலாக ஒரு பாடல் காஞ்சிப்புராணத்தில்: " முனிவன்முனி வன்மழுவாள் மணிபோலி வாய்ந்த சினவெம்படை வேந்தர்தமை செருவிற் படுத்துக் கனலன்ன செழுங்குருதிக் கயநீர் இறைத்திட்டு இனமன்னு பிதிர்க்கடன் ஆற்றிமெய் இன்பமுற்றான்" என பரசுராமன் தனது தாத்தா சமதக்கினி ரிஷியை இழந்ததால் சினமுற்று அரசரைக் கொலைசெய்து 'செழுங்குருதிக் கயநீர் இறைத்திட்டு' தர்பணம் கொடுத்ததாகப்பாடல் குறிப்பிடுகிறது. மாபாரதம்- ஆதிபருவம்: "இக்குரு (சமதக்கினி- பிருகு) மோச்சமடைந்தபிறகு அவருடைய வம்சாவழியினர் வரியநிலையை அடைந்தனர். பிருகுவின் குடும்பத்தாரிடம் ஏரளமான சொத்துக்கள் இருப்பதை அறிந்ததனால் தானம்கேட்டனர். இதற்கு பயந்து தங்கள் செல்வத்தை மண்ணுக்குள் புதைத்து வைத்தனர், ஒருசிலர் கொஞ்சமாகக் கொடுத்தனர். ஒருசமயம். ஒரு சத்திரியன்; பிருகுவின் வீட்டில் மண்ணைத் தோண்டியபோது; மண்ணுக்குள் செல்வம்?(செல்வமா பெண்களின் பிணங்களா?) புதைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். இதனை அறிந்த பிற சத்திரியர்கள் கூடிப் பிருகுவம்சத்தாரின் குழந்தைகள் முதல் அனைவரையும் கொலைசெய்தனர். பயந்து ஓடிய பிருகுக்கள்மீது; எப்போதுமே அவர்களுக்கு வெறுப்பு இருந்தது. கர்ப்பிணிப் பெண்களும் விதவைப் பெண்களும் மலைகளுக்கு ஓடிவிட்டனர் (பரசுராமன் முன்னர் ஓடிச்சென்ற சேரல மலையாலநாடு) இதனை அறிந்த ஆயுர்வான் (பரசுராமன்) எல்லா [ஆசீவக]ஜீவராசிகளையும் அழித்தொழிக்கச் சபதம் பூண்டு தியானம் மேற்கொண்டான். ஆனால் பிருகுக்களின் பித்ருக்கள்; 'சத்திரியர்களை பலிவாங்குவது நோக்கமாக இருக்கக்கூடாது, முதுமை வாட்டுகிறபோது சத்தியர்களால் கொலை செய்யப்படுவதையே நாங்கள் விரும்பினோம், புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்வம் பிருகுக்களலேயே சத்திரியர்களுக்குக் காட்டிக்கொடுக்கப்பட்டது, தங்கள்மீது சத்திரியர்கள் கோபம்கொண்டு கொலை செய்யப்பட்டு மோச்சமடைவே நாங்கள் விரும்பினோம், தற்கொலை செய்துகொள்ள விரும்பாமலே இப்படிச்செய்தோம்' என்றனர். இதனால் அடங்காத கோபத்தை ஆயுர்வான் நீருக்குள்(கரிகாலனின் படையுடன் போரிட்டான்) செலுத்தினான்." [நீருக்குள் செலுத்தினான் என்பது தன்னால் திரட்டப்பட்ட படையினரைக்கொண்டு சத்திரியர்களை ஒழிக்க வலிமையுடன் ஈடுபட்டான் என்பதையே குறிக்கும்] மாபாரதம் - வனபருவம்: "பரசுராமன் நாட்டைவிட்டு மலைகளுக்கு ஓடிவிட்டான். ஒரு சமயம் விசுவாமித்திரரின் பேரன் பரவாசு- ரைபியனின் புதல்வன், ஒரு சபையில் பரசுராமனைப் பழித்து "[செழிய இராவணனின் மகன்] யயாதியின் நகரத்தில் நடைபெற்ற வேள்விக்கு வந்திருந்த பிரதர்மனும், ஏனையோரும் சத்திரியர்கள் இல்லையா? உன் சபதத்தை நீ நிறைவேற்றவில்லை; இந்த சபையில் வீனாகஜம்பமடித்துக் கொள்கிறாய். வல்லமைமிகுந்த சத்திரியர்களுக்குப் பயந்துதான் நீ [இமையத்தின் காஷ்மீர்] மலைகளுக்கு ஓடிவிட்டாய். இப்போதுபார், சத்திரிய இனம் நூற்றுக்கணக்கில் பெருகிவிட்டது" என இடித்துரைத்தான். இதனால்; இயல்பாகவே முன்கோபக்காரனான பரசுராமன் வெகுன்டெழுந்து ஆவேசத்தோடு வெளியேறினான்." மாபாரதம்: பாடல் 29-190 ஆவது அத்தியாயம்- வனபருவம்: "இந்த உலகம் முழுவதுமே விரசாலர்களால் மாற்றப்பட்டு யாகங்கள், வேள்விகள், புனிதமான சடங்குகள், சமய அனுஸ்டானங்கள் அனைத்தும் அற்றுப்போய்விடும்." பாடல்-59: "விரசாலர்களால் ஒடுக்கப்பட்ட பிராமணர்கள் அச்சத்தால் நடுங்கி, தங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையோ? என உணர்ந்து, துக்கத்தோடும், துயரத்தோடும், மனவேதனையோடும் உலகம் முழுவதும் சுற்றித்திரிந்து அலைந்தார்கள்." மாபாரதம் - ஆதிபருவம். "மலைகளில் மிகச் சிறந்த மகேந்திரமலையில்(காஷ்மீரின் அல்லஃநந்தா நதிக்கரையில்) ஜமதக்கினியின் மகன் (பரசுராமன்- சவூதி அரேபிய முகம்மத்தியரின் படைகளைத் திரட்டினான்) தவம் செய்தான்" மாபாரதம்-ஆதிபருவம்;"[இந்தியாவுக்குள் இருந்த பரசுராமனின் தாய்வழிச்சொந்தங்கள்]ஆத்திரி பிராமணர்கள்; கடலில் சிறுநீர் கழித்து, உப்புநீராக்கியதாகவும், தலஜஹாசைச் சேர்ந்த சத்திரியர்களை பிராமணர் தலைவனான ஆயுர்வான் (பரசுராமன்) அழித்ததாகவும், பிராமணர், [வேளிர்= வேல்படையினர்]தண்டகர்களை விரட்டியதாகவும் போர்ப்பயிற்சி பெற்றுப் பிராமணர் தேர்ந்து விட்டதாகவும், தேவர்கள் (மலைநாட்டு வேளிர் பிரிவினர்) மீது சிலமுறை போர்தொடுத்து வென்றதாகவும்" தகவல்கள் குறிப்பிடுகின்றன. பரசுராமனால் சேரலம் கைப்பற்றப்பட்டதைக் காண்கிறோம். ஆத்ரிபிராமனர் கடலில் சிறுநீர் கழித்து உப்புநீராக்கியதாகக் குறிப்பிடுவது மிகவும் உட்பொருள் கொண்டது. கடல் என்பது சோழர்களின் வேளிர்படையைக் குறிக்கும். படைவீரர்களுக்கிடையே குழப்பத்தை விளைவித்து, சுரா மற்றும் சோமபாணம் என்ற போதைப்பொருளைக் கொடுத்து வலிகுன்றச் செய்து, பிரிவினையைத் தோற்றுவித்துப் பரசுராமனின் துணையுடன், சண்டை சச்சரவுகளல் இழிவடைச்செய்து ஒருசிலபிரிவினரைத் தங்களுக்கு ஆதரவாக்கிக்கொண்டனர் என்பதையெ புராணமொழியில் வெளிப்படுத்துகிறது. இல்லையேல் கடலில் சிறுநீர் கழித்து உப்புநீராக்கியதாகாக் குறிப்பிடுவது பொருளற்றதாகிவிடும். பிராமணரின் சூழ்ச்சியால் அப்போதே வேளிர்குல மக்களை இரு பிரிவினராக்கிவிட்டனர் என்பதைக் காண்கிறோம். இப்போரில் பரசுராமன் தனது சூழ்ச்சிக்குப் பலியான படையினரையே தனக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொண்டான். பரசுராமனால் கைப்பற்றிச்செல்லப்பட்ட படையினரையே செங்குட்டுவன் முருகனாக- அர்ச்சுனனாக இமையத்தின் அல்லஃநந்தா நதிக்கரைக்குச் சென்று இமையவன்- பரசுராமனைத் தோற்கடித்து மீட்டுவந்தான். தோற்றுப்போன பரசுராமன் தனது பாட்டனின் எகிப்து மற்றும் அரபுநாடுகளுக்கு ஓடிவிட்டான். அங்கிருந்து மீண்டும் படைதிரட்ட முயன்றதை அறிந்த சோழர்கள் செங்குட்டுவனின் தலைமையில் கரிகால்சோழன் மற்றும் கரவேலன் ஆகியோரும் நேரடியாக அரேபியாவுக்குச் சென்று அறத்தை நிலைநாட்ட முயன்றனர் எனத் தெரிகிறது. பரசுராமனின் நடத்தைகளை அறிந்த அரபுநாட்டினரும் யூதரும் அவனைத் தங்களிடமிருந்து ஒதுக்கி நாடுகடத்தினர். செங்குட்டுவனை ஏற்றுக்கொண்ட அரபுநாட்டினரும் ரோமனியரும் கரிகால்சோழனையும் கரவேலனையும் மதிப்புடன் நடத்தினர் என்பதைப் பழந்தமிழ்ப்பாடல்களில் காண்கிறோம். ஆயினும் திரும்பிவரவில்லையே என்று பெண்கள் புலம்புவதாகவும் சில பாடல்கள் குறிப்பிடுகின்றன. செங்குட்டுவனை ரோமனியர் கிரித்துவாக- கர்த்தனாக ஏற்று எகிப்துநாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான யூதரை விடுவித்தனர். மதினாவுக்கு ஓடிய பரசுராமன் தனக்கு ஆதரவாக மீண்டும் படைதிரட்டி அரபுநாடுகளில் தன்னை நிறுவிக்கொள்ளப் போராடினான். அதில் வெற்றிபெற்ற நிலையில் படைதிரட்டிவந்து இந்தியாவிலும் பல நகரங்களைக் கைப்பற்றியதோடு கொலை கொள்ளைகளில் ஈடுபட்டுத் தனது மக்களின் ஆட்சியைப் பல நகரங்களில் நிறுவிவிட்டான் எனத் தெரிகிறது. அதன்பின்னர் என்னென்னவோ நடந்து; வரலாறு அழிக்கப்பட்டுவிட்டதால் முழுமையாக அறிய இயலவில்லை. காளிதாசர் பாடல்வடிவில் கொடுக்கும் தகவல்கள்: [விளக்கம்- வே. ஸ்ரீ. வேங்கடராகவாச்சார்யர்]: ஸுப்ரமண்யரும் பரசுராமரும் இதில் இடம்பெற்றுள்ளனர். குமரன் தனது பாணத்தால் க்ரௌஞ்சமலையைத் துளைத்தார்; அதனால அவருக்குத் தாரணர் - துளைப்பவர் ; என்ற பெயர் உண்டானது. பொறாமைகொண்ட பரசுராமரும் தனது பாணத்தால் பெரிய துளையை உண்டாக்கினார். இந்தத் த்வாரத்தின் வழியாகவே அன்னங்கள் ஏரியை வந்தடைந்தன. அதனால் அத்வாரம் ஹம்சத்வாரம் எனப்பட்டது. கைலாச மலை அடிவாரத்தில் மானஸரோவர் ஏரி உள்ளது. பணிப்பாறைகள் கலந்து உருவாகும் அதிலிருந்து நான்குதிக்குகளில் நான்கு நதிகள்; தெற்கிலிருந்து கங்கை, மேற்கிலிருந்து சட்லஜ், கிழக்கிலிருந்து பிரமபுத்ரா, வடக்கிலிருந்து சிந்து ஆகியவை உருவாகின்றன. மேகத்தைத் தூதுவிடும் யட்சன்: மேகமே! மானஸசரோவருக்குச் செல்லும் அன்னங்களுக்கு நுழைவாயிலாக இருப்பது பரசுராமனால் உருவாக்கப்பட்ட பாதை. [அன்னங்கள் என்பது முகம்மதியரைக் குறிக்கும்; அந்நாளில் இங்கிருந்து ஓடிச்சென்ற பரசுராமன் அரேபியாவின் கடற்கரையை அடைய எங்கெங்கோ அலைந்து சென்றுள்ளான். ஆனால் தனது தந்தை பரசுராமனைத் துரத்திச்சென்ற சோழர்களுக்குக் கடல்வழிகள் தெளிவாகத் தெரியும் என்பதால் மிக எளிதில் அரேபியாவை அடைந்தனர் எனத் தெரிகிறது. பின்னர் அரேபியரும் முகம்மதியரும் செங்குட்டுவன் சென்றவழியை அறிந்து அதனையே பயன்படுத்திப் பரசுராமனுக்கு ஆதரவாக இந்தியாமீது போர்தொடுத்தனர் எனத் தெரிகிறது. மிண்டும் பரசுராமன் போர்தொடுத்தபோது சோழர்கள் என்ன ஆனார்கள் என்கிற தகவல்கள் எங்குமே இல்லாமல் போய்விட்டது. எனவே முகம்மதியரால் சிதறடிக்கப்பட்ட இந்தியத் தமிழர் அனைவரும் பல நாடுகளுக்கும் சிதறி ஓடிவிட்டனர் எனத் தெரிகிறது. மாபாரதத்தில் லோமசர் தருமபுத்திர= கரிகால்சோழனிடம் கூறியது; இங்குதான் எல்லா ரிஷிகளுக்கும்- யயாதிக்கும் அக்னிக்கும் காசியப்பருக்கும் சம்வாதங்கள் நடந்தன. இந்த மலையின் நடுவில்தான் பரசுராமர் தனக்கான வசிப்பிடத்தை அமைத்துக்கொண்டார்] முகம்மதியர் காஷ்மீரைத் துருவமாக[மையமாக] அமைத்துக்கொண்டனர். பரசுராமனுக்குத் துருவன் என்ற பெயரும் உண்டு. இத்துருவமே புவியின் தலைப்பகுதியாக [பிராமணருக்கானதாக]வும் பின்னர் மத்திய நாடுகள் சத்திரியருக்கானதாகவும் அதன்கீழ் உள்ள நாடுகள் வைஷியருக்கானதாகவும் மூன்றாகப் பிரிக்கப்பட்டது. இலங்கையோ பாதாளம் எனப்பட்டது. முகம்மதிய பிராமணருக்குப் பிறந்தோர் உயர்பிறவிகளாக அறிவிக்கப்பட்டனர். சத்திரியர் அனைவரும் பிராமணர்க்குப் பிறந்தோராக அறிவிக்கப்பட்டனர். சத்திரியர்க்குப் பிறந்தோரை வைஷியராக அறிவித்து வைஷியரிடையே பிராமணரால் தேர்வுசெய்யப்படுவோரே சத்திரியராக்கப்பட்டனர். வஷியருக்குப் பிறந்தோரில் பலரையும் சூத்திரியராக அறிவித்துக் கொடுமைப்படுத்தினர். இதனையே ரிக்வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் உள்ள புருஷசூத்தம் விரிவாகக் குறிப்பிடுகிறது. ரிக்வேதம்: புருசசூக்தம்; 10ம் மண்டலம் 90 முதலாக: 1. புருடனை அசீவகனாக; ஆயிரம் தலைகளுடனும் ஆயிரம் கண்களுடனும் புவியின் எல்லாப்பகுதிகளிலும் பரவி; சீவர்களின் காவலனாக இருப்பதாகத் தெரிவிக்கிறது; அவனால் முன் நிருத்தப்பட்ட கடவுளராக(மன்னர்களாக- காவலர்களாக) செயல்பட்ட பலரையும் குறிப்பிடுகிறது. 10: "அந்த யஞ்ஞத்திலிருந்து குதிரைகளும்(சேனாதிபதிகளும்)இருவரிசைப்பற்களுள்ள விலங்குகளும்(காலாற் படைகள்) பிறந்தன; பசுக்கள்(அரசன் முதல் ஆண்டிவரையிலான அனைவரின் தேவைகளைப்வளைப் பூர்த்திசெய்யும் வணிகரும் விவசாயிகளும்) தோன்றின; ஆடுகளும்(அடிமைப்பணியாளர்கள்) பிறந்தன. 12: "பிராமணன் அவனது வாயானான், ராசன்யன்-வேந்தன்அவனது கைகளானான், தொடைப்பகுதி வைசியனாயிற்று, பாதங்களிலிருந்து சூத்திரர் பிறந் தனர்" எனவும்;இவற்றுக்கு மாறாக "அவனது மனத்திலிருந்து சந்திரனும், கண்களிலிருந்து சூரியனும், வாயிலிருந்து இந்திரனும் அக்கினியும், சுவாசத்திலிருந்து வாயுவும் பிறப்பிக்கப்பட்டனர்" என ஐவரைக் குறிப்பிட்டு; மேலும் முரண்படுவதாக:"அவனது நாபியிலிருந்து காற்றும், சிரசிலிருந்து வானமும், பாதங்களிலிருந்து புவியும், செவிகளில் இருந்து திசைகளும் பிறந்தன" எனவும்; தேவர்கள் பிறப்பித்ததாகவும் குறிப்பிடுகிறது. மேலும் "இச்சக்திகள் பழைய சாத்தியர், தேவர்; வசிக்கும் வானுலகுக்குச் சென்றன" எனவும் குறிப்பிடுகிறது. 13: "அவனது மனத்திலிருந்து சந்திரனும், கண்களிலிருந்து சூரியனும், வாயிலிருந்து இந்திரனும் அக்கினியும், சுவாசத்திலிருந்து வாயுவும் பிறப்பிக்கப்பட்டனர்" என ஐவரைக் குறிப்பிட்டு; மேலும் முரண்படுவதாக: 14: "அவனது நாபியிலிருந்து காற்றும், சிரசிலிருந்து வானமும், பாதங்களிலிருந்து புவியும், செவிகளிலிருந்து திசைகளும் பிறந்தன" எனவும்; தேவர்கள் பிறப்பித்ததாகவும் குறிப்பிடுகிறது. மேலும்: 15: (அலெக்சாந்தனின் கிரேக்க பிராமணர்) "தேவர்கள் புருடனைப் (சந்திரகொற்றனின் தந்தை போரசை) பலி உயிராகக் கட்டிப்போட்ட போது; நெருப்பைச்சுற்றிலும் ஏழு கழிகளை நட்டனர்; மூவேழு சமத்து விறகுகள் உருவாக்கப்பட்டன" எனக்குறிப்பிடுகிறது. இதன்படி அலெக்சாந்தன் தனதுபெண் ஹெலனைச் சந்திரகொற்றனுக்கு மணமுடித்துத் தனது கட்டுப்பாட்டிற்குள் அனைத்து நாடுகளையும் கொண்டுவந்து மூன்று மண்டலங்களாக்கி ஒவ்வொன்றிலும் ஏழுதிசைக் காப்பாளர்களை உருவாக்கி; எட்டாவது தலைமைத் திசைகளில் தன்னையும் தனக்குக் கட்டுப்பட்டோரையும் நியமித்துள்ளான். மேலே ரிக்வேதம் குறிப்பிட்ட தகவல்களே மாமல்லபுரம் சிற்பத்தொகுதியில் பகீரதன் அல்லது அர்ச்சுனன் தபசு எனத் தவறாகக் குறிப்பிடப்படுவதில் உள்ளவை. நடுவில் கீழ்ப்பகுதியில் ஒற்றைத் தலையுடன் ஒரு நாகம், அதற்கும் மேலே மூன்று தலைகளுடன் ஒரு நாகமும் அதற்கும் மேலே ஏழு தலைகளுடன் ஒரு நாகமும் காட்டப்பட்டுள்ளன. அல்லஃசாந்தனின் சதியையை உணர்ந்து எதிர்த்த சோழரை அடக்கியாள; வசிட்டனும் முசுகுந்த பரசுராமனும் சதிசெய்து; முசுகுந்தனின் முகரிப் பகுதியைப் பிரகத்தன் தாக்கியதாக நடித்துச் சோழருடன் நற்புக்கொண்டு தமிழருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக நடித்து விராத்தியஸ்தோமாச் சடங்குசெய்து; ஆரியர் பல்லவராகவும் பிராமணர் அந்தணராகவும் மாறித் தொண்டைநாட்டில் குடியமர்த்தப்பட்டுப் பிரகத்தனுக்கும் பிறருக்கும் தமிழ் பயிற்றுவிக்கப்பட்டது. மௌரிய- மோரிய முசுகுந்த பரசுராமன் பிராமணவேடமிட்டுக் கரிகால் சோழனின் தங்கை பாவையைக் கெடுத்து நாசமாக்கினான். வசிட்டனோ இளஞ்சேத் சென்னியைத் தலைமைக் காவலனாக அமர்த்தித் தனது மகன் சமதக்கினியைப் புரோகிதனாக்கி வேள்வியாகம் செய்து ஏழுதிசைக்காப்பாளர்களை அமர்த்தினான்; இவர்களுள் கரிகால்சோழன்=சுதாசனும் மயன்=விசுவகர்மாவும் அடங்குவர். பதினெட்டு வேளிர்குலத்தாருள் எழுவரை மட்டும் தங்களுடன் சேர்த்துக்கொண்டு சதிகளில் ஈடுபட்ட யூத பிராமணரின் தலைவன் அல்ல்ஃநந்தாவும் சேனாபதியாக அவனது வளர்ப்புமகனும் பேரனுமான பரசுராம பிம்பிசாரனும் மக்களி ஆட்டிப்புடைத்தனர். இந்த எழு வேளிருமே வள்ளல்களாகக் காட்டப்பட்டு சோழருக்கெதிராகச் செயல்பட்டதையும், கரிகால்சோழனின் தங்கை நல்லியற்பாவை- உமை- கொற்றவை- தீர்த்தங்கரிக்கு எதிராகச் செயல்பட்டதையும் பல தொல்தமிழ்ப்பாடல்களும் காஞ்சிப்புராணமும் விரிவாகக் குறிப்பிடுகின்றன. எஞ்சிய பதினொரு வேளிரும்கூடக் கரிகால்சோழன் தண்டிக்கப்பட்டபோது மதுரையைக் கைப்பற்றிய பரசுராமனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதும் உண்டு. பின்னர் அவர்கள் அடக்கப்பட்டு மீண்டும் சோழரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் பாடல்கள் குறிப்பிடுகின்றன. பரசுராமனாலும், ஆதரவான பூதேவராலும் பெண்டிர்க்கு நேர்ந்த அவலங்களைக் கண்டு சகிக்கமுடியாத தமிழ்மக்களே நாட்டைவிட்டுச் சிதறி ஓடினர். தென்கோடியில் மட்டுமே பரசுராம பிம்பிசாரப் பிராமண பூதேவரின் கொடுமைகள் தடுத்து நிருத்தப்பட்டன. ஆயினும் குடும்ப அமைப்பை விட்டுக்கொடுக்காத தமிழரின் குடும்பங்களில்; காஞ்சியிலும் தொண்டைநாட்டிலும் பிறக்கும் முதல்பெண்ணைக் கோயிலுக்கு= பூதேவ பிராமணருக்குத் தொண்டுசெய்யக் கொடுத்துவிடவேண்டும் என்ற விதியைக் கொண்டுவந்தனர். இதனை ஏற்காத தமிழ்க்குடும்பங்களில் பலவும் மேலும் தெற்கே காவிரியாற்றைக் கடந்து ஓடி; தங்களைக் காத்துக்கொள்ள வலிமையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர் என வரலாற்றில் காண்கிறோம். ஆயினும் இங்கும் அங்குமாக வாழவழியற்ற, சிதறிப்போன, ஆண்களின் பாதுகாப்பை இழந்த, போர்களில் கணவனை இழந்த குடும்பங்கள் தட்டுத்தடுமாறும் நிலையை அடைந்து சில கோயில்களில் சேர்ந்து வாழவேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்ட பரிதாபமும் நிகழ்ந்தது. கல்விகற்கும் உரிமை முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டுப் பிறமொழிகளின் வளர்ச்சி ஊக்கப்படுத்தப்பட்டதால் தென்னகத்தில் பலபகுதிகளில் தமிழின் பயண்பாடு முற்றிலுமாக நின்றுபோனது; வடபகுதிகளில் தமிழே இல்லாத நிலை உருவாக்கப்பட்டது. அமணரிலும் மேம்பட்டோராகத் தங்களை அறிவித்துக்கொண்ட ப்ர அமணர்; மகாவீர்= பரசுராமனின் துணையுடன் பூதேவர்கள் என ஒரு பிரிவினரைத் தேர்வுசெய்தனர். பெண்கள் அனைவரும் சூத்திரராகவும் மதச்சடங்குகள் வேள்வியாகங்கள் போன்றவற்றில் பங்கேற்க முடியாதோராகவும் மாற்றப்பட்டனர். எந்தப் பெண்ணாக இருந்தாலும் பூதேவருக்குத் தன்னைஅர்ப்பணித்தாகவேண்டும். பூதேவரின் விருப்பப்படி நடந்து குழந்தைகளைப் பெற்று அடிமைகளாக வளர்த்தாக வேண்டும். இந்த விதி பின்னர் முதல் பெண்குழந்தைக்கு மட்டும் என மாற்றப்பட்டது. ஆயினும் முதல் கன்னிகழிப்பைச்செய்யும் உரிமை பூதேவனுக்கு மட்டுமே உண்டு என விதிசெய்தனர். அதர்வேதம் முகம்மதியருடையது எனவும் குறிப்பிடுகின்றனர். அல்லஃநந்தன் தனதுபெண் ஹெலனைச் சந்திரகொற்றனுக்கு மணமுடித்துத் தனது கட்டுப்பாட்டிற்குள் அனைத்து நாடுகளையும் கொண்டுவந்து தலை இடை கடை என மூன்று மண்டலங்களாக்கி ஒவ்வொன்றிலும் ஏழுதிசைக் காப்பாளர்களை உருவாக்கி; எட்டாவது தலைமைத் திசைகளில் தன்னையும் தனக்குக் கட்டுப்பட்டோரையும் நியமித்துள்ளான். இதில் கடை எனப்பட்ட பகுதியே தென்னகம்; இங்குதான் வஜ்ரநந்தி= பரசுராம= பிம்பிசார= மகாவீர் கடைச்சங்கத்தை நிறுவித் தமிழை வளர்ப்பதாக அறிவித்து எல்லாத் தமிழ்நூல்களையும் ஏடுகளையும் கைப்பற்றித் தங்களது விருப்பம்போல மாற்றவும் சிதைக்கவும் நீக்கவும் அழிக்கவும் செய்தனர். எதிர்த்த புலவர்களில் பலர் கொலைசெய்யப்பட்டனர். அப்பர் என்ற திருநாவுக்கரசு போன்று விதிகளை ஏற்றபுலவர்களின் துணையுடன் புதிதுபுதிதாகப் பல பாடல்களை இயற்றவும் அகத்தியர்களின் அகத்தியம் மற்றும் பல ஆன்மிக சித்த மருத்துவ வானியல் கணித நூல்களை அழித்து மாற்றித் தொல்காப்பியத்தையும் களவியலையும் இயற்றினர். அதர்வவேதம்-தொகுதி(முயர்)-1-5.17-8-9.-பக்கம் 280. "ஒருபெண்ணுக்குப் பிராமணன் அல்லாத 10 முன்நாள் கணவர்கள் இருந்தாலும், ஒரு பிராமணன் அவளை மணந்து கொண்டால், அப்பிராமணன் மட்டுமே அவளுடைய கணவனாக இருப்பான். அவள் ஒரு க்ஷத்ரிய ராஜனையோ வைஷியனையோ மணந்திருந்தாலும், அவளுக்கு அவர்கள் கணவர்களக இருக்கமுடியாது." மாமல்லபுரத்தில் இரண்டுபக்கங்களில் இருந்து கங்கையை நோக்கிச் செல்லும் இரு பகுதிகளில் பல இனத்தவரும் விலங்குகளும் பறவைகளும் சிறு விலங்கினங்களும் பலவரிசைகளா மேலிருந்து கீழாகக் காட்டப்பட்டுள்ளன. நடுவில் கீழ்ப்பகுதியில் ஒற்றைத்தலையுடன் ஒரு நாகம், அதற்கும் மேலே மூன்று தலைகளுடன் ஒரு நாகமும் அதற்கும் மேலே ஏழு தலைகளுதன் ஒரு நாகமும் உள்ளன. சிற்பத்தோகுதியின் மேல்வரிசையில் கங்கைக்கு வெகுதூரத்தில் ஒரு விலங்கும் பின்னர் ஒரு சிங்கமும் காட்டப்பட்டுள்ளன. அவையே [யூத]அலெக்சாந்தர்களைக் குறிக்கும். அதன்பின்னர் இருவர் தலைமுதல் துணியால் போர்த்துக் கொண்டுள்ளதைக் காண்கிறோம். அவர்களே முகம்மதியர்கள். அடுத்து வெகுதூரம்வரை வெட்டப்பட்டிருந்த புடைச்சிற்பங்கள் நீக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. அடுத்ததாக இடம்பெற்றுள்ள உருவே பரசுராமன். இடுப்புவரை மட்டுமே காட்டப்பட்டுள்ள அவனுக்கு முன்னர் ஒரு சுவர் தடையாக இருப்பதும் காட்டப்பட்டுள்ளது. சிற்பத்தொகுதியில் பிற எல்லா மாந்தரும் முழுமையாகக் காட்டப்பட்டுள்ள நிலையில் பரசுராமன் மட்டும் இருப்புவரைமட்டும் காட்டப்பட்ட காரணத்தைக் கண்டறியவேண்டும். காரணம் என்னவாக இருக்கும்? பரசுராமனுக்கு முன்னால் சந்திரனை ஆலவட்டமாகத் தாங்கிய செழியன் அல்லது அவனது தந்தை விதுரன் முழுமையாகக் காட்டப்பட்டுள்ளான். அந்த வரிசைக்குக் கீழ் வரிசையில் செங்குட்டுவன் முருகனாகவும் அர்ச்சுனனாகவும்; தனது தந்தை இந்திரனான பரசுராமனை அடக்கி; அவனிடமிருந்து சோழநாட்டின் தண்டகப் படையினரை மீட்டு வேல்வடிவில் தனது கைகளில் தாங்கி நிற்பதைக் காண்கிறோம். முருகனால் ஏற்பட்ட இனக்கலப்பே அல்லஃநந்தா நதி கங்கை நதியுடன் கலந்ததாக மாமல்லபுரம் சிற்பத்தொகுதி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயினும் பரசுராமனும் செங்குட்டுவனும் இருக்கும் பாறையின் கீழ்வரிசையில் இருந்த புடைப்புச்சிற்பங்கள் பலவும் நீக்கப்பட்டு வெறுமையாக இருப்பதையும் காண்கிறோம். எனவே சோழர்கள் என்ன ஆனார்கள் என்பதை அறிய இயலாத நிலையில் உள்ளோம். தொல்தமிழ்ப் பாடல்களிலும் இதுகுறித்த தகவல்கள் நீக்கப்பட்டதோடு உலகவரலாறும் சிதைக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். பொதுவானைந்திய பாரத வரலாறே மேலே சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றுக்காண சான்றுகள் பல்வேறு வடிவங்களில் படிமங்களாக; உலகின் பழைமையானநூல்கள் அனைத்திலும் சான்றுகளாகச் சிதறிக்கிடக்கின்றன. அவற்றிலிருந்துதான் சரியான- உண்மையான உலக வரலாற்றைக் கட்டமைத்தாக வேண்டும்.

No comments:

Post a Comment