Thursday 5 February 2015

புராணங்களில் நமது தமிழரின் வரலாறு!

புராணங்களில் நமது தமிழரின் வரலாறு! விஷ்ணுபுராணம், மார்க்கண்டேயபுராணம்; “அயோத்தியின் மன்னான அம்பரீசன்(இளஞ்சேத்சென்னி) ஒரு யாகத்தை நடத்திக்கொண்டிருந்தபோது இந்திரன் யாகப்பலியை எடுத்துச் சென்றான்” எனக்குறிப்பிடுகிறது. இந்திரன்-முசுகுந்தன்- பரசுராமன், யாகம் நடத்திய புரோகிதன் சமதக்கினி- ஒரு அலக்சாந்தன், யாகப்பலியை எடுத்துச்செல்ல உதவியவன் பரசுராமன். “இத்தகைய அபசகுணமான நிகழ்ச்சி ஏற்பட அரசனின் சீர்குழைந்த நிர்வாகம்தான் காரணம் என்றும், ஒரு மனிதனைப் பலிகொடுத்துத்தான் பரிகாரம் தெடவேண்டும் என்றும் குரு(சமதக்கினி) கூறினார்.” முசுகுந்தன்- பரசுராமன் பரசுப்பதவியை - இந்திரப்பதவியை; வசிட்ட சமதக்கினியிடம் வேண்டிப் பெற்றுவிட்டான், இந்த அம்பரீசன்(இளஞ்சேத்சென்னி)யாகத்திலும் பரசுராமன் இந்திரப்பதவி வகித்திருப்பான். பரசுராமனுக்குத் தெரியாமல் யாகப்பிராணி கடத்தப்பட்டிருக்கமுடியாது. இருக்கு வேதத்தில் இடம்பெறும் சுனச்சேபனைப் பலிகொடுக்கத் தேர்வு செய்தனர். சுனசேபனும் சமதக்கினியின் மகனே. உண்மை வெளிப்பட்டுவிட்டதால் வசிட்டனால் பலிகொடுக்கத் தேர்வுசெய்யப்பட்டிருக்க வேண்டும். “மன்னனின் மோசமான ராச்சிய பரிபாலனத்தால்தான் வேள்விப்பலிப்பசு காணாமல் போனது எனப் புரோகிதன் சமதக்கினி கூறினான். இந்நிலையில் அம்பரீசன்(இளஞ்சேத்சென்னி) சமதக்கினியுடன் ஆலோசனை செய்து சமதக்கினியின் புதல்வர்களில் ஒருவனைப் பலி கொடுக்க முயன்றனர்.( இதற்கான காரணம் என்ன என்பதைக் குறிப்பிடாமல் மறைத்துவிட்டனர்; காரணம் முசுகுந்த- பரசுராமன் வேள்விப்பலியைக் கடத்திச்சென்றதே) தனது மூத்தமகனை இழக்க சமதக்கினி விரும்ப வில்லை. பரசுராமனைக் கொடுக்க ரேணுகா விரும்பவில்லை. இரண்டாவது மகன் சுனசேபன் தன்னைப் பலிகொடுக்க ஒப்புக்கொண்டான்.(இவன் ரிக்வேதத்திலும் இடம்பெறுகிறான்)இதற்கு ஈடாகப் பொன் பொருட்களும், பசுக்களும், ஆடை, ஆபரணங்களும் கொடுக்கப்பட்டன. புஷ்கரம் வழியாகச் செல்லும்போது; சுனசேபன் தனது மாமனான விஸ்வாமித்திரைக்கண்டு, நடந்ததை எடுத்துரைத்தான். விஸ்வாமித்திரன் சுனசேபனை காப்பாற்றுவதாக உறுதியளித்துத் தனது மக்களில் ஒருவனைப் பலியாகும்படி கட்டளையிட்டான். அவர்களுடன் வாக்குவாதம் நடந்தது. இறுதியில் எவனும் ஒப்புக்கொள்ளாததால் அவர்களை விஸ்வாமித்திரன் சபித்துச்சென்றான். சுனசேபனுக்கு இரண்டு மந்திரங்களை (துதிப்படல்களை) கற்றுக்கொடுத்தான். விஷ்ணுவின்- சூரியனின் பலிபீடத்தில் இம்மந்திரங்களை அக்னியிடம்(சோழனிடம்) முறையிட்டுத் துதித்தால் அம்பரீசன் (இளஞ்சேட்சென்னி) யாகம் செய்யும் இடத்தில் நினைத்தது நிறைவேறும் என உறுதி கூறினார். இதன்படி சுனசேபன் காப்பாற்றப் பட்டான்.“ இந்தயாகம் மேலும் தொடர்ந்தபோது முசுகுந்தன் -பரசுராமன் தன்னால் புணர்ந்து கெடுக்கப்பட்ட சோழன் சேத்சென்னியின் மகள் பாவையுடன் வந்ததாகவும் யாகத்தைத் தடுக்க முயன்றதாகவும் தச்சனின்- சேத்சென்னியின் மகள் தச்சணி மாகாளியாகத் தீயினின்றும் வந்ததாகவும் சிவபுராணம் போன்றவற்றில் காணப்படுகிறது. [ அப்பெண் யாககுண்டத்தில் வீழ்த்தப்பட்டதை மறைத்துவிட்டனர்]; நிறைசூலியான பாவையே யாகத்தைத் தடுக்கத் தீயில் பாய்ந்ததாகவும் ஒரு தகவல் உள்ளது; அவளே பாய்ந்தாளா? அல்லது எவரேனும் யாககுண்டத்தில் வீசினரா? பாவைக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இவ்வளவு காலமும் காக்கப்பட்டுவிட்டது. இனி .. .. தக்ஷனின் யாகம் குறித்துப் பலவிதமான சிவபுராணக் கதைகள் உள்ளன. வரலாற்றில் தக்கனின்மகள் பெயரை `சதி' எனக் குறிப்பிடுகின்றனர். ரிக்வேதம் தச்சணி எனக்குறிப்பிடுகிறது; சதி என்பது பொதுவாகத் தீயில் விழுந்த பெண்களைக் குறிக்கும் சொல்லாக இருக்கக்கூடுமோ? ஐயம் தவிர்க்க முடியாதது. “தக்ஷன்(இளஞ்சேட்சென்னி)தனது பெண்ணைக் காணச்சென்றபோது தடைப்பட்டுக் கோபமுற்று; விஷ்ணு, பிரம்மன் போன்ற கடவுளரைத் தலைவர்களாக்கி யாகம் நடத்த முற்பட்டான்; தேவர், இருடியர்க்குத் தகவல் அனுப்பினான். ததீசி முனிவர், தக்ஷனைச் சிவனுக்கு(முசுகுந்த பரசுராமனுக்கு) அவிர் பாகம் கொடுக்க வேண்டினார். தக்ஷன் மறுத்துவிட்டு யாகத்தைத் தொடர்ந்தபோது, (இதற்குப்பிறகு காணப்படும் தகவல்கள் நம்பத்தக்கனவாக இல்லை) தக்ஷனின் மகள் (முசுகுந்தனால் கெடுக்கப்பட்ட பாவை நிறைசூலியாக) யாகத்தை நடத்தவிடாமல் தடுக்க முயன்றாள், முடியாமல் போகவே சபித்துச் சென்றாள். மணாளனிடம் (முசுகுந்தனிடம்) யாகத்தை அழிக்கவேண்டினாள்” எனவும் உள்ளது. தக்கயாகப்பரணி: ஒட்டக்கூத்தர்இயற்றியது; வெளியிட்டவர் உ.வே. சா. (இதிில் முசுகுந்தன் சிவனோடு அடையாளப்படுத்தப்பட்டான்) யாகத்தை அழிக்க வீரபத்திரர் அனுப்பப்பட்டார். உமா தேவி மஹாகாளியை அனுப்பினாள். வீரபத்திரர் பல்லவத்தை அணிந்து (மாந்தளிர்=இளம் பல்லவர் சேனையுடன்) சென்றார்” எனவும் உள்ளது. சிவபுராணம்: "காத்த வீரியன்(கரிகால்சோழன்) யாகத்தைக் காத்தவன், இவனை ரேணுகா மோகித்தாள், ரேணுகா சமதக்கினி யின் பத்னி, இளம் சிறுமியாக இருந்தபோது, வாழைப்பழத்துக்கு - லிங்கத்துக்கு? ஆசைகாட்டி மணந்து கொண்டார்". மஹாபாரதம்-ஆதிபருவம்: (இவை பிருகு அலக்சாந்த சமதக்கினிவம்ச பிராமணர்க்கும் சேத்சென்னி மற்றும் அவரது மகன் கரிகால்சோழனின் ஞாயிற்றுச்சோழ வம்சத்தாருக்கும் நடந்த மோதல்களை வெளிப்படுத்துகின்றன). "கிருதவீரியன் (கரிகால்சோழனின் தந்தை இளஞ்சேத்சென்னி)என்ற மன்னன் இருந்தான், வேதங்களைக் கற்றறிந்த பிருகுக்கள் இவனுக்கு புரோகிதர்களாக இருந்தனர். மன்னன் இவர்களுக்குத் தாராளமாகச் சொத்துக்களை வாரி வழங்கினான்; நூற்றுக்கணக்கான பசுக்களையும் மலைமலையான பணத்தையும் இவர்கள் சம்பாதித்துவிட்டனர். [சேத் சென்னி பண்ணிய யாகத்தில் யாகப்பலி இந்திரனாகிய முசுகுந்தனால் பரசுராமனின் துணையுடன் கடத்திச் சென்றதையும், இதற்குப் பரிகாரங்கள் செய்யப்பட்டதையும் நினைவுகொள்ளவும். காத்தவீர்யார்ச்சுனன் என்பது கரிகால் சோழன், பல பெயர்களில் சமதக்கினி இடம்பெறுவான், ஔர்வன் என இராவணனும் காணப்படுவான் (ஔர்வன் தொடையிற்பிறந்த வைசியனையும் குறிக்கும்). இராவணனின் மாமனார் மயன் என்பது நாம் அறிந்ததே, கரிகால்சோழனுக்கு மகதம், அவந்தி, வச்சிர நாட்டவர்கள் கொடுத்த கொற்றப்பந்தரும், பட்டி மண்டபமும், தோரணவாயிலும் மயன் விதித்துக் கொடுத்த மரபின, எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. இராவணன்; மனைவிவழியில் இலங்கை அரசைப் பெற்றவன் எனவும் தெரிகிறது.) “சமதக்கினிக்கு அவரது துணைவி ரேணுகா; நித்திய அனுட்டானங்களுக்குத் தேவையான பசுவின் பால், நதிநீர் போன்றவற்றைக் கொடுத்து உதவிகள் செய்துவந்தாள். அதிகாலை நதிக்குச் சென்று நீராடி ரிசியின் தவவலிமையாலும் தனது கற்புத் திறத்தாலும் நதியின் மணலை ஒன்று சேர்த்துக் கும்பமாக்கி; அதில் நீர் கொண்டுவருவது வழக்கம். ஒருமுறை கிருதவீரியன் வேட்டைக்குச் சென்று திரும்பும்போது, ரிசியின் ஆச்ரமத்துக்குத் தாகசாந்திக்காக வீரர்களுடன் வந்தான். திரும்பிச் செல்லும்போது முனிவரின் பசுத் தொழுவத்தில், யாகத்தில் காணாமல்போன பசு இருப்பதைக் கண்டான். அரண்மனை சென்று மகன் காத்தவீர்யார்ச்சுனனிடம், யாகப்பசு சமதக்கினியின் ஆச்ரமத்தில் இருப்பதைக் குறிப்பிட்டான். அர்ச்சுனன் ஆச்ரமத்துக்குச் சென்று பார்த்தபோது ரிசி இல்லை. ரேணுகா மட்டுமே தனியாக இருந்தாள். காத்தவீர்யார்ச்சுனனை, ஓரை விளையாட்டின்(நீர்விளையாட்டின்)போது ஆற்றுக்கு நீர்கொண்டுவரச் செல்லும்போதெல்லாம் கவணித்திருக்கிறாள். ஆச்ரமத்தில் தனியாகக் கண்டவுடன் மனம் தடுமாறினாள்[காரணம் அந்தப்பசுவே சோழரின் வேள்வியின்போது பரசுராமனால் கடத்தப்பட்டது என்பதை அவள் அறிவாள்]. அர்ச்சுனன் கொட்டடியில் கட்டப்பட்டிருந்த பசுவை அவிழ்த்துக்கொண்டு, ரேணுகாவிடம் சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டான். அடுத்தநாள் ஓரை விளையாட்டில் ஈடுபட்டிருந்த அர்ச்சுனனைக் கண்ட ரேணுகா மனம் தடுமாறினாள். அன்று மணலைக்கொண்டு குடம் செய்ய முடியவில்லை. அச்சத்தாலும் தடுமாற்றத்தாலும் பயந்து அழுது கொண்டிருந்தாள், வீட்டுக்குத் திரும்பவில்லை.(இவளது அச்சம் இயல்பானது, காரணம் முதல் நாள் ஆஸ்ரமத்தில் அர்ச்சுனனால் பிடித்துச்செல்லப் பட்ட பசு; பரசுராமனால் கடத்திவரப்பட்டதை அறிவாள்) வெகுநேரமாகியும் ரேணுகா வராததைக் கண்ட ரிசி சினமுற்றார். தனது ஞான திருட்டியால் என்ன நடந்தது? என்பதை அறிந்துகொண்டார்.( தொடர்ச்சியாக இராவணனும் காணப்படுகிறான். மற்றொரு புராணம் குறிப்பிடுவதைக் காண்போம்) “காத்தவீரியன்(தசரதன்=உருவப்பல்தேர் இளஞ்சேத்சென்னி) ஹைகயநாட்டு மன்னன். இவனது மகன் காத்தவீர்யார்ச்சுனன் (இராமன்=கரிகால்சோழன்) பிறந்தபோது கால்கள் நடக்கமுடியாத நிலையில் இருந்தான் (இவன் “கட்டுக்களுடனேயே பிறந்தான், தேவர்களால் கட்டப்பட்டான்" என மற்றொரு புராணம் குறிப்பிடுகிறது) இந்நிலையில் [தண்டிக்கப்பட்ட ]12 வயதுக்குப்பிறகு தெய்வ அருளாலும், தத்தார்த்ரேய(கார்வேலன்= கிருஷ்ணன்)முனிவரின் ஆசியாலும் கால்கள் வலுப்பெற்றன. வலிமைமிக்கவனாக வளர்ந்துவந்தான். நர்மதை நதியில் தனது காதலியருடன்(ஓரை விளையாட்டு) விளையாடியபோது பகைமைகொண்ட இராவணன் (அரவான், ஆயுர்வான் ஔர்வன் எனவும் பலவிதமாக குறிப்பிடுகின்றனர்) அர்ச்சுனனைத் தேடி அரண்மனைக்குச் சென்று, அங்கு இல்லாததால் நதிக்கரைக்கு வந்தான். மணலில் ஒரு லிங்கம் செய்து வழிபட்டுக்கொண்டிருந்த போது, ஓரை விளையாட்டில் இருந்த அர்ச்சுனன் நதியின் நீரை வீசிவிளையாடியதால், லிங்கமும் பூசைப் பொருட்களும் நீரால் சிதைந்தன. சினமுற்ற இராவணன் அர்ச்சுனனுடன் போரிடவந்தான், அர்ச்சுனன் இராவணனைச் சிறைப்படுத்தினான். இதனை அறிந்த அர்ச்சுனனின் தாத்தா, புலத்தியர்(அகத்தியர்-புலஸ்தியர் தக்க யாகப் பரணியிலும் இடம் பெறுகின்றனர்; இந்தப்புலத்தியர் விதுரன் = வழுதி -பாண்டிய இராவண செழியனின் தந்தை=சூத்திரன் என மாபாரதம் குறிப்பிடுகிறது) கெஞ்சிக்கேட்டுக் கொண்டதால் இராவணன் விடுவிக்கப்பட்டான்.” மாபாரதம்-சாந்திபருவம்: பரசுராமன் “மன்னனின் (இளஞ்சேத்சென்னியின்) புதல்வர்கள் எனது தந்தைக்குத் தெரியாமல் பசுவை கவர்ந்து சென்றனர்.”என சினம்கொண்டான். மஹாபாரதம்-வனபருவம்: ”சமதக்கினிக்கு ஐந்துபுதல்வர்கள் உண்டு[இது பாண்டவர்களுடன் குழப்பத்தை ஏற்படுத்த இடைச்சேர்க்கையாக இடம்பெற்றது], கடைசி மகனே பரசுராமன். தங்களது தந்தையின் கட்டளைப்படி பிற நான்கு புதல்வர்கள்; ரேணுகாவின் தலையை வெட்டிக்கொண்டுவர மறுத்துவிட்டதால் மனம்பேதளிக்கும்படி சபித்துவிட்டான், இதனால் கடைசிமகன் பரசுராமன் ரேணுகாவின் தலையைவெட்டி எடுத்துவர நதிக்கரைக்குச் சென்றான், தலையை வெட்டிக் கொண்டுவந்து சமதக்கினியிடம் ஒப்படைத்தான். தனது ஆணையை நிறைவேற்றிய பரசுராமனுக்கு இரண்டு வரங்கள் தர ஒப்புக்கொண்டார் சமதக்கினி. அதன்படி தனது சகோதரர்களைப் பழையநிலைக்குத் திரும்பிவர வேண்டியது நிறை வேற்றப்பட்டது. அடுத்து ரேணுகாவை உயிர்ப்பிக்க வேண்டினான். இதற்கு அவளது உடல் தேவைப்பட்டது. நதிக்கரைக்குத் தேடிச்சென்ற பரசுராமன் திகைத்துப்போனான்; ரேணுகாவின் உடல் காணப்படவில்லை.”இதனால் தடுமாறிய பரசுராமன் ரேணுகா போன்ற தோற்றம் கொண்ட மற்றொரு பெண்ணின் தலையை வெட்டிவிட்டு உடலை எடுத்துச்செல்ல முயன்றான். (பரசுராமனால் வெட்டப்பட்ட மற்றொரு பெண்; ரேணுகாவின் தங்கையும் கரிகால்சோழனின் மனைவியுமான ஸ்ரீ ஆவாள்; இவளது தலையை வீசிவிட்டு உடலைமட்டும் எடுத்துச்சென்றான்; இத்தலையைக் கண்ட கரிகால்சோழனின் குடும்பத்தார் அதனை "அங்கலம்மா"- அங்கமில்லாத அம்மா எனக் குலதெய்வமாகக் கொண்டனர். ரேணுகாவை அந்தர/ஆந்தர மாநிலத் தோர் தங்களது குலதெய்வமாகக் கொண்டனர்) இதனைக்கண்டு திகைத்த சிறுமியரும் பிறரும் தடுக்கமுயன்றனர். சினமுற்ற பரசுராமன் பலரையும் பரசு - வஜ்ராயுதம் - மழு என்னும் கருவியால் தாக்கிக் கொன்றான். (பரசுராமன் கொலைசெய்வதைத் தடுத்ததால் கொல்லப்பட்ட ஏழுகன்னிப்பெண்கள் "கன்னிமார்" எனக் கொண்டாடப்பட்டனர்) உடலை எடுத்துச்சென்று தந்தையிடம் ஒப்படைத்தான். உடலைக் கண்ணுற்ற சமதக்கினி; ரேணுகாவின் உடல் இதுவல்ல என்பதை அறிந்தவுடன் பதற்றமடைந்தார். ஆயினும் மனைவி ரேணுகாவின் தலையுடன் உடலை ஒட்டவைத்தும்; உயிர் கொடுக்க முடியவில்லை. நதிக்கரையில் பரசுராமன் நடத்திய கொலைவெறித் தாக்குதலால் அச்சமுற்ற பலரும் திரண்டனர். நாடுமுழுவதும் செய்திபரவியதால் சினமுற்ற கூட்டம் சமதக்கினியின் ஆச்ரமத்துக்கு விரைந்தது. சந்தடியைக்கேட்ட சமதக்கினி; புதல்வர்களை மறைந்து ஓடிவிட உத்தர விட்டார். பரசுராமன் சேரலமலைநாட்டுக்கு ஓடிவிட்டான். மாபாரதம்-சாந்திபருவம்: “பரசுராமன்' எனது தந்தைக்குத் தெரியாமல் பசுவைக் கவர்ந்து கொண்டனர்,' எனச் சினமுற்று [கிருதவீர்யா]அர்ச்சுனனின் 1000 கைகளை வெட்டினான். அர்ச்சுனனின் மகன் இதற்குப் பலிவாங்கினான். சமதக்கினியைக் கொன்றான். 'திமிர் மூர்க்கத்தனம் படைத்த அவனுடைய(இளஞ்சேட்சென்னியின்)புதல்வர்கள்தான் எனது தந்தையைக் கொன்றார்கள்.' எனப் பரசுராமன் சினமுற்றான். மாபாரதம்-வனபருவம்: "பரசுராமன்(சேரல மலைநாட்டில் மறைந்துதிரிந்து)திரும்பிவந்து; தனது தந்தை, மன்னனின் புதல்வர்களால் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து அடங்காத சினமுற்றான், 'சத்திரிய இனத்தை அழிப்பேன்' எனச் சபதமுரைத்தான்."(இளஞ்சேட்சென்னியைக் கொலைசெய்தான்.) மஹாபாரதம்-ஆதிபருவம்: "இக்குரு(சமதக்கினி-பிருகு) மோச்சமடைந்த பிறகு அவருடைய வம்சாவழியினர் வறியநிலையை அடைந்தனர். பிருகுவின் குடும்பத்தாரிடம் ஏரளமான சொத்துக்கள் இருப்பதை அறிந்ததனால் தானம்கேட்டனர். இதற்குப் பயந்த பிருகு வம்சத்தார் தங்கள் செல்வத்தை மண்ணுக்குள் புதைத்து வைத்தனர், ஒருசிலர் கொஞ்சமாகக் கொடுத்தனர். ஒருசமயம்.ஒரு சத்திரியன் பிருகுவின் வீட்டில் மண்ணைத் தோண்டியபோது மண்ணுக்குள் செல்வம் புதைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். இதனை அறிந்த பிற சத்திரியர்கள் பிருகுவம்சத்தாரின் குழந்தைகள் முதல் அனைவரையும் கொலை செய்தனர். பயந்து ஓடிய பிருகுக்கள்மீது எப்போதுமே அவர்களுக்கு வெறுப்பு இருந்தது. கர்ப்பிணிப் பெண்களும் விதவைப் பெண்களும் மலைகளுக்கு (பரசுராமன் சென்ற சேரள நாட்டு மலைகளுக்கு) ஓடிவிட்டனர். இதனை அறிந்த ஆயுர்வான்(பரசுராமன்) எல்லா சீவராசிகளையும் அழித்தொழிக்கச் சபதம்பூண்டு தியானம் மேற்கொண்டான். ஆனால் பிருகுக்களின் பித்ருக்கள் இவனிடம் 'சத்திரியர்களை பலிவாங்குவது நோக்கமாகக்கூடாது, முதுமை வாட்டுகிறபோது சத்தியர்களால் கொலை செய்யப்படுவதையே நாங்கள் விரும்பினோம், புதைத்துவைக்கப்பட்டிருந்த செல்வம் பிருகுக்களலேயே சத்திரியர்களுக்குக் காட்டிக்கொடுக்கப்பட்டது, எங்கள்மீது சத்திரியர்கள் கோபம்கொண்டு கொலைசெய்யப்பட்டு மோச்சமடைவே நாங்கள் விரும்பினோம், தற்கொலை செய்துகொள்ள விரும்பாமலே இப்படிச்செய்தோம்' என்றனர். இதனால் அடங்காத கோபத்தை ஆயுர்வான் நீருக்குள்(படைவீரரைத்திரட்டச் சதி) செலுத்தினான்.” மாபாரதம்-வனபருவம்: "பரசுராமன் நாட்டைவிட்டு மலைகளுக்கு ஓடிவிட்டான். ஒரு சமயம் விசுவாமித்திரரின் பேரன் பரவாசு-ரைபியனின் புதல்வன், ஒரு சபையில் பரசுராமனைப் பழித்து இடித்துரைத்தான்; "யயாதியின் நகரத்தில் நடைபெற்ற வேள்விக்கு வந்திருந்த பிரதர்மனும், ஏனையோரும் சத்திரியர்கள் இல்லையா? உன் சபதத்தை நீ நிறைவேற்ற வில்லை. இந்தச்சபையில் வீனாகச் சம்பமடித்துக் கொள்கிறாய். வல்லமைமிகுந்த சத்திரியர்களுக்குப் பயந்துதான் நீ மலைக்கு ஓடிவிட்டாய். இப்போது பார், சத்திரிய இனம் நூற்றுக்கணக்கில் பெருகிவிட்டது” என்றான். இதனால்; இயல்பாகவே முன்கோபக் காரனான பரசுராமன், வெகுன்டெழுந்து ஆவேசத்தோடு வெளியேறினான்.” மாபாரதம்-ஆதிபருவம்: “மலைகளில் மிகச்சிறந்த மகேந்திர மலையில் சமதக்கினியின் மகன் (பரசுராமன்) தவம் செய்தான்” (மஹேந்திர மலை என்பது திருநெல்வேலியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் நான்குநெறி வட்டத்தில் திருக்குறுங்குடியில் உள்ளது, 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரியகோயிலை; நம்மாழ்வார் பாடியுள்ளார், ஸ்ரீராமானுஜரும் இங்கு வந்துள்ளார் எனத்தெரிகிறது; மகேந்திரமலை- பொதியைப்பகுதியுடன் சேர்ந்ததாகவும் இருக்கலாம், இப்பொதியைமலையை நமது புலவர்கள் இமயத்துக்கு ஈடாகப்புகழ்ந்து பாடியுள்ளனர், கபிலரும் பாடியுள்ளார் ”பொய்யா நாவில் கபிலன் பாடிய மையணி நெடுவரை” என மிகப்பரந்த பல மலைகளையும் ஆறுகளையும் கொண்டதாகக் குறிப்பிடுகின்றனர்.) மாபாரதம்-வனபருவம்: "கீர்த்தவீரியனின் மகனும் ஹைகயாசின் மன்னனுமான அர்ச்சுனன் 1000 புயங்களை உடையவன் என்று கூறப்படுகிறது.(ஆயிரத்துக்கு மேற்பட்ட அனைத்து நாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவன் என்பதைக் குறிக்கும்.)அவன் தத்தார்த்ரேயரிடமிருந்து(காமகோட்டங் காவல்-மெய்ச்சாத்தன்-கரவேல்-குந்தகுந்தாச்சாரியார்=கிருஷ்ணன்) தங்கத்தாலான வானூர்தி(செண்டு-வலிமை மிக்க வேலாயுதம்கொண்ட வேளிர் போர்ப்படை) பெற்றான். அது முன்னேறிச் செல்லும்போது அதனை எதிர்த்து யாரும் நிற்க முடியாது. இவ்வாறு அவன் தேவர்களையும், யச்சர்களையும், ரிசிகளையும் அடிபணிய வைத்தான். எல்லா உயிர் ராசிகளையும் அடக்கி ஒடுக்கினான். தேவர்களும், ரிசிகளும்; அர்ச்சுனனால் அவமதிக்கப்பட்ட இந்திர(முசுகுந்த பரசுராம)னுடன் சேர்ந்து, அர்ச்சுனனை ஒழித்துக்கட்ட ஒரு திட்டம்தீட்டினர்." மஹாபாரதம்-ஆதிபருவம்: இதில் வசிட்ட - அலெக்சாந்தருக்கும் தமிழ்ச்சோழன் விசுவாமித்திரருக்கும் நடந்த பூசல்கள் இடம் பெற்றுள்ளன, சத்திரிய பிராமணர்க்கும் தமிழ் அந்தணர்க்கும் இடையே சச்சரவுகள் நடந்துள்ளன, காரணம் பிராமணர்; தங்களுக்கு மட்டுமே தானம் பெறவும் பரிசில்கள் பெறவும், வேதங்களைக் கற்றுத்தரவும், புரோகிதராக இருந்து; வேள்வி நடத்தித்தரவும் உரிமை உள்ளது, பிறருக்கு இதில் எந்த உரிமையும் இல்லை என்றதாகும். இவை குறித்த சச்சரவுகளைத் திரிசங்கு என்னும் சத்தியவிரதனின் விவகாரத்தில்; திரிசங்குவுக்கு வசிஸ்டர் உதவ முன்வரவில்லை. அவரது புதல்வர்களை(சமதக்கினி மற்றும் நூற்றுவர் - துர்யோதனாதியர்) நாடித் தெற்குத்திசைக்கு வந்து 100 புதல்வர்களையும் வேண்டியபோது அவர்களும் உதவில்லை. இதனால், தென் புலத்துக்கு வந்து விசுவாமித்திரரை நாடினான். உதவி செய்யவும் யாகம் நடத்திக் கொடுக்கவும் விசுவாமித்திரர் ஒப்புக்கொண்டார். வசிட்டரது குடும்பம் உட்பட அனைத்து ரிசிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. வசிட்டரின் புதல்வர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்; "ஒருசண்டாளன்(வசிட்ட அலக்சாந்தனால் 12 ஆண்டுகளுக்குத் தண்டிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டவன் கார்வேலன்)யாகம் நடத்துகிறான், ஒரு சத்திரியன் [விசுவாமித்திரன்] புரோகிதனாகிறான், யாகத்தில் பலியிடப்படும் பலி உணவைத் கடவுளரும்(சத்திரிய பிராமணர் அலக்சாந்தரும் அவனது உறவினரும் பரசுராம துர்யோதனாதியரும்) ரிஷிகளும் (பிராமணர்)எப்படி உண்ண முடியும்; விசுவாமித்திரரின் ஆசியோடு ஒரு சண்டாளன் அளிக்கும் உணவை உண்டபிறகு மேன்மை மிக்க பிராமணர் எவ்வாறு (மகதம் அல்லது இமையத்தில் மேற்கு எல்லையில் உள்ள அலக்சாந்திரியா அல்லது மேற்காசிய மத்தியதரைப்பகுதி நாடுகள்)சொர்க்கத்துக்குச் செல்லமுடியும்?” எனக் கொடிய வார்த்தைகளைக் கூறினர். இதனைக் கேள்வியுற்ற விசுவாமித்திரர்[சானக்கியர் என்கிற விஷ்ணுகுபதர் எனப்பட்ட கவுடல்யர்]; வசிட்டரையும் அவரது புதல்வர் நூற்றுவரையும் சபித்தார். அவரது சாபம் [மாபாரதப்போரின் முடிவில்] பலித்தது. ரிசிகளும் பயந்துநடுங்கி யாகத்தை நடத்திக் கொடுத்தனர். இதனால் சுதாசன்(கரிகால்சோழன்) வசிட்டரைப் பதவிலிருந்து நீக்கினான். (மனுவின்சட்டப்படி[விஸ்வாமித்திரர் சாபப்படி]12 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது) மேலும் விசுவாமித்திரரைத் தனது குலகுருவாக நியமித்துக்கொண்டான்.” சத்தியாயனபிராமணம்: இதன்படி 'சுதாசன்(கரிகால்சோழன்), வசிட்டரின் புதல்வனான சக்தியை நெருப்பில் எறிந்து கொன்று விட்டான்.(இதற்கானகாரணம் தெரியவில்லை)எனினும் ரிக்வேதத்துக்கு-காத்தியாயனரின் அநுக்கிரகமணிக்கு-சத்குரு சிஷ்யர் செய்துள்ள விளக்க உரையில் உள்ளபடி, சுதாசன் ஒருயாகம் நடத்தினான், அதில் விசுவாமித்திரரும் வசிட்டரின் புதல்வர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், இதனால் கோபமுற்ற சுதாசன் சக்தியை[சமதக்கினியைக் கொன்ற மக்களின் மன்னனான கரிகால்சோழனே கொன்றதாகக் கொண்டுள்ளனர்] கொன்றான். இதனால் வசிட்டரின் குடும்பத்துக்கும் சுதாசனுக்கும் பகை நீடித்தது'. (சுதாசனின் புதல்வர் அல்லது தம்பியர் மற்றும் சோழநாட்டு மக்கள்தான் சமதக்கினியை கொன்றனர்) தைத்திரீயசமிதை: இதனை உறுதிப்படுத்துகிறது: ”வசிஸ்டர், தனது புதல்வன் சமதக்கினி கொல்லப்பட்ட பிறகு தனக்கு புத்திர சந்தானம் வேண்டி; ஏகமன்ன பஞ்சாசத்தைக் கொண்டு யாகம் செய்தார், புத்திர பாக்கியமும் கிட்டியது” என உள்ளது. கௌசிதாகிபிராமணம்: ”வசிட்டர் தனது புதல்வன் கொல்லப்பட்டபிறகு சந்ததியும் கால்நடைகளும் வேண்டி, சௌதாசர்களை(கரிகால்சோழன் மற்றும் இளஞ்சேத்சென்னியின் புதல்வர்களை)அழிக்கவும் ஒருயாகம் நடத்தினார், தாம் விரும்பியதைப் (ஒரு வாரிசை - பரசுராமனைப்) பெற்றார். சௌதாசர்களையும் வெற்றிகண்டார்” என உள்ளது. இது வசிட்டனின் அப்பட்டமான சதிச்செயலை அடிப்படையாகக்கொண்டு கரிகால் - இராமனைத் தண்டித்து நாடுகடத்திய இராமாயணத்தி அடிப்படையாகக்கொண்டது]. வசிட்டன் பெற்ற வாரிசு பராசரன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திரகொற்றனின் ஆசைமனைவி(ஹெலன்) சத்தியவதியைத் திருமணத்துக்கு முன்னரே ஒரு பராசரனுடன் புணரவைத்து வியாசனைப் பெற்றதாகவும் உள்ளது. பின்னர் அந்தச்சத்தியவதுயே மற்றொருவனைப் புணர்ந்து பிம்பிசார முசுகுந்த பரசுராமனை ஈன்றாவள்! சத்தியவதியின் புதல்வரின் மனைவியர் -அம்பிகா அம்பாலிகா ஆகியோருடன் வியாசனைப் புணரவைத்துத் திருதராட்சசனையும் பாண்டுவையும் பெற்றதாக மாபாரதத்தில் பொய்யுரைத்து பீஷ்மனைப் புகுத்தியதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் வசிட்டன் தனது மனைவி சத்தியவதியையும் அவளது தாயையும் கொண்டு சமதக்கினியையும் விசுவாமித்திரனை யும் பெற்றதாக மற்றொரு தகவலையும் வெளிப்படுத்துகிறது. சிலப்பதிகாரம்; இளஞ்சேத்சென்னியைப் பரசுராமன் கொன்றபிறகு சோழநாட்டின் நிலையை மாடலனிடம் செங்குட்டுவன் வினவியதாக; சேத்சென்னியின் மகளான பாவையின் மைந்தனே செங்குட்டுவன் என்பதை மறைத்து வரலாற்றைப்புரட்டுகிறது. “இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர், வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு செங்கோல் தன்மை தீதுஇன் றோ'என” இளஞ்சேட்சென்னியை 'இளங் கோ' எனக் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. இந்நிலையில்தான் கரிகால்சோழனும் பாவையும் பிற சோழரும் தண்டிக்கப்பட்டனர். மஹாபாரதம்-வனபருவம்: மற்றும் உத்யோகபருவம்: ”ஒருசமயம் இந்திரன் (பரசுராம முசுகுந்தன்) விருத்திரன் என்ற அசுரனக் கொன்றுவிட்டான். ஒருபிராமணனை(சேத்சென்னியை அசுரன் என ரிக்வேத மொழிபெயர்ப்பாளர்களும்; பிராமணன் எனச் சிலரும் குழப்பியுள்ளது நோக்கத்தக்கது) கொன்றுவிட்டோமே, எங்கே தன்னை பிரம்மஹத்திதோஷம்(மனுவின் தண்டனையான 12ஆண்டு) பிடித்துக்கொள்ளுமோ என்று அஞ்சி நீர்நிலைகளில்(இமையத்தின் மேற்கு அடிவாரத்தில் அலக்சாந்தனால் அமைக்கப்பட்ட அல்லஃநந்தா - மானசரோவர் ஏரியில்)போய் மறைந்து கொண்டான். சோழ - பாரதநாட்டுக்கு அரசனில்லாததனால்; ரிசிகளும் தேவர்களும் [விதுரனின் மகன்] நகுச(பாண்டியசெழிய)னை அனுகித் தங்களுடைய இந்திரனாக (சோழநாட்டுக்கும் அரசனாக)இருக்கும்படி வேண்டினர், (சத்திரியனல்லாத சூத்திரன் என்பதால்) அதற்கான அதிகாரம் தனக்கு இல்லை என முதலில் மறுத்தான். மிகவும் வற்புறுத்தியதால் பொறுப்பை ஏற்கச்சம்மதித்தான். (சிலப்பதிகாரம் இவனை; ”......இளையர் ஆயினும் பகை அரசு கடியும் செருமான் தென்னர் குலமுதல் ஆகலின்........” எனக்குறிப்பிட்டு; இப்பதவியைப் பெற்றதாகக் குறிப்பிடுகிறது. மனிமேகலையில் மேலும் விரிவான தகவல்கள் உள்ளன) இந்த உன்னத இடத்தைப் பெறும்வரை ஒழுக்கசீலனாக, பண்பாளனாக இருந்தான். அதிகாரப்போதை தலைக்கேரியதும் அறவே மாறிவிட்டான். சிற்றின்பம், கேளிக்கைக் கூத்துக்களுக்கு அடிமையாகிவிட்டான். ஒருசமயம் இந்திரனின் மனைவி (கரிகால் சோழனின் சோழமண்ணின் வளமை மற்றும் அதனை ஆள்வதற்கான ஆரம் - சீதை) இவனது கண்ணில் பட்டுவிட்டாள். இந்திராணியின் அழகில்மயங்கி மனதைப் பறிகொடுத்தான், எப்படியாவது அடையவேண்டும் என்று ஆசைப்பட்டான். இவனது தகாத ஆசையை அறிந்த இந்திராணி தேவர்களின் குருவான பிரகசுபதி அங்கிரசுவிடம் (கார்வேல் -அகத்தியரிடம்) சரணடைந்தாள். காப்பாற்றுவதாக உறுதியளிக்கப்பட்டது [இத்தகவலே கார்வேலனின் அகத்திக்கும்பா- அகத்தியர்குகைக் கல்வெட்டுக்களில் 13 ஆண்டுகளுக்குப்பிறகு; இந்திரன் - வஜ்ரகரனால் தொல்லைக்கு ஆளான தனது உறவுப்பெண்ணை - கரிகால்சோழனின் தையையும் அவளது குழந்தை செங்குட்டுவனையும் காக்கவேண்டி தெற்கே வந்து மூவர்கூட்டணியைச் சிதைத்து சிங்களர் ஆரியர் மற்றும் மோரியரை வென்று செழிய இராவணனை அடக்கி மணியாரங்களையும் முத்தாரங்களையும் மீட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது]. இவரது தலையீட்டைக் கேள்விப்பட்ட நகுசன் எல்லையில்லாச் சீற்றம் அடைந்தான். தேவர்கள் அவனிடம் 'அடுத்தவன் (நாட்டை - சீதையை)மனைவியை அபகரிக்கநினைப்பது நெறிகெட்டசெயல்' என்றனர். அவனோ இதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. 'தான் ஒன்றும் இந்திரனைவிட (பிராமணர்களால் அவ்வப்போது இந்திரனாகக் கருதப்பட்ட பல அலக்சாந்தருள் ஒருவன்) மோசமான நடத்தை கொண்டவனல்ல, ஒரு ரிசியின் தர்மபத்தினி அகலிகையை அந்த ரிசி உயிரோடு இருந்த காலத்திலேயே ஒரு இந்திரன் கற்பழித்துக் கெடுத்தான், அப்போது நீங்கள் ஏன் அவனைத் தடுக்கவில்லை? இன்னும் எத்தனையோ காட்டு மிராண்டித்தனமான நடத்தைகளில் ஈடுபட்டான், நயவஞ்சகமான, நெறியற்ற, நீசத்தனமாக நடந்துகொண்டான், அப்போ தெல்லாம் நீங்கள் தடுக்கவில்லை' என்று வாதிட்டான். ரிசிிகளால் பதில்கூற முடியவில்லை. ரிசிகளிடம் இந்திராணியை [இந்த இந்திராணி யாரென்பது புதிரானது! காரணம் முசுகுந்த பரசுராமனின் அந்தப்புரத்தில் எத்தனையோ அழகிகள் இருந்துள்ளனர்; ஆயினும் இப்பெண் ஒரு சோழநாட்டுப்பெண் எனத்தெரிகிறது.] அழைத்துவரும்படி உத்தரவிட்டான். வேறுவழியின்றி இந்திராணியை அழைத்துவரச் சென்றனர். ஆனால் பிரகசுபதி (அகத்தியர் - கார்வேலர்) அவளைக் கைவிடத்தயாரில்லை. அவர் யோசனைப்படி இந்திராணி நகுசனிடம்: 'கணவர் [பரசுராமன்] எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்கும்வரை பொறுத்துக் கொள்ளவேண்டும்' என வேண்டினாள். நகுசன் இதனை ஏற்றுக்கொண்டு அவளை அனுப்பி வைத்தான். தனது கணவனைத் தேடிக்கண்டுபிடிக்க உபசுருதியின்(இரவுக்காலத்தேவதை, ரகசியங்களை வெளியிடும் தெய்வம்) உதவியோடு தேடினாள். அவன் வடக்கே ஒரு மாகடலுக்குள் இருக்கும் ஒருகண்டத்தின் ஏரியில், வளர்ந்துவரும் தாமரைமலரின் தண்டில் மிகவும் நுற்பமான வடிவத்தில் மறைந்திருப்பதைக் கண்டுபிடித்தாள். தனது கணவனிடம், மீண்டும் இந்திரப்பதவி பெறும்படியும், தன்னைக் காப்பாற்றும்படியும் வேண்டினாள். நகுசன் மா பெரும்(முசுகுந்த பரசுராமனின் படைகளைக் கைப்பற்றியதோடு ஆரியவரசன் பிரகத்தனின் உதவியையும் பெற்று) வல்லமை படைத்தவனாகிவிட்டதால் உடனடியாகத் தலையிடுவது இயலாது எனக்கூறினான். மேலும் அவனை பதவிலிருந்து இறக்க ஒரு உபாயத்தைக் கூறினான். அதன்படி 'தெய்வீக எழில் கொழிக்கும் ஒரு சிவிகையை [ஆரிய]ரிசிகள் தாங்கிவர, அதில் அமர்ந்து வந்தால் அவனது இச்சைக்கு இனங்குவேன்' என நகுசனிடம் கூறினாள். மேலும் 'தேவர்கோனே, நீங்கள் விஷ்ணுவோ ருத்திரனோ [அ]சுரர்களோ அல்லது ராச்சச[சிங்கள]ர்களோ இதுவரை பயன் படுத்தியிராத ஒரு சிவிகையில் பவனிவர, அதனை [ஆரிய]ரிஷிகள் தங்கிவர நான் காணும்படியாக நீங்கள் வரவிரும்புகிறேன். அதனைக் கண்டு என் உள்ளம் களியுவகை கொள்ளும்' என்றாள். இதனைக் கேட்டு, நகுசன் மனம் குளிர்ந்தான். 'ரிஷிகள் என்னைச் சுமந்துவர வைக்கும் எனது பராக்கிரமம் சாதாரனமானதல்ல, முக்காலத்திலும் வலிமையை ஆராதிப்பவன், போற்றுபவன் நான். இந்த உலகம் எனது கோபத்தைத் தாங்கமுடியாது. எல்லாம் என்னையே சார்ந்துள்ளது, ஆதலால் ஓ! தேவதேவி! உன்விருப்பத்தை நிச்சயமாக நிறைவேற்றுவேன். ஏழு முனிவர்களும், அனைத்துப் பிராமணர்களும் என்னைச் சுமந்துகொண்டு வருவார்கள், அப்போது என் அழகு ராணியே! எனது பெருமிதத்தை, எனதுமாண்பை, எனதுபுகழ் ஒளியை, எனது வன்மையை, எனதுவெற்றிப்பொலிவைப் பார்த்துத் தெரிந்துகொள்' என்றான். (இந்நிலையில்) அகத்தியமுனிவர்[கார்வேலன்] மீண்டும் இந்திரனை(பரசுராமனை)ப் பதவியில் அமர்த்த ஒரு யாகம் நடத்தப்போவதாகவும் அதில் நகுசனை அழிக்கப்போவதாகவும்' கூறினார். (இராமாயணப்போர் நடந்தது. வெற்றிபெற்றபிறகு) இந்திரனை அழைத்துவர அக்னி அனுப்பப்பட்டான். இந்திரன் வந்துசேர்ந்ததும் அவன் இல்லாதபோது (போர்நடந்த போது) நாட்டில் நடந்ததையெல்லாம் பிரகசுபதி (அகத்தியர்-கார்வேலன்) அவனிடம் விவரித்தார். பின்னர் யமன், சோமன், வருணன், குபேரன் ஆகியோருடன் இந்திரன் விவாதித்துக்கொண்டிருந்தபோது, அகத்தியர் அங்குவந்து 'இந்திரனது பகைவன்அழிந்தான்' என்னும் செய்தியை கூறிப் பாராட்டி; அது எவ்வாறு நிகழ்ந்தது என விவரித்தார்.” மாபாரதம் பாண்டியனை 'நகுஸன்' எனக்காட்டியதோடு; 'முக்காலமும் அறிந்தவனின் பக்தன்' என அவனே குறிப்பிடுகிறான் 'முசுகுந்தனின்? பக்தன்'. இந்த நகுஷனின் கதைக்கு முன்னர், இளை - முசுகுந்த பரசுராமனால் ஏமாற்றப்பட காதலி - கரிகால்சோழனின் தங்கை நல்லியற்பாவையின் மைந்தன் ப்ரூரவன் - வேலவன் - செங்குட்டுவனின் கதை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பரசுராம முசுகுந்தன் ஆட்சியைத் திரும்பப்பெற்றதாகக் குறிப்பிடுவதற்கு மாறாக இராமனே ஆட்சிபெற்றதாக இராமாயணம் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது! இதுகுறித்த தகவல்களை வெளிப்படுத்தும் பாடல்கள்; ரிக்வேதத்திலும் பழந்தமிழ்ப்பாடல்களிலும் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் சிதைக்கப்பட்டுள்ளன.

புராணங்களில் நமது தமிழரின் வரலாறு!

புராணங்களில் நமது தமிழரின் வரலாறு! விஷ்ணுபுராணம், மார்க்கண்டேயபுராணம்; “அயோத்தியின் மன்னான அம்பரீசன்(இளஞ்சேத்சென்னி) ஒரு யாகத்தை நடத்திக்கொண்டிருந்தபோது இந்திரன் யாகப்பலியை எடுத்துச் சென்றான்” எனக்குறிப்பிடுகிறது. இந்திரன்-முசுகுந்தன்- பரசுராமன், யாகம் நடத்திய புரோகிதன் சமதக்கினி- ஒரு அலக்சாந்தன், யாகப்பலியை எடுத்துச்செல்ல உதவியவன் பரசுராமன். “இத்தகைய அபசகுணமான நிகழ்ச்சி ஏற்பட அரசனின் சீர்குழைந்த நிர்வாகம்தான் காரணம் என்றும், ஒரு மனிதனைப் பலிகொடுத்துத்தான் பரிகாரம் தெடவேண்டும் என்றும் குரு(சமதக்கினி) கூறினார்.” முசுகுந்தன்- பரசுராமன் பரசுப்பதவியை - இந்திரப்பதவியை; வசிட்ட சமதக்கினியிடம் வேண்டிப் பெற்றுவிட்டான், இந்த அம்பரீசன்(இளஞ்சேத்சென்னி)யாகத்திலும் பரசுராமன் இந்திரப்பதவி வகித்திருப்பான். பரசுராமனுக்குத் தெரியாமல் யாகப்பிராணி கடத்தப்பட்டிருக்கமுடியாது. இருக்கு வேதத்தில் இடம்பெறும் சுனச்சேபனைப் பலிகொடுக்கத் தேர்வு செய்தனர். சுனசேபனும் சமதக்கினியின் மகனே. உண்மை வெளிப்பட்டுவிட்டதால் வசிட்டனால் பலிகொடுக்கத் தேர்வுசெய்யப்பட்டிருக்க வேண்டும். “மன்னனின் மோசமான ராச்சிய பரிபாலனத்தால்தான் வேள்விப்பலிப்பசு காணாமல் போனது எனப் புரோகிதன் சமதக்கினி கூறினான். இந்நிலையில் அம்பரீசன்(இளஞ்சேத்சென்னி) சமதக்கினியுடன் ஆலோசனை செய்து சமதக்கினியின் புதல்வர்களில் ஒருவனைப் பலி கொடுக்க முயன்றனர்.( இதற்கான காரணம் என்ன என்பதைக் குறிப்பிடாமல் மறைத்துவிட்டனர்; காரணம் முசுகுந்த- பரசுராமன் வேள்விப்பலியைக் கடத்திச்சென்றதே) தனது மூத்தமகனை இழக்க சமதக்கினி விரும்ப வில்லை. பரசுராமனைக் கொடுக்க ரேணுகா விரும்பவில்லை. இரண்டாவது மகன் சுனசேபன் தன்னைப் பலிகொடுக்க ஒப்புக்கொண்டான்.(இவன் ரிக்வேதத்திலும் இடம்பெறுகிறான்)இதற்கு ஈடாகப் பொன் பொருட்களும், பசுக்களும், ஆடை, ஆபரணங்களும் கொடுக்கப்பட்டன. புஷ்கரம் வழியாகச் செல்லும்போது; சுனசேபன் தனது மாமனான விஸ்வாமித்திரைக்கண்டு, நடந்ததை எடுத்துரைத்தான். விஸ்வாமித்திரன் சுனசேபனை காப்பாற்றுவதாக உறுதியளித்துத் தனது மக்களில் ஒருவனைப் பலியாகும்படி கட்டளையிட்டான். அவர்களுடன் வாக்குவாதம் நடந்தது. இறுதியில் எவனும் ஒப்புக்கொள்ளாததால் அவர்களை விஸ்வாமித்திரன் சபித்துச்சென்றான். சுனசேபனுக்கு இரண்டு மந்திரங்களை (துதிப்படல்களை) கற்றுக்கொடுத்தான். விஷ்ணுவின்- சூரியனின் பலிபீடத்தில் இம்மந்திரங்களை அக்னியிடம்(சோழனிடம்) முறையிட்டுத் துதித்தால் அம்பரீசன் (இளஞ்சேட்சென்னி) யாகம் செய்யும் இடத்தில் நினைத்தது நிறைவேறும் என உறுதி கூறினார். இதன்படி சுனசேபன் காப்பாற்றப் பட்டான்.“ இந்தயாகம் மேலும் தொடர்ந்தபோது முசுகுந்தன் -பரசுராமன் தன்னால் புணர்ந்து கெடுக்கப்பட்ட சோழன் சேத்சென்னியின் மகள் பாவையுடன் வந்ததாகவும் யாகத்தைத் தடுக்க முயன்றதாகவும் தச்சனின்- சேத்சென்னியின் மகள் தச்சணி மாகாளியாகத் தீயினின்றும் வந்ததாகவும் சிவபுராணம் போன்றவற்றில் காணப்படுகிறது. [ அப்பெண் யாககுண்டத்தில் வீழ்த்தப்பட்டதை மறைத்துவிட்டனர்]; நிறைசூலியான பாவையே யாகத்தைத் தடுக்கத் தீயில் பாய்ந்ததாகவும் ஒரு தகவல் உள்ளது; அவளே பாய்ந்தாளா? அல்லது எவரேனும் யாககுண்டத்தில் வீசினரா? பாவைக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இவ்வளவு காலமும் காக்கப்பட்டுவிட்டது. இனி .. .. தக்ஷனின் யாகம் குறித்துப் பலவிதமான சிவபுராணக் கதைகள் உள்ளன. வரலாற்றில் தக்கனின்மகள் பெயரை `சதி' எனக் குறிப்பிடுகின்றனர். ரிக்வேதம் தச்சணி எனக்குறிப்பிடுகிறது; சதி என்பது பொதுவாகத் தீயில் விழுந்த பெண்களைக் குறிக்கும் சொல்லாக இருக்கக்கூடுமோ? ஐயம் தவிர்க்க முடியாதது. “தக்ஷன்(இளஞ்சேட்சென்னி)தனது பெண்ணைக் காணச்சென்றபோது தடைப்பட்டுக் கோபமுற்று; விஷ்ணு, பிரம்மன் போன்ற கடவுளரைத் தலைவர்களாக்கி யாகம் நடத்த முற்பட்டான்; தேவர், இருடியர்க்குத் தகவல் அனுப்பினான். ததீசி முனிவர், தக்ஷனைச் சிவனுக்கு(முசுகுந்த பரசுராமனுக்கு) அவிர் பாகம் கொடுக்க வேண்டினார். தக்ஷன் மறுத்துவிட்டு யாகத்தைத் தொடர்ந்தபோது, (இதற்குப்பிறகு காணப்படும் தகவல்கள் நம்பத்தக்கனவாக இல்லை) தக்ஷனின் மகள் (முசுகுந்தனால் கெடுக்கப்பட்ட பாவை நிறைசூலியாக) யாகத்தை நடத்தவிடாமல் தடுக்க முயன்றாள், முடியாமல் போகவே சபித்துச் சென்றாள். மணாளனிடம் (முசுகுந்தனிடம்) யாகத்தை அழிக்கவேண்டினாள்” எனவும் உள்ளது. தக்கயாகப்பரணி: ஒட்டக்கூத்தர்இயற்றியது; வெளியிட்டவர் உ.வே. சா. (இதிில் முசுகுந்தன் சிவனோடு அடையாளப்படுத்தப்பட்டான்) யாகத்தை அழிக்க வீரபத்திரர் அனுப்பப்பட்டார். உமா தேவி மஹாகாளியை அனுப்பினாள். வீரபத்திரர் பல்லவத்தை அணிந்து (மாந்தளிர்=இளம் பல்லவர் சேனையுடன்) சென்றார்” எனவும் உள்ளது. சிவபுராணம்: "காத்த வீரியன்(கரிகால்சோழன்) யாகத்தைக் காத்தவன், இவனை ரேணுகா மோகித்தாள், ரேணுகா சமதக்கினி யின் பத்னி, இளம் சிறுமியாக இருந்தபோது, வாழைப்பழத்துக்கு - லிங்கத்துக்கு? ஆசைகாட்டி மணந்து கொண்டார்". மஹாபாரதம்-ஆதிபருவம்: (இவை பிருகு அலக்சாந்த சமதக்கினிவம்ச பிராமணர்க்கும் சேத்சென்னி மற்றும் அவரது மகன் கரிகால்சோழனின் ஞாயிற்றுச்சோழ வம்சத்தாருக்கும் நடந்த மோதல்களை வெளிப்படுத்துகின்றன). "கிருதவீரியன் (கரிகால்சோழனின் தந்தை இளஞ்சேத்சென்னி)என்ற மன்னன் இருந்தான், வேதங்களைக் கற்றறிந்த பிருகுக்கள் இவனுக்கு புரோகிதர்களாக இருந்தனர். மன்னன் இவர்களுக்குத் தாராளமாகச் சொத்துக்களை வாரி வழங்கினான்; நூற்றுக்கணக்கான பசுக்களையும் மலைமலையான பணத்தையும் இவர்கள் சம்பாதித்துவிட்டனர். [சேத் சென்னி பண்ணிய யாகத்தில் யாகப்பலி இந்திரனாகிய முசுகுந்தனால் பரசுராமனின் துணையுடன் கடத்திச் சென்றதையும், இதற்குப் பரிகாரங்கள் செய்யப்பட்டதையும் நினைவுகொள்ளவும். காத்தவீர்யார்ச்சுனன் என்பது கரிகால் சோழன், பல பெயர்களில் சமதக்கினி இடம்பெறுவான், ஔர்வன் என இராவணனும் காணப்படுவான் (ஔர்வன் தொடையிற்பிறந்த வைசியனையும் குறிக்கும்). இராவணனின் மாமனார் மயன் என்பது நாம் அறிந்ததே, கரிகால்சோழனுக்கு மகதம், அவந்தி, வச்சிர நாட்டவர்கள் கொடுத்த கொற்றப்பந்தரும், பட்டி மண்டபமும், தோரணவாயிலும் மயன் விதித்துக் கொடுத்த மரபின, எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. இராவணன்; மனைவிவழியில் இலங்கை அரசைப் பெற்றவன் எனவும் தெரிகிறது.) “சமதக்கினிக்கு அவரது துணைவி ரேணுகா; நித்திய அனுட்டானங்களுக்குத் தேவையான பசுவின் பால், நதிநீர் போன்றவற்றைக் கொடுத்து உதவிகள் செய்துவந்தாள். அதிகாலை நதிக்குச் சென்று நீராடி ரிசியின் தவவலிமையாலும் தனது கற்புத் திறத்தாலும் நதியின் மணலை ஒன்று சேர்த்துக் கும்பமாக்கி; அதில் நீர் கொண்டுவருவது வழக்கம். ஒருமுறை கிருதவீரியன் வேட்டைக்குச் சென்று திரும்பும்போது, ரிசியின் ஆச்ரமத்துக்குத் தாகசாந்திக்காக வீரர்களுடன் வந்தான். திரும்பிச் செல்லும்போது முனிவரின் பசுத் தொழுவத்தில், யாகத்தில் காணாமல்போன பசு இருப்பதைக் கண்டான். அரண்மனை சென்று மகன் காத்தவீர்யார்ச்சுனனிடம், யாகப்பசு சமதக்கினியின் ஆச்ரமத்தில் இருப்பதைக் குறிப்பிட்டான். அர்ச்சுனன் ஆச்ரமத்துக்குச் சென்று பார்த்தபோது ரிசி இல்லை. ரேணுகா மட்டுமே தனியாக இருந்தாள். காத்தவீர்யார்ச்சுனனை, ஓரை விளையாட்டின்(நீர்விளையாட்டின்)போது ஆற்றுக்கு நீர்கொண்டுவரச் செல்லும்போதெல்லாம் கவணித்திருக்கிறாள். ஆச்ரமத்தில் தனியாகக் கண்டவுடன் மனம் தடுமாறினாள்[காரணம் அந்தப்பசுவே சோழரின் வேள்வியின்போது பரசுராமனால் கடத்தப்பட்டது என்பதை அவள் அறிவாள்]. அர்ச்சுனன் கொட்டடியில் கட்டப்பட்டிருந்த பசுவை அவிழ்த்துக்கொண்டு, ரேணுகாவிடம் சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டான். அடுத்தநாள் ஓரை விளையாட்டில் ஈடுபட்டிருந்த அர்ச்சுனனைக் கண்ட ரேணுகா மனம் தடுமாறினாள். அன்று மணலைக்கொண்டு குடம் செய்ய முடியவில்லை. அச்சத்தாலும் தடுமாற்றத்தாலும் பயந்து அழுது கொண்டிருந்தாள், வீட்டுக்குத் திரும்பவில்லை.(இவளது அச்சம் இயல்பானது, காரணம் முதல் நாள் ஆஸ்ரமத்தில் அர்ச்சுனனால் பிடித்துச்செல்லப் பட்ட பசு; பரசுராமனால் கடத்திவரப்பட்டதை அறிவாள்) வெகுநேரமாகியும் ரேணுகா வராததைக் கண்ட ரிசி சினமுற்றார். தனது ஞான திருட்டியால் என்ன நடந்தது? என்பதை அறிந்துகொண்டார்.( தொடர்ச்சியாக இராவணனும் காணப்படுகிறான். மற்றொரு புராணம் குறிப்பிடுவதைக் காண்போம்) “காத்தவீரியன்(தசரதன்=உருவப்பல்தேர் இளஞ்சேத்சென்னி) ஹைகயநாட்டு மன்னன். இவனது மகன் காத்தவீர்யார்ச்சுனன் (இராமன்=கரிகால்சோழன்) பிறந்தபோது கால்கள் நடக்கமுடியாத நிலையில் இருந்தான் (இவன் “கட்டுக்களுடனேயே பிறந்தான், தேவர்களால் கட்டப்பட்டான்" என மற்றொரு புராணம் குறிப்பிடுகிறது) இந்நிலையில் [தண்டிக்கப்பட்ட ]12 வயதுக்குப்பிறகு தெய்வ அருளாலும், தத்தார்த்ரேய(கார்வேலன்= கிருஷ்ணன்)முனிவரின் ஆசியாலும் கால்கள் வலுப்பெற்றன. வலிமைமிக்கவனாக வளர்ந்துவந்தான். நர்மதை நதியில் தனது காதலியருடன்(ஓரை விளையாட்டு) விளையாடியபோது பகைமைகொண்ட இராவணன் (அரவான், ஆயுர்வான் ஔர்வன் எனவும் பலவிதமாக குறிப்பிடுகின்றனர்) அர்ச்சுனனைத் தேடி அரண்மனைக்குச் சென்று, அங்கு இல்லாததால் நதிக்கரைக்கு வந்தான். மணலில் ஒரு லிங்கம் செய்து வழிபட்டுக்கொண்டிருந்த போது, ஓரை விளையாட்டில் இருந்த அர்ச்சுனன் நதியின் நீரை வீசிவிளையாடியதால், லிங்கமும் பூசைப் பொருட்களும் நீரால் சிதைந்தன. சினமுற்ற இராவணன் அர்ச்சுனனுடன் போரிடவந்தான், அர்ச்சுனன் இராவணனைச் சிறைப்படுத்தினான். இதனை அறிந்த அர்ச்சுனனின் தாத்தா, புலத்தியர்(அகத்தியர்-புலஸ்தியர் தக்க யாகப் பரணியிலும் இடம் பெறுகின்றனர்; இந்தப்புலத்தியர் விதுரன் = வழுதி -பாண்டிய இராவண செழியனின் தந்தை=சூத்திரன் என மாபாரதம் குறிப்பிடுகிறது) கெஞ்சிக்கேட்டுக் கொண்டதால் இராவணன் விடுவிக்கப்பட்டான்.” மாபாரதம்-சாந்திபருவம்: பரசுராமன் “மன்னனின் (இளஞ்சேத்சென்னியின்) புதல்வர்கள் எனது தந்தைக்குத் தெரியாமல் பசுவை கவர்ந்து சென்றனர்.”என சினம்கொண்டான். மஹாபாரதம்-வனபருவம்: ”சமதக்கினிக்கு ஐந்துபுதல்வர்கள் உண்டு[இது பாண்டவர்களுடன் குழப்பத்தை ஏற்படுத்த இடைச்சேர்க்கையாக இடம்பெற்றது], கடைசி மகனே பரசுராமன். தங்களது தந்தையின் கட்டளைப்படி பிற நான்கு புதல்வர்கள்; ரேணுகாவின் தலையை வெட்டிக்கொண்டுவர மறுத்துவிட்டதால் மனம்பேதளிக்கும்படி சபித்துவிட்டான், இதனால் கடைசிமகன் பரசுராமன் ரேணுகாவின் தலையைவெட்டி எடுத்துவர நதிக்கரைக்குச் சென்றான், தலையை வெட்டிக் கொண்டுவந்து சமதக்கினியிடம் ஒப்படைத்தான். தனது ஆணையை நிறைவேற்றிய பரசுராமனுக்கு இரண்டு வரங்கள் தர ஒப்புக்கொண்டார் சமதக்கினி. அதன்படி தனது சகோதரர்களைப் பழையநிலைக்குத் திரும்பிவர வேண்டியது நிறை வேற்றப்பட்டது. அடுத்து ரேணுகாவை உயிர்ப்பிக்க வேண்டினான். இதற்கு அவளது உடல் தேவைப்பட்டது. நதிக்கரைக்குத் தேடிச்சென்ற பரசுராமன் திகைத்துப்போனான்; ரேணுகாவின் உடல் காணப்படவில்லை.”இதனால் தடுமாறிய பரசுராமன் ரேணுகா போன்ற தோற்றம் கொண்ட மற்றொரு பெண்ணின் தலையை வெட்டிவிட்டு உடலை எடுத்துச்செல்ல முயன்றான். (பரசுராமனால் வெட்டப்பட்ட மற்றொரு பெண்; ரேணுகாவின் தங்கையும் கரிகால்சோழனின் மனைவியுமான ஸ்ரீ ஆவாள்; இவளது தலையை வீசிவிட்டு உடலைமட்டும் எடுத்துச்சென்றான்; இத்தலையைக் கண்ட கரிகால்சோழனின் குடும்பத்தார் அதனை "அங்கலம்மா"- அங்கமில்லாத அம்மா எனக் குலதெய்வமாகக் கொண்டனர். ரேணுகாவை அந்தர/ஆந்தர மாநிலத் தோர் தங்களது குலதெய்வமாகக் கொண்டனர்) இதனைக்கண்டு திகைத்த சிறுமியரும் பிறரும் தடுக்கமுயன்றனர். சினமுற்ற பரசுராமன் பலரையும் பரசு - வஜ்ராயுதம் - மழு என்னும் கருவியால் தாக்கிக் கொன்றான். (பரசுராமன் கொலைசெய்வதைத் தடுத்ததால் கொல்லப்பட்ட ஏழுகன்னிப்பெண்கள் "கன்னிமார்" எனக் கொண்டாடப்பட்டனர்) உடலை எடுத்துச்சென்று தந்தையிடம் ஒப்படைத்தான். உடலைக் கண்ணுற்ற சமதக்கினி; ரேணுகாவின் உடல் இதுவல்ல என்பதை அறிந்தவுடன் பதற்றமடைந்தார். ஆயினும் மனைவி ரேணுகாவின் தலையுடன் உடலை ஒட்டவைத்தும்; உயிர் கொடுக்க முடியவில்லை. நதிக்கரையில் பரசுராமன் நடத்திய கொலைவெறித் தாக்குதலால் அச்சமுற்ற பலரும் திரண்டனர். நாடுமுழுவதும் செய்திபரவியதால் சினமுற்ற கூட்டம் சமதக்கினியின் ஆச்ரமத்துக்கு விரைந்தது. சந்தடியைக்கேட்ட சமதக்கினி; புதல்வர்களை மறைந்து ஓடிவிட உத்தர விட்டார். பரசுராமன் சேரலமலைநாட்டுக்கு ஓடிவிட்டான். மாபாரதம்-சாந்திபருவம்: “பரசுராமன்' எனது தந்தைக்குத் தெரியாமல் பசுவைக் கவர்ந்து கொண்டனர்,' எனச் சினமுற்று [கிருதவீர்யா]அர்ச்சுனனின் 1000 கைகளை வெட்டினான். அர்ச்சுனனின் மகன் இதற்குப் பலிவாங்கினான். சமதக்கினியைக் கொன்றான். 'திமிர் மூர்க்கத்தனம் படைத்த அவனுடைய(இளஞ்சேட்சென்னியின்)புதல்வர்கள்தான் எனது தந்தையைக் கொன்றார்கள்.' எனப் பரசுராமன் சினமுற்றான். மாபாரதம்-வனபருவம்: "பரசுராமன்(சேரல மலைநாட்டில் மறைந்துதிரிந்து)திரும்பிவந்து; தனது தந்தை, மன்னனின் புதல்வர்களால் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து அடங்காத சினமுற்றான், 'சத்திரிய இனத்தை அழிப்பேன்' எனச் சபதமுரைத்தான்."(இளஞ்சேட்சென்னியைக் கொலைசெய்தான்.) மஹாபாரதம்-ஆதிபருவம்: "இக்குரு(சமதக்கினி-பிருகு) மோச்சமடைந்த பிறகு அவருடைய வம்சாவழியினர் வறியநிலையை அடைந்தனர். பிருகுவின் குடும்பத்தாரிடம் ஏரளமான சொத்துக்கள் இருப்பதை அறிந்ததனால் தானம்கேட்டனர். இதற்குப் பயந்த பிருகு வம்சத்தார் தங்கள் செல்வத்தை மண்ணுக்குள் புதைத்து வைத்தனர், ஒருசிலர் கொஞ்சமாகக் கொடுத்தனர். ஒருசமயம்.ஒரு சத்திரியன் பிருகுவின் வீட்டில் மண்ணைத் தோண்டியபோது மண்ணுக்குள் செல்வம் புதைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். இதனை அறிந்த பிற சத்திரியர்கள் பிருகுவம்சத்தாரின் குழந்தைகள் முதல் அனைவரையும் கொலை செய்தனர். பயந்து ஓடிய பிருகுக்கள்மீது எப்போதுமே அவர்களுக்கு வெறுப்பு இருந்தது. கர்ப்பிணிப் பெண்களும் விதவைப் பெண்களும் மலைகளுக்கு (பரசுராமன் சென்ற சேரள நாட்டு மலைகளுக்கு) ஓடிவிட்டனர். இதனை அறிந்த ஆயுர்வான்(பரசுராமன்) எல்லா சீவராசிகளையும் அழித்தொழிக்கச் சபதம்பூண்டு தியானம் மேற்கொண்டான். ஆனால் பிருகுக்களின் பித்ருக்கள் இவனிடம் 'சத்திரியர்களை பலிவாங்குவது நோக்கமாகக்கூடாது, முதுமை வாட்டுகிறபோது சத்தியர்களால் கொலை செய்யப்படுவதையே நாங்கள் விரும்பினோம், புதைத்துவைக்கப்பட்டிருந்த செல்வம் பிருகுக்களலேயே சத்திரியர்களுக்குக் காட்டிக்கொடுக்கப்பட்டது, எங்கள்மீது சத்திரியர்கள் கோபம்கொண்டு கொலைசெய்யப்பட்டு மோச்சமடைவே நாங்கள் விரும்பினோம், தற்கொலை செய்துகொள்ள விரும்பாமலே இப்படிச்செய்தோம்' என்றனர். இதனால் அடங்காத கோபத்தை ஆயுர்வான் நீருக்குள்(படைவீரரைத்திரட்டச் சதி) செலுத்தினான்.” மாபாரதம்-வனபருவம்: "பரசுராமன் நாட்டைவிட்டு மலைகளுக்கு ஓடிவிட்டான். ஒரு சமயம் விசுவாமித்திரரின் பேரன் பரவாசு-ரைபியனின் புதல்வன், ஒரு சபையில் பரசுராமனைப் பழித்து இடித்துரைத்தான்; "யயாதியின் நகரத்தில் நடைபெற்ற வேள்விக்கு வந்திருந்த பிரதர்மனும், ஏனையோரும் சத்திரியர்கள் இல்லையா? உன் சபதத்தை நீ நிறைவேற்ற வில்லை. இந்தச்சபையில் வீனாகச் சம்பமடித்துக் கொள்கிறாய். வல்லமைமிகுந்த சத்திரியர்களுக்குப் பயந்துதான் நீ மலைக்கு ஓடிவிட்டாய். இப்போது பார், சத்திரிய இனம் நூற்றுக்கணக்கில் பெருகிவிட்டது” என்றான். இதனால்; இயல்பாகவே முன்கோபக் காரனான பரசுராமன், வெகுன்டெழுந்து ஆவேசத்தோடு வெளியேறினான்.” மாபாரதம்-ஆதிபருவம்: “மலைகளில் மிகச்சிறந்த மகேந்திர மலையில் சமதக்கினியின் மகன் (பரசுராமன்) தவம் செய்தான்” (மஹேந்திர மலை என்பது திருநெல்வேலியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் நான்குநெறி வட்டத்தில் திருக்குறுங்குடியில் உள்ளது, 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரியகோயிலை; நம்மாழ்வார் பாடியுள்ளார், ஸ்ரீராமானுஜரும் இங்கு வந்துள்ளார் எனத்தெரிகிறது; மகேந்திரமலை- பொதியைப்பகுதியுடன் சேர்ந்ததாகவும் இருக்கலாம், இப்பொதியைமலையை நமது புலவர்கள் இமயத்துக்கு ஈடாகப்புகழ்ந்து பாடியுள்ளனர், கபிலரும் பாடியுள்ளார் ”பொய்யா நாவில் கபிலன் பாடிய மையணி நெடுவரை” என மிகப்பரந்த பல மலைகளையும் ஆறுகளையும் கொண்டதாகக் குறிப்பிடுகின்றனர்.) மாபாரதம்-வனபருவம்: "கீர்த்தவீரியனின் மகனும் ஹைகயாசின் மன்னனுமான அர்ச்சுனன் 1000 புயங்களை உடையவன் என்று கூறப்படுகிறது.(ஆயிரத்துக்கு மேற்பட்ட அனைத்து நாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவன் என்பதைக் குறிக்கும்.)அவன் தத்தார்த்ரேயரிடமிருந்து(காமகோட்டங் காவல்-மெய்ச்சாத்தன்-கரவேல்-குந்தகுந்தாச்சாரியார்=கிருஷ்ணன்) தங்கத்தாலான வானூர்தி(செண்டு-வலிமை மிக்க வேலாயுதம்கொண்ட வேளிர் போர்ப்படை) பெற்றான். அது முன்னேறிச் செல்லும்போது அதனை எதிர்த்து யாரும் நிற்க முடியாது. இவ்வாறு அவன் தேவர்களையும், யச்சர்களையும், ரிசிகளையும் அடிபணிய வைத்தான். எல்லா உயிர் ராசிகளையும் அடக்கி ஒடுக்கினான். தேவர்களும், ரிசிகளும்; அர்ச்சுனனால் அவமதிக்கப்பட்ட இந்திர(முசுகுந்த பரசுராம)னுடன் சேர்ந்து, அர்ச்சுனனை ஒழித்துக்கட்ட ஒரு திட்டம்தீட்டினர்." மஹாபாரதம்-ஆதிபருவம்: இதில் வசிட்ட - அலெக்சாந்தருக்கும் தமிழ்ச்சோழன் விசுவாமித்திரருக்கும் நடந்த பூசல்கள் இடம் பெற்றுள்ளன, சத்திரிய பிராமணர்க்கும் தமிழ் அந்தணர்க்கும் இடையே சச்சரவுகள் நடந்துள்ளன, காரணம் பிராமணர்; தங்களுக்கு மட்டுமே தானம் பெறவும் பரிசில்கள் பெறவும், வேதங்களைக் கற்றுத்தரவும், புரோகிதராக இருந்து; வேள்வி நடத்தித்தரவும் உரிமை உள்ளது, பிறருக்கு இதில் எந்த உரிமையும் இல்லை என்றதாகும். இவை குறித்த சச்சரவுகளைத் திரிசங்கு என்னும் சத்தியவிரதனின் விவகாரத்தில்; திரிசங்குவுக்கு வசிஸ்டர் உதவ முன்வரவில்லை. அவரது புதல்வர்களை(சமதக்கினி மற்றும் நூற்றுவர் - துர்யோதனாதியர்) நாடித் தெற்குத்திசைக்கு வந்து 100 புதல்வர்களையும் வேண்டியபோது அவர்களும் உதவில்லை. இதனால், தென் புலத்துக்கு வந்து விசுவாமித்திரரை நாடினான். உதவி செய்யவும் யாகம் நடத்திக் கொடுக்கவும் விசுவாமித்திரர் ஒப்புக்கொண்டார். வசிட்டரது குடும்பம் உட்பட அனைத்து ரிசிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. வசிட்டரின் புதல்வர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்; "ஒருசண்டாளன்(வசிட்ட அலக்சாந்தனால் 12 ஆண்டுகளுக்குத் தண்டிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டவன் கார்வேலன்)யாகம் நடத்துகிறான், ஒரு சத்திரியன் [விசுவாமித்திரன்] புரோகிதனாகிறான், யாகத்தில் பலியிடப்படும் பலி உணவைத் கடவுளரும்(சத்திரிய பிராமணர் அலக்சாந்தரும் அவனது உறவினரும் பரசுராம துர்யோதனாதியரும்) ரிஷிகளும் (பிராமணர்)எப்படி உண்ண முடியும்; விசுவாமித்திரரின் ஆசியோடு ஒரு சண்டாளன் அளிக்கும் உணவை உண்டபிறகு மேன்மை மிக்க பிராமணர் எவ்வாறு (மகதம் அல்லது இமையத்தில் மேற்கு எல்லையில் உள்ள அலக்சாந்திரியா அல்லது மேற்காசிய மத்தியதரைப்பகுதி நாடுகள்)சொர்க்கத்துக்குச் செல்லமுடியும்?” எனக் கொடிய வார்த்தைகளைக் கூறினர். இதனைக் கேள்வியுற்ற விசுவாமித்திரர்[சானக்கியர் என்கிற விஷ்ணுகுபதர் எனப்பட்ட கவுடல்யர்]; வசிட்டரையும் அவரது புதல்வர் நூற்றுவரையும் சபித்தார். அவரது சாபம் [மாபாரதப்போரின் முடிவில்] பலித்தது. ரிசிகளும் பயந்துநடுங்கி யாகத்தை நடத்திக் கொடுத்தனர். இதனால் சுதாசன்(கரிகால்சோழன்) வசிட்டரைப் பதவிலிருந்து நீக்கினான். (மனுவின்சட்டப்படி[விஸ்வாமித்திரர் சாபப்படி]12 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது) மேலும் விசுவாமித்திரரைத் தனது குலகுருவாக நியமித்துக்கொண்டான்.” சத்தியாயனபிராமணம்: இதன்படி 'சுதாசன்(கரிகால்சோழன்), வசிட்டரின் புதல்வனான சக்தியை நெருப்பில் எறிந்து கொன்று விட்டான்.(இதற்கானகாரணம் தெரியவில்லை)எனினும் ரிக்வேதத்துக்கு-காத்தியாயனரின் அநுக்கிரகமணிக்கு-சத்குரு சிஷ்யர் செய்துள்ள விளக்க உரையில் உள்ளபடி, சுதாசன் ஒருயாகம் நடத்தினான், அதில் விசுவாமித்திரரும் வசிட்டரின் புதல்வர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், இதனால் கோபமுற்ற சுதாசன் சக்தியை[சமதக்கினியைக் கொன்ற மக்களின் மன்னனான கரிகால்சோழனே கொன்றதாகக் கொண்டுள்ளனர்] கொன்றான். இதனால் வசிட்டரின் குடும்பத்துக்கும் சுதாசனுக்கும் பகை நீடித்தது'. (சுதாசனின் புதல்வர் அல்லது தம்பியர் மற்றும் சோழநாட்டு மக்கள்தான் சமதக்கினியை கொன்றனர்) தைத்திரீயசமிதை: இதனை உறுதிப்படுத்துகிறது: ”வசிஸ்டர், தனது புதல்வன் சமதக்கினி கொல்லப்பட்ட பிறகு தனக்கு புத்திர சந்தானம் வேண்டி; ஏகமன்ன பஞ்சாசத்தைக் கொண்டு யாகம் செய்தார், புத்திர பாக்கியமும் கிட்டியது” என உள்ளது. கௌசிதாகிபிராமணம்: ”வசிட்டர் தனது புதல்வன் கொல்லப்பட்டபிறகு சந்ததியும் கால்நடைகளும் வேண்டி, சௌதாசர்களை(கரிகால்சோழன் மற்றும் இளஞ்சேத்சென்னியின் புதல்வர்களை)அழிக்கவும் ஒருயாகம் நடத்தினார், தாம் விரும்பியதைப் (ஒரு வாரிசை - பரசுராமனைப்) பெற்றார். சௌதாசர்களையும் வெற்றிகண்டார்” என உள்ளது. இது வசிட்டனின் அப்பட்டமான சதிச்செயலை அடிப்படையாகக்கொண்டு கரிகால் - இராமனைத் தண்டித்து நாடுகடத்திய இராமாயணத்தி அடிப்படையாகக்கொண்டது]. வசிட்டன் பெற்ற வாரிசு பராசரன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திரகொற்றனின் ஆசைமனைவி(ஹெலன்) சத்தியவதியைத் திருமணத்துக்கு முன்னரே ஒரு பராசரனுடன் புணரவைத்து வியாசனைப் பெற்றதாகவும் உள்ளது. பின்னர் அந்தச்சத்தியவதுயே மற்றொருவனைப் புணர்ந்து பிம்பிசார முசுகுந்த பரசுராமனை ஈன்றாவள்! சத்தியவதியின் புதல்வரின் மனைவியர் -அம்பிகா அம்பாலிகா ஆகியோருடன் வியாசனைப் புணரவைத்துத் திருதராட்சசனையும் பாண்டுவையும் பெற்றதாக மாபாரதத்தில் பொய்யுரைத்து பீஷ்மனைப் புகுத்தியதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் வசிட்டன் தனது மனைவி சத்தியவதியையும் அவளது தாயையும் கொண்டு சமதக்கினியையும் விசுவாமித்திரனை யும் பெற்றதாக மற்றொரு தகவலையும் வெளிப்படுத்துகிறது. சிலப்பதிகாரம்; இளஞ்சேத்சென்னியைப் பரசுராமன் கொன்றபிறகு சோழநாட்டின் நிலையை மாடலனிடம் செங்குட்டுவன் வினவியதாக; சேத்சென்னியின் மகளான பாவையின் மைந்தனே செங்குட்டுவன் என்பதை மறைத்து வரலாற்றைப்புரட்டுகிறது. “இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர், வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு செங்கோல் தன்மை தீதுஇன் றோ'என” இளஞ்சேட்சென்னியை 'இளங் கோ' எனக் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. இந்நிலையில்தான் கரிகால்சோழனும் பாவையும் பிற சோழரும் தண்டிக்கப்பட்டனர். மஹாபாரதம்-வனபருவம்: மற்றும் உத்யோகபருவம்: ”ஒருசமயம் இந்திரன் (பரசுராம முசுகுந்தன்) விருத்திரன் என்ற அசுரனக் கொன்றுவிட்டான். ஒருபிராமணனை(சேத்சென்னியை அசுரன் என ரிக்வேத மொழிபெயர்ப்பாளர்களும்; பிராமணன் எனச் சிலரும் குழப்பியுள்ளது நோக்கத்தக்கது) கொன்றுவிட்டோமே, எங்கே தன்னை பிரம்மஹத்திதோஷம்(மனுவின் தண்டனையான 12ஆண்டு) பிடித்துக்கொள்ளுமோ என்று அஞ்சி நீர்நிலைகளில்(இமையத்தின் மேற்கு அடிவாரத்தில் அலக்சாந்தனால் அமைக்கப்பட்ட அல்லஃநந்தா - மானசரோவர் ஏரியில்)போய் மறைந்து கொண்டான். சோழ - பாரதநாட்டுக்கு அரசனில்லாததனால்; ரிசிகளும் தேவர்களும் [விதுரனின் மகன்] நகுச(பாண்டியசெழிய)னை அனுகித் தங்களுடைய இந்திரனாக (சோழநாட்டுக்கும் அரசனாக)இருக்கும்படி வேண்டினர், (சத்திரியனல்லாத சூத்திரன் என்பதால்) அதற்கான அதிகாரம் தனக்கு இல்லை என முதலில் மறுத்தான். மிகவும் வற்புறுத்தியதால் பொறுப்பை ஏற்கச்சம்மதித்தான். (சிலப்பதிகாரம் இவனை; ”......இளையர் ஆயினும் பகை அரசு கடியும் செருமான் தென்னர் குலமுதல் ஆகலின்........” எனக்குறிப்பிட்டு; இப்பதவியைப் பெற்றதாகக் குறிப்பிடுகிறது. மனிமேகலையில் மேலும் விரிவான தகவல்கள் உள்ளன) இந்த உன்னத இடத்தைப் பெறும்வரை ஒழுக்கசீலனாக, பண்பாளனாக இருந்தான். அதிகாரப்போதை தலைக்கேரியதும் அறவே மாறிவிட்டான். சிற்றின்பம், கேளிக்கைக் கூத்துக்களுக்கு அடிமையாகிவிட்டான். ஒருசமயம் இந்திரனின் மனைவி (கரிகால் சோழனின் சோழமண்ணின் வளமை மற்றும் அதனை ஆள்வதற்கான ஆரம் - சீதை) இவனது கண்ணில் பட்டுவிட்டாள். இந்திராணியின் அழகில்மயங்கி மனதைப் பறிகொடுத்தான், எப்படியாவது அடையவேண்டும் என்று ஆசைப்பட்டான். இவனது தகாத ஆசையை அறிந்த இந்திராணி தேவர்களின் குருவான பிரகசுபதி அங்கிரசுவிடம் (கார்வேல் -அகத்தியரிடம்) சரணடைந்தாள். காப்பாற்றுவதாக உறுதியளிக்கப்பட்டது [இத்தகவலே கார்வேலனின் அகத்திக்கும்பா- அகத்தியர்குகைக் கல்வெட்டுக்களில் 13 ஆண்டுகளுக்குப்பிறகு; இந்திரன் - வஜ்ரகரனால் தொல்லைக்கு ஆளான தனது உறவுப்பெண்ணை - கரிகால்சோழனின் தையையும் அவளது குழந்தை செங்குட்டுவனையும் காக்கவேண்டி தெற்கே வந்து மூவர்கூட்டணியைச் சிதைத்து சிங்களர் ஆரியர் மற்றும் மோரியரை வென்று செழிய இராவணனை அடக்கி மணியாரங்களையும் முத்தாரங்களையும் மீட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது]. இவரது தலையீட்டைக் கேள்விப்பட்ட நகுசன் எல்லையில்லாச் சீற்றம் அடைந்தான். தேவர்கள் அவனிடம் 'அடுத்தவன் (நாட்டை - சீதையை)மனைவியை அபகரிக்கநினைப்பது நெறிகெட்டசெயல்' என்றனர். அவனோ இதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. 'தான் ஒன்றும் இந்திரனைவிட (பிராமணர்களால் அவ்வப்போது இந்திரனாகக் கருதப்பட்ட பல அலக்சாந்தருள் ஒருவன்) மோசமான நடத்தை கொண்டவனல்ல, ஒரு ரிசியின் தர்மபத்தினி அகலிகையை அந்த ரிசி உயிரோடு இருந்த காலத்திலேயே ஒரு இந்திரன் கற்பழித்துக் கெடுத்தான், அப்போது நீங்கள் ஏன் அவனைத் தடுக்கவில்லை? இன்னும் எத்தனையோ காட்டு மிராண்டித்தனமான நடத்தைகளில் ஈடுபட்டான், நயவஞ்சகமான, நெறியற்ற, நீசத்தனமாக நடந்துகொண்டான், அப்போ தெல்லாம் நீங்கள் தடுக்கவில்லை' என்று வாதிட்டான். ரிசிிகளால் பதில்கூற முடியவில்லை. ரிசிகளிடம் இந்திராணியை [இந்த இந்திராணி யாரென்பது புதிரானது! காரணம் முசுகுந்த பரசுராமனின் அந்தப்புரத்தில் எத்தனையோ அழகிகள் இருந்துள்ளனர்; ஆயினும் இப்பெண் ஒரு சோழநாட்டுப்பெண் எனத்தெரிகிறது.] அழைத்துவரும்படி உத்தரவிட்டான். வேறுவழியின்றி இந்திராணியை அழைத்துவரச் சென்றனர். ஆனால் பிரகசுபதி (அகத்தியர் - கார்வேலர்) அவளைக் கைவிடத்தயாரில்லை. அவர் யோசனைப்படி இந்திராணி நகுசனிடம்: 'கணவர் [பரசுராமன்] எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்கும்வரை பொறுத்துக் கொள்ளவேண்டும்' என வேண்டினாள். நகுசன் இதனை ஏற்றுக்கொண்டு அவளை அனுப்பி வைத்தான். தனது கணவனைத் தேடிக்கண்டுபிடிக்க உபசுருதியின்(இரவுக்காலத்தேவதை, ரகசியங்களை வெளியிடும் தெய்வம்) உதவியோடு தேடினாள். அவன் வடக்கே ஒரு மாகடலுக்குள் இருக்கும் ஒருகண்டத்தின் ஏரியில், வளர்ந்துவரும் தாமரைமலரின் தண்டில் மிகவும் நுற்பமான வடிவத்தில் மறைந்திருப்பதைக் கண்டுபிடித்தாள். தனது கணவனிடம், மீண்டும் இந்திரப்பதவி பெறும்படியும், தன்னைக் காப்பாற்றும்படியும் வேண்டினாள். நகுசன் மா பெரும்(முசுகுந்த பரசுராமனின் படைகளைக் கைப்பற்றியதோடு ஆரியவரசன் பிரகத்தனின் உதவியையும் பெற்று) வல்லமை படைத்தவனாகிவிட்டதால் உடனடியாகத் தலையிடுவது இயலாது எனக்கூறினான். மேலும் அவனை பதவிலிருந்து இறக்க ஒரு உபாயத்தைக் கூறினான். அதன்படி 'தெய்வீக எழில் கொழிக்கும் ஒரு சிவிகையை [ஆரிய]ரிசிகள் தாங்கிவர, அதில் அமர்ந்து வந்தால் அவனது இச்சைக்கு இனங்குவேன்' என நகுசனிடம் கூறினாள். மேலும் 'தேவர்கோனே, நீங்கள் விஷ்ணுவோ ருத்திரனோ [அ]சுரர்களோ அல்லது ராச்சச[சிங்கள]ர்களோ இதுவரை பயன் படுத்தியிராத ஒரு சிவிகையில் பவனிவர, அதனை [ஆரிய]ரிஷிகள் தங்கிவர நான் காணும்படியாக நீங்கள் வரவிரும்புகிறேன். அதனைக் கண்டு என் உள்ளம் களியுவகை கொள்ளும்' என்றாள். இதனைக் கேட்டு, நகுசன் மனம் குளிர்ந்தான். 'ரிஷிகள் என்னைச் சுமந்துவர வைக்கும் எனது பராக்கிரமம் சாதாரனமானதல்ல, முக்காலத்திலும் வலிமையை ஆராதிப்பவன், போற்றுபவன் நான். இந்த உலகம் எனது கோபத்தைத் தாங்கமுடியாது. எல்லாம் என்னையே சார்ந்துள்ளது, ஆதலால் ஓ! தேவதேவி! உன்விருப்பத்தை நிச்சயமாக நிறைவேற்றுவேன். ஏழு முனிவர்களும், அனைத்துப் பிராமணர்களும் என்னைச் சுமந்துகொண்டு வருவார்கள், அப்போது என் அழகு ராணியே! எனது பெருமிதத்தை, எனதுமாண்பை, எனதுபுகழ் ஒளியை, எனது வன்மையை, எனதுவெற்றிப்பொலிவைப் பார்த்துத் தெரிந்துகொள்' என்றான். (இந்நிலையில்) அகத்தியமுனிவர்[கார்வேலன்] மீண்டும் இந்திரனை(பரசுராமனை)ப் பதவியில் அமர்த்த ஒரு யாகம் நடத்தப்போவதாகவும் அதில் நகுசனை அழிக்கப்போவதாகவும்' கூறினார். (இராமாயணப்போர் நடந்தது. வெற்றிபெற்றபிறகு) இந்திரனை அழைத்துவர அக்னி அனுப்பப்பட்டான். இந்திரன் வந்துசேர்ந்ததும் அவன் இல்லாதபோது (போர்நடந்த போது) நாட்டில் நடந்ததையெல்லாம் பிரகசுபதி (அகத்தியர்-கார்வேலன்) அவனிடம் விவரித்தார். பின்னர் யமன், சோமன், வருணன், குபேரன் ஆகியோருடன் இந்திரன் விவாதித்துக்கொண்டிருந்தபோது, அகத்தியர் அங்குவந்து 'இந்திரனது பகைவன்அழிந்தான்' என்னும் செய்தியை கூறிப் பாராட்டி; அது எவ்வாறு நிகழ்ந்தது என விவரித்தார்.” மாபாரதம் பாண்டியனை 'நகுஸன்' எனக்காட்டியதோடு; 'முக்காலமும் அறிந்தவனின் பக்தன்' என அவனே குறிப்பிடுகிறான் 'முசுகுந்தனின்? பக்தன்'. இந்த நகுஷனின் கதைக்கு முன்னர், இளை - முசுகுந்த பரசுராமனால் ஏமாற்றப்பட காதலி - கரிகால்சோழனின் தங்கை நல்லியற்பாவையின் மைந்தன் ப்ரூரவன் - வேலவன் - செங்குட்டுவனின் கதை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பரசுராம முசுகுந்தன் ஆட்சியைத் திரும்பப்பெற்றதாகக் குறிப்பிடுவதற்கு மாறாக இராமனே ஆட்சிபெற்றதாக இராமாயணம் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது! இதுகுறித்த தகவல்களை வெளிப்படுத்தும் பாடல்கள்; ரிக்வேதத்திலும் பழந்தமிழ்ப்பாடல்களிலும் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் சிதைக்கப்பட்டுள்ளன.

Tuesday 3 February 2015

விவிலியம் வரலாறு ஏசு யோசேப்பு மரியாள் மோயீசன் - பரசுராம சுரன் கோயில் லிங்கம் பரசுரமன் - பிம்பிசாரன் - சிவன்? மற்றும் செங்குட்டுவன் - முருகன்

குடிமல்லம் என்ற ஊரில் உள்ள பரசுராம சுரன் கோயில் லிங்கம் வரலாறு லிங்கம் யார்? லிங்கத்துள் இருப்போர் யாவர்? பரசுரமன் - பிம்பிசாரன் - சிவன்? மற்றும் செங்குட்டுவன் - முருகன்? சம்கராந்தி மகரசம்கிராந்தி சூரியனின் மகரச்சாய்வு இராமனின் அயணம் இராமாயணம் சுர - சூர - சுறா சம்காரம் சங்கர அந்தி சங்கர பரசுராமனின் அந்தி சிவன் வேறு பரசுராமன் வேறு! சிவன் என்பது பூர்ணகாசியப்பனான அல்லஃநந்தா - அலாக்சாந்தா என்பவரைக் குறிக்கும்! அவரது லிங்கத்தில் உருவானவரே பரசுராமர் என்கிற காளை - நந்தி - ஏறு - சிவன்கொயில்களில் லிங்கமான அல்லஃநந்தாவுக்கு முன்னர் வைக்கப்பட்டது. அல்லஃநந்தாவின் லிங்கக்கத்திலிருந்து; ஒரு மீனவப்பெண் ஹெலனைக் கூடியதால் பிறப்பிக்கப்பட்ட பரசுராமரால்; தமிழ்ச்சோழ இளவரசியான் கரிகால்சோழனின் தங்கையும் இளஞ்சேத்சென்னியின் மகளுமான நல்லியற்பாவை ஏமாற்றப்பட்டுப் புணர்ந்து கெடுக்கப்பட்டதனால் பிறந்த குழந்தையே அந்த லிங்கத்துக்குள் உள்ள பரசுராமரின் காலடியில் உள்ள குழந்தை உருவம். அதன் காதுகளைப் பாருங்கள்! ஆட்டுக்காதுகள் வடிவில் இருக்கும்! மேஷம்தான் அவ்வண்ணம் காட்டப்பட்டுள்ளது. மேஷவாகணனே செவ்வாய் - செங்குட்டுவன்! மார்பளவு சிற்பத்தைமட்டும் வெளியே தெரியவிட்டு துணியால் மூடிவைத்துள்ளனர். முழுச்சிற்பமும் எனது பல இடுகைகளில் கொடுக்கப்பட்டுள்ளன! பரசுராமரின் தாய் பரசுராமனைப் பெற்றுவிடும் முன்னரே மற்றொரு அல்லஃந்ந்தா- அலெக்சாந்தா- பராசரன் என்கிற நாடோடியைப் புணர்ந்த இடமே இலங்கைத்தீவு! அதனால் பிறந்தவரே வியாசர் - கிருஷ்ணத்துவைபாணர்- தீவில் பிறந்து வசிக்கும் கருப்பர்! அந்த ஹெலனின் தாயே ஆர்யவரசனான செல்யுக்கஸ்நிக்கந்தன் என்கிற பிரகத்தனின் மனைவி. ஹெலனே சத்தியவதி எனப் புராணங்களிலும் மாபாரதத்திலும் உள்ளார்! மற்றொரு சத்தியவதி என்ற பெண் காதி என்ற மன்னனின் மனைவிக்குப் பிறந்தவர். அந்தச் சத்தியவதிக்குப் பிறந்தவரே சமதக்கினி. சமதக்கினியின் மகனே பரசுராமர். இந்தச் சத்தியவதியின் தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவரே விசுவாமித்திரர் எனப் புராணங்களிலும் மாபாரதத்திலும் காணப்படுகிறார். இரண்டு சத்தியவதிகளைப் புகுத்தி வரலாற்றைக் குழப்பியுள்ளனர். விசுவாமித்திரரின் முன்னோராக; குஷன், குஷனாபன், காதி போன்றோர் உள்ளனர். மௌரியர் என்போர் அனைவரும் சத்தியவதியர்க்கும் அலெக்சாந்தர்களுக்கும் பிறந்தோரே ஆவர். அதனாலேயே வியாசரும் பரசுராமரும் ஒரே தாய்க்கும் வெவ்வேறு அலெக்சாந்தர்களுக்கும் பிறந்து அண்ணன் தம்பியராகின்றனர். மௌரியராகவும் அறியப்படுகின்றனர்! இலங்கையில் பிறந்த வியாசரின் வாரிசுகள்குறித்த தகவல்கள் உள்ளனவா? அல்லஃநந்தா - அலக்சாந்தாக்களை யூதர் எனக்கொண்டால்; அவர்களொடு கூடிய எல்லா இனத்துப்பெண்களுக்கும் பிறந்தோரே மௌரியர் எனக் கொள்ளவேண்டும். அத்தகையோரே சம்கர - சங்கரசாதியராக மனுஎன்கிற பூர்ணகாசியப்பரான அல்லஃநந்தா எனப்பட்ட ஒரு அலக்சாந்தரின் மனுநூலில் குறிக்கப்பட்டனர்! இந்த மனுநூல் பலகாலமாகப் பல அலக்சாந்தரின் வாரிசுகளால் எழுதையவற்றின் சட்டத்தொகுப்புநூல். மௌரியர்களுள் ஒரு மௌரியனான பிம்பிசார பரசுராமர் என்பவர் தமிழ்ச்சோழப்பெண்ணைப் புணர்ந்து கெடுத்ததால் பிறந்த செங்குட்டுவனே சங்கரனாகிறார். அவனது தந்தை பிம்பிசார - பரசுராமரே ஆதிசங்கரராகிறார்! மனுநூலில் சங்கரசாதியராகக் காட்டப்படுவோர் அனைவரும் பிற பெண்களுடன் அலக்சாந்தர்களின் புணர்ப்பாலும் பிற அந்நியநாட்டவருடன் புணர்ந்ததால் பிறந்தோருமே ஆவர். ஆனால் செங்குட்டுவனோ சங்கரராகக் காட்டப்பட்டபோதிலும் தமிழ்ப்பெண்ணான கரிகால்சோழனின் தங்கைக்குப் பிறந்து தமிழனாகவே வாழ்ந்து கரிகால்சோழனின் மகளை மணந்து வாழ்ந்தவர். சோழர்களின் பெண்வழிச்சமுதாயமே பாரதநாட்டுக்கு உரிமைபடைத்தவர்கள்! அவர்களது வழியில் பிறந்து வாழ்ந்த பெண்ணே கரிகால்சோழனின் தங்கை. அவளுக்குப் பிறகு வேறு பெண்வம்சவழி தொடர்ந்ததா என்பதை அறிய வழியில்லாமல் போய்விட்டது; வரலாறு அழிக்கப்பட்டுவிட்டது. வரலாறு இல்லை தமிழனுக்கு வரலாறு இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தால் யாராவது இதுதான் வரலாறு என்று கொண்டுவந்து கொடுப்பார்களா என்ன? தமிழரனைவரும் தமிழராகவும் தமிழரின் வரலாற்றை காணவேண்டும் என்கிற வேற்கையுடனும் இருந்தால்தானே தமிழனின் வரலாறு வெளிப்படும். பல்லாயிரக்கணக்கான தொல்தமிழ்ப் பாடல்களைக் கொண்டு சிறப்புப்பெற்ற தமிழருக்கு; அந்தப் பாடல்களில் என்னதான் உள்ளது; அவற்றில் வரலாறு புதைந்துள்ளதா என்பதைக் காணக்கூட அகரையில்லையே! சம்கராந்தி மகரசம்கராந்தி சூரியனின் மகரஸ்சாய்வு என்றெல்லாம் சொல்கிறர்களே! அதற்கான விளக்கம் என்ன? மேலே சொல்லப்பட்ட சங்கரர் மற்றும் அவரது தந்தை ஆதிசங்கரர் ஆகியோரின் வரலாற்றுடன் தொடர்புகொண்ட வரலாறே இவற்றில் சிறிது அடங்கியுள்ளது! சம்கர அந்தி என்றும் மகர சம்கார அந்தி என்றும் அறியப்படவேண்டியவற்றை; சங்கராந்தி மகரசங்கராந்தி எனப் பலவாறு அறிகிறோம். மகரம் என்பது சுறா மீன் முதலை என அறியப்படுகிறது; இரட்டையாகவும் அறியப்படுகிறது! பாண்டியரின் சின்னமும் இரட்டைமீனாகக் காட்டப்படுவதையும் காண்கிறோம்! முதல்பாண்டியனான செழியனே இராவணனாக் இலங்கைசென்று மறைந்துகொண்ட நகுஷன். சூரியகுலச் சோழர்கள் தண்டிக்கப்பட்டபோது சோழநாட்டின் பாதுகாவலராக அமர்த்தப்பட்ட செழியனின் தந்தை விதுரரே சந்திரகுல முதல்வராக அறியப்படுகிறார்! வியாசருக்கும் மௌரியர் குடும்பத்துப் பெண்ணுக்கு அடிமையாக இருந்த மிளேச்ச யவனப்பெண்ணுக்கும் பிறந்தவரே விதுரர் என மாபாரதத்தில் இடம்பெற்று; தொல்தமிழ்ப்பாடல்களில் வழுதி என இடம்பெற்றவர்! அவரது மகனே செழியன் என்கிற நகுஷன். முதலில் பரசுராம இந்திரனுக்கு ஆதரவாக இருந்தபோதிலும், செழியன் பதவி ஆசையால் தூண்டப்பட்டுப் பரசுராமரையும் எதிர்த்துத் தனது வலிமையை உறுதிப்படுத்த முயன்றதை 'ஆலங்கானத்துப்போரில்' வெற்றிபெற்றதாகக் காண்கிறோம். பரசுராமரையே நமது தொல்தமிழ்ப்பாடல்கள் 'மாரன் / மாறன் வழுதி' எனக் குறிப்பிடுகின்றன! இலங்கைசென்று மறைந்துவாழ உதவிய பரசுராமரையே மாறீசன் என இராமாயணம் குறிப்பிடுகிறது. பரசுராமனையே வெகுதொலைவிலிருந்து தனக்கு ஆதரவுதேடச் செழிய இராவணன் அழைத்துவந்ததாக ரிக்வேதத்தில் "பத்து அரசர்களுடனான போரில்" - "தசரஞ்சன யுத்தத்தில்" காண்கிறோம். ஆயினும் இந்திர பரசுராமர் நேரடியாகப் போரில் ஈடுபடாமல் தனது படைகளின் ஒருசிலரைமட்டும் கொடுத்துவிட்டுப் போய்விடுவதாகவும் காண்கிறோம். இரட்டை மீன் / சுறா / முதலை எனக் காட்டப்படுவோர் யாவர். அவர்கள் இருவருமே இராவண - செழியனும், செல்யுக்கஸ்நிக்கந்த - சம்பர - பிரகத்தனும் ஆவர். இந்தப் பிரகத்தனும் இராமயணத்தில் மீனக்கொடியுடன் இராமாயணத்தில் காட்டப்படுகிறான்; இராவணனைச் சுறா /யாலிமீன் கொடியுடன் காண்கிறோம்! இவ்விருவரம் அடக்கப்பட்ட வரலாற்றையே இராமாயணமாகக் காண்கிறோம். இதனையே மூவர்கூட்டணி என பரசுராமர், செழியன், பிரகத்தன் கூட்டணியைக் கார்வேலனின் அகத்திக்கும்பா - அகத்தியர்குகைக் கல்வெட்டில் காண்கிறோம். இக்கூட்டணியை முறியடிப்பதில் கார்வேலன் - கண்ணன், கரிகால் - இராமன், கரிகாலின் தங்கைமகனும் கார்வேலின் அத்தைமகளின் மகனுமான செங்குட்டுவன் - இலக்குவனை முன் நிருத்தி முறியடித்தனர்! முறியடிக்கப்பட்ட நாளே; சுரன் - இராவண சுரன் - அரக்கன் இராவணன் அடக்கப்பட்டதாக சுர சம்காரமாக - சம்கார அந்தியாக - சம்காரத்தின் முடிவாகக் கொள்ளப்பட்டு சம்கார அந்தி எனக் கொண்டாடப்படுகிறது! சூரியச்சோழர்கள் தென்மண்டலத்தின் எல்லைச்செலவை முடித்துக்கொண்டு திரும்பிய நாளே தை முதல்நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த இராவண செழியன் மற்றும் செல்யுக்கஸ்நிகந்த பிரகத்தனின் கூட்டணிக்குப் பின்வலிமையா நின்று செயல்பட்டவரே அன்றைய இந்திரனான பரசுராமர். அப்போது அடக்கப்பட்டதே பரசுராம - காளை - நந்தியின் சூழ்ச்சி எனக் கொண்டால்; இதனை சங்கர அந்தி - செங்குட்டுவ சங்கரரின் தந்தையான ஆதிசங்கர பரசுராமரின் வீழ்ச்சி எனக் கொள்ளலாம். பொதுவாக சங்கராந்தி என இதனைக் குறிப்பிடுகின்றனர். இராம அயணம் என்பதே சூரியகுலச்சோழரின் தென்திசைச்செலவைக் குறிப்பதாகும். தென்திசைச்செலவை முடித்து வடக்குநோக்கி; அன்றைய இந்திர பரசுராமனையும் வெற்றிகொள்ள; பரசுராம - துர்யோதனை - பிம்பிசாரனை வெற்றிகொள்ளத் திரும்பி; வடதிசைநோக்கிச்சென்ற முதல்நாளே தைமாத முதல்நாள் எனவும் கொள்ளலாம். உடனே போர்செய்யச் சென்றுவிட்டதாகக் கொள்ளவேண்டியதில்லை. ஆனால் அப்போதே தமிழரின் வெற்றி துவங்கிவிட்டது என்பதையே காணவேண்டும். இராமாயணத்தில் கார்வேல் - கண்ணன் நேரடியாக ஈடுபடவில்லை எனக் காண்கிறோம்; மூல இராமாயணம் சிதைக்கப்பட்டிருக்கவேண்டும் எனத்தெரிகிறது. சூரியகுலச்சோழர்கள் தங்களை முன்னிருத்திக்கொள்ளாததற்குக் காரணம் செங்குட்டுவ - இலக்குவனின் தந்தையே பிம்பிசார- பரசுராமர் என்பதாகும். என்றபோதிலும் இதனைக் கார்வேல - கண்ணன் - அகத்தியன் குறித்த அகத்திக்கும்பாக்கல்வெட்டு உறுதிப்படுத்துவதையும் காண்கிறோம். அக்கல்வெட்டின் வரலாறு மிகநீண்டது! விவிலியம் வரலாறு ஏசு யோசேப்பு மரியாள் மோயீசன் நாசரேத்து ஊரைச்சேர்ந்த தச்சனாகிய யோசேப்புக்கு திருமணம் செய்யவதற்கு நியமிக்கப்பட்டிருந்த மரியாள் (லூக்கா.1 :27) என்ற கன்னிகையின் மூலம் “கடவுள் மனிதனாக இயேசு என்னும் பெயரோடு பெத்லகேமில் பிறந்தார்” இயேசு பிறந்த எட்டாம் நாளில் யோசேப்பும். மரியாளும் அவரை இஸ்ரவேல் சபையான எருசலேம் தேவாலயத்திற்கு சென்று மோயீசன் மூலம் கடவுள் சொன்ன கட்டளைகளை நிறைவேற்றினார்கள். (லூக்கா 2: 22..24) இதில் தச்சன் என்றால் தெக்கனா? யோசேபு என்றால் கார்வேலன் - கண்ணனா? திருமணத்துக்காகக் கண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணா மரியாள்? மரியாள் என்றால் செங்குட்டுவனின் தாயும் கரிகால்சோழனின் தங்கையுமான நல்லியற்பாவையா? மரியாளைப் புணர்ந்தவன் யார்? இயேசு என்றால் செங்குட்டுவனா? மோயிசன் மரியாளைப் புணர்ந்து கெடுத்த பரசுராம - பிம்பிசாரனா? இராமாயணத்தில் இடம்பெற்ற மாறீசனா மோயீசன்? மோயீசனுக்குக் கட்டளையிட்ட கடவுள் யார்? கட்டளையிட்ட கடவுள் அல்லஃசாந்தா என்கிற அலக்சாந்தருள் ஒருவனா? அலக்சாந்தர்களே யூதர்களின் தலைவர்களாக இருந்தனரா? அலக்சாந்தர்களுள் ஒருவர்தான் அல்லாவா? அல்லாவின் கட்டளைகளை நிறைவேற்றியவரா முகம்மது? கடவுள் சொன்ன கட்டளைகள் யாவை? கடவுளுக்கும் அல்லாவுக்கும் முகம்மதுவுக்கும் கட்டளைகளைப் பிறப்பித்த கடவுளருள் ஒருவரே கார்வேல் - கண்ணனா? கண்ணனின் கட்டளைகளைப் பாறைகளிலும் தூண்களிலும் பொறிப்பித்த அசோகன்தான் செங்குட்டுவ ஏசுவா? ஏசுவின் தந்தை யார்? முகம்மதுவின் தாய் யார்? முகம்மதுவின் தந்தை யார்? முகம்மது எந்தக்குகையில் யாரிடமிருந்து கட்டளைகளைப் பெற்றார்?

Friday 2 January 2015

ஒற்றியூரன் கூத்தன் மரீசிமகன் களந்தைக்கோன் இரும்போரை பரசுராமன் பராந்தகன் திருத்தணி வேலஞ்சேரி செப்பேடு கார்வேல் கரிகால் செங்குட்டுவன்

ஒற்றியூரன் கூத்தன் மரீசிமகன் களந்தைக்கோன் இரும்போரை பரசுராமன் பராந்தகன் திருத்தணி வேலஞ்சேரி செப்பேடு கார்வேல் கரிகால் செங்குட்டுவன் புறநாநூறு.பாடல்17.புலவர்.குறுங்கோழியூர்க்கிழார்; இரும்பொறையினைப் பாடியது: "........தென்குமரி வடபெருங்கல் குணகுட கடலாஎல்லை குன்றுமலை காடுநா டொன்றுபட்டு வழிமொழியக் கொடிதுகடிந்து கோல்திருத்திப் படுவதுண்டு பகலாற்றி இனிதுருண்ட சுடர்நேமி முழுதாண்டோர் வழி......" என குறிப்பிடுவதில் 'கொடிதுகடிந்து கோல்திருத்தி' என்பதும், 'இனிதுருண்ட சுடர்நேமி முழுதாண்டோர்' யார்? சிறைப்பட்டு விடுவிக்கப் பட்டது ஏன்? என்பதும் நோக்கத்தக்கது. புறநாநூறு பாடல்-22:புலவர் குறுங்கோழியூர்க்கிழார்: "........மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே புத்தேல் உலகத்து அற்று எனக்கேட்டு, வந்து இனிது காண்டிசின், பெரும! முனிவிலை வேறு புலத்து இருக்கும் தானையொடு சோறுபட நடத்தி நீ துஞ்சாமாறே!" என இரும்பொறையின் தோல்விக்கு வருத்தியும், மீண்டும் அவனுக்கு ஆட்சியுரிமை வழங்கப்பட்டது கண்டு வாழ்த்தியும், அறிவுறுத்தியும் பாடியதை காண்கிறோம். புறம்-53: இளங்கீரனார் பொறையனிடம் வருணாசிரம 'ஒளியர்' குறித்து: ".. .ஒளியோர் பிறந்தஇம் மலர்தலை உலகத்து வாழேம் என்றலும் அரிதே; தாழாது; செறுத்த செய்யுள்செய் செந் நாவின் (பாடிய செய்யுற்கள்)(எங்கே?) வெறுத்த கேள்வி விளங்குபுகழ் கபிலன் (கேள்வியெழுப்பி பிராமணரை) இன்றுளன் ஆயின் நன்றுமன்' என்றநின் (வெறுத்த கபிலனின்) ஆடுகொள் வரிசைக்கு ஏற்பப் (பாடல்கள் அழிக்கப்பட்டுவிடன) பாடுவன் மன்னால் பகைவரைக் கடப்பே" என 'ஒளியோர்'- சூத பிராமணரின் தொல்லை தாங்காமல், வேள்வியைவெறுத்துக் கேள்வி எழுப்பிய கபிலன் இல்லாத நிலைக்காக வாடும் புலவனின் நிலையையும்; காண்கிறோம். கபிலன்; பிராமணரால் கொலைசெய்யப்பட்டதை மறைத்துவிட்டனரோ? யாப்பருங்கலம்-மேற்கோள் பாடல்: "உச்சியார்க் கின்றவனாய் உலகமெலாம் காத்தளிக்கும் பச்சையார் மணிப்பைம்பூண் புரந்தரனாய்ப் பாவித்தார் வச்சிரங்கை காணாத காரணத்தால் மயங்கினரே, அக்காலம் அணிநிறைகாத் தடுவறையாற் பணிதவிர்த்து வக்கிரனை வடிவழித்த மாயவனாப் பாவித்தார் சக்கரங்கைக் காணாத காரணத்தாற் சமழ்ந்தனரே, மால்கொண்ட பகைதனிப்பான் மாத்தடித்து மயங்காச்செங் கோல்கொண்ட சேவலங் கொடியோனாப் பாவித்தார் வேல்கொண்ட தின்மையால் விம்மிதராய் நின்றனரே'...எனவும்; சீவக சிந்தாமணி.திருத்தக்கதேவர்:.1242-1243: அருகதேவனை அரணபாதம் என்னும் மலையடிவாரத்தில் ஸ்ரீ கோயிலில் வழிபட்டுப் பாடுவதாக: "அடியுலக மேத்தி அலர்மாரி தூவ முடியுலக மூர்த்தியுற நிமிர்ந்தோன் யாரே? முடியுலக மூர்தியுற நிமிர்ந்தோன் மூன்று கடிமதிலுங் கட்டழித்த காவளநீ யன்றோ தீரா வினைதீர்த்துத் தீர்த்தந் தெரிந்துய்த்து வாராக் கதியுரைத்த வாமணநான் யாரே வாராக் கதியுரைத்த வாமண் மலர்த்ததைத்த காராம்பூப் பிண்டிக் கடவுணீ யன்றே!" யாப்பருங்கலம்:விருத்தி உரையில் பலபாடல்கள் மேற்கோளாக உள்ளன. அவற்றில் பலவும் கரிகால்சோழனை அச்சுதன் எனவும், அமண மரபின்படி நந்தி எனவும் குறிப்பிடுகின்றன. சிலப்பதிகாரம்: "வின்பொரு பெரும்புகழ்க் கரிகால்வளவன் தன்பதங் கொள்ளும் தலைநாள் போல...... ..இடம் கெட ஈண்டிய நால்வகை வருணத்து அடங்காக் கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர் அடித்தலை நீக்க அருள் சிறந்து ஒருபால்" பாண்டியன் விடுவிக்கப்பட்டதை: "அரசர்குல திலகன் அச்சுதன் முற்றத்தில் அரச ரவதித்த வந்நாள்-முரசதிரக் கொட்டிவிடு மோசையினுங் கோவேந்தர் காற்றலையை வெட்டிவிடும் ஓசை மிகும்." எனப் பாண்டியனும் சிறைப்பட்டு விடுவிக்கப்பட்டதைக்க்காண்கிறோம்! கணையன் அகப்பட கழுமலம் தந்த - அகம் 44/13 கணையன் நாணிய ஆங்கு மறையினள் - அகம் 386/8 கரிகால்சோழனின் தங்கைக்குப் பிறந்த செங்குட்டுவனை மகனாக ஏற்க மறுத்தான் கணைக்கால் இரும் பொறை. இதனால் வெகுண்ட சோழப்பெண் நல்லியயற்பாவை; இரும் பொறை -பிம்பிசாரனை அடிபணியவைத்த வரலாறே பலவாறு மாற்றப்பட்டது. தனது அண்ணன் கரிகால்சோழனையும் தனது மகன் செங்குட்டுவனையும் தனது மாமன் சந்திரகொற்றனின் மகன் கார்வேலனையும் துணையாகக் கொண்டு பிம்பிசாரனை அடிபணியவைத்து; [பிம்பிசாரனை அஜாதச்சத்ரு பட்டினிபோட்டுக் கொன்றாதாக வரலாற்றில் உள்ளது; ஆனால் கங்கைநதி நீரைத் தெற்கே செல்லவிடாமல் தடுத்தான் என வரலாற்றில் பதிவாகியுள்ளது. மேலும் தமிழ்ப்பாடல்களில் அகநாநூறு 44ல் பெரும்பூட் சென்னி- சோழன் செங்கணான்- கரிகால்சோழன்; சேரனது கழுமலங்கொண்ட போரில் 'வஞ்சிக்கோன்' என இளங்கோ குறிப்பிட்ட நறும்பூன் அத்தியே; இளஞ்சேரல் இரும்பொறை செங்குட்டுவன் என; தனது தந்தை 'கணையன்' கணைக்கால் இரும் பொறையைச் சிறைப்படுத்தக் காண்கிறோம். கணைக்கால் இரும் பொறையைச் சிறைப்படுத்தக் காண்கிறோம். புறநாநூறு- 22; குறுங்கோழியூர்க்கிழார்: “ ....மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே புத்தேல் உலகத்து அற்று எனக்கேட்டு,வந்து இனிது காண்டிசின், பெரும! முனிவிலை வேறு புலத்து இருக்கும் தானையொடு சோறுபட நடத்தி நீ துஞ்சாமாறே!”" என மாந்தரஞ்சேரல் இரும்பொறை அடக்கப்பட்டதையும், போர்மறவர்கள் நாட்டை விட்டு அகற்றப்படதையும், சோறுபட நடத்தும்படி அறிவுறுத்தப்பட்டதையும், இரும்பொறைக்குக் கீழ் இருந்த சிற்றரசர்களின் போர்ப்படையினர். செங்குட்டுவனின் தலைமைக்கீழ் [திருத்தணி]வேற்றிடத்தில் வைக்கப்பட்டதையும் காண்கிறோம். களவழி நாற்பது: கணையன் அகப்பட்டுச் சிறப்பட்டுப் பின்னர் விடுபட்டதையும், கலிங்கத்துப்பரணி மற்றும் மூவர் உலா நூல்களும் குறிப்பிடுகின்றன. மூவர்உலா: ” நல்லவன் பொய்கை களவம் நாற்பதுக்கு வில்லவன் கால்தலையை விட்ட கோன்”" எனக் குறிப்பிடுகிறது. புறநாநூறு-74: ”குழவி இறப்பினும்....”எனத்தொடங்கும் பாடலின் குறிப்பு: ”சேரமான்கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புயத்துப் பொருது, பற்றுக் கோட்பட்டுக் குடவாயிட் கோட்டத்துச் சிறையில் கிடந்து 'தண்ணீர் தா” என்று பெறாது, பெயர்த்துப் பெற்றுக் கைக் கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய ]வருந்திய] பாட்டு “என்று குறிப்பிடுகிறது. வடமொழி நூல்களிலும் தனது தந்தை பிம்பிசாரனைப் பட்டினிபோட்டுக் கொன்றதாக அஜாதச்சத்துரு எனச் செங்குட்டுவன் இடம்பெறுகிறான். இப்போரில் சென்னியின் படை முதலியாக இடம்பெற்றுப் பொறையன் அகப்பட உதவித் தன்னுயிர்படப் போரிட்டவனே பழையன். பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தில் பரணர் பாடிய கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்தான் இளங்கோ பாடிய செங்குட்டுவன். அகநாநூறு -கணைக்காலிரும்பொறை. "...... திண்டேர்க் கணையனகப்படக் கழுமலந் தந்த பிணெயலங் கண்ணிப் பெரும்பூட் சென்னி......." என அடக்கிவிடுவிக்கப்படக் காண்கிறோம்.ஒட்டக் கூதரும் இதனை உறுதிப்படுத்துகிறார். பட்டினப்பாலை-புலவர் உருத்திரங்கண்ணனார்: "................................ மருங்கு அற மலை அகழ்குவனே கடல் தூர்க்குவனே வான் வீழ்குவனே வளிமாற்றுவன் என தான் முன்னிய துறை போகளின் பல் ஒளியர் பணிபு ஒடுங்க தொல் அருவாளர் தொழில் கேட்ப வடவர் வாட குடவர் கூம்ப தென்னவன் திறல்கெட சீறி மன்னர் மன் எயில் கதுவும் மதனுடை நோன்றாள் மாற் றானை மற மொய்ப்பின் செங் கண்ணால் செயிர்த்து நோக்கி புன் பொதுவர் வழி பொன்ற இருங் கோவேள் மருங்கு சாய.........." எனத் தென்னவனாகக் குறிப்பிடப்படுபவனே சிலப்பதிகாரம் குறிப்பிடும் "இளையர் ஆயினும் பகையரசு கடியும் செருமான் தென்னர்" பொருநர் ஆற்றுப்படை: "............எய்யாத் தெய்வர் ஏவல் கேட்ப செய்யார் நேஎம் தெருமறல் கழிப்ப பவ்வ மீமிசை பகற்கதிர் பரப்பி வெல்வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு...." எனத் தெளிவாகக்குறிப்பிடுகிறார்.இவ்வாறு அனைவரையும் அடக்கியவன் "திருமா" - இராமன் எனக் காண்கிறோம்.! எனவே பொறையனை அடக்கியது; செங்கண்ணான் என்னும் காரிகால்சோழனே என்பது தெளிவாகிறது. "அரசர்குல திலகன் அச்சுதன் முற்றத்தில் அரச ரவதித்த வந்நாள்-முரசதிரக் கொட்டிவிடு மோசையினுங் கோவேந்தர் காற்றலையை வெட்டிவிடும் ஓசை மிகும்." சிறையுற்று விடுபட்டதைக் காண்கிறோம். யாப்பருங்கலம் விருத்தியுரை மேற்கோள் பாடல்கள் மற்றும் விளக்கத்தார் கூத்து நூலின் வாழ்த்துப் பாடல்கள் போன்றவற்றைக் காணும்போது; அமணர்களும் திருமாவளவனை, விஷ்ணுவின் அவதாரமாக ஏற்றுக்கொண்டு, அச்சுதன் எனப் போற்றியுள்ளது தெரிகிறது. தமிழ் மரபுப்படி அவனை நமது மக்களும் புலவர்களும் திருமாலாகப் போற்றியுள்ளனர். ஆகவே அன்றைய நிலையில் மதம் என்பதாக எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. முத்தொல்லாயிரம் பாடல்களின் எண்ணிக்கை என்ன வென்பதில் குழப்பம் உள்ளது; சில பாடல்களே கிடைத்துள்ளன: 49: "கச்சி ஒரு கால்மிதியா ஒருகாலால் தத்துநீர்த் தண்ணுஞ்சை தாண்மிதியாப்-பிற்றையும் ஈழம் ஒருகால்மிதியா வருமேநங் கோழியர் கோக்கிள்ளி களிறு" எனக் கார்வேலனின் கல்வெட்டில் குறிப்பிட்டபடி தெற்கே மூவர் கூட்டனியான காஞ்சியைக் கைப்பற்றிய ஒற்றியூரன் பரசுராம இரும்பொறை, தண்ணுஞ்சை எனப்பட்ட தஞ்சையைக்கைப்பற்றியவனையும், ஈழத்தைக்கைப்பற்றிய இராவண பாண்டிய செழியனையும் தம்ரபர்ணரையும் அடக்கியதைக்காண்கிறோம்! முசுகுந்த பரசுராம இரும்பொறை ஒற்றியூரன் முக்கண்ணான் தொண்டைநாட்டைப் பல்லவரிடமிருந்து கைப்பற்றியதோடு; சேத்சென்னிக்கும் கட்டுப்பட மறுத்து; பாவையை மணம்புரிய மறுத்ததோடு; வசிட்டனின் சதியால் சேட்சென்னியை(புறம்9,52,55,195,அகம்212,ம-காஞ்)மகத ஆரிய மோரிய அவுணருக்குக் கப்பம்கட்டும்படி வலியுறுத்தினான். இதனைச் சேக்கிழாரின் பெரியபுராணம்: "மருற்கொடுந் தொழில் மன்னவன் இறக்கிய வரியை நெருக்கி முன்திரு வொற்றியூர் நீங்கவென் றெழுதும் ஒருத்தர்" என திருக்குறிப்புத்தொண்டர் புராணத்திலும், சுந்தரர் தேவாரத்திலும்; ஒற்றியூரன் எனச் செப்பேட்டிலும் முசுகுந்தன் இடம்பெற்று: "மண்ணுலகம் காவல்பூண்ட உரிமையாற் பல்லவர்க்குத் திரை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும் பெருமையார் புலியூர்ச் சிற்றம்பலத் தெம் பெருமான்" எனவும்; திருத்தணி - வேலஞ்சேரி செப்பேடுகளின் சுருக்கம். பராந்தகசோழனினின் 25 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட இச்செப்பேடு ஆங்கில ஆண்டு கி.பி. 932 ஆகும். விஷ்ணு,பிரம்மா, மரிச்சி,காஸ்யபா, சூரியா,உஷினாரா போன்றோர் இவன் குலத்தில் தோன்றினார்கள் என்றும், கர்காலன்,சிபி, கோச்செங்கணான் போன்ற சோழ முன்னோர்களின் செய்திகளும் காணப்படுகின்றன. இச்செப்புப்பட்டயத்தின் சமஸ்கிருதப் பகுதி சோழ மன்னர்களின் பட்டியலையும் தருகிறது. அதில் கோச்செங்கணான் என்று ஒருவன் குறிப்பிடப்படுகிறான், அவன் மகன் ஒன்றியூரான் என்றும், அவன் மகன் சிறந்த போர் வீரன் என்றும், அவன் மகன் ஆதித்யன் என்றும் கூறுகிறது. இதிலிருந்து ஆதித்யன் தந்தையான விஜயாலயனுக்கு ஒன்றியூரான் தந்தை என்றும், ஒன்றியூரானின் தந்தையான கோச்செங்கணான் என்பவன் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துள்ளான் என்றும் அறிய முடிகிறது. இலக்கியங்களில் காணப்படும் பெருஞ்சேரல் இரும்போறையோடு போரிட்டு வெற்றி கண்ட கோச்செங்கணான் இவனா என்பது ஆய்வுக்குரியதாகும். மேலும் கரிகாலன் காலத்திய மூன்று நிகழ்ச்சிகள் பற்றி இச்செப்பேடு கூறுகிறது. 1. கரிகாலன் சோழர்களின் புகழை இமயம் வரை பரப்பினான் 2. காவேரியாற்றின் இரு கரைகளிலும் அணைகள் கட்டி வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தினான். 3. காஞ்சியில் பல அரண்மனைகள் கட்டினான். விஜயாலயனின் தந்தை பெயர் ஒற்றியூரான் என்றும் ஆதித்த சோழனின் மகனாகிய முதலாம் பராந்தகன் இராமேஸ்வரம், திருவரங்கம், கன்னியாகுமரி கோயில்களுக்கு துலாபாரம் அளித்துள்ளான் என்ற புதிய செய்தியையும் முதலாம் பராந்தகசோழனின் வேலஞ்சேரி செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது. இந்தக் கதநாய்வடுகர் தங்களைச் சோழர் என அறிவித்துக்கொண்டு பொய்யாக வெளியிட்ட செப்பேடுகளும் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் எப்படியெல்லாம் வரலாற்றை மாற்ற உதவியுள்ளன என்பதை இன்றுவரை எவருமே வெளிப்படுத்த மறுக்கிறார்களே! கும்பகோணத்துக்கு அருகில் திருவிடைமருதூரில் மகாலிங்கசாமி கோயிலில் கருவறையின் வெளியே தெற்குச்சுவற்றில் உள்ள SII XIX No. 347 கல்வெட்டில் "மொசி" ஒற்றியூரன் கூத்தன்" என உள்ளது. மரீசி என்பதை மொசி எனப் படித்து மரீசியின் மகன் ஒற்றியூரன் என்பதை மறைத்துள்ளனர். மேலும் ஒற்றியூரனே கூத்தனாகவும் குறிப்பிடப்படுகிறான். இவனையே சேக்கிழார்: " ஆல்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன். .. .." எனக் குறிப்பிடுகிறார். அந்தக் கூற்றனே தில்லைவாழ் அந்தணரிடம் சோழர்கள் தண்டிக்கப்பட்டபோது ஒப்படைக்கப்பட்ட மகுடங்களை - சோழரின் முடியைத் தனக்குச்சூட்டும்படி வேண்டியவன்; அந்தணர் எவரும் முடிசூட்ட மறுத்துவிட்டுச் சேரலத்துக்குச்சென்றுவிட்டதாகவும் சேக்கிழார் குறிப்பிடுகிறார். எப்பதோ வாழ்ந்த ஒற்றியூரனைப் பராந்தகனுடன் சேர்த்துக்குறிப்பிடுமளவுக்கு முன்னேறியுள்ளனர் என்பதை எவராவது தெளிவுபடுத்துகிறார்களா! மாட்டார்கள் மக்களே! திருத்தனி வேலஞ்சேரிச்செப்பேட்டில் " கறையார் மணிமிடற்றான் காபாளி .. .. ." எனக் கழுத்தில் கறையுடையவன் எனவும் குறிப்பிடக்காண்கிறோம்! இதனைப் புறத்திரட்டில் ஒரு பாடல்: "மண்ணுலார் தம்மைப்போல்வார் மாட்டாதே யன்றுவாய்மை நண்ணினார் திரத்துங்குற்றங் குற்றமே நல்லவாகா விண்ணுலார் புகழ்தற்கொத்த விழுமியோ னொற்றிபோழ்ந்த கண்ணுளான் கண்டந்தன்மேல் கறையையார் கறையன்றன்பார்?" எனக் குறிப்பிடுகிறது! கறை_மிடற்று_அண்ணல் காமர் சென்னி - புறம் 55/4 கறை மிடறு அணியலும் அணிந்தன்று அ கறை/மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/5,6 இந்தப்பாடல்களை எங்கே கொண்டுபோய் மறைப்பது? சொல்லுங்கள் மக்களே!

Sunday 28 December 2014

இலங்கை - சிங்களர் - இராவணன் - மனு - மனுவின் மகன் - காசியப்பன்

இலங்கை - சிங்களர் - இராவணன் - மனு - மனுவின் மகன் - காசியப்பன் எனது முந்தைய : ஸிகம் ஸிகிரி கார்வேல் கல்வெட்டுக்கள் கட்டுரையுடன் சேர்த்துக் காணும்படி கோருகிறேன். விஷ்ணுபுராணம்: "எல்லா உலகங்களின் மூலவராகவும் பிரமாவின் வடிவமாகவும் உட்பொருற்சாரமாகவும் (சந்திரகொற்றனின் முன்னோர்)விஷ்ணுவைத் தன்னுடன் கொண்டவராகவும்; ரிக் யஜுர் சாம அதர்வ வேதங்களாகத் திகழ்பவருமான (கிரேக்கன் அல்லது ஈரானியன்) இரணியகற்பனின் வலது கட்டைவிரலிலிருந்து பிரஜாபதி தக்ஷன்(விசுவகர்மன் அல்லது தெக்கன்) தோன்றினான்; தக்ஷனின் புதல்வி-அதிதியிடமிருந்து வைவஸ்வதன்(மனு, முசுகுந்தனின் தந்தை?) பிறந்தான்; அவனிடமிருந்து (அவனே) மனு(வாக மாறினான்) உதித்தான்; மனுவுக்கு இக்ஷவாகு(சந்திரகொற்றன்) முதல்(பிற எழுவவரும் சிற்றரச=எல்லைப் பாதுகாவலர்கள்) பிரிஷத்ரன் (எட்டாவதாகப் பிறந்த கிருஷ்ணன்=கார்வேல்) வரை ஒன்பது புதல்வர்கள் (பாதுகாவலரைப் புதல்வர் என மாற்றினர்) இருந்தனர்.(பின்னர் பலதை நீக்கினர்) சமயகுரு(வசிட்ட)னின் பசுவைப் பிரிஷத்ரன் கொன்றான்(எனப் பொய்க்குற்றம் சாட்டி) கார்வேல்= பிரிஷத்ரன் - தண்டிக்கப்பட்டான்)சூத்ரனானான். (இதனால் சந்திரகொற்றனின் தங்கை பிரிதாவை மணந்த சேத்சென்னிக்கு மகன் பிறந்தால் அக்குழந்தையே வாரிசு என்பதால் குழந்தையைக் கொல்ல வசிட்டனும் பிறரும் முயன்றதால்; விசுவாமித்திரனாலும் கார்வேலனாலும் பிரிதாவை ரகசியமாகப் பாதுகாத்து; கரிகால் பிறந்ததை மறைத்து) ஒருமகன் வேண்டி; மித்ரனுக்கும் வருணனுக்கும் வேள்வி நடத்தியபோது; வேண்டுதல் வாசகத்தைப் புரோகிதன் தவறாக உச்சரித்ததால் இளை (கரிகால்சோழனுக்கு இளைய தங்கை பாவை) என்னும் மகள் பிறந்தாள்; எனினும் மித்ரன் வருணன் ஆகியோரின் அருளால் மனுவின்புதல்வனாக மாறி சுத்யும்னன் எனப் பெயர் பெற்றாள் (தீர்தங்கரியானதை மறைத்து ஆணாக மாறறினர்); ஆயினும் மகாதேவ(முசுகுந்த)னின் கோபத்தால்(தீர்தங்கரிப் பதவியைப் பறித்துத் துரத்தியதால்) மீண்டும் பெண்ணாகமாறி; (சந்திரகுல=விதுரனின் மகன் செழியன்) சோமனின் புதல்வனான புதனின் ஆசிரமத்து(நாட்டு)க்கு அருகே(திருக் குறுங்குடியில்) அலைந்து திரிந்துகொண்டிருந்தாள்; புதன் அவளிடம் (சோழநாட்டின் மீது) மனதைப் பறிகொடுத்தான்; இருவருக்கும் புரூரவன் (செங்குட்டுவன்) பிறந்தான் (முசுகுந்தனுக்குப் பிறந்த செங்குட்டுவனைப் புதனுக்குப் பிறந்ததாக மாற்றினர்). பிறகு வசிட்டர் மற்றும் பிற ரிஷிகளால் இளை மீண்டும் புருஷரூபம் (பெற்றதாக எழுதினர்) பெற்று சுத்யம்னன் ஆனாள்"; எனக் குறிப்பிடுகிறது. [முய்ர் தொகுதி 1 பக்கங்கள் 221-221ல் மொழி பெயர்த்ததைத் தமிழில் பெயர்த்துள்ளனர்] மொழி பெயர்ப்பில் மனு மற்றும் புதன் குறித்துச் சில தவறுகள் இருக்கக்கூடும் எனத்தெரிகிறது; விசுவகர்ம மயனின் பெண்ணை இராவணனின் மகன் (யயாதி) கெடுத்ததால் அவனுக்கே அப்பெண்ணை மணம்செய்வித்து வரதக்ஷனையாக இலங்கைநாடு பறிக்கப்பட்டது என்பதுதான் வரலாறு. இராமாயணம் கிட்கிந்தாகாண்டம்: பிளவுபட்டுக் கடல்நடுவே செல்வதற்கு முன்னரான இலங்கைக் காட்டின் ஒரு பகுதியை நான்முகன்=விசுவாமித்திரன் தனது பேத்தி =கரிகால்சோழனின் தங்கை பாவை= ஏமைக்கு வழங்கியதையும், ஏமையின் பாதுகாப்பை ஏற்ற விசுவகர்ம=மயனை இந்திர=முசுகுந்த பரசுராமன் விரட்டியதும்; மயனின் மகளை இராவணன் கெடுத்து இலங்கையையும் கைப்பற்றியதும்; பாவை=ஏமை கார்வேல அகத்தியனைக் காணப் பொதியை சென்றதும் இடம்பெற்றுள்ளன. ஏமநன்நாடு =உமை=ஏமை =பாவைக்கு விசுவாமித்திரனால் கொடுக்கப்பட்டதாகும். மாபாரத்தில் சகுந்தலை(பாவை)யைக் கெடுத்த துஷ்யந்தன்(முசுகுந்தன்): "பெண்கள் பொய்பேசுவர்; நீ கெட்டநடத்தை யுள்ள விசுவாமித்திர (இனத்தவ)ரின் மகள். உன்பிறப்பு மிகத் தாழ்வானது; நான் உன்னை 'விபச்சாரி' என்று நினைக்கிறேன். உலகில் எல்லாப் பெண்களும் அயலாருக்கு உடன்படு(க்)கிறவர்கள்" என்கிறான். உத்தரகாண்டம்: அகத்தியர்; நான்முகனின்(?) மகன் புலத்தியன்(வியாசன்) தவம்செய்யும் இடத்துக்கு வரும் பெண் யாராயினும் கருத்தரிப்பாள் என நான்முகன் சொன்னான். திருணபிந்துவின் மகள் அறியாமல் சென்று கருத்தரித்ததால் புலத்தியனுக்கே மனைவியாக்கினான். அவளுக்கு விச்சிரவசு (விதுரன்) பிறந்து; பரத்துவாசனின் மகளைமணந்து பெற்ற வைச்சிரவணன்-குபேரன் (இராவணநின் அண்ணன்); நான்முகனிடம் வரம்பெற்று இலங்கையின் வடதிசைக் காவலும் பொருளுக்குத் தலைமையும் பெற்றுத் தந்தை கட்டலைப்படி ஆண்டிருந்தான். நான்முகன் கடலை(லங்கா புரியை)ப் படைத்து ராட்சசரையும் இயக்கரையும் படைத்தான்; இயக்கர் 'காப்போம்' என்றனர்; ராட்சசர் 'தின்போம்' என்றனர்; (குபேரனும் இராவணனும் புலத்தியனின் மகன் விச்சிரவசுவின் புதல்வர்கள் என இராமாயணம் பலமுறை குறிப்பிட்டாலும் தாய்வழியில் குபேரனும் செழியனும் இந்தியனாகவும் அந்நியனாகவும் இருக்கலாம்) புறநாநூறு-16: ".. ..செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற புலம்கெட இருக்கும் வரம்பில் தானைத் துணைவேண்டாச் செருவென்றி... ... கரும்பு அல்லது காடு அறியா பெருந் தண்பணை பாழ் ஆக ஏம நன்நாடு ஒள் எரி ஊட்டினை நாம நல்லமர் செய்ய ஓராங்கு மலைந்தன பெருமநின் களிறே!" என இலங்கையைக் கரிகால்சோழன் வென்றதாகப் பாடல்கள் உள்ளன. மாபாரதம் விராடபருவம் அத் 40ல்; "விதுரன் சதுர்வருணத்தை" விவரிக்கிறான்; மற்றும் 41ல்: "பிரம்மத்தைப்பற்றி திருதராட்சசன் விதுரனைக் கேட்டபோது; 'நான் சூத்திரன் எனவே பிரம்மத்தைப் பற்றிப் பேசக்கூடாது" என்கிறான். இராவணன் சீதையை வலுவில் அடையாததற்குக் காரணமாக; 'முன்னர் ஒரு புஞ்சிகத்தலை என்னும் (மயன்=விசுவகர்மனின்)அப்சரப் பெண்ணை (நாட்டை)க்கூடி அவளது ஆடைகளை(பாதுகாவளர்களை) நீக்கினேன்; நான்முகன் (விசுவாமித்ரன்) இதனை அறிந்து; "அதுபோல் (சோழநாட்டுப்) பெண்ணைப் பலவந்தம் செய்தால் தலைநொறுங்கும் என்று சபித்தான்" என்கிறான். இவையும்; சீதை பெண்ணல்ல என உறுதிப்படுத்துகின்றன; சோழநாட்டின் எந்தப்பகுதியைக் கைப்பற்றமுயன்றாலும் கொல்லப்படுவான் என விசுவாமித்திரன் எச்சரித்துள்ளான்; விசுவாமித்திரனால் கொடுக்கப்பட்ட வேளிர்சேனையின் சிலபிரிவுகள் இலங்கையில் இருந்துள்ளன. இராவணனின் மகன் இந்திரசித் அச்சேனையைப் பயன்படுத்தி; அனுமனைப் பிணித்ததாகக் காண்கிறோம். அதுவும் வேளிரின் துணையுடன் இராவணின் இருப்பிடத்தை அடையவும் அவனை எச்சரிக்கவும் கருதியே கட்டுண்டான் என. வில்லிபாரதம் ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீஉ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள் பாரதம் துரோண பருவம் 201.- அலாயுதனும் கடோற்கசனும் ஆரவாரித்தல். இடிக்குரலெனத்தலையுரகர்சாய்த்தனரெதிர்க்குரலெழுப்பின குலசிலோச்சயம் வெடித்ததுமுகட்டுயர்கடகமேற்றலைவிபத்தெனவிபத்திரள் வெருவுதாக்கின துடித்தனரியக்கரொடமரர்தைத்தியர்துணுக்கெனவிமைத்தனர் திசைகள்காப்பன ரடிக்கடிபடித்துகள்பரவைதூர்த்தனவரக்கனுமரக்கனும மரிலார்க்கவே. (இ-ள்.) அரக்கன்உம் அரக்கன்உம் - இராக்கதராகிய அலாயுதனும் கடோற்கசனும், அமரில் - போரில், ஆர்க்க - ஆரவாரஞ்செய்ததனால்,-உரகர்-(கீழுலகத்துள்ள) சர்ப்பஜாதியார், இடி குரல்என- (அம்முழக்கத்தை)இடியோசையென்று கருதி, தலை சாய்த்தனர்-அஞ்சியொடுங்கி(த் தமது) முடிசாய்த்து மூர்ச்சித்தார்கள்; குல சிலோச்சயம் - குலபருவதங்கள், எதிர் குரல் எழுப்பின -(அவ்வொலிக்கு) எதிரொலியை உண்டாக்கின; முகடு உயர் கடகம் மேல் தலை - மேலிடம் உயரப்பெற்ற அண்டகடாகத்தினது மேலிடம், வெடித்தது - பிளவுபட்டது; இபம் திரள் - (திக்கு) யானைகளின் கூட்டம், விபத்து என - ஆபத்துநேர்வதென்று எண்ணி, வெருவு தாக்கின - அச்சமிகப்பெற்றன; இயக்கரொடு அமரர் தைத்தியர் - யக்ஷர்களும் தேவர்களும் அசுரர்களும், துணுக்கென -திடுக்கிட்டு, துடித்தனர்-(உள்ளமும் உடலும்)பதைத்தார்கள்; திசைகள் காப்பவர் -திக்பாலகர்கள், இமைத்தனர் - (அச்சத்தால் தமது இமையாக்கண்களை) இமைத்தார்கள்; படி துகள்-பூமியிலுள்ள புழுதிகள், அடிக்கடி-, பரவைதூர்த்தன-(அதிர்ச்சிமிகுதியால் நிலத்தினின்று - எழும்பிக்) கடலிற்படிந்து அதனை நிறைத்தன;(எறு.) உயர்வுநவிற்சியணி. எதிர்க்குரல்பிரதித்தொனி, சிலோர்ச்சயம்= ஸிலா+உச்சயம்;கற்களின் கூட்டம் என்ற மலையைக் காட்டும், குல பர்வதங்கள்-சிறந்த மலைகள்; இமயம், ஏமகூடம,் கைலை, நிடதம், நீலம் மந்தரம், விந்தியம் என்பர்; கந்தமாதனமுங்கூட்டி எட்டெனவும் படும். இமைத்தல், அச்சக்குறி, திசைகள் காப்பவர்-இந்திரன், அக்கனி, யமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ஈசாநன் எனஎண்மர்; இவர்களை, கிழக்கு முதலாக முறையே கொள்க . அமரராத்தியரென்றபாடத்திற்கு - அமரராகிய ஆதித்தியரென்க: ஆத்தியர்=ஆதித்யர் அல்லது ஆதிதேயர் என்பதன் திரிபு. +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ஸில்ஸிலா ஷரீஃப் Ratings: (0)|Views: 42 |Likes: 0 Published by TAQWA (Singapore) தரீகதுல் அரூஸிய்யதுல் காதிரிய்யாவின் : ஸில்ஸிலா ஷரீஃப் - தமிழாக்கம். ஸில்ஸிலா என்ற சொல்லைப் பயன்படுத்தக் காண்கிறோம்.

Saturday 27 December 2014

ஸிகம் - ஸிகிரி - கார்வேல் கல்வெட்டுக்கள்

எனது கட்டுரை: கார்வேலரின் அகத்திக்கும்பாக் கல்வெட்டு குறித்தது. அதிலுள்ள பாரதநாட்டுச் சோழரான தமிழரின் வரலாற்றை மறைக்கவும் அழிக்கவும் முயண்ரா சிங்களருக்கு ஆதரவாக ஒரு கட்டுரை Source: UNESCO/CLT/WHC வெளியிடப்பட்டுள்ளது; அதறு மறுப்பாகவும்; எழுதப்பட்டது. கார்வேலரின் கல்வெட்டுப் பொறிப்புக்களில் பல எழுத்துக்களையும் சொற்களையும் அழித்தோரும் சிங்களரே என்பதையும் படிப்போருக்கு உணர்த்தவேண்டியுள்ளது. வரலாற்றை அறியாத பலராலும் கார்வேலர் குறித்த கல்வெட்டில் உள்ள தகவல்களுக்குச் சரியான விளக்கத்தைக் கொடுத்து வரலாற்றை வெளிப்படுத்த இயலவில்லை என்பதையும் எனது கட்டுரை உணர்த்தி நிற்கும் என நம்புகிறேன்! ஸிகம் - ஸிகிரி - கார்வேல் கல்வெட்டுக்கள் https://ta.wikipedia.org/s/49bi கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Source: UNESCO/CLT/WHC Sigiriya [ஸீயகிரி - ஸிகம் - சிங்கம்] Long Description Sigiriya is a unique witness to the civilization of Ceylon during the years of the reign of Kassapa I. The site of the 'Lion Mountain' was visited from the 6th century AD, by passionate admirers. The frescoes of Sigiriya inaugurated a pictorial style which endured over many centuries. The poems inscribed on the rock by certain of these admirers, and known as the 'Sigiri graffiti,' are among the most ancient texts in the Sinhalese language, and thus show the considerable influence exerted by the abandoned city of Kassapa I on both literature and thought. In the heart of Ceylon, the extraordinary site of Sigiriya, a lofty rock of reddish gneiss dominating, from a height of some 180m, the neighbouring plateau, has been inhabited since the 3rd century BC, as attested by the graffiti which proliferate in the grottoes and the shelters of the Buddhist monks. The fame of the 'Lion Mountain' is, however, due to one single factor: during a short period in the 5th century AD, a sovereign established his capital there. King Kassapa I (477-95), son of Dhatusena, only came to power after he had engineered the assassination of his father and had, briefly, dispossessed his brother. Justly fearing the vengeance of the latter, Kassapa had a fortified palace built on the rock of Sigiriya which was reputed to be impregnable. However, it was there that he was defeated after a short but cruel battle in 495, following which he cut his throat. After the death of Kassapa, Moggallana returned the site of Sigiriya to the monks, thus condemning it to progressive abandonment. During the eleven years that Kassapa resided in Sigiriya, he created a residence of exceptional splendour and founded his capital there, impressive vestiges of which are still extant. At the summit of the rock is the fortified palace with its ruined buildings, its cisterns and its rock sculptures. At the foot of the rock are the two quarters of the lower city which are defended by a massive wall: the eastern quarter (perhaps postdating the 5th century), which has not been sufficiently excavated, and the aristocratic quarter of the capital of Kassapa I, noteworthy for its terraced gardens embellished by canals and fountains, as well as for numerous monumental remains which have been disengaged from the forest which had invaded the ruins. Halfway up the rock, within an inaccessible rocky shelter in the vertical wall of the western face are rock paintings which have brought universal acclaim to the site of Sigiriya - 'The Maidens of the Clouds', 21 non-identified female figures, comparable to the most beautiful creations of Ajanta. Source: UNESCO/CLT/WHC இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களுக்கான சான்று மகதவேந்தன் சந்திரகொற்றனின் மகனான கார்வேல் வேந்தனின் கல்வெட்டில் 15ஆம் பொறிப்பாக உள்ளது! ஆனால் ஸிகபத ராணி யார் என்பதை எவரும் தெளிவுபடுத்தவில்லை. சிங்கமுகன் எனக் குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பாவில் "சிங்கமுகனை வென்று வாகைமுடித்தோய்" எனக் கந்தன் - முருகன் குறிப்பிடப்படுகிறார். அந்தச் சிங்கமுகனே முருகனின் தந்தையாகவும் உள்ளார். அவரால் சிங்களம் இராவண செழிய பாண்டியனுக்குக் கொடுக்கப்பட்டது. அதுவும் விசுவகர்மனிடமிருந்த் பறிக்கப்பட்டதென்பதை தைத்ரீய சம்ஹிதை உறுதிப்படுத்துகிறது. சந்திரகொற்றன் ஆண்ட மகததேசமே சொர்க்கம்; வசிட்ட அலெக்சாந்தனால் நாடுகடத்தப்பட்ட கார்வேலன்= கிருஷ்ணனுக்கு விசுவ ஆமித்திரன் உருவாக்கிக்கொடுத்த வேங்கடத்திருப்பதியே த்ரௌபதி; சொர்க்கமும் நரகமும் அல்லாத திரிசங்கு சொர்க்கம் =அந்தரதேசம்; இன்று ஆந்தரதேசமாகிவிட்டது. அதற்கும் தெற்கே கடலுள் தீவான இலங்கைப் பகுதியே நரகம் பாதாளம் எனப் பட்டது. கரிகாலின் தந்தை சேத்சென்னிக்காகத் தெற்கில் சௌனகன்/ஜனகன்= வியாசனால்; சோழ நாடு= சீத்தநாடு =சீதை உருவாக்கப்பட்டது. சந்திரகொற்றனை மணந்த சத்தியவதி என்ற ஹெலனுக்குப் பிறந்த வியாசன் உருவாக்கியதால் அதனையும் அடைய; அலெக்சாந்தனும் முசுகுந்த =துர்யோதனனை ஊக்குவித்தான். விசுவாமித்ரனின் துணையால் போட்டியில் அசுரமுறையில் வென்று பெற்றவனே கரிகால்=இராமன். வென்றவனுக்கும் அவனது தந்தைக்கும் முடிசூட்டி ஆட்சியளிப்பதே மஹாபிஷேக விழா என வேத பிரமாணங்களில் இடம்பெற்றது. ஐத்ரீயபிராமணம்: (மார்ட்டின் ஹாக் நூல்தொகுதி II பக்523-524: [இளஞ்சேத்சென்னிக்கு) மகாபிசேக (முடிசூட்டு)விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் முடிசூட்டிக் கொண்ட திசைக்காப்பாளர் எழுவரும் அவர்கற்கு முடிசூட்டியோரும்] மனுவின் மகன் சரியாதிக்குப் (சமதக்கினி)பிருகுவின் மகன் (சிவன்)சியவனன்; சத்ரசித்தின் மகன் சதனிகனுக்கு- வஸ்ரத்னனின் மகன் சமசு சாமன்; அம்பஷ்தியனுக்கும்; உக்ரசேனனின் மகன் யுதாமஸ் ரௌஸ்டிக்கும் -பர்வதனும் நாரதரும்; புவனனின் மகன் விசுவகர்மன் என்னும் மயனுக்கு கசியபர்(வசிட்டன்=சமதக்கினி என்னும் அலெக்சாந்தன்= காசிராசன்= பூர்ணகாசியப்பனின் மகன் முசுகுந்தன் =பரசுராமன்=அசோகன்=பீஷ்மன் என்னும் தேவவிரதன்=துர்யோதனன்); (தெக்கன்=தக்கன்= தசரதன்= உருவப்பல்தேர் இளஞ் சேத்சென்னி)பிஜவனனின் மகன் (திருமா=கரிகால்சோழன்= இராமன்=தருமன்)சுதாசனுக்கு வசிட்டர் (பூர்ணகாசியப்பன் என்னும் அலெக்சாந்தன்); அவிச்சித்தின் மகன் மருத்தனுக்கு -அங்கிரசனின் மகன் சம்வர்த்தன் எனக் குறிப்பிடுகிறது. இவர்களுள் புவனனின் மகனான விசுவகர்மனுக்குக் கசியபர் முடிசூட்டிய சில ஆண்டுகற்குப் பின்னர் விசுவகர்மனை நோக்கிப் பூமித்தாய் (இலங்கை); "எந்தமனிதனும் என்னைத் தானமாகக் கொடுக்க அனுமதிக்கப்படவில்லை; விசுவகர்மனே; நீ என்னைத் தானமாகக் கொடுத்தபடியால் நான் நடுக்கடலில் குதிப்பேன், காசியபருக்கு நீ கொடுத்த வாக்குறுதியை வீனாக்கி விட்டாய்" என வருந்தியதாக ஒருசெய்யுள் உள்ளது. எனவே முன்னர் சேர்ந்திருந்த இலங்கை; புயலால் நடுக்கடலில் ஒரு தீவாகி விட்டதைப் படிமவடிவில் காண்கிறோம். இத்தீவில்தான் மச்சகந்தி என்னும் சத்தியவதி=ஹெலனைப் பராசரன் புணர்ந்ததால் கருப்புநிற / தாம்ரவர்ண மாபாரத ஆசிரியன் வியாசன்= கன்ஹா= கிருஷ்ணத் த்வைபாயனன்= தீவில் வசிப்பவன் பிறந்தான். கார்வேலரின் 15ஆம் பொறிப்பு - அத்திக்கும்பா - உதகிரி மலையருகில் பூவனேசுவர் நகரில் உள்ளது. அதில் 15 ஆம் பொறிப்பு: 15 ஸகத ஸமண ஸுவிஹிதாநம்ʼ ச ஸவதி³ஸாநம்ʼ யதிநம்ʼ தபஸ இஸிநம்ʼ ஸங்கா⁴யநம்ʼ அரஹத நிஸீதி³யா ஸமீபே பபா⁴ரே வராகர ஸமுதா²பிதாஹி அநேக யோஜநாஹி தாஹி பநதிஸாஹி ஸதஸஹஸேஹி ஸிலாஹி ஸிஹபத² ராநி ஸ [பி⁴லாஸேஹி] 15 ................ சிம்மபத அரசி சிந்துலாவின் வேண்டுகோளை ஏற்று சமணத்துறவிகள் உறைவிடத்துக்கு அருகே மலை மேலிருக்கும் அருகர் சிலைக்கருகே பல யோசனைத் தூரத்திலிருந்து ஒப்பற்ற சுரங்கங்களிலிருந்து கொண்டு வந்த கற்களால் சமணப்பள்ளிகளைக் கட்டி.... 15................ bringing about a Council of the wise ascetics and sages, from hundred (i.e., all) quarters, the monks (samanas) of good deeds and who have fully followed (the injunctions) .................. near the Relic Depository of the Arhat, on the top of the hill, ............ with stones .............. brought from many miles (yojanas) quarried from excellent mines (he builds) shelters for the Sinhapatha Queen Sindhula. ................ அப்பெண்ணைப் புணர்ந்துகெடுத்ததோடு இப்பொறிப்புக்குப் பின்னரும் அதே பெண் தீர்த்தங்கரியாக இருந்ததைப் பொருக்காமல்; தீர்த்தங்கரியாக இருக்கவும் விடாமல் விரட்டிய மஹாவீர் என்ற வஜ்ரநந்தி எனப்பட்ட காசியப்பன் ஆடைகளைத் துறந்து திக்கம்பரராக இருந்ததையும்; அதனைத் தடுக்கத் தனது தாய்மாமன் மகனான கார்வேலரை வேண்டிக்கொண்டபடி; சீனப்பட்டாடைகளும் வெள்ளை ஆடைகளும் கொடுக்கப்பட்டு அவற்றை அணியும்படி வலியுறுத்தப்பட்டதையும் அவரது 14ஆம் பொறிப்பு உறுதிப்படுத்துகிறது. இந்தப் பொறிப்புக்கள் எப்போது வெட்டப்பட்டன என்பதோ ஏன் சிதைக்கப்பட்டன என்பதோ ஏன் பலசொற்களைஅழித்தார்கள் என்பதோ எவருக்குமே தெரியாது! வரலாற்றை அழித்து; சீனரும் சிங்களருமே அமணத்தில் இறுதித்தீர்த்தங்கரராக இருந்த கரிகால்சோழரைப் புத்தராக்கி அழித்தனர்! கார்வேலரின் 14ஆம் பொறிப்பு: 14 [த³கி²ணாபத²] வாஸிநோ வஸீகரோதி [।।] தேரஸமே ச வஸே ஸுபவத குமாரீ பவதே அரஹதே (ஹி) பகி²ந ஸம்ʼஸிதஹி காயநிஸீதி³யாய (...) ராஜபி⁴திநம்ʼ சிநவதாநம்ʼ வாஸாஸிதாநம்ʼ பூஜாநுரத உவாஸக³ (கா²) ரவேல ஸிரிநா ஜீவதே³ஹ ஸாயிகா பரிகா²தா [।।] 14 .................(அவர்) அடக்கினார். தம் பதின்மூன்றாம் ஆட்சியாண்டில், சமண மதம் நன்கு பரப்பப்பட்ட குமரி மலையின் மீது அருகர் கோவிலில், தம் கடுந்தவத்தால் பிறவிச் சுழற்சியைக் கடந்த சமண முனிவர்களை அவர்கள் சமண நெறியையும், வாழ்வையும், நடத்தையையும் பற்றிப் போதித்து வருவதை போற்றிச் சீனப்பட்டாடையையும், வெள்ளைப் போர்வைகளையும், கோவிலை நடத்தும் செலவுக்கான பணத்தையும் பணிவன்போடு வழங்கினார்.தெரிகிறது. பெரும்புகழ் கொண்ட கார்வேலர், பூசைகளில் பெரிதும் ஈடுபாடுள்ள வழிபாட்டாளர்(உபாசகர்), பிறவி, உடலின் தன்மைகளை முற்றும் உணர்ந்தவர். 14.................(he) subjugates. In the thirteenth year, on the Kumari Hill where the Wheel of Conquest had been well-revolved (i.e., the religion of Jina had been preached), (he) offers respectfully royal maintenances, China clothes (silks) and white clothes to (the monks) who (by their austerities) have extinguished the round of lives, the preachers on the religious life and conduct at the Relic Memorial. By Kharavela, the illustrious, an a layman devoted to worship, is realised (the nature of) jiva and deha இந்தக்கோரிக்கைகளைக் கார்வேலரிடம் வைத்து வேண்டிய பெண்ணே; குமாரன் முருகனின் தாய்! இவர் அவரது 7 ஆம் பொறிப்பிலும் உள்ளார்: 7 அநுக₃ஹ அநேகாநி ஸதஸஹஸாநி விஸஜதி போரம்ʼ ஜாநபத₃ம்ʼ [।।] ஸதமம்ʼ ச வஸே பஸாஸதோ வஜிரக₄ரவதி ... ஸ மதுக பத₃ [புநாம்ʼ] ஸ [குமார] ...[।।] அட₂மே ச வஸே மஹதி ஸேநாய மஹத கோ₃ரத₄கி₃ரிம்ʼ 7 நகரத்துக்கும் நாட்டுக்கும் பல நூறாயிரம் காசுகளை வாரிக்கொடுத்தார். தம் ஏழாம் ஆட்சியாண்டில், அவருடைய பகழ் பெற்ற மனைவி வஜிரகரவதி புனிதமான தாய்மை அடைந்தார். ..... பிறகு தம் எட்டாம் ஆட்சியாண்டில், அவர் பெரும்படை கொண்டு கோரதகிரியைச் சூறையாடியதோடு 7 bestows many privileges (amounting to) hundreds of thousands or the City-Corporation and the Realm-Corporation. In the seventh year of his reign, his famous wife of Vajiraghara obtained the dignity of auspicious motherhood ………….Then in the eighth year, (he) with a large army having sacked Goradhagiri எழுத்துக்களையும் சொற்களையும் சிதைத்து வரலாற்றை மறைத்து மாற்ற முயன்ற சிங்களரும் சீனருமே புத்த மதத்தை உருவாக்கினர் என்பதையும் காணலாம்! அப்போது அமணம்தான் இருந்தது. அந்தப் பெண்ணின் அண்ணனே கரிகால்சோழர். சூலவம்சம் என்ற ஒரு தவறான சோழ அரசர்களின் பட்டியலை வெளியிட்டுக் குழப்பியவர்களும் சிங்களரே. சோழவம்சம் என்பதே சூலிவம்சம் எனக்காட்டப் பட்டுள்ளது. சீனப்பயணி யுவான்சுங் மகதத்திலிருந்து தெற்கே காஞ்சிக்கு வந்தபோது சு லி ய நாட்டைக்கண்டதாக அவரது பயணநூலும் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. அவர் குறிப்பிடுவது சோழநாட்டையே. கார்வேலரின் கல்வெட்டுப்பொறிப்பும் இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. 6 ஆம் ப்றிப்பு: 6 பி₄ங்கா₃ரே ஹித ரதந ஸாபதேயே ஸவ ரடி₂க போ₄ஜகே பாதே₃ வந்தா₃ பயதி [।।] பஞ்சமே ச தா₃நீ வஸே நந்த₃ராஜ திவஸ ஸத ஓகா₄டிதம்ʼ தநஸுலிய வாடா பநாடி₃ நக₃ரி பவேஸ [ய] தி ... [।।] அபி₄ஸிதோ ச [ச₂டே₂] வஸே ராஜஸேயம்ʼ ஸந்த₃ம்ʼஸயம்ʼ தோ ஸவகரண 6 செங்கோல்களும் தளர, அவர்கள் ரத்தினங்களையும் பெருஞ்செல்வத்தையும் (தம்மிடம்) பறிகொடுத்த ரதிக, போஜக மன்னர்களைத் தம் காலடியில் மண்டியிட்டுப் பணியச் செய்தார். தம் ஐந்தாம் ஆட்சியாண்டில், நூற்றிமூன்றாம் ஆண்டில் நந்தராஜன் வெட்டிய தனசூலியக் கால்வாயைத் தலைநகருக்கு நீட்டுவித்தார்...... ராஜசூய வேள்வி மேற்கொண்டு மங்கலநீராடுகையில் [கொடையாக] எல்லா வரிகளையும் திறைகளையும் விலக்கி 6 bhingaras cast away, deprived of their jewels (i.e., ratana, Skt. ratna, precious objects) all the Rathikas and Bhojakas (he) causes to bow down at his feet. Now in the fifth year he brings into the capital from the road of Tansauliya the canal excavated in the year one hundred-and-three of King Nanda ................... ......... Having been (re-)anointed (he while) celebrating the Rajasuya, remits all tithes and cesses, இதில் தன சூலியக்கால்வாய் எனக் குறிப்பிடப்பட்டது சோழநாட்டின் பெயருடன் சேர்த்தே நதிக்குப் பெயரிட்டுள்ளனர் என்பதைக் காண்கிறோம்! இமையமலைப்பகுதியிலும் சோழர் கனவாய் என ஒரு கனவாய் உள்ளதாகப் பலரும் குறிப்பிட்டுள்ளனர்: திரு நீலகண்டசாஸ்த்திரியும் குறிப்பிட்டுள்ளார். சிங்களரால் கல்வெட்டின் பொறிப்புக்களில் பல எழுத்துக்களும் சொற்களும் சிதைக்கப்பட்டதால் சரியான எழுத்துக்களையோ உச்சரிப்புக்களையோ அவற்றின் சரியான பொருளையோ அவர்காலத்தில் நடந்த நிகழ்வுகளின் வரலாற்றையோ எவராலுமே வெளிப்படுத்த இயலவில்லை; எவருடைய பெயரும் அதில் இடம்பெறவில்லை என்பதும் நோக்கத்தக்கது இராவண பாண்டியனை வென்று கார்வேலரால் கைப்பற்றப்பட்டவையே சோழநாட்டை ஆட்சி செய்வதற்கான மணிமுடிகளும் முத்தாரங்களும் பொன் ஆரங்களும் குதிரைகளும் யானைகளும் ஆகும். அதேபோன்றுதான் தனது மகதத்தைக்கைப்பற்றி அதனை ஆட்செய்வதற்கான மணிமுடிகளையும் ஆரங்களையும் கைப்பற்றிய காசியப்பனான வசிட்ட அலெக்சாந்த நந்தனை வென்று திரும்பக்கைப்பற்றிய வரலாறும் கார்வேலரின் பொறிப்புக்களில் 5 மற்றும் 6 ஆம் பொறிப்புக்களாக உள்ளன: 5 க₃ந்த₄வ வேத₃ பு₃தோ₄ த₃ப நத கீ₃த வாதி₃த ஸந்த₃ஸநாஹி உஸவ ஸமாஜ காராபநாஹி ச கீஃ‌டா₃பயதி நக₃ரிம்ʼ [।।] ததா₂ சவுதே₂ வஸே விஜாத₄ராதி₄வாஸம்ʼ அஹத புவம்ʼ கலிங்க₃ புவராஜ நிவேஸிதம்ʼ ..... விதத₄ மகுட ஸ .... நிகி₂த ச₂த 5 கந்தர்வ கானத்தில் தேர்ச்சி பெற்ற மாமன்னர் தலைநகரில் இசைவிழாக்கள், மக்கள்கூடல்களில் தபம், ஆடல், பாடல், கருவியிசை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மகிழ்வித்தார். அவரது நான்காம் ஆட்சியாண்டில், அவரது கலிங்க முன்னோர்கள் கட்டுவித்த வித்யாதரக் குடில் ... இடிபடுவதற்கு முன்னர் ...... மாற்றார் மணிமுடிகள் வீழ, தலைக்கவசங்கள்(?) துண்டாக, கொற்றக்குடைகளும் 5 [he) versed in the science of the Gandharvas (i.e., music), entertains the capital with the exhibition of dapa, dancing, singing and instrumental music and by causing to be held festivities and assemblies (samajas); similarly in the fourth year, 'the Abode of Vidyadharas' built by the former Kalingan king(s), which had not been damaged before ………..................... with their coronets rendered meaningless, with their helmets (?) (bilma) cut in twain (?), and with their umbrellas and 6 பி₄ங்கா₃ரே ஹித ரதந ஸாபதேயே ஸவ ரடி₂க போ₄ஜகே பாதே₃ வந்தா₃ பயதி [।।] பஞ்சமே ச தா₃நீ வஸே நந்த₃ராஜ திவஸ ஸத ஓகா₄டிதம்ʼ தநஸுலிய வாடா பநாடி₃ நக₃ரி பவேஸ [ய] தி ... [।।] அபி₄ஸிதோ ச [ச₂டே₂] வஸே ராஜஸேயம்ʼ ஸந்த₃ம்ʼஸயம்ʼ தோ ஸவகரண 6 செங்கோல்களும் தளர, அவர்கள் ரத்தினங்களையும் பெருஞ்செல்வத்தையும் (தம்மிடம்) பறிகொடுத்த ரதிக, போஜக மன்னர்களைத் தம் காலடியில் மண்டியிட்டுப் பணியச் செய்தார். தம் ஐந்தாம் ஆட்சியாண்டில், நூற்றி மூன்றாம் ஆண்டில் நந்தராஜன் வெட்டிய தனசூலியக் கால்வாயைத் தலைநகருக்கு நீட்டுவித்தார்...... ராஜசூய வேள்வி மேற்கொண்டு மங்கலநீராடுகையில் [கொடையாக] எல்லா வரிகளையும் திறைகளையும் விலக்கி 6 bhingaras cast away, deprived of their jewels (i.e., ratana, Skt. ratna, precious objects) all the Rathikas and Bhojakas (he) causes to bow down at his feet. Now in the fifth year he brings into the capital from the road of Tansauliya the canal excavated in the year one hundred-and-three of King Nanda ................... ......... Having been (re-)anointed (he while) celebrating the Rajasuya, remits all tithes and cesses, மேற்கண்ட அனைத்துக்குமான சான்றுகள் புராணங்களிலும் இதிகாசங்களிலும் வேதங்களிலும் கூட விரிவாக உள்ளன! மேலும் தொல்தமிழ்ப்பாடல்களிலும் விரிவான தகவல்கள் உள்ளன! ============================================== கார்வேலரின் கல்வெட்டுத்தகவல்களும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புக்களும் google search மூலம் பெறப்பட்டவை; google அமைப்பாளர்களுக்கு நன்றி சொல்வதுடன் அதனைக் google உதவியுடன் வெளியிட்ட அன்பருக்கும் எனது நன்றி உரித்தாகும்!

Friday 5 December 2014

சுவாதி அனுமன்! - அனுமனும் சுவாதியும்!

சுவாதி அனுமன்! - அனுமனும் சுவாதியும்!
சுவாதி அனுமன்! - அனுமனும் சுவாதியும்! சப்தரிஷி - ஏழுமுனிவர்களின் மண்டலங்களில் தென்கிழக்கில் வின்மீன்களில் ஸ்வாத் என்ற மீன் வால்மீகி முனிவரால் அனுமனுடன் சேர்த்துப் பேசப்படுகிறது! இம்மீன் இடம்பெற்ற மீன்தொகுதியை ஆல்பா பூட்ஸ் என மேலைநட்டினர் குறிப்பிடுவர். [கீழ்த்தாடை எலும்பு வளர்ச்சியடையாத முகம் எனப்பொருள்படும்] சுவாத் மீனை ஆர்க்ற்றஸ் எனக்குறிப்பிடுகின்றனர். [காதாநாயகி எனக்கொள்ளலாமா?] இதனைக் குரங்குபோன்ற [அனுமனின்] வடிவம் என முன்னோரால்கொள்ளப்பட்டது! இராமாயணத்தில் கிஸ்கிந்தாகாண்டத்தில் 67ஆம் சருக்கத்தில் 20ஆம் பாடலில்: பவிஷ்யதி ஹிமே; யதா ஸ்வாதே; பந்தா இவாம்பரே - சுவாதி முன்னேருவதேபோல நான் முன்னேறுவேன் என அனுமன் குறிப்பிடுகிறான்! வாயுவின் புதல்வனே அனுமன்; அன்றைய வாயுவாக இந்திரனான சிவனை மஹேசுவரனையே குறிப்பிடுவதாகத்தெரிகிறது! அனுமன் குரங்காக உருவானதைப் பண்டைய எகிப்த்து நாட்டின் தொன்மங்களும் குறிப்பிடுகின்றன. சீனரின் தொன்மங்களில் கன்னி - கன்யா மண்டலத்தின் அருகில் உள்ள குரங்கு எனக்குறிப்பிடுகின்றன. வன்மண்டலத்தைப் பலபிரிவுகளாக்கிக் கொடுக்கும் கிரிமால்டி கேட்லாகில் இவை இடம்பெற்றுள்ளன. சுவாதியியும் சூரியனும் சேர்ந்து காணப்படும் காலமான அக்டோபர் 20முதல் நவம்பர் 2வரை இந்தியாவுக்குள் கடல்கொந்தளிப்பும் சூர - சுர ஆவளியும் [தீபாவளி] புயற்காற்றும் [சுவாதிபவனோ]உருவாகின்றன! சுவாதியும் வாயுவுக்கும் ஏற்பட்ட தொடர்பே கன்யாவுக்கும் மகேசுரனுக்கும் ஏற்பட்ட தொடர்பாகவும் அதனால் பிறந்தவனே அனுமன் எனவும் காண்கிறோம். வேதங்களில் சுவாதியை வாயுதேவதா என்கின்றன. இது வடக்குநோக்கியே நகர்வதாகும்.அன்றைய மகேசுரன் வாழ்ந்தது வடபகுதியே என்பது குறிப்பிடத்தக்கது. அவனைத் தனது புதல்வனின் துணையுடன் விரட்டுவதையே இது காட்டுகிறது! வாயுதேவனான இந்திர மகேசுரனிடம் வஜ்ராயுதம் உள்ளதாகவும் அதன் ஒளியே வானில் இடி மின்னலை உருவாக்குவதாகவும் காண்கிறோம். சுவாதி என்றாலும் வாளையே குறிக்கும். அதனைக்கைப்பற்றவே அனுமன் மகேசுரனுடன் அர்ச்சுனனாகப் போரிட்டான். அதனாலேயே இடி மின்னல்கள் உருவகும்போது இன்றும் மக்கள் அர்ச்சுனா அர்ச்சுனா என அலருகின்றனர்! சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவன் இமையம்சென்றது அந்த மஹேசுரனால் கைப்பற்றிச்செல்லப்பட்ட நமது தமிழரின் சில பிரிவுப்படையை [வேளிர் படையின் 18 பிரிவுகளில் பாதி அல்லது 11 பிரிவுகள் - மருத் தேவதைகள் என இதிகாசங்களும் குறிப்பிடும்] விடுவித்ததையும் செங்குட்டுவனின் படையெடுப்பையும் நமது தொல்தமிழ்ப்பாடல்களிலும் காண்கிறோம்! மாமல்லபுரம் பாறையின் புடைப்புச்சிற்பங்களிலும் இதனைக் காணலாம்! அர்ச்சுனனே முருகனாகவும் பரசுராமனே மகேசுரனாகவும் காட்டப்பட்டிருப்பார்கள்! இமையவன் மீது செங்குட்டுவனின் படையெடுப்பையே இவை குறிப்பிடுகின்றன. தனது தாயை விடுவிப்பதாகவும் இதனைக்கொள்ளலாம்! அனுமனின் தாய் கன்யாவை சிறைப்பிடித்துச்சென்ற மகாதேவன் அப்பெண்ணைக்காட்டியே தமிழரை அச்சுறுத்தித் தன்னையும் தனது ஆதரவாளர்களையும் காத்துக்கொண்டான். அரபியர்கள் - மிளேச்சர்கள்; சுவாதியை சுவர்க்கத்தின் காவல்தேவதை எனக் குறிப்பிடுகின்றனர். ஆர்க்ற்றஸ் - மரிமாதா என பைபிளில் வெகுவாகப்புகழப்படுகிறாள். மருத் தேவதைகளில் மற்ற பிரிவுகள் - எஞ்சிய வேளிர்படைப்பிரிவுகள் திருவோண மீனின் கூட்டத்தில் - விஷ்ணுவின் அருகிள் உள்ளன. விஷ்ணுவின் தொண்டனே அனுமன்! விசுவாமித்திரரின் நதிமூலம் - ரிஷிமூலம்; கால்வழியில் வந்தபெண்ணே அனுமனின் தாய் கன்யா. மாபாரதத்தில் இதனை மகாதேவனே குறிப்பிடுகிறான்! மத்வர்கள் வாயுபுதல்வனான அனுமனின் துணையுடனே விஷ்ணுவை அடையலாம் எனக்குறிப்பிடுகின்றனர்.