Wednesday 27 November 2013

நச்சினார்க்கினியர் கொடுக்கும் வரலாற்றுத் தகவல்கள்

நம்பிக்கை = குருடு ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சன் நச்சினார்க்கினியர் கொடுக்கும் வரலாற்றுத்தகவல்கள் வரலாற்றைக்காண உதவக்கூடியவையே முல்லைப்பாட்டும் குறிஞ்சிப்பாட்டும். இவற்றிலும் வரலாற்றை மறைக்கும் முயற்சியாகவே பாட்டுடைத் தலைவர்கள் இல்லாதபடி மாற்றப்பட்டன. செழியனைத் தவிறப் பிறர் இடம்பெற்ற போதிலும் மேலும் ஒருவன் இடம்பெற்றிருந்தான். அவனே பிரகதத்தன் செல்யுக்க்ஸ்நக்கந்தன். இதனையே குறிஞ்சிப்பாட்டின் அடிக் குறிப்பான "ஆரியவரசன் பிரகதத்தனுக்குத் தமிழரிவித்தற்குப் பாடியது" என்ற தகவல் உணர்த்துகிறது. இத்தகவலைக் கொடுத்தவர் குறிஞ்சிப்பாட்டைப் பாடிய கபிலரா, வேறு எவருமா என்பதிலும் உறுதியற்ற நீலை இன்றுவரை நீடிக்கிறது. எப்படியாயினும் இத்தகவலைக் கொடுத்தவர் பிற்காலத்தவரே; அவரது காலத்தில் முழு வரலாறும் இருந்திருக்கவேண்டும் என்பதையே இத்தகவல் உணர்த்தி நிற்கிறது. எனவே அவருக்கு நாம் நன்றி செலுத்தவேண்டும். உச்சிமீதுவைத்துக் கொண்டாடப்படும் சிறப்புமிக்க உரைகாரரான நச்சினார்க்கினியர்; தொல்காப்பியத்துக்கான தனது பாயிரம் மற்றும் சிறப்புப்பாயிரம் ஆகியவற்றால் கவர்ச்சி மிக்கவராகத் தோற்றம் கொண்டார். தொல்காப்பியர் மற்றும் அகத்தியர் குறித்துக் குறிப்பிடுவதிலும் வரலாற்றுத் தகவல்கள் உறைந்து கிடக்கின்றன; அதனைச் சுருக்கமாகக் காண்போம். "தேவரெல்லாருங்கூடித் தாம் சேர இருத்தலின் மேருத்தாழ்ந்து தென்றிசை யுயர்ந்தது, 'இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற்குரியர்' என்று அவரை வேண்டிக் கொள்ள அவரும் தென்றிசைக்கண் போதுகின்றவர் 'கங்கையார் உழைச் சென்று காவிரியாரை வாங்கிக்கொண்டு பின்னர் யமதக்கினியாருழைச் சென்று அவர் மகனார் திரணதூமாக்கினியாரை வாங்கிக்கொண்டு புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார் உலோபமுத்திரையாரை அவர் கொடுப்ப நீர் ஏற்று இரீயிப் பெயர்ந்து துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண் குடி வேளிருள்ளிட்டோரையும் அருவாளரையும் கொண்டு போந்து காடுகெடுத்து நாடாக்கி பொதியின் கண் இருந்து இராவணனைக் காந்தருவத்தாற் பிணித்து இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கித் திரணதூமாக்கினியாராகிய தொல்காப்பியனாரை நோக்கி 'நீசென்று குமரியாரைக் கொண்டுவருக' எனக்கூற அவரும் 'எம்பெருமாட்டியை எங்ஙனம் கொண்டுவருவல்' என்றார்க்கு 'முன்னாகப் பின்னாக நாற்கால் நீளம் அகல நின்று கொண்டு வருக' என அவரும் அங்ஙனம் கொண்டுவருவழி வைகை நீர் கடுகிக் குமரியாரை ஈர்த்துக் கொண்டுபோகத் தொல்காப்பியனார் கட்டலை யிறந்து சென்று ஓர் வெதிர்கோலை முறித்து நீட்ட அது பற்றி யேறினார். 'அதுகுற்றம்' என்று அகத்தியனார் குமரியாரையும் தொல்காப்பியனாரை யும் 'சுவர்க்கம் புகாப்பீர்' எனச் சபித்தார். 'யாங்கள் ஒரு குற்றமும் செய்யாதிருக்க எங்களைச் சபித்தமையால் எம் பெருமானும் சுவர்க்கம் புகாப்பீர்' என அவர் அகத்தினாரைச் சபித்தார். அதனால் வெகுண்ட அகத்தியனார், அதங்கோட்டாசிரியரை நோக்கி 'நீ தொல்காப்பியன் செய்த நூலைக் கேளற்க' என்றார்." மேற்கண்ட குறிஞ்சிப்பாட்டின் அடிக்குறிப்பு, நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய நூலுக்கான பாயிர உரை ஆகியவை கொடுக்கும் தகவல்களுக்கான விளக்கங்களையோ வரலாற்றையோ எந்த வரலாற்றாளரும் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. மிகச் சிறந்த தகவல்களைக் கொடுக்கும் இவற்றை ஏன் ஒதுக்குகிறார்கள் எனபது புதிராக உள்ளது. தென்மேற்கு இந்தியப்பகுதிகளான ஆப்கானிஸ்த்தானுக்கு மேற்கே பாரசீகம் ஈரான் கிரேக்கம் ரோம் எகிப்து போன்ற நாட்டைச் சேர்ந்தோரும் அரேபியரும் இந்தியாவுக்குள் வாழ்வும் வணிகமும் தேடிவந்த காலத்துக்குப் பின்னர் தங்களை நிலைநிறுத்திக் கொண்டு வடமேற்கிலிருந்து படிப்படியாக முன்னேறி வடகிழக்கு நாடுகளில் பெண்களைச் சிறுமைப்படுத்தித் தங்களை நிறுவிக்கொண்டு வாழ்ந்த காலத்தில் ஒரு மேலைநாட்டவன் பெண்வழிச்சமுதாயத்தை இழிவுபடுத்தியபோதும் பெண்ணைப் பகடைக்காயாக்கித் தெற்கிலும் நாடுகளைக் கைப்பற்ற முயன்றபோதும் இவ்வரலாறு தொடங்குகிறது. குறிஞ்சிப்பாட்டின் அடிக்குறிப்பில் இடம்பெற்ற பிரகத்தன் என்பவன் இராமாயணத்திலும் மாபாரதத்திலும் தொல்தமிழ்ப் பாடல்களிலும் இடம்பெற்றுள்ளான். ஆரியவரசனான பிரகத்தன் எப்படித் தென்னகத்துக்குள் வந்தான் என்பது குறித்து எவரும் ஆய்வு செய்யவில்லை. தமிழ்ப்பாடல்களை எழுதியவனாகவும் இடம்பெற்றது எப்படி என்பதற்கும் விளக்கம் இல்லை. ஆரியனாக இடம்பெற்ற பிரகத்தனின் கூட்டம் தொல்தமிழ்ப் பாடல்களில் கானகத்தில் வாழ்ந்ததை; குறுந்தொகை- 7: வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர் யார்கொல் அளியர் தாமே ஆரியர் கயிறால் பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற் றொலிக்கும் வேய்பயில் அழுவம் முன்னி யோரே" எனக் குறிப்பிடுகிறது. இப்பாடல் கையில் வில்லுடன் காலில் கழலணிந்த திருமண மாகாத ஒரு இளைஞனும் அவனுடன் தொடியோள் என அடையாளப்படுத்தப்படும் தென்பகுதி சார்ந்த, காலில் சிலம்பணிந்த ஒரு சிறுமியும்; ஆரியர் நிறைந்த காட்டுக்குள் அச்சமின்றிச் செல்கிறார்களே; இவ்விருக்கும் என்ன ஆகுமோ என அஞ்சிப் பாடுவதாக இப்பாடல் உள்ளது. ஆரியர் என்ற சொல்லுக்குப் பின்னர் இடம்பெற்ற இரண்டு சொற்களும், இறுதி இரண்டு சீர்களுக்கு முன்னுள்ள சொல்லும் சிதைந்துள்ளன. எப்படியாயினும் வெம்மையான வெங்கடக் காட்டுக்குள் வாகை மரங்கள் நிறைந்த ஆரியர் வாழும் பகுதிக்குள் வடதிசை நோக்கிச் செல்கிறார்கள் என்பது தெளிவாகிறது. தொடியோள் என்ற சிறுமி மேலும் பல தொகைநூற் பாடல்களில் இடம்பெற்றுள்ளாள். எனவே அவளது வரலாற்றை எவரும் விரிவாக ஆய்வுசெய்ய வில்லை. இதில் குறிப்பிடப்படும் ஆரியர்; இராமாயணத்தில் தன்டகாரன்யக் காட்டுக்குள் பதுங்கி வாழ்ந்ததாகக் காணப்படுகிறது. சிலப்பதிகாரத்திலும் இத்தகவல் இடம்பெற்றதோடு ஆரியரைப் போரிட்டுச் சிறைப்படுத்திய தகவலும் விரிவாக இடம்பெற்றுள்ளது. இவர்களைச் சிறைப்படுத்தியவன் தென்னக மன்னன் ஒருவனின் படைத்துணையைப் பெற்றுச் சிறைப்பிடித்ததாக இரண்டு இடங்களில் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். இராமாயணமும் சிலப்பதிகாரமும் ஒரு அந்நியனின் இழி நடத்தைகளை மறைக்கக் கடும் முயற்சி செய்ததைக் காண்கிறோம். ஆரியரைக் குறும்பர் அவுணர் எனப் பல தொல்தமிழ்ப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. ரிக்வேதத்திலும் பலவாறு இடம்பெற்றுள்ளனர். மேலும் இவர்கள் வாழ்ந்த காட்டுப்பகுதிக்குத் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளை ஆட்சிசெய்த அரசர்களுடன் பலமுறை போரிட்டும் கொள்ளை யிட்டும் வழிப்பறிசெய்தும் வடவேங்கட எல்லைப்பகுதியில் தொல்லைகொடுத்ததால் துரத்தப்பட்டதாகவும் காண்கிறோம். வடபகுதி அரசர்களுக்குத் துணைநின்று போரிட்டதாகவும் பல பாடல்கள் காட்டுகின்றன. இறுதியாகத் தென்பகுதிப் பெண்ணைக் கெடுத்தவனுக்குத் துணைநின்று போரிட்டபோது தென்பகுத்திப் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர் என்பதும் உறுதியாகத் தெரிகிறது. கெடும்மதிகொண்டவனையும், அவனுக்குத் துணைநின்ற ஆரியரையும் இழிவுபடுத்தாமல் நல்வழிப்படுத்தித் தமிழறிவிக்கப்பட்டதைக் குறிஞ்சிப்பாட்டும் முல்லைப்பாட்டும் பிற பாடல்களும் உறுதிப்படுத்துகின்றன. ரிக்வேதம்: 10-49.3- (இந்திரன்):"தஸ்யுக்களிடமிருந்து ஆரியர் என்னும் உயரின மதிப்புப்பெயரை பறித்துவிட்டேன்." அகநாநூறு- 141ல் ஆரியக்குறும்பரைப் பயிற்றுவித்துக் குடியமர்த்தியதைப் புலவர் நக்கீரர்: "நெடுங்கால் மா அத்துக் குறும்பரைப் பயிற்றும் செல்குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால் வெள்போர்ச் சொழன் இடையாற்று அன்ன நல் இசை வெறுக்கை தருமார்.......... தேம்கமழ் நெடுவரை பிறங்கிய வேங்கட வைப்பிற் கரன் இறந்தோரே" எனக்குறிப்பிடுகிறார். பெரியபுராணத்தில் சேத்கிழார் புராணவடிவில் " தீது நீங்கிடத் தீக்கலியாம் அவுணர்க்கு..........பொற்பினால் விளங்கும்" எனவும்; "குன்றுபோலு மாமதில்புடைபோக்கி குடியிருத்தின கொள்கையின்" எனவும் சிலதகவல்களை மறைத்துக் குறிப்பிடுகிறார். அனைவரும் ஒன்றுகூடிப் பல்லவராக்கப்பட்டுத் தொண்டைநாட்டைக் கரிகால்சோழன் ஒப்படைத்த போது, பிற தென்னக ஆட்சியாளர் எதிர்ப்புத் தெரிவித்திருப்பர். இதுகுறித்த பாடல்களும் காரணங்களும் மறைந்துவிட்டபோதிலும் சேத்கிழாரின் பெரியபுராணத்தில் மட்டுமே சில தகவல்கள் உள்ளன. பல்லவரின் தொடக்க கால வரலாறும் கிடைக்கவில்லை. ஆரியப் பிரகத்தனையும் சிறைப்பிடித்தபோது; தமிழ் அந்தணர், ஐயர், முனிவர் போன்றோர்; அந்நியரின் தொடர்பை விரும்பாததால்; 'ஆரியர்' எனும் தகுதி நீக்கி, "விராத்திய ஸ்தோமா" சடங்கு செய்து; அந்நியரை முனிவர் சமூகத்தில் சேர்த்துப் பிறரையும் பல்லவராக்கித் தண்தமிழ் பயிற்றுவித்தனர். இதனைத் திரு ஹரஹரப்பிரசாத் சாஸ்த்திரி அவர்களின் "பௌத்த ஆய்வுகள்" என்ற நூல்: "விராத்தியரைத் தூய்மைப் படுத்தவேண்டி நிகழ்த்தப்பட்டதும், 'பஞ்சவிம்ச' பிராமணத்தில் கூறப்பட்டிருப்பதும் ஆன இச்சடங்கு வேதகாலச் சடங்குகளுக்கு மாறுபட்டதாக இருந்தது. பிற சடங்குகளில் வேள்விக் கூடத்தில் ஒரு வேள்வியாளரும் அவரது துணைவியும் இருக்க, இந்தச்சடங்கில் ஆயிரக்கணக்கில் வேள்வியாளர்கள் இருந்துள்ளனர், இச்சடங்கின் முதல்வனாகக் 'குலபதி' இருக்க மற்ற அனைவரும் குலபதியைத் தொடர்ந்து சென்றனர். ஒரே சடங்கில் ஆயிரக்கணக்கில் விராத்தியரை (தமிழ்)முனிவர் சமூகத்தில் சேர்த்துக்கொள்வதற்கான உபாயமென்று நான் கருதுகிறேன். இதுபோன்ற சடங்குகள் அடிக்கடி நிகழ்ந்தன, கூட்டம் கூட்டமாக ஆரியர் நிலைத்துஓரிடத்தில் வாழும் நிலைமைக்குக் கொண்டுவரப்பட்டனர். இவர்கள் தங்கள் விராத்திய வாழ்க்கையில் வைத்திருந்த உடைமைகளை உடன் கொண்டுவர அனுமதிக்கப்பட வில்லை, அவற்றை இன்னும் விராத்தியராகவே வாழ்பவருக்கு அல்லது மகததேச பிராமணருக்கு விட்டுவிட்டு வர வேண்டும். வேறொரு இடத்தில் நான் குறிப்பிட்டுள்ளபடி மகததேச பிராமணர் என்போர் [தமிழ்] முனிவர்களால் தாழ்நிலையினராக கருதப்பட்டவர்கள். அதுமட்டுமின்றி அவர்கள் ஒரு சிறந்த முனிவரான உயரிய திறனைப்பெற்ற 'கௌசிதாகி' என்ற புனிதமடைந்த முனிவரையும் பெற்றனர்"; என விரிவாகக்குறிப்பிடுகிறார். எனவே கபிலர் ஆரியர்க்கும் பிற மகதத்தைக் கைப்பற்றிப் பின்னர் புஷ்யமித்திரனால் துரத்தப்பட்டோருக்கும் தண்தமிழ்க்கல்வி பயிற்றினார் என்பது உறுதிப்படுகிறது. மேலும் கபிலர் கௌதாகி முனிவர் எனக் குறிக்கப்படுவதால் விசுவாமித்திரகுல அந்தணராகிறார். சோழகுடிப்பெண்ணைக் கெடுத்தவனுக்கும் துணைநின்ற ஆரியவரசனுக்கும் பிறருக்கும் தண்தமிழறிவித்த கபிலர்: "அன்னாய் வாழிவேண்டு அன்னை ஒள்நுதல் ஒலிமென் கூந்தல் எந்தோழி மேனி விறலிழை நெகிழ்ந்த வீவருங் கடுநோய் அகலுள் ஆங்கண் அறியுனர் வினாயும் பரவியும் தொழுதும் விரவுமலர் தூயும் வேறுபல் உருவின் கடவுள் பேணி நறையு விரையும் ஓச்சியும் அலவுற்று எய்யா மையலை நீயும் வருந்துதி நல்கவின் தொலையவும் நருந்தோள் நெகிழவும் புள்பிறர் அறியவும் புலம்புவந் தலைப்பவும் உள்கரந்து உறையும் உய்யா அரும்படர் செப்பல் வன்மையின் செறிந்துயான் கடவலின் .. .மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல் ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை எளிய என்னார் தொல்மருங்கு அறிஞர்; மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி நாமறி வுறாலின் பழியும் உண்டோ? ஆற்றின் வாராது ஆயினும் ஆற்ற ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கென ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும் .. ." என இப்பாடல் 261 அடிகளுக்கு நீண்டு செல்கிறது. அடுத்து முல்லைப்பட்டு; எல்லாநாடுகளும் கைப்பற்றப்பட்டுப் புஷ்யமித்திரனும் கொண்டுவரப்பட்டதாகத் தெரியும் நிலையில் சிறைப்படுத்தப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுக் கல்விபயிற்றியபோது பற்பல மொழிபேசும் அவர்கள் தண்தமிழைப் பயிலாமல் வடமொழி பயின்றனர் என்பதைக் காட்டுகிறது: "நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போல பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு கோடுகொண் டெழுந்த கொடுஞ்செலவு எழிலி பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை அருங்கடி மூதூர் மருங்கில் போகி. .." எனவும் "தேம்படு கவுள சிறுகண் யானை ஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந்து யாத்த வயல்விளை இன்குளகு உண்ணாது நுதல்துடைத்து அயில்நுனை மருப்பின்தம் கையிடைக் கொண்டென கவைமுற் கருவியின் வடமொழி பயிற்றி கல்லா இளஞர் கவளம் கைப்ப கல்தோய்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல் அசைநிலை கடுப்ப .. ." எனக் குறிப்பிடுகிறது. இதன் பெருமளவினான தகவல்கள் ஆரேபியர் குறித்ததாக உள்ளது. எனவே அரேபிய இசுலாமியரின் தொழுகைக் குறிப்புக்களும் நடை உடை உடல்வலிமை பெண்டிரின் தண்மை வசிப்பிடம் மற்றும் பாதுகாப்புக் குறித்த தகவல்களும் விரிவாக இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தேவர்: இந்தியத் தொல்குடியல்லாத ஆரியர்கள், கிரேக்கர் முதலான அந்நியர், அந்நியருக்குப் பிறந்தோர், வழிவந்தோர். இவர்களையே வள்ளுவர்; 1073 மற்றும் 735ல் " தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவனசெய்தொழுக லான்" எனவும்; ஆரியக்குறும்பரை; "பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு." எனவும் குறிப்பிடுகிறார். எனவே தேவர் வேறு ஆரியக் குறும்பர் வேறு எனலாம். பல்லவர் மற்றும் சோழரின் சாசனங்களுள் உதயேந்திரம் சாசனம் இன்றைய உத்தரமேரூர்ப் பகுதியைக் குறிப்பதாகும். பிற்காலச்சோழர் சாசனங்களில் மிகவும் பழமையானது. இதனை வெளியிட்டவன் முதலாம் பராந்தகன் எனப்பட்ட மதுரை கொண்ட கோப்பரகேசரிபன்மன். இவனே வேலஞ்சேரிச் செப்பேட்டுச் சாசனமும் செய்தவன். பள்ளன் கோயில் சாசனதில் தானமாக வழங்கப்பட்ட வெண்குன்றக் கோட்டத்துப் பெருநகரநாட்டு அமண்சேர்க்கை எனும் ஊர், உத்தரமேருர் வட்டத்தில் இப்போதும் பெருநகர் என உள்ளது. அதில் குறிப்பிடப்படும் அமண்சேர்க்கை என்பதே அன்றைய அமணர் ஒன்றுசேர்ந்தபகுதி. உத்தரமேரூர் மிகவும் புதிரான பல வரலாற்று உண்மைகளைக் கொண்டது. இங்கு 35 கோயில்களுக்கு மேல் உள்ளன, பலநூற்றுக் கணக்கான கல்வெட்டுக்களும் உள்ளன. திருத்தனி வேலஞ்சேரிச் செப்பேடு பல வரலாற்றுத் தகவல்களைக் கொண்டது. கரிகால்சோழன் இமயமலையில் புலிக்கொடி நாட்டியதையும், காவேரி நதிக்குக் கரை எடுத்ததையும், காஞ்சியில் அரண்மணை உண்டாக்கி விரிவடையச் செய்ததையும் குறிப்பிடுவதோடு அவனது மற்றொரு பெயரான சோழவேந்தன் கோச்செங்கணண்ான் என்றபெயரும் உள்ளது. உத்தரமேரூரின் அமண்சேர்க்கையைத் தானம் கொடுத்த பராந்தகசோழன்,வீர சோழன் எனவும் பெயர்பெற்றுள்ளான். இவன் பல பட்டப்பெயர்களைக் கொண்டவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒற்றியூரன் என ஒருவனும் இடம்பெற்றுள்ளான். இவனே முன்னர் குறிப்பிட்ட சோழநாட்டுப் பெண், கரிகால்சோழனின் தங்கையைக் கெடுத்துக் கருவுறச் செய்தவன். காஞ்சிியின் தொண்டைநாடும், உத்தரமேரூரும் கரிகால்சோழனின் கட்டுப்பாட்டில் 24 கோட்டங்களாக இருந்தவை. ஒற்றியூரனை: "மருற்கொடுந் தொழில் மன்னவன் இறக்கிய வரியை நெருக்கி முன்திரு வொற்றியூர் நீங்கவென் றெழுதும் ஒருத்தர்" என; திருக்குறிப்புத்தொண்டர் புராணத்திலும், சுந்தரர் தேவாரத்திலும்; ஒற்றியூரன் எனச் செப்பேட்டிலும் இடம்பெற்று: "மண்ணுலகம் காவல்பூண்ட உரிமையாற் பல்லவர்க்குத் திரை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும் பெருமையார் புலியூர்ச் சிற்றம்பலத் தெம் பெருமான்" எனவும்; சேத்கிழார் குறிப்பிடுகிறார். இளஞ்செட்சென்னியின் ஆட்சிக்கீழ், ஒற்றியூர், புலியூர்[சிதம்பரம்] இருந்தன. வரி விதித்ததில் பூசல் இருந்துள்ளது என்பதையும் புலியூர்ச் சிற்றம்பலத் தெம்பெருமான்- ஒற்றியூரன், கரிகால்சோழனால் குடியமர்த்தப்பட்ட பல்லவர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவன் என்பதையும் தொண்டை நாட்டைக் கைப்பற்றிக்கொண்டதையும் காண்கிறோம். புறத்திரட்டில்: "மண்ணுலார் தம்மைப்போல்வார் மாட்டாதே யன்றுவாய்மை நண்ணினார் திரத்துங்குற்றங் குற்றமே, நல்லவாகா; விண்ணுளார் புகழ்தற்கொத்த விழுமியோ னொற்றிபோழ்ந்த கண்ணுளான் கண்டந்தன்மேல் கறையையார் கறையன்றென்பார்." என ஒற்றி- ஒற்றியூரன், கண்டத்தில்- கழுத்தில் கறையுடையான் எனவும், இவனே திருத்தனி வேலஞ்சேரிச் செப்பேட்டில்"ஒற்றியூரன்" எனப்பட்டதையும் காண்கிறோம். "கறையார் மணிமிடற்றான் கபாளி கட்டங்கன்" எனத் தேவார நால்வரும் குறிப்பிடுகின்றனர். நச்சினார்க்கினியர் குறிப்பிட்ட தகவல்களில் இடம்பெற்றிருப்போர் அனைவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதற்கான சில விளக்கங்களை அவர்கொடுக்கும் தகவல்களின் துணையுடன் காண்போம். சேர இருத்தல்: மேற்கண்டோரையும் தென்னகத்தினருடன் சேர்த்து அமைதியுடன் வாழ வழிவகைகள் செய்தல். மேரு: அன்றைய சோழநாட்டில் இருந்த இன்றைய உத்தமேரூர். இந்தச்சேர்க்கையைத் தெற்கே உள்ள சேரநாட்டினர் எதிர்த்தனர். மேலே குறிப்பிட்ட இளைஞன் ஒற்றியூரனுக்கும் சிறுமிக்கும் திருமணம் செய்யும் முடிவால் சோழருடன் மைத்துன உறவுகொண்ட சேரர் எதிர்த்தனர் என்பதைப் பெரியபுராணம் தெளிவாக உணர்த்துகிறது. மேலும் ஆரியக் குறும்பரையும் தெற்கில் குடியமர்த்தும் முயற்சிக்கும் எதிர்ப்பு இருந்துள்ளது. சேர்த்துக்கொள்ளப்படுவோர் அனைவரும் எவ்வகையிலும் உறவினரல்ல. நாடோடிகளான செல்குடியினரையும் ஆரியக்குறும்பரையும் நிறுத்தவும் நிலைத்து ஒரே நாட்டில் அமைதியுடன் வாழச்செய்யவும் கரிகால்சோழன் முயன்றான் என்பதைப் பலபாடல்கள் குறிப்பிடுகின்றன. மேலும் சேர இருப்போரது நடத்தைகள் பெண்களை இழிவுபண்ணுபவை; வசிட்டரும் இதில் அடக்கம். பெண்ணும் மண்ணும் ஒன்றெனக் கண்ட, பெண்ணுக்கே மண் சொந்தமென எண்ணும் தென்னவருக்கு முற்றிலும் எதிரானவர்கள். இறையனார் களவியல் நூலும் அதன் பாயிரமும் இதனை உறுதிப்படுத்துகின்றன. அப்போது பாண்டியநாடு என்பதாக ஒன்று இல்லை. அகத்தியனார்: அகத்தியர் என 49 பேர் இருந்ததாகப் புறநாநூறு- 201ல் கபிலர் குறிப்பிடுகிறார். அகத்தியராக இருந்த தமிழரே விசுவாமித்திரர், கரவேல், கரிகால் போன்றோர். நச்சினார்க்கினியர் குறிப்பிடும் அகத்தியர் கரவேலனாக இருக்க வேண்டும். காரணம் சேர இருத்தல் சடங்குகு= வேள்வியை முன்நின்று நடத்தியவர் விசுவாமித்திரர் என்பதை வேதங்களும் இராமாயணமும் புராணங்களும் குறிப்பிடுகின்றன. புறநாநூறு- 166: "நன்றாய்ந்த நீள்நிமிர்சடை முதுமுதல்வன் வாய்போகா தொன்றுபுரிந்த ஈரிரண்டின் ஆறுஉ ணர்ந்த ஒருமுதுநூல் இகல்கண்டோர் மிகில்சாய்மார் மெய்யன்ன பொய்யுணர்ந்து பொய்யோராது மெய்கொளீஇ மூவேழ்துறையும் முட்டின்றுபோஇய உரை சால் சிறப்பின் உரவோர் மருக......." என இப்பாடலில் முதுமுதல்வனாக இடம்பெற்றவரும் விசுவாமித்திரரே. கங்கையார்: கங்கைப்பகுதியைக் கைப்பற்றிய கிரேக்கரின் பெண்வழியில் சந்திரகொற்றனுக்குப் பிறந்தவர். கலித்தொகை-பாலைக்கலிப் பாடல் 25: "வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்" பிறந்தவர். மேற்கண்ட குறுந்தொகை- 7ல் சோழநாட்டு மன்னனின் பெண்ணுடன் சென்றவர். இப்பெண் சேரநாட்டவனுக்குரியவள்; கரிகால்சோழனின் தங்கை. இந்நிகழ்வுக்குப் பின்னர் கங்கையாருக்குப் பிறந்தவனே செங்குட்டுவன்; தாய் தொடியோள், மாஅயோள், காவிரிப்பாவை. காவிரியார்: கரிகால்சோழனின் தங்கை; காவிரிப்பாவை. யமதக்கினியார்: வசிட்டராகவும் தெரிகிறார்; சந்திரகொற்றனாகக் காண்பதற்கான சான்றுகள் அகப்படவில்லை. ஆயினும் யமதக்கினியின் மனைவி ரேணுகாவுக்கும் யமதக்கினிக்கும் ஐந்து புதல்வர்கள் உண்டு எனவும் கடைசியாகப் பிறந்தவனே பரசுராமன் எனவும் காணப்படுகிறது. நாரதரும் சூனசேபனும் கூட யமதக்கினியின் புதல்வர்களாகக் காணப்படுகின்றனர். வசிட்டன் என்ற ரிச்சிகனின் மனைவி சத்தியவதி எனவும் இந்தச்சத்தியவதியின் தாய்க்கும் காதிக்கும் பிறந்தவரே விசுவாமித்திரர் எனவும் சத்தியவதிக்குப் பிறந்தவரே யமதக்கினி எனவும் உள்ளது. எனவே விசுவாமித்திரரின் அக்காவை மணந்தவரே ரிச்சிகன் எனும் வசிட்டராகிறார். அவர்களது மகனே யமதக்கினி. இந்த யமதக்கினியை மணந்தவரே ரேணுகா. வசிட்டராகிய யமதக்கினியாரைக் கங்கையாரின் தந்தையாகக் காட்டி வரலாற்றை மாற்றி மறைக்க முயன்றுள்ளனர். காரணம் வசிட்டனுக்கும், முன்னர் குறிப்பிட்ட ஆரியவரசன் பிரகத்தனின் மனைவிக்கும் பிறந்த பெண்ணே சத்தியவதி என்னும் ஹெலன். இப்பெண்ணைச் சந்திரகொற்றனுடன் புணர விட்டுப் பிறப்பிக்கப்பட்டவனே கங்கையார் என்பதை மறைக்க முயன்றனர். இதனை எப்படியாவது தமிழருக்கு உணர்த்தவேண்டும் என முயன்றவரே நச்சினார்க்கினியர். இதற்காக அவர் பல வழிகளைக் கையாண்டுள்ளார் என்பதை அவரது உரைகளிலும் பாயிரக் குறிப்புக்களிலும் காணலாம். யமதக்கினியார் மகனார் திரண தூமாக்கினியார் என்னும் தொல்காப்பியன் என்பவனும் கங்கையார் எனப்பட்டவனே. இவனைப் பரசுராமன் எனப் பல தமிழ்ப்பாடல்களும் இதிகாச புராணங்களும் உணர்த்துகின்றன. புலத்தியனார்: வியாசனுக்குப் பிறந்த விதுரன்; செழியன் எனத் தமிழ்ப்பாடல்களில் இடம்பெற்ற இராவணன். இராமாயண மாந்தருள் விசுவாமித்திரனும் தசரத சேத்சென்னியும் இராம கரிகாலனும் பிராமணரல்ல; அசுரர் இனம். வசிட்டன், இந்திர பரசுராம ஒற்றியூரன் என்போர் சுரர் இனம் சார்ந்து பார்கவ பிராமணராக அறிவித்துக் கொண்டோர். இவ் இரு இனங்களிலும் சேராத செழிய இராவணன் நகுஷ விதுரன் புலத்தியன்; இராஜாஜி எழுதிய இராமாயணத்தில் பக்கம்395: இராவணனின் சபையில் சொல்லப்பட்டது: 'மயன் தங்களுக்குப் பயந்து நட்புக்கொண்டு தனது மகளையே விவாகம் செய்து கொடுத்தான் அல்லவா?'; (மயன் என்பவன் விதுரன்= எவ்வி; சேரலம் இலங்கைப்பகுதியை ஆட்சிசெய்த விசுவகர்மன்) பக்கம் 404: விபீசனன் சொன்னதைக்கேட்டு பொறுமை இழந்த இந்திரஜித்து: 'நம்முடையகுலம் என்ன? சக்தி என்ன? புலஸ்திய குலத்தில் பிறந்த சித்தப்பா இப்படிப்பேசுவது வியப்பாக இருக்கிறது'. மாபாரதத்தில் இராவண செழியன் விதுரன் சூத்திரன் என்பதை விராடபருவம் அத் 40ல் "விதுரன் சதுர்வருணத்தை" விவரிக்கிறான்; மற்றும் 41ல்: பிரம்மத்தைப்பற்றி திருத ராட்சசன் விதுரனைக் கேட்டபோது; 'நான் சூத்திரன் எனவே பிரம்மத்தைப் பற்றிப் பேசக்கூடாது" என்கிறான். ஒட்டக்கூத்தரின் தக்கயாகப்பரணியிலும் இந்த இராவண விதுர புலத்தியன் இடம்பெற்றுள்ளான். குமரியார் உலோபமுத்திரையார்: இராவண விதுர செழிய புலத்தியனுடன் பிறந்த தங்கை. வியாசனின் மகளாக இருக்கலாம். இவளது நாடே குமரிப் பகுதியில் சேர்ந்திருந்த இன்றைய இலங்கையின் தென்பகுதி. அந்நாடு எவ்வி என்னும் விசுவகர்மன் என்னும் மயன் என்பவனால் ஆளப்பட்டது. அன்றைய மரபுப்படி இலங்கையும் இவளுக்குச் சொந்தமானதே. வியாசன் என்பவன் மேலே குறிப்பிட்ட சந்திரகொற்றனை மணப்பதற்கு முன்னர் பராசரனெனும் வசிட்டனுக்கும் ஹெலனுக்கும் இலங்கைத் தீவில் பிறந்தவன் என்பதை மாபாரதம் குறிப்பிடுகிறது. எனவே கங்கையார் எனப்பட்டவனும் வியாசன் எனப்பட்டவனும் ஒரே தாயான சத்தியவிதி என்னும் ஹெலனுக்குப் பிறந்தவர்களே. ஆயினும் வியாசன் ஒரு வசிட்டனுக்குப் பிறந்தவன். கங்கையார் என்பவன் சந்திரகொற்றனுக்குப் பிறந்தவன். கபிலர் புறாநாநூறு 202ல் " எவ்வி தொல்குடிப் படீஇயர்" எனக் குறிப்பிடுகிறார். குறுந்தொகை- 19. சூரிய(சோழ)னின் மறைவால் (நீக்கத்தால்) வாடும் பூக்களைப்போன்று; எவ்வி(மயன்=விசுவகர்மன்; இலங்கையில்) என்னும் மன்னனை இழந்த யாழ்ப்பான நாட்டார் வருந்தும் நிலையொப்ப உதவுவாரின்றி நானும் வாடுகின்றேன்" எனக் கரிகால்சோழனின் தங்கை புலம்புகிறாள். [மயன்=விசுவகர்மனின் பெண்ணைக் கெடுத்து இலங்கையைக் கைப்பற்றியவனே இராவண செழியன். அதங்கோட்டாசிரியர்: அவலோகிதர்; விசுவாமித்திரர்; அனைவரும் சேர்வதற்கான சடங்குகள் நடத்தப்பட்டபின்னர் சடங்குகளை= வேள்வியாக நடத்திய விசுவாமித்திரரைக் கண்டு களித்தபோது நடந்த உரையாடல் பின்னர் இடம்பெற்றது. அறிஞர் கால்டுவெல்: "அவலோகிதர் என்னும் போதிசத்துவர்-பொதியைப் பெரியார், இவரது இருப்பிடம் போதலகா எனப்பட்ட பொதியை மலைப்பகுதி" எனக் குறிப்பிடுகிறார். ஒரு தனிப்பாடல்: "ஆயுங் குணத்து அவலோகி தன்பக்கல் அகத்தியன் கேட்டு ஏயும் புவணிக்கு இயம்பிய தண்தமிழ் ஈங்கு உரைக்க நீயும் உளையோஎனில் கருடன்சென்ற நீள விசும்பின் ஈயும் பறக்கும் இதற்கு என் கொலோ சொல்லும் ஏந்திழையே!" எனக் குறிப்பிடுகிறது. பொதியை மலையைப் போதலகா எனக் குறிப்பிடுவதைக்காணும் போது; பலரும் இங்கு போதனை பெற்றுக் கல்விபயின்றதாகத் தெரிகிறது. அவளொகிதரிடம் தான் அகத்தியர் தமிழ் இலக்கணம் பயின்றதாகவும் காண்கிறோம். போதலகா என்பது போதி எனப் பௌத்தம் குறிப்பிடும் புத்தன்= கரிகால் நாடுகடத்தப்பட்டபோது சிறிதுகாலம் வாழ்ந்தபகுதியும் ஆகும். புறநாநூறு- 174; மாரோக்கத்து நப்பசலை. "...........பொய்யா நாவில் கபிலன் பாடிய மையணி நெடுவரை ஆங்கன் ஒய்யெனச் செருப்புகழ் மறவர் செல்புறம் கண்ட என்னறு சிறப்பின் முள்ளூர் மீமிசை அருவழி இருந்த பெருவிறல் வளவன் மதிமருள் வெண்குடை காட்டி அக்குடை புதுமையான் நிறுத்த புகழ்மேம் படுந!" என்கிறது. இதில் மதிமருள் என்பது சந்திரகுலத்தரையும் குறிப்பாக பாண்டிய செழியனையும் மருளச்செய்ததைக் குறிக்கும். புத்தன்= கரிகாலின் வரலாறு மிகநீண்டது; பின்னர் காண்போம். போதல் அகம் இதுவே. அதர்வவேதத்தில் கடல் கொள்கதையின் தலைவனாக "சத்யவ்ரதமனு 'இடம்பெறுகிறான், இவன் "திராவிட பதி" எனவும், மச்சபுராணத்தில் இத்திராவிடபதி; பொதிய மலையில் தவம் செய்யும் முனிவராகவும் காட்டப்படுகிறார். இச் சத்தியவிரதனே விசுவாமித்திரரால் வேங்கடத் திருப்பதியில் வேளிர் படையினருடன் குடியமர்த்தப்பட்ட கரவேல். அருவாளர்: அறிவாளராக இருந்தோர்; முதல்வசிட்டன்= அலெக்சாந்தனின் காலத்தில் இந்திய நாட்டின் வளர்ச்சியில் பங்குபெற்ற ஒரு பெரிய குழுவினர். அப்போது படைவலிமை தேவையற்றதாகக் கருதப்பட்டது. அலெக்சாந்தனால் கைப்பற்றப் பட்டு அருவாளராக= கொலைகாரர்களாக மாற்றப்பட்டவர்கள். சதபத பிராமணம்(மேற்கோள்-ஆன்டன்பர்கின் நூல் 'புத்தர் வாழ்க்கை' பக் 404): பாஞ்சால மன்னன் சோஹன்(சோழன்) சத்திரகன்[சோழன் சத்தியவிரதன் என்னும் திரிசங்குவுக்கு வேங்கடமலைக் காட்டில் விசுவாமித்திரர்) யாகம் செய்த போது தௌர்வசர்கள்[துர் என, பெயருக்கு முன்னர் ஒட்டாகக்கொண்ட வாசர்கள்(அனேகமாக மீன் வாடைகொண்டவர்கள்); சோழ சூரிய குலத்தருக்கு எதிரிகள்]ஆறாயிரம்பேர் கவசமணிந்து எழுந்து(எதிராக)நின்றனர்". எனக் குறிப்பிடுகிறது. நூல்- 'காஞ்சீபுரம் ஆலயங்கள்' பக். 7; யதோத்காரி கோயிலில் பள்ளிகொண்டுள்ள நிலையில் காணப்படும் சிலை, பண்டு புத்தர் சிலையாய் இருந்திருத்தல் கூடும்- A manual of Chingleput District, p. 113-114. சங்ககாலக் கச்சிமாநகரில் வெஃகா குறித்துப் பெரும்பாணாற்றுப்படை அடி373: "பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்"; திருமங்கைமன்னனின் பெரியதிருமொழி அடி 10.1-7: "பாந்தள்பாழியில் பள்ளிவிரும்பிய வேந்தனைச் சென்றுகாண்டும் வெஃகாவுளே". பள்ளிக்கு அருகில் வெஃகா எனும் வேகவதியாறு பாய்ந்திருந்தது; அப்பள்ளிக்கோயில் வெஃகாக்கோயில் என வரலற்றில் உள்ளது. காஞ்சித்தல வரலாற்றில்: "திருவெஃகா கோயிலருகில் பிரமன் தவம்செய்து கொண்டிருந்தான். தவத்தைக் கெடுக்க அவனது மனைவி சரசுவதி, வெஃகா என்னும் ஆற்றுவடிவில் வெள்ளப்பெருக்குடன் வந்தாள். வெள்ளத்தைக் விஷ்ணுவைத் தடுக்கும்படி வேண்ட, விஷ்ணுவும் ஆடையின்றி அணையைப்போலப் படுத்துப் பள்ளிகொண்டான். மாமனாரின் செயலைக் கண்டு நாணிய கலைமகள் தனது போக்கை மாற்றிக்கொண்டாள்" என உள்ளது. அதனால் அந்நதி கிழக்குநோக்கி வேகமாக ஓடியதால் வேகவதி எனப்பட்டது; யதோத்காரி கோயிலுக்குத் தெற்கில் ஓடையில் கலக்கிறது. இதில் விஷ்ணு எனக் குறிக்கப்பட்டவன் சந்திரகொற்றன் -விஷ்ணு. பிரமா எனக் குறிக்கப்பட்டவன் விசுவாமித்திரன்; இவ் வரலாறு சற்றே மாறுபட்டு வடமொழி நூல்களில் வசிட்டனுக்கும் விசுவாமித்திரனுக்குமான போர்களில் வெளிப்படுகின்றன. மாபாரதம் சல்யபருவம்:விசுவாமித்திரருக்கும் மித்திர வருணனின் மகன் வசிட்டனுக்கும் நடந்த பூசலில் இடம்பெறும் சரசுவதி நதி குறித்து வசிட்டன்: "சரசுவதி நதியே! பிரமாவிடமிருந்து உற்பத்தியாகும் நீ கிளைநதிகளாகி உலகம் முழுவது படர்ந்து பரவுகிறாய்; அனைத்து நீர்நிலைகளிலும் உள்ளாய்; இதனால் நாங்கள் அறிவது 'நீயே புகழ், முழு நிறைவுடைய பொருள், உயிர்தரும் ஊட்டம், ஒளி, அறிவு, மொழி, ஸ்வகா என உள்ளாய்; உலகம் உனது ஆளுகைக்கு உட்பட்டது; நான்கு வடிவங்களில் (?) எல்லா உயிர்களிடத்திலும் குடிகொண்டுள்ளாய்' என்கிறான். வசிட்டனைக் கொண்டு சென்ற சரசுவதிநதி விசுவாமித்திரன் தவத்தில் ஈடுபட்டிருந்தபோது வசிட்டரைக் கொலையாவதில் இருந்து கிழக்குநோக்கி வேகமாகச் சென்று காப்பாற்றியது. சினமடைந்த விசுவாமித்திரர் சரசுவதி நதியைச் சபித்தார். ராட்சதர்களால் சரசுவதி நதி கையாளப்பட்டு இரத்தக்கறைகளுடன் சிவப்பு நிறமானது. அமைதியை இழந்தது. என உள்ளது. இவ்விரண்டு நிகழ்வுகளும் படிமங்களாக வரலாற்றை வெளிப்படுத்துகின்றன. இவற்றில் நதி எனக் குறிப்பிடப்படும் சரசுவதி- வெஃகாநதி- வேகவதி என்பது தொல்தமிழ்ப்பாடல்களில் இடம்பெறும் அறிவாளர் அருவாளராக மாறியதைக் குறிக்கும். சந்திரகுப்தனுக்கு முன்னர் படைவலிமை தேவையற்றிருந்த காலத்தின் சான்றோர் கூட்டமாக இருந்தோரே அறிவாளர். வசிட்டன்- கிரேக்கத்தின் அலெக்சாந்தனின் வரவால் அவனைச்சார்ந்து ஒரு பிரிவினர் வாழத்தொடங்கினர் என்பதையே மேற்படி தகவல்கள் உணர்த்துகின்றன. இவ் அறிவாளர் படையே கோசர்படை என அந்நியருக்கு அடிமையாகி அருவாளராக மாறி, இராவண- செழியனுக்கும் அடிமையாக, ராட்சதர்களாக இரத்தகறை படிந்து சிறுமைப்பட்டனர். இவ் அறிவாளர்களே திருமால் -கரிகாலனின் வெற்றியால் "தொல் அருவாளர் தொழில் கேட்ப" எனச் சோழனுக்குப் பணிந்து மீண்டும் சோழருடன் சேர்ந்து அறிவாளராக வாழும்நிலையை அடைந்தனர் என்பதைப் பட்டினப்பாலையில் காண்கிறோம். எனவே இப்பகுதியில் செங்குட்டுவனின் தந்தையின் தாத்தா அலெக்சாந்த வசிட்டனுக்கும் விசுவாமித்திரனின் தந்தை? சந்திரகுப்தனுக்கும் பகை இருந்தெனக் காண்கிறோம். இப்பகுதியில் திருக்காளிமேடு என இன்றும் ஒரு பகுதி மேடாக உள்ளது. இதுவே செங்குட்டுவனின் தாய் வாழ்ந்த காமகோட்டமாக இருக்கக்கூடும். இப்பகுதியில் அரவணன் சேரி எனவும் அறப்பெருஞ் செல்வி தெரு எனவும் இடங்கள் உள்ளன. சேத்கிழார் குறிப்பிடும் 32 அறங்களை வளர்த்த செங்குட்டுவ முருகனின் தாய் வாழ்ந்த பகுதியெனத்தெரிகிறது. செங்குட்டுவனின் தாயை அம்பிகை எனப் பெயரை மாற்றியுள்ளனர். வேளிர் பதினெண்குடியினர்: வேளிர் 49 வழிமுறைக்கு அதாவது இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டு முதல் அகத்தியருடன் வழிவழியாய வாழ்ந்தவர்கள். சந்திரகுப்தனால் மீண்டும் உருவாக்கப்பட்ட போர்ப்படையின் 18ப் பிரிவினர். இப்படையினரின் சில பிரிவுகள் கங்கையாரால் கைப்பற்றப்பட்டனர். காரணம் இப்படையின் தலைவனான சந்திரகொற்றனே கங்கையாரின் தந்தை. இவ்வேளிர்பதினெண் குடியினரும் அவர்களது குடும்பத்தாரும் சந்திரகொற்றனை வசிட்டன் நாடுகடத்தியபோது இன்றைய சிரமண பெளுகொளா என்னும் பகுதிக்கு வந்துவிட்டனர். விசுவாமித்திரனின் பாதுகாப்பிலும் இருந்தனர். கரவேலனும் வசிட்ட அலெக்சாந்தனால் நாடுகடத்தப்பட்டபோது இவ்வேளிர் படையின் உதவியுடன் வேங்கட மலைக் காட்டுப்பகுதியில் ஒரு நகரத்தை உருவாக்கிக் குடியமர்த்திக் கரவேலனை அந்நகருக்கு அரசனாக்கினார் விசுவாமித்திரர். இதனை வசிட்ட அலெக்சாந்தனும் பிம்பிசார கங்கையாரும் ஏற்கவில்லை. விசுவாமித்திரருக்கு எதிராகப் பூசலிட்டனர். இந்நிலையில் கரவேலன் திரிசங்கு சொர்க்கத்தின் தலைவனாக அறிவிக்கப்பட்டான். சொர்க்கமான மகதத்துக்கும் நரகமான துவாரகைக்கும் இடைப்பட்ட அந்தரத்தில் இந்நகரம் அமைந்ததால் அந்தர = திரிசங்குசொர்க்கம் எனப்பட்டது, இதுவே இன்றைய அந்தர= ஆந்தரதேசத்தின் திருப்பதி. முன்னர் தண்டகாரன்யக் காட்டுப்பகுதியாக பசுக்களையும் கால்நடைகளையும் பாதுகாத்து வளர்க்கும் அடர்ந்த காடாக இருந்தது. இராக்கதர்: இராவண விதுர செழியனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட சிங்கள ராட்சசர்கள். இராமாயணத்தில் இவர்களை ஒழிக்க அகத்தியர் கரவேலிடடம் சென்று செண்டு என்ற வேளிர்படையை இராமன்= கரிகாலும் இலக்குவ செங்குட்டுவனும் பெற்றதாக உள்ளது. மேலும் இப்படையின் சிலபிரிவினரைக் கைப்பற்றி வைத்திருந்த இந்திரன்= கங்கையாரை இமையம் சென்று வீழ்த்தியதை மறைத்துத் தபசுசெய்து அர்ச்சுனன் =செங்குட்டுவன் பெற்றுவந்ததாக மாபாரதம் குறிப்பிடுகிறது. "தேவர், சேர இருத்தல், மேரு, தென்றிசை, அகத்தியனார், கங்கையார், காவிரியார், யமதக்கினியார், அவர் மகனார் திரண தூமாக்கினியார், புலத்தியனார், அவருடன் பிறந்த குமரியார் உலோப முத்திரையார், துவராபதி, நிலங்கடந்த நெடுமுடி யண்ணல், அரசர்பதினெண்மர், பதினெண்குடி வேளிர், அருவாளர், காடுகெடுத்து நாடாக்கி, பொதி, இராவணன், இராக்கதர், திரணதூமாக்கினியாராகிய தொல்காப்பியனார், அதங்கோட்டாசிரியர் குறித்த தகவல்களைச் சுருக்கமாகக் காண்டோம். "இராவணனைக் காந்தருவத்தாற் பிணித்து இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கித் திரணதூமாக்கினியாராகிய தொல்காப்பியனாரை நோக்கி 'நீசென்று குமரியாரைக் கொண்டுவருக' எனக்கூற அவரும் 'எம்பெருமாட்டியை எங்ஙனம் கொண்டு வருவல்' என்றார்க்கு 'முன்னாகப் பின்னாக நாற்கால் நீளம் அகல நின்று கொண்டு வருக' என அவரும் அங்ஙனம் கொண்டு வருவழி வைகை நீர் கடுகிக் குமரியாரை ஈர்த்துக் கொண்டுபோகத் தொல்காப்பியனார் கட்டலை யிறந்து சென்று ஓர் வெதிர்கோலை முறித்து நீட்ட அது பற்றி யேறினார். 'அதுகுற்றம்' என்று அகத்தியனார் குமரியாரையும் தொல்காப்பியனாரை யும் 'சுவர்க்கம் புகாப்பீர்' எனச் சபித்தார். 'யாங்கள் ஒரு குற்றமும் செய்யாதிருக்க எங்களைச் சபித்தமையால் எம் பெருமானும் சுவர்க்கம் புகாப்பீர்' என அவர் அகத்தினாரைச் சபித்தார். அதனால் வெகுண்ட அகத்தியனார், அதங்கோட்டாசிரியரை நோக்கி 'நீ தொல்காப்பியன் செய்த நூலைக் கேளற்க' என்றார்." என்பதற்கான விளக்கங்கள் வரலாறு முழுதையும் உள்ளடக்கியவை. ஆயினும் இராவணன் கரிகால்சோழ இராமனாலும் இலக்குவன் மற்றும் அனுமன் என்னும் செங் குட்டுவனாலும் அடக்கப்பட்டான் என்பதே பாதி வரலாறு. அதன்பின்னர் கங்கையார் பரசுராமனாகவும் துர்யோதனனாகவும் பெயர் மாற்றப்பட்டுக் கரவேலன்= கிருஷ்ணனாலும் தருமன்= யுதிற்றன் எனக் கரிகால்வளவனாலும், அவனது மகன் அர்ச்சுனன் எனச் செங்குட்டுவனாலும் அடக்கப்பட்டான்; பின்னர் அசோகனாகப் பத்து ஆண்டுகளுக்கு அடங்கிக்கிடந்து இறந்தான் என்பதும் மிக நீண்ட வரலாறாக உள்ளன. பதிற்றுப்பத்து: 43:"கடவுள் நிலைய கல்ஓங்கு நெடுவரை வடதிசை எல்லை இமைய மாகத் தென்னங் குமாரியொடு ஆயிடை அரசர் முரசுடப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பெழச் சொல்புனல் நாட்டைத் தொல்கவின் தொலைத்த போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ.. .. அருஞ்செலல் பேராற்ற் றிருங்கரை உடைத்துக்.. .. கடியேர் பூட்டுநர் கடுக்கை மலைய. .. 46: "பல்செருக் கடந்த கொல்களிற்று யானைக் கோடுநரல் பௌவம் கலங்க வேலிட்டு உடைதிரைப் பரப்பில் படுகடல் ஓட்டிய வெல்புகழ்க் குட்டுவன் கண்டோர் செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே" "கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவனைக் கரணம மைந்த காசறு செய்யுட் பரணர் பாடினார் பத்துப்பாட்டு" என செங்குட்டுவன் குமரி- தொடியோள் பௌவம் முதல் வடதிசை இமையம் வரை வெண்று .அனைவரையும் ஒன்றுசேரச் செய்தான் எனக் காண்கிறோம். பியதர்சி என்ற செங்குட்டுவனால், விசுவாமித்திரன் கரவேலன் மற்றும் கரிகாலன் ஆகிய கடவுளரின் கட்டளைப்படி, சிங்கத்தலைத்தூணில் 14ஆவதாக அசோகன் என்னும் செங்குட்டுவனின் தந்தையாரால் பொறிக்கப்பட்ட கல்வெட்டு: This inscription of Dhamma was engraved at the command of the Beloved of the Gods, the king Piyadassi. It exists in abridged, medium length, and extended versions, for each clause has not been engraved everywhere. Since the empire is large, much has been engraved and much has yet to be engraved. There is considerable repetition because of the beauty of certain topics, and in order that the people may conform to them. In some places it may be inaccurately engraved, whether by the omission of a passage or by lack of attention, or by the error of the engraver. தொல்காப்பியன் செய்த நூல்: இறையனார் களவியல்; இது அகத்தியர்களான விசுவாமித்திரர், கரவேல், கரிகால் ஆகியோரால் உருவாகி வளர்ச்சி பெற்று ஐந்தறம் என இருந்தது. இதனைச் சிதைத்துத் தொல்காப்பியமாகவும் பின்னர் இறையானார் களவியலாகவும் மாற்றிய ஆதிக்க சக்திகளை அடையாளப்படுத்தும் நச்சினார்க்கினியரின் உத்தி- வழி. பெண்ணை இழிவுபடுத்தவும் அவளது காதலை ஒரு பொருட்டாகக் கருதத்தேவை இல்லை; கற்பையும் மதிக்கத் தேவையில்லை என்பதை நிறுவ அனைத்து இலக்கண நூல்களையும் சித்தைத்து உருவாக்கப்பட்டவையே தொல்காப்பியம் மற்றும் இறையனார் களவியல். களவியல் நூலின் பாயிரம் கொடுக்கும் தகவல்களைக் காண்போம்: "பெண் என்பது ஏற்புச் சட்டகம், மூடக்குரம்பை, புழுப்பிண்டம்; ஐயும், பித்தும், வளியும், குற்றும், கொழுவும், புரனியும், நரம்பும், மூத்திர புரீடங்களும் என்று, இவற்றது இயைபு பொருளன்று; பொருளாயின், பூவே, சாந்தே, பாகே, எண்ணமே, அணிகலனே என்றிவ்வாற்றாற் புனையவேண்டா, தான் இயல்பாகவே நன்றாயின்; என்று அதன் அசுபத்தன்மை உரைப்பக் கேட்டு நீங்குவர்" எனப் பெண்ணையும் அவளது கற்பையும் இழிவுபடுத்தினர். பிராமணரின் பெண்குறித்த சாத்திரக் கருத்துகள் எந்த அளவு வீரி யத்துடன் தமிழில் புகுத்தப்பட்டுள்ளன என்பதற்கு இது ஒரு சிறுசான்றாகும்.

Thursday 21 November 2013

தமிழரும் இசுலாமியரும்

தமிழரும் இசுலாமியரும் உலகம் முழுமைக்கும் இந்திய நாட்டிலிருந்து சூரிய குலச் சோழரால் உப்பு மிளகு சந்தனம் மணிக்கற்கள் ஆடை போன்றவை வணிகப் பெருவழி, கடல் வழிகளிலும்; கொண்டுசெல்லவும் ஏற்றுமதியும் செய்யப்பட்டன. இதனைப் பழந்தமிழ்ப் பாடல் புறநாநூறு-66: "நளியிறு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உறவோன் மருக ! களி இயல் யனைக் கரிகால் வளவ ! ..."என; காற்றை வசப்படுத்திச் செலுத்தப்படும் நாவாய் ஒட்டுவதில் வல்ல கரிகாலின் முன்னோரின் மகதமும் வங்கமும் அரேபியருடனும் கடல்வழி வணிகமையமாக இருந்தது. இதனை முல்லைப்பாட்டு: "நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போல பாடுஇமில் பனிக்கடல் பருகி வலன்ஏர்பு கோடுகொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி.. ." என உலகம் முழுதும் வணிகத்தால் வளைக்கப்பட்ட நிலையில் ஆரியர் மற்றும் அலெக்சாந்தர்களின் வரவால் நம்நாட்டின் வணிகம் சீர்குழைந்தது. அதனை நீக்க நீள மேகவண்ண நிறம்கொண்ட தமிழரின் சூரிகுலச்சோழரின் அயல்நாட்டுத்தூதுவன்- வருணன்; அரேபியரின் படைத்துணை பெற அங்குச்சென்றதைக் குறிப்பிடுகிறது. அரபு வணிகர்கள் வணிக மையங்களைப் 'பந்தர்'- கடைவீதி என அழைத்ததை; பத்.ப 6/5, 7/7, 8/4ல் காணலாம். பிறநாட்டு வணிகமையமாக செங்கடல் வணிகம் திகழ்ந்தது; யவனரால் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட Periplus of the Erythraei- நூல் எழுதியவரின் பெயர் இல்லை; தமிழ்நாட்டுடனான வணிகம் குறித்தது. கிரேக்கரும் ரோமரும் யவனர் எனக் குறிக்கப்பட்டனர். கி மு 1ஆம் நூ ஆ- ல் ரோமர் எகிப்தைக் கைப்பற்றினர். எகிப்தின் அலெக்சாண்றியத் துறைமுகம் வணிக மையமானது. எரிதிரைக்கடல் என்பதை Maris Erythaei எனக் குறிப்பிட்டனர். அத்துடன் அரேபியரின் உடல் வலிமை, உடை, வழிபாட்டுமுறை குறித்தும் குறிப்பிடுகிறது. இதனால் இசுலாமிய சகோதரர்களின் வழிபாட்டுமுறை எத்துனை தொன்மையானது என்பதை அறிகிறோம். ஆனால் இன்றுவரை அவர்களது வழிபாடு மற்றும் தொழுகை முறைகளை இசுலாமிய சகோதரர்களே அறியாமல் இருந்துள்ளனர் என்பதோடு தமிழரின் தொடர்பும் நம்பிக்கைகளும் எத்தகையதாக இருந்தன என்பதையும் காண்கிறோம். முல்லைபாட்டு: "வேறுபல் பெரும்படை நாப்பன்; வேறுஓர் நெடுங்காழ்க் கண்டம் கோலி; அகம்நேர்பு குறுந்தொடி முன்கை கூந்தலம் சிறுபுறத்து இரவுபகல் செய்யும் திண்பிடி ஒள்வாள் விரவுவரிக் கச்சின் பூண்ட மங்கையர்; நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ கையமை விளக்கம் நந்துதொரும் மாட்ட; நெடுநா ஒள்மணி நிழத்திய நடுநாள்; அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர் சிதர்வரல் அசைவளிக் கசைவந் தாங்கு; துகில்முடித்துப் போர்த்த தூங்கல்; ஓங்குநடைப் பெருமூ தா ளர் ஏமம் சூழ; பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள்; தொழுதுகாண் கையர் தோன்ற; வாழ்த்தி 'எறிநீர் வையகம் வெல்இய செல்வோய்நின் குறுநீர்க் கன்னல் இனைத்து' என்றிசைப்ப; மத்திகை வளைஇய மறித்துவீங்கு செறிவுடை மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்; புலித்தொடர் விட்ட புனைமாண் நல்இல் திருமணி விளக்கம் காட்டி திண்ஞாண் எழினி வாங்கிய ஈர்அறைப் பள்ளியுள் உடம்பின் உரைக்கும் உரையா நாவின் படம்புகு மிலேச்சர் உழையர் ஆக.. ." என அரேபியரின் படையைப் பெற சூரியகுல வேந்தன் அரேபியா சென்றதையும்; அவனது மனைவி தனது இல்லத்தில் அவனை நினைந்து வாடுவதையும் மிக அழகாக எடுத்துரைப்பதே முல்லைப்பாட்டு. நெடுநல்வாடை: ஆறுகிடந் தன்ன அகல்நெடுந் தெருவில் படலைக் கண்ணி பருஏர்எறுழ்த் திணிதோள் முடலை யாக்கை முழுவலி மாக்கள் வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து துவலத் தண்துளி பேணார் பகலிறந்து இருகோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர" என இரவில் பனிபெய்யும் நாளில் மதுரையைக் காத்த அரேபியக் காவலரைக் காட்டுகிறது நெடுநல்வாடை. அரபு வணிகர்கள் வணிக மையங்களைப் 'பந்தர்'- கடைவீதி என அழைத்ததை; பத்.ப 6/5, 7/7, 8/4ல் காணலாம். பிறநாட்டு வணிகமையமாக செங்கடல் வணிகம் திகழ்ந்தது; யவனரால் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட Periplus of the Erythraei- நூல் எழுதியவரின் பெயர் இல்லை; தமிழ்நாட்டுடனான வணிகம் குறித்தது. கிரேக்கரும் ரோமரும் யவனர் எனக் குறிக்கப்பட்டனர். கி மு 1ஆம் நூ ஆ- ல் ரோமர் எகிப்தைக் கைப்பற்றினர். எகிப்தின் அலெக்சாண்றியத் துறைமுகம் வணிக மையமானது. எரிதிரைக்கடல் என்பதை Maris Erythaei எனக் குறிப்பிட்டனர். பழந்தமிழ்ப் பாட்டுக்களில் பத்துப்பட்டுள் ஒன்றான முல்லைப்பாட்டு: திறையரான சோழநாட்டினர் கரிகாலின் தலைமையில்: ".. .'எறிநீர் வையகம் வெல்இய செல்வோய்நின் குறுநீர்க் கன்னல் இனைத்து' என்றிசைப்ப மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவணர் புலித்தொடர் விட்ட புனைமாண் நல்இல்.. .." என அக்காலப் பள்ளிகளில் வகுப்புத் தொடங்குமுன் பாடும் மரபைக் குறிப்பிட்டு கிரேக்க ரோம யவணர்க்கும் கல்வி பயிற்றுவித்ததைக் குறிப்பிடுகிறது; பிறதகவலுடன் முழுப்பாடல் இல்லை. மத்திகை- குதிரை ஓட்டும் சம்மட்டி என முல்.பா- 59ம்; சுருங்கை- சுரங்கவழி என பரி.பா 20/104, சிலம்பு 14/65; கலம்- மரவீடு- படகுவீடு என அகம்149, புறம் 56; கன்னல்- காலத்தை அளக்கும் கருவி- Time glass- நீராலானது; காழகம்- பர்மா, தாரங்கள்- பண்டங்கள்; கள்- தோப்பி- பிழிநறவு, மகிழ், மட்டு, மது, தேறல்; மருங்கம்- ஊணூர் மது.கா; சாலியூர்- நெல்லூர்: யுடாலமி- ஸலௌர், கொற்கை- kolklus, துளுநாடு- மங்களூர்; கடம்பறுத்தல்- கடலில் கொள்ளையிடும் கூட்டத்தை அடக்குதல். அரேபியப் பாதுகாவலர்கள் வணிகப்பெருவழிகளில் பாதுகாப்புக் கொடுத்ததை; பெரும்பாணாற்றுப்படை- 61முதல்: முடலை யாக்கை முதுவலி மாக்கள் சிறுதுளைக் கொடுநுகம் நெறிபட நிரைத்த பெருங்கயிற்று ஒழுகை மருங்கில் காப்ப சில்பத உணவின் கொள்ளை சாற்றி பல்எருத்து உமணர் பதிபோகு நெடுநெறி எல்லிடைக் கழியுனர்க்கு ஏமம் ஆக .. . அடிபுதை அரணம் எய்தி படம்புக்கு பொருகணை தொலைச்சிய புண்தீர் மார்பின் விரவரிக் கச்சின் வெண்கை ஒள்வாள் வரையூர் பாம்பின் பூண்டுபுடை தூங்க சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடை கருவில் ஓச்சிய கண்ணகன் எருழ்த்தோள் கடமோமர் நெடுவேள் அன்ன மீளி உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர் .. . உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும் .. ." எனக் குறிப்பிடுகிறது. அரேபியப்பெண்களும் நமது பெண்களுக்கும் பெண்களின் பாதுகாப்பு மையங்களில், கோயில்களிலும் பாட்டிசைப்பதையும் பாதுகாப்பளிப்பதையும் நெடுநல்வாடை: " .. .களிமயில் அகவும் வயிர்மருள் இன்னிசை நளிமலைச் சிலம்பின் சிலம்பும் கோயில் யவனர் இயற்றிய வினைமாண் பாவை கையேந்து ஐயகல் நிறைநெய் சொரிந்து பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர்எரி அறுஅறு காலைதோறு அமைவரப் பண்ணி பல்வேறு பள்ளிதொரும் பாய்இருள் நீங்க பீடுகெழு சிறப்பின் பெருந்தகை அல்லது ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்.. ." எனக் குறிப்பிடுகிறது. இந்த யவனரை சோனகர் என அரேபியராகக் கொண்டு நச்சினார்க்கினியரும் உரைசெய்துள்ளார். பழந்தமிழ்ப் பாடல்களில் நந்தர்கள் வடகிழக்கில் பாடலியைக் கைப்பற்றி வாழ்ந்ததைக் குறிப்பிட்டு, நீர்வழிகளையும் தெற்கே செல்ல விடாமல் தடுத்ததாக உள்ளன. எகிப்திய கிரேக்க ரோமனிய நந்தர்; அலெக்சாந்தர்கள் எத்தனைபேர் இங்கு வந்தனர் என்பது தெளிவாக இல்லை; மூவர் அல்லது இருவர் எனத் தெரிகிறது. அவர்களுடன் கடற்கொள்ளையரான செல்யுக்கஸ்நகந்த கூட்டத்தாரும் பெருமளவில் வந்துள்ளனர். உலகம் முழுதும் பற்பல மொழிபேசும் மக்கள் தமிழருடன் வங்கம், மகதம் முதல் கலந்தினிது வாழ்ந்ததாகப் பட்டினப்பாலைப் பாடல் குறிப்பிடுகிறது. உலகில் எந்த மிழியிலாவது தொன்மையான வரலாற்றில் இத்தகைய தகவல்களைக் காணமுடியுமா? பிற நாட்டினரின் வரலாற்றுநூல்களிலோ சம்ஸ்கிருதத்திலோ தமிழர் மற்றும் தமிழ் மொழி குறித்தோ தமிழர் குறித்தோ தகவல்கள் உள்ளனாவா. தமிழனின் மேன்மையையும் பிற இன மொழி கலாச்சாரம் கொண்ட மக்களுடன் சேர்ந்து வாழ்ந்ததாக எங்கேனும் காணமுடியுமா? இந்த உலக மக்கள் யாவரும் தமிழனுக்கும் தமிழுக்கும் கடன்பட்டவர்கள் என்னும் உணர்வு ஏன் எவருக்கும் இல்லாமல் போனது. சிந்தியுங்கள்!?!

Saturday 16 November 2013

நம்பிக்கை = குருடு ஸ்ரீராமகிருஷ்ணபரமகம்சன் "தமிழரும் இசுலாமியரும்"

தமிழரும் இசுலாமியரும் உலகம் முழுமைக்கும் இந்திய நாட்டிலிருந்து சூரிய குலச் சோழரால் உப்பு மிளகு சந்தனம் மணிக்கற்கள் ஆடை போன்றவை வணிகப் பெருவழி, கடல்வழிகளிலும்; கொண்டுசெல்லவும் ஏற்றுமதியும் செய்யப்பட்டன. இதனைப் பழந்தமிழ்ப் பாடல் புறநாநூறு-66: "நளியிறு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உறவோன் மருக ! களி இயல் யனைக் கரிகால் வளவ ! ..."என; காற்றை வசப்படுத்திச் செலுத்தப்படும் நாவாய் ஒட்டுவதில் வல்ல கரிகாலின் முன்னோரின் மகதமும் வங்கமும் இருந்தன. அரபு வணிகர்கள் வணிக மையங்களைப் 'பந்தர்'- கடைவீதி என அழைத்ததை; பத்.ப 6/5, 7/7, 8/4ல் காணலாம். பிறநாட்டு வணிகமையமாக செங்கடல் வணிகம் திகழ்ந்தது; அங்கும் நமது வணிகமே மேலோங்கியிருந்தது. யவனரால் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட Periplus of the Erythraei- நூல் எழுதியவரின் பெயர் இல்லை; தமிழ்நாட்டுடனான வணிகம் குறித்தது. கிரேக்கரும் ரோமரும் யவனர் எனக் குறிக்கப்பட்டனர். கி மு 1ஆம் நூ ஆ- ல் ரோமர் எகிப்தைக் கைப்பற்றினர். எகிப்தின் அலெக்சாண்றியத் துறைமுகம் வணிக மையமானது. எரிதிரைக்கடல் என்பதை Maris Erythaei எனக் குறிப்பிட்டனர். அரேபியருடனும் கடல்வழி வணிகமையங்களாக மகதமும் வங்கமும் இருந்ததன. இதனை முல்லைப்பாட்டு: "நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போல பாடுஇமில் பனிக்கடல் பருகி வலன்ஏர்பு கோடுகொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி.. ." என உலகம் முழுதும் வணிகத்தால் வளைக்கப்பட்ட நிலையில் ஆரியர் மற்றும் அலெக்சாந்தர்களின் வரவால் நம்நாட்டின் வணிகம் சீர்குழைந்தது. அதனை நீக்க நீள மேகவண்ண நிறம்கொண்ட தமிழரின் சூரிகுலச்சோழரின் அயல்நாட்டுத் தூதுவன்- வருணன்; அரேபியரின் படைத்துணை பெற அங்குச்சென்றதைக் குறிப்பிடுகிறது. அத்துடன் அரேபியரின் உடல் வலிமை, உடை, வழிபாட்டு முறை குறித்தும் குறிப்பிடுகிறது. இதனால் இசுலாமிய சகோதரர்களின் வழிபாட்டுமுறை எத்துனை தொன்மையானது என்பதை அறிகிறோம். ஆனால் இன்றுவரை அவர்களது வழிபாடு மற்றும் தொழுகை முறைகளை இசுலாமிய சகோதரர்களே அறியாமல் இருந்துள்ளனர் என்பதோடு தமிழரின் தொடர்பும் நம்பிக்கைகளும் எத்தகையதாக இருந்தன என்பதையும் காண்கிறோம். முல்லைபாட்டு: "வேறுபல் பெரும்படை நாப்பன்; வேறுஓர் நெடுங்காழ்க் கண்டம் கோலி; அகம்நேர்பு குறுந்தொடி முன்கை கூந்தலம் சிறுபுறத்து இரவுபகல் செய்யும் திண்பிடி ஒள்வாள் விரவுவரிக் கச்சின் பூண்ட மங்கையர்; நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ கையமை விளக்கம் நந்துதொரும் மாட்ட; நெடுநா ஒள்மணி நிழத்திய நடுநாள்; அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர் சிதர்வரல் அசைவளிக் கசைவந் தாங்கு; துகில்முடித்துப் போர்த்த தூங்கல்; ஓங்குநடைப் பெருமூ தாளர் ஏமம் சூழ; பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள்; தொழுதுகாண் கையர் தோன்ற; வாழ்த்தி 'எறிநீர் வையகம் வெல்இய செல்வோய்நின் குறுநீர்க் கன்னல் இனைத்து' என்றிசைப்ப; மத்திகை வளைஇய மறித்துவீங்கு செறிவுடை மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்; புலித்தொடர் விட்ட புனைமாண் நல்இல் திருமணி விளக்கம் காட்டி திண்ஞாண் எழினி வாங்கிய ஈர்அறைப் பள்ளியுள் உடம்பின் உரைக்கும் உரையா நாவின் படம்புகு மிலேச்சர் உழையர் ஆக.. ." என அரேபியரின் படையைப் பெற சூரியகுல வேந்தன் அரேபியா சென்றதையும்; அரேபியர் அவர்களாது பள்ளிவசலில் அவனை வாழ்த்திப் பாடுவதையும்; [பிறதகவலுடனான முழுப்பாடல் இல்லை] சோழனது மனைவி தனது இல்லத்தில் அவனை நினைந்து வாடுவதையும் மிக அழகாக எடுத்துரைப்பதே முல்லைப்பாட்டு. அரேபபியருடன் தொடர்பும் அவர்களது படை மதுரையைக் காத்ததையும் நெடுநல்வாடை: ஆறுகிடந் தன்ன அகல்நெடுந் தெருவில் படலைக் கண்ணி பருஏர்எறுழ்த் திணிதோள் முடலை யாக்கை முழுவலி மாக்கள் வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து துவலத் தண்துளி பேணார் பகலிறந்து இருகோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர" என இரவில் பனிபெய்யும் நாளில் மதுரையைக் காத்த "முழுவலிமமாக்கள், பொய்யா மாக்கள்" நமதுநநாட்டில் சிறைப்பட்ட ஆரியரையும் மோரியரையும் அவுணரையும் பாதுகாத்த அரேபியக் காவலரைக் காட்டுகிறது. சிறைப்பட்டோரைப் பாதுகாத்ததுது குறித்த தகவல்களைப் புலவர் ககபிலரின் குறிஞ்சிப்பாட்டிலும் காணாலாம். நெடுநல்வாடை. அரபு வணிகர்கள் வணிக மையங்களைப் 'பந்தர்'- கடைவீதி என அழைத்ததை; பத்.ப 6/5, 7/7, 8/4ல் காணலாம். பிறநாட்டு வணிகமையமாக செங்கடல் வணிகம் திகழ்ந்தது; யவனரால் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட Periplus of the Erythraei- நூல் எழுதியவரின் பெயர் இல்லை; தமிழ்நாட்டுடனான வணிகம் குறித்தது. கிரேக்கரும் ரோமரும் யவனர் எனக் குறிக்கப்பட்டனர். கி மு 1ஆம் நூற்றாண்டில் ரோமர் எகிப்தைக் கைப்பற்றினர். எகிப்தின் அலெக்சாண்றியத் துறைமுகம் வணிக மையமானது. எரிதிரைக்கடல் என்பதை Maris Erythaei எனக் குறிப்பிட்டனர். அதனை வென்று மேம்பட்ட கரிகாள்சோழனை 'எறிநீர் வையகம் வெல்இய செல்வோய்' என வாழ்த்துவதைக் காண்கீறோம். பழந்தமிழ்ப் பாட்டுக்களில் பத்துப்பட்டுள் ஒன்றான முல்லைப்பாட்டு: ".. .'எறிநீர் வையகம் வெல்இய செல்வோய்நின் குறுநீர்க் கன்னல் இனைத்து' என்றிசைப்ப மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவணர் புலித்தொடர் விட்ட புனைமாண் நல்இல்.. .." என அக்காலப் பள்ளிகளில் வெளிநாட்டவரை வவரவேற்று அவர்களது வேந்ததனின் புகழையும் வாழ்த்திப் பாடும் மரபைக் காண்கிறோம். சோழநாட்டில் கிரேக்க ரோம யவணர்க்கும் சிறைப்பிடிக்கப்பட்ட ஆரியவரசன் பிரகத்தனுக்கும் கல்வி பயிற்றுவித்ததையும்; ஆனால் ஆரியவரசன் பிரகத்தன் என்னும் செல்யுக்கஸ்நக்கந்தனும் அவனது கூட்டத்தாரும் தமிழையும் தமிழரின் வாழ்வியல் நெறிகளையும் பயிலாமல்; நம்மால் உருவாக்கிக்கொடுக்கப்பட்ட வடமொழியைப் பயின்றனர் என்பதையும் குறிப்பிடுகிறது. சொல சொற்களின் பொருள்: மத்திகை- குதிரை ஓட்டும் சம்மட்டி என முல்.பா- 59ம்; சுருங்கை- சுரங்கவழி என பரி.பா 20/104, சிலம்பு 14/65; கலம்- மரவீடு- படகுவீடு என அகம்149, புறம் 56; கன்னல்- காலத்தை அளக்கும் கருவி- Time glass- நீராலானது; காழகம்- பர்மா, தாரங்கள்- பண்டங்கள்; கள்- தோப்பி- பிழிநறவு, மகிழ், மட்டு, மது, தேறல்; மருங்கம்- ஊணூர் மது.கா; சாலியூர்- நெல்லூர்: யுடாலமி- ஸலௌர், கொற்கை- kolklus, துளுநாடு- மங்களூர்; கடம்பறுத்தல்- கடலில் கொள்ளையிடும் கூட்டத்தை அடக்குதல். பழந்தமிழ்ப் பாடல்களில் நந்தர்கள் வடகிழக்கில் பாடலியைக் கைப்பற்றி வாழ்ந்ததைக் குறிப்பிட்டு, நீர்வழிகளையும் தெற்கே செல்ல விடாமல் தடுத்ததாக உள்ளன. எகிப்திய கிரேக்க ரோமனிய நந்தர்; அலெக்சாந்தர்கள் எத்தனைபேர் இங்கு வந்தனர் என்பது தெளிவாக இல்லை; மூவர் அல்லது இருவர் எனத் தெரிகிறது. அவர்களுடன் கடற்கொள்ளையரான செல்யுக்கஸ்நகந்த கூட்டத்தாரும் பெருமளவில் வந்துள்ளனர். உலகம் முழுதும் பற்பல மொழிபேசும் மக்கள் தமிழருடன் வங்கம், மகதம் முதல் கலந்தினிது வாழ்ந்ததாகப் பட்டினப்பாலைப் பாடல் குறிப்பிடுகிறது. உலகில் எந்த மொழியிலாவது; தொன்மையான வரலாற்றில் இத்தகைய தகவல்களைக் காணமுடியுமா? பிற நாட்டினரின் வரலாற்றுநூல்களிலோ சம்ஸ்கிருதத்திலோ தமிழர் மற்றும் தமிழ் மொழி குறித்தோ தகவல்கள் உள்ளனாவா? தமிழனின் மேன்மையையும்; பிற இன மொழி கலாச்சாரம் கொண்ட மக்களுடன் சேர்ந்து வாழ்ந்ததாக எங்கேனும் காணமுடியுமா? இந்த உலக மக்கள் யாவரும் தமிழனுக்கும் தமிழுக்கும் கடன் பட்டவர்கள் என்னும் உணர்வு ஏன் எவருக்கும் இல்லாமல் போனது. சிந்தியுங்கள்!?!

Monday 11 November 2013

கரவேல் கரிகால் மற்றும் செங்குட்டுவன்

நம்பிக்கை = குருடு - ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சன் கரவேல் கரிகால் மற்றும் செங்குட்டுவன் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் பலவாறு திரட்டப்பட்டவை. விக்கிப்பீடியா இணையதளமுவம் உதவியுள்ளது. மேலும் டி.டி.கோசாம்பி அவர்களின் இந்திய வரலாறு ஓர் அறிமுகம் தமிழ் நூலில் உள்ள தகவல்களும் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவற்றில் கவுதமிபுத்ர சதகர்னி என்பவனே பலபெயர்களில்; புஸ்யமித்திரன், அசோகன், வஜ்ரகரன், இந்திரன், அலெக்சான்டனின் மகன் மகததேசன்- மாதேசன்- மாதேவன்- மஹாதேவன்- மாடோபா- மாடப்பன்- முசிக- முகடி- முக்கண்டி- முகரி- முக்கண்ணன், அரசன் முசுகுந்தன், பரசுராமன், மாறீசன், மாபாரதத்தின் கவுரவர் தலைவன் துர்யோதனன், என மேலும் பல பெயர்களில் இடம்பெற்றவன். பழந்தமிழ்ச் சங்கப்பாடல்களில் மேலும் பல பெயர்களில் இடம்பெற்றுள்ளான். இவனது மகனே செங்குட்டுவன். செங்குட்டுவனது பெயர்களும் பலவாறு இடம்பெற்றுள்ளது. கரவேலனின் கல்வெட்டுக்களில் குடபஸ்ரீ -குட்திசையான மேற்கே அமைந்துள்ள குடகு- அன்றைய சேரநாட்டுப் பகுதியைத் தனது தாய்வழி உரிமையாகப் பெற்றவன். அவனது தாயே கரவேலனின் தந்தையான சந்திரகுப்தனின் தங்கையான பிரிதாவின் மகள். பிரிதா ரிக்வேத்த்தில் குறிப்பிடப்படுகிறாள். பிரிதாவை மணந்தவனே சேதி குலத்தின் சேத்சென்னி எனத் தொல்தமிழ்ச் சங்கப்பாடல்களில் இடம்பெற்றவன். சேத்சென்னியே கரிகால்சோழனின் தந்தை என்பதும் குறிப்பிடத் தக்கது. அசோகன் எனப்பட்ட செங்குட்டுவனின் தந்தையான மேலே குறிப்பிடப்பட்டவனே கரவேலனால் வெல்லப்பட்டவன். கரவேலனே புராணங்களில் சத்தியவிரதன் என்னும் திரிசங்குவாக வசிட்ட அலெக்சாண்டனால் தண்டிக்கப்பட்டு நாடுகட்த்தப்பட்டவன். அவனுக்கு முன்னர் விசுவா மித்திரனும் வசிட்ட அலெக்சாண்டனால் நாடுகடத்தப்பட்டான். இவ்விருக்கும் முன்னதாக சந்திரகுப்தனும் வசிட்ட அலெக்சாண்டனால் நாடுகட்த்தப்பட்டு இன்றைய பஞ்சாப் -குருத்வாராவில் வாழ்ந்தவன். பின்னர் சிரமண பெலுகொள என்னும் வெள்ளைக் குன்றில் வாழ்ந்தவன். செங்குட்டுவனின் தந்தையை அடக்கி அவனிடமிருந்து மகத நாட்டின் ஆட்சி யுரிமைக்கான முடியையும் ஆரங்களையும் மதிப்புமிக்க பொன்நகைகளையும் கைப்பற்றிணான். அலெக்சாண்டனுக்குப் பின்னரான மகதமே அலெக்சாண்டனுக்கும் அவனது அடிமைப்படைத்தளபதி செல்யுகஸ்நிகேடார்- செல்யுக்கஸ் நக்கந்தனின் மனைவிக்கும் பிறந்த ஹெலனின் காலமாக்க் கருதப்பட்ட்து. காரணம் இந்த ஹெலன் என்னும் சத்திய வதியையே சந்திரகுப்தனைக் கெடுத்துக் கர்ப்பமுற்றுத் தனது மக்களுக்கு ஆட்சியுரிமை கொடுக்கவேண்டும் எனத் தனது தந்தை அலெக்சாண்டனின் உதவியுடன் தனது மக்களுக்கு; பிந்துசாரனுக்கும் பிம்பிசாரனுக்குமாக ஆட்சியைக் கைப்பற்றிச் சந்திரகுப்தனையும் அவனது புதல்வர்களான விசுவ ஆமித்திரனையும் கரவேலனையும் நாடுகடத்தக் காரணமானவள். ஹெலனே மாபாரதத்தில் சத்தியவதியாகவும் மச்சகந்தியாகவும் தீஸ்சாவாகவும் கங்காதேவியாகவும் பலவாறு இடம்பெற்றாள். சந்திரகுப்தன் மவுரியன் அல்ல; சூரியச்சோழர் குடியின்ன். அவனுக்கும் ஹெலனுக்கும் பிறந்தோரே மவுரியர் எனப்பட்டனர். ஹெலனது புதல்வர்களே சித்ராங்கதனும் விச்சித்ரவீர்யனும். வரலாற்றில் இடம்பெறும் பிம்பிசாரனே விச்சித்ரவீர்யன். மஹாவீர் எனவும் அமணத்தைக் கைப்பற்றித் தீர்த்தங்கரனானான். .பிம்பிசாரனே அசோகனாகவும் மாற்றப்பட்டான். இந்த அசோகனே சேத் கரவேலனின் கலிங்கத்தையும் வேங்கடமலையையும் தாக்கிச் சந்திரகுப்தனின் படிமத்தைக் கைப்பற்றிச் சென்ற புஸ்யமித்ரனாகவும் காட்டப்படுகிறான். அவனது மகனான செங் குட்டுவனே; ஆஜாதச்சத்ரு, ருத்ரதாமன், பர்வதகன், குடபஸ்ரீ எனவும் இடம்பெற்ற குடதிசையின் குட்டுவன். அந்நியனான வசிட்ட அலெக்சாண்டனுக்குப் பிறந்த மகளான ஹெலன் வழியில் பிறந்ததால் செந்நிறமாக இருந்தான். அதனாலேயே செங்குட்டுவன் எனப்பட்டான். அசோகனின் கல்வெட்டுக்கள் எனக் குறிப்பிடப்படும் செங்குட்டுவனது கட்டளைப்படியும் கரவேலன் மற்றும் கரிகாலன் ஆகியோரின் ஆணைப்படியும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் 14ஆவது கல்வெட்டைக் காண்போம். 14th Major Rock Edict This inscription of Dhamma was engraved at the command of the Beloved of the Gods, the king Piyadassi. It exists in abridged, medium length, and extended versions, for each clause has not been engraved everywhere. Since the empire is large, much has been engraved and much has yet to be engraved. There is considerable repetition because of the beauty of certain topics, and in order that the people may conform to them. In some places it may be inaccurately engraved, whether by the omission of a passage or by lack of attention, or by the error of the engraver. Inscription of Dhamma என்பது தருமனான திருமாவளவனே; தருமபுத்திரன் எனச் சங்கப்பாடல்களில் கரிகால் உள்ளான். Command of the beloved of Gods என்பதில் கடவுளராகக் கரவேலன்- கண்ணனும், கரிகாலன்- திருமாவலளவன்- திருமாலும், கடவுளரால் நேசிக்கப்பட்டவன் எனச் செங்குட்டுவனும் இடம்பெற்றனர்; The king Piyathassi என செங்குட்டுவனே அரசன் பியதசி எனவும் குறிக்கப்பட்டுள்ளான் The engraver என்பது கல்வெட்டை வெட்டுவிக்கச் செய்த செங்குட்டுவனின் தந்தையான அசோகனைக் குறிக்கும். ஒடிஸ்சாவில் கரவேலின் கலிங்க புவனேஸ்வரில் உதயகிரிமலை ஹாதுகும்பா - அகத்தியர் குகையில், இரு பகுதிகளைக் கொண்ட பிரமி எழுத்து, பிரகிருத மொழியில் சிதைந்தநிலைக் கல்வெட்டு ஒன்றில் 17 அடிகள் உள்ளன; பிற பகுதிகளிலும் கந்தகிரியிலும் ராணிகும்பாவிலும் உள்ள அனைத்துத் தகவல்களும் கொண்ட கல்வெட்டில் அரசனின் பெயர் [AIRA அல்ல] சிதைக்கப்பட்டு கரவேலா எனக் காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர். கரவேலனின் பெயரைச் சிதைக்கும் முயற்சி செய்யப்பட்டதைக் காண்கிறோம். கரவேலன் குறித்து அவனது கல்வெட்டுக்களில் பிறருக்காகவும் தனக்காகவும் அந்நியருக்கெதிராகவும் போரிட்டுள்ளான். யாருக்காக மற்றும் என்ன காரணங்களுக்காகப் போரிட்டான்; விரிவான தகவல்கள் இல்லை. சீரான வரலாற்றைப் பிற சான்றுகளைக் கொண்டே அறியவேண்டியுள்ளது. இடங்கள் மற்றும் சில மாந்தரின் பெயர்களை அடையாளம் காண்பது எளிதல்ல. (இந்தியநாடு யாருக்கானது?) ப/பாரதவர்சம் என்னும் சொல் முதன்முதலில் இக்கல்வெட்டில்தான் காணப்படுகிறது. கரவேலனின் கல்வெட்டுக்கு எதிர்த்திசையில் 6 மைல் தொலைவில் அசோகனின் கல்வெட்டும் உள்ளது. இரண்டு கல்வெட்டுக்களும் ஒருவருக் கொருவரை எதிரிகளாகக் காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வாதாபியை வென்ற நரசிம்மவர்மபல்லவனின் கல்வெட்டு ஒன்றில் அகத்தியர் இடம்பெற்றுள்ளார். "வாதாபி என்னும் அசுரனை அழித்த அகத்தியர்போன்றவன்” என அக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. மேலும் சில வரலாற்றுத்தகவல் இடம்பெற்ற பகுதி சிதைக்கப்பட்டு, வாதாபி என்னும் எழுத்துக்களும் நரசிம்மவர்மனின் பெயரும் மட்டுமே தெளிவாக அறியத்தக்கனவாக உள்ளன. கரவேலனால் அவனது 7ஆம் ஆண்டு நடவடிக்கையாக இந்திரனான வஜ்ரகரனுக்கும் கரவேலனின் அத்தை மகளான கரிகால்சோழனின் தங்கைக்கும் பிறந்த குழந்தை செங்குட்டுவனுக்குப் பாதுகாப்பளிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறான். இந்தச் செங்குட்டுவனே கரவேலனின் உதயகிரியமலையில் அகத்தியர்குகையில் கரவேலன் வாழ்ந்தபோது இராமாயணத்தில் அனுமனாக இந்திரனின் வஜ்ராயுத்த்தால் அடிக்கப்பட்டுத் தாடை எலும்பு உடைந்து அறுபட்ட முகம் மீண்டும் ஒன்றுகூட்டப்பட்டு அறுமுகன் அனுமன் ஸ்கந்தன் கார்த்திகேயன் எனவும் குறிக்கப்பட்டான். செங்குட்டுவனின் பிறப்புக்கு எதிராகச் செயல்பட்டவனே அவனது தந்தை அசோகன் எனப்பட்ட பிம்பிசாரன். கரவேலன்= கண்ணன், கரிகாலன்=திருமால், செங்குட்டுவன்= கார்த்திகேயன் என மூவரும் சேர்ந்தே அசோகனை அடக்கினர். பத்து ஆண்டுகளுக்கு பாரத நாட்டின் பாசரைக் காப்பாளனாக அடங்கிக்கிடந்து பின்னர் இறந்துவிட்டான். இவற்றுக்கான சான்றுகள் பல மொழிகளிலும் வேத இதிகாச புராணங்களிலும் சிதறிக் கிடக்கின்றன. சில கல்வெட்டுக்களையும் விளக்கங்களையும் காண்போம். கரவேலனின் கல்வெட்டுக்களில் காணப்படும் எகிப்திய கிரேக்க மற்றும் பிற மொழிச்சொற்களைக் காணும் நாம் உணரும் தகவல்கள்ளையும் சில சொற்களுக்கான விளக்கங்களையும் அறிந்து தெளிவுகாண்பது அவசியமாகிறது: பாடலிபுத்தரம் = மலர்- பூ நகரம்; மலர்கள் நிறந்த நகரம் - KUSUMUDHVAJA என மாபாரதம் குறிப்பிடுகிறது. யோனா - பாலிமொழிச் சொல்; பொருள்: கிரேக்கச்சொல்: YOna - I ONIAN - அயோனியன். அலெக்சாண்ற்றியா - யோனர்களின் நகரம் என மஹாவம்சம் குறிக்கிறது. அவுனர் யவனர் யானர் என்னும் சொற்கள் தொல்தமிழ்ப் பாடல்களிலும் காப்பியங்களிலும் காணப்படுகின்றான. ஹீப்ரு மொழியில் யாவான் - யோவான் என்றேல்லாம் உள்ளன. அரபி, துருக்கி, பெர்சி மொழிகளில் YUNAN - ஊனன் - ஊணன். சீனாவிலும் இச்சொல் பயன்பாட்டில் உள்ளது. பௌத்த நூல்களான தீபவம்சம், சசன வம்சம் போன்றவை; மகரகிதன் யோனாவுக்கும்- அலெக்சாண்றியாவுக்கும், கம்போசத்துக்கும் சென்று புத்தநெறிகளைப் போதிக்கச்செய்தான் எனக் குறிப்பிடுகின்றன. மகரம் யாளிமீனைக் குறிக்கும். முந்தர ராட்சசா எனும் பௌத்த நாடகத்தில் யவனர் கம்போசர் சகர் போன்றோர் இமாலயராசா பர்வதகனுடன் சேர்ந்து அலெக்சாண்டனைத் தோற்கடித்ததாகக் காணப்படுகிறது. யவனர், கம்போசர், சகர், பஹ்லவர் போன்றோர் கலியுக மிலேச்ச-MLECCA-ஆட்சியர். மினாண்டன் ஒரு அயோனியன்; மீனுடன் தொரடர்புடைய செல்யுக்கஸ்நகந்தன் எனத் தெரிகிறது. இவனது படையினர் முதல் அலெக்சாண்டனுக்கு உதவியாகப் போரிட்டு; கங்கைநதியைக் கடக்க மறுத்து விலகிவிட்டவர்கள். திரும்பிச்செல்லும் வழியில் பாபிலோனில் முதல் அலெக்சாண்டன் இறந்துவிட்டதாகத் தெரிகிறது. VIMAKADH PHISES - ஒரேசொல்லாகக் காணப்பட்டுள்ளது; மீனுடன் தொடர்புடைய இரண்டு சொற்களில்; முதற் சொல்லின் முதல் எழுத்து H சிதக்கப்பட்டு V ஆகியிருக்கலாம்; கிழக்கு மேற்காக இமையத்துக்கு அப்பால் மேற்கிலிருந்து வந்து சேர்ந்தவர்கள்; நீரின்பயன், பயிர்விளைச்சல், உழவுத்தொழிலும் அறியாதோருடன் தொடர்புடையதாகத் தெரிகிறது. இவர்கள்ளும் இராமாயணம் பாலகாண்டத்தில் இடம்பெற்று; வசிட்டனுடன் சேர்ந்து விசுவாமித்திரனை எதிர்த்தனர். அலெக்சாண்டனால் மகதம் கைப்பற்றப்பட்ட பின்னர் அவனது புதல்வன்; மகத தேசன் - மாதேசன்; மகத அப்பன் - மாடப்பன் - மாடோபா - மாசோபா - மகாதேவன் என்றெல்லாம் பல பெயர்களில் காணப்படுகிறான். மாபாரதம் உத்யோக பருவத்தில் சுதக்சினன் தலைமையில் காம்போச ராசன் செயல்பட்டான். அலெக்சாண்டனின் பெயர் பலவாறு இடம்பெற்றுள்ளது; சதகர்னியரைச் சதவாகனர் எனவும் குறிப்பிடலாம்; சதம் = 100; நூற்றுவர் கன்னர், ஈரைம்பதின்மர், ஐ இருபதின்மர் என்றெல்லாம் தொல்தமிழ்ப் பாடல்களில் உள்ளனர். அலெக்சாண்டனுக்குப் பின்னரான மகதம் அலெக்சாண்டனின் மகள் ஹெலனின் காலத்ததாகக் குறிக்கப்பட்டது. கரவேலனின் மகதமும் பிறவும்; சதகர்னி மற்றும் இரண்டாம் சதகர்னி- புலுமாயி கூட்டத்தால் கைப்பற்றப்பட்டன. கரவேலனின் ஹாதிகும்பா அகத்தியர் குகைக் கல்வெட்டுக்களைப் படித்தறிநோர் கொடுக்கும் தகவல்கள் 13 ஆண்டுகளை உள்ளடக்கியதாகக் தெரிகிறது. 1. கலிங்கநாட்டுக்குச் சென்றான்; 2. சதகர்னியைப் பொருற்படுத்தாமல் (Asikanagara) அசிகநகராவைப் பெரும்படைகொண்டு தாக்கினான்; 3. ரதிகளும் போசகர்களும் தாக்கப்பட்டு சதகர்னியை வென்று 'முசிக' பகுதி சேர்க்கப்பட்டு எல்லையானது; குடையும் முடியும் ஆரங்களும் திரும்பக் கைபற்றப்பட்டன. ரதிகள் - RASTRIKA என்பது ராட்சசர் எனத் தெரிகிறது. 4. நல்லுபதேசங்களும் நடனங்களும் கற்பிக்கப்பட்டன; 5. ராடச்சசர்களும் போஜர்களும் வெல்லப்பட்டனர்; 6. நீர்வழிகளும் நீர்நிலைகளும் செப்பனிடப்பட்டன; 7. பௌரா மற்றும் ஜனபதாக்களுக்கு உரிமைகளும் சலுகைகளும் கொடுக்கப்பட்டன; கரவேலனின் ஒரு உறவுப் பெண் வஜ்ரகரனுடன் கூடியதால் பிறந்த மகனுக்குப் பாதுகாப்பளிக்கப்பட்டது. 8. மகதத்தின் மீது படையெடுத்து; ராஜகிரகத்தையும் பாடலிபுத்தரத்தையும் தாக்கி; கலிங்கப்போரில் நந்தனும் சதகர்னியரும் கைப்பற்றிச் சென்ற தீர்த்தங்கரரின் உருவையும் அங்க மற்றும் மகதத்தின் செல்வங்களும் மகதமும் பாடலிபுத்தரமும் உத்ரபத மன்னனிடமிருந்து கைப்பற்றப்பட்டன; ஆட்சிசெய்வதற்கான முடியையும் ஆரங்களையும் பிற மதிப்புமிக்க நகைகளையும் திரும்பக் கைப்பற்றினான்; 9. மகத்தில் தனது வெற்றிச்சின்னமாக; நதிக்கரையில் புவனேசுவர் அருகில் ஒரு அரண்மனையை அமைத்தான்; 10. வட இந்தியப் பகுதிமீது பெரும்படையுடன் போரிட்டான்; 11. தமிழ்மன்னர்களை வென்று கேதுபத்ரரின் மர உருவை மீட்டான்; 12. மீண்டும் மகதத்தின்மீது போரிட்டு; சுங்கன் விரட்டப்பட்டான். சுங்கனின் வாரிசு ப்ரகஸ்பதிமித்ரன்- Brhaspatimitra; கரவேலனின் காலடியில் பணிந்தான் / ஆசிபெற்றான். கைப்பற்றப்பட்ட பொருட்களால் அமணருக்குக் கோயில் எழுப்பினான்; அமராவதியில் ஞானியர்க்காக MahamekavaruNa PAsathi - பாசாதிகோயில் கட்டப்பட்டது; பாண்டியனை வென்று மணிமுடி, ஆரங்கள் பொன்மணிகள் முத்து யானைகள் குதிரைகள் மதிப்புமிக்க கற்கள் கைப்பற்றப்பட்டன; 13. மகதத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. காரவேலனுக்குப் பிறகு KUDAPASIRI உள்ளான். தொல்தமிழ்ப் பாடல்களில் இடம்பெறும் படிமமான குதிரை; படைத்தலைவன் -சேனா அதிபதியையே குறிக்கும்; இதனைத் தொல்காப்பிய இலக்கணமும் உறுதிசெய்துள்ளது. அச்சடங்கில் அனைத்துப்படைகளும் போரின் தலைமைப் பதவியும் குதிரை எனக் குறிக்கப்படும் சேனாபதியிடமே ஒப்படைக்கப்படும். ரிக்வேதம்: 3.53.11: சுதாசனின் குதிரையான குஷிகாசை அணுகுங்கள்; அவனைச் செயல்படத்தூண்டுங்கள்; ராஜாவுக்காகச் செல்வங்களைப் பெற்றுத் தரவும், வெற்றிபெறவும் அதனை அவிழ்த்து விடுங்கள்; ஏனெனில் தேவர்களின் மன்னான அவன் கிழக்கு, மேற்கு, வடக்கிலும் விருத்திரனைத் துவம்சம் செய்தான். ஆகவே பூமியின் மிகச்சிறந்த பிராந்தியங்களில் அவனை வழிபடவும் செயல் படவும் சூதாசனை அனுமதியுங்கள்" எனக் குறிப்பிடுகிறது. கரிகால்சோழன் -சுதாசனின் சேனாதிபதியான குஷிகாஸ் -செங்குட்டுவன்- சேனாபதியாக- குதிரையாக; மகதம் உட்பட அனைத்துப் பகுதிகளையும் வென்றபின் அசுவமேத யாகம் நட்த்தப்பட்டதை ரிக்வேதம் தெளிவாக்குகிறது. படிமங்களை உடைத்துத்தான் சரியான பொருளையும் விளக்கங்களையும் காணவேண்டும்; விருத்திரனால் வெல்லப்பட்ட அனைத்துப் பகுதிகளும் மாபாரதப்போரில் வென்றெடுக்கப்பட்டதையும் போர் நடந்த பகுதி தெற்கல்ல; போருக்குப் பின்னரும் தெற்குப்பகுதி இடம்பெறவில்லை என்பதையும் உணரவேண்டும். மஹாவகம் 10.2; ஜாதகம் -428: பனாரஸ் மன்னன் பிரமதத்தன் கோசலத்தில் கொஞ்சம்வெற்றிபெற்றுக் கோசல ராசா தீகீயை, ராணியுடன் தீர்த்துவிட்டான், தப்பியோடிய கோசல இளவரசன் தீகாவு மூன்றுவேதங்களிலும் தேர்ச்சிபெற தட்ச சீலத்துக்கு ஓடி; இழந்த ராச்சியத்தை மீட்டான்; ஜாதகம்- 371: ஒருவேளை பிரமதத்தனின் மருமகன் என்ற முறையில் காசியை இணைத்துக்கொண்டான் .கோசல இளவல் சாத்தன் பற்றியும் இக்கதை கூறுகிறது .தந்தை தோற்கடிக்கப் பட்டபின் சாத்தன் பிரமதத்தனிடமிருந்து கோசலத்தை மீட்டான் .வெல்லமுடியாதபடி சாவதத்துக்கு அரண் செய்தான். அசோகனால் வெட்டுவிக்கப்பட்ட கிர்னார் கல்வெட்டுபோன்ற அதேபாறைகளில் மொழியிலும் உள்ளடக்கத்திலும் தாக்கம் உண்டாக்கும் மாறுபாட்டுடன்; ருத்ரதாமனின் சம்ஸ்கிருதப் பொறிப்புக்கள் உள்ளன. பொறிப்பின் ஏழாம்பகுதி அழிக்கப்பட்டோ அழிந்தோ இருக்கிறது. அதில் சந்திரகுப்தனின் ஆளுநரான வைஷியன் புஷ்யகுப்தனால் கட்டப்பட்டு அசோக மவுரியன் கீழ் யவன - பாரசீக மன்னன் துசாபனால் ஒரு கால்வாய் அமைப்புடன் இருந்த அணை தகர்க்கப்பட்டு இரண்டுமடங்கு அளவில் மறுபடியும் ருத்ரதாமனின் சொந்தச்செலவில் பிற எவருடைய, பவுர ஜனபத குடிகளிடமிருந்து பொருளும் பங்களிப்பும் உழைப்பும் பெறப்படாமல் கட்டப்பட்ட சாதனை அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களைக் கொல்வதை நிறுத்தியதையும், அவந்திமுதல் சிந்து -அபராந்தாவரை ஏராளமான மாகானங்களையும் அத்துடன் பழங்குடிக் காட்டு வாசி -நிசதரையும், தாக்கியதையும் வெற்றிகொண்டதையும், தீரமிக்க யுதேயர்களைப் பூண்டோடு அழித்ததையும், அவர்களோடு மண உறவுகொண்டுள்ளதால் விட்டுவைக்கப்பட்ட யுதேயரின் தலைவன் சதகர்ணியை இருமுறை தோற்கடித்ததையும் பெருமையோடு குறிப்பிடுகிறான் ருத்ரதாமன். மேலும் உரைநடையாயினும் கவிதை யாயினும் எல்லா இலக்கியப் பாங்குகளிலும், வெளிப்படுத்துவதிலும் சம்ஸ்கிருத்த்திலும்; தனக்குள்ள ஆளுமையைக் குறிப்பிடுகிறான். தங்கம் வெள்ளி நகைகள் என தனது பொக்கிசங்களையும் கூறிக்கொள்கிறான். பெஸ்நகரில் உள்ள தூணை நிறுவிய ஹெலியடோரியஸின் கிருஷ்ண -வசுதேவ பாகவத வழிபாடு இதனை உறுதிப்படுத்துகிறது. பின்னாளில் பாரசீகமும் பிறகு ஆங்கிலமும் இந்திய நகரங்களிலும் சபைகளிலும் சம்ஸ்கிருதத்தின் இடத்தைப் பிடித்ததும் இதே நோக்கத்தில்தான். சதவாகனராகக் கருதப்படும் ஹாலா என்பவரால் எழுதப்பட்டவற்றுடன் சேர்த்துத் தொகுக்கப்பட்ட 700 அடிகள் கொண்ட நேர்த்தியான கவிதை; பத்திகளிடையே தொடர்புபடுத்தும் கண்ணி இல்லாமலேயே சாமானிய மக்களைப் பற்றியும் நாட்டுப்புறக் காட்சிகளையும் பேசுகிறது; காமச்சுவையுடனும் உள்ளது. குணாத்தியரின் பிருஹத் கதாவும் அதே அரசவைக்காக பைசாசி என்ற ஒரு பாமர மொழியில் எழுதப்பட்டதும் நம்பத்தக்கதே. இதில் மீதமுள்ளதெல்லாம் சோமதேவரின் கதா சரித் சாகரம், க்ஷேமேந்திரனின் பிருஹத் கதா மஞ்சரி போன்ற சம்ஸ்கிருதத் தழுவல்களிலேயே உள்ளன; இவர்களிருவருமே காஷ்மீரிகள். புத்தகாலக் கோவையான மஹாவம்சோ; இலங்கையில் தற்காலம்வரை திரும்பத்திரும்ப ]மாற்றி [ எழுதப்பட்டது. அதன் இடையில் 60 ஆண்டுகள் எவ்வித விளக்கமுமின்றி விடப்பட்டுள்ளது. இரட்டைக் கதைகள் -நீதிக்கதைகள்- பழங்கதைத் தொகுப்பான ஜாதகக் கதைகளில் ஒவ்வொரு கதையும் ஒரு நடப்பு நிகழ்வைக் கொண்டு புத்தரால் கூறப்பட்டதாகக் கருதப்படுகிறது. இருந்தாலும் புத்தரின் கால சமூக உறவுகளின் சித்திரத்தை நேரடியாகக் காட்டப் பயன் படுத்த முடியாது; சதவாகன காலத்தில் இவை எழுத்தில் வடிக்கப் பட்டன; மறைந்துபோன இலங்கை வடிவங்களின் செல்வாக்குக்கு ஆட்பட்டிருந்தன. அதன் உதவியுடனே தற்போதைய பாடமாகப் பாலியில் ஆக்கப்பட்டன. மஜ்ஜிம நிகாயம் 93ல் அஸ்ஸல்லாயனனிடம் புத்தர் கூறியது :'யோனா கம்போஜா மற்றும் எல்லைகளில் ஆரியா, தாசா என இருசாதிகள் மட்டுமே உள்ளதாக அறிந்திருக்கிரீர்; ஆரியர் தாசராகலாம், தாசர் ஆரியராகலாம்' என்பதாக. ஆப்கானிஸ்த்தானில் யோனா -அயோனியா என்ற பெயர் இருப்பதால்; பாரசிகப் பேரரசை அலெக்சாந்தர் வெற்றி கொண்டதற்கு முன் புத்தனின் மேற்கண்ட சொற்கள் வெளிப்பட்டிருக்க முடியாது. ரிக்வேதப்படி ஒரு ஆரியன் தாசனாக முடியாது; கிரேக்க அடிமைமுறையே வெளிப்படையாகக் குறிப்பிடப்படுகிறது .அமணர் சாதிகளை ஒத்துக்கொண்டார்கள்; மூல சாதிகள் நான்கின் கலப்பையும் ஏற்றார்கள் . வளர்கருக்கள் பரிமாற்றம் என்ற கருத்தால் மஹாவீரரும் பிராமணப் பின்னணிகொண்டவர் என ஏற்றிக்கூறும் முயற்சியும் நடந்தது. ஸ்ரீ கந்த மஹாபுராணத்தில் முசுகுந்தன்; தக்ஷனான சேத்சென்னியின் மகளைப் பிராமணவேடமிட்டுக் கெடுத்துவிட்டுத் திருமணம் செய்துகொள்வதாக்ச் சம்மதித்துவிட்டு; பாணிக்கிரகனத்தின் போது வராமல் எமாற்றி ஒடிவிட்ட தகவல் இடம்பெற்றுள்ளது. ஸ்ரீ கந்த மகா புராணம்: முதற் பாகம்; தச்ச காண்டம் 7ல்: “முசுகுந்தன், தக்கனின் பெண்ணைத் தூக்கிச் சென்று விட்டான்." இதனை அறிந்த தக்கன்: "திருட்டுத்தனமாக எனதுபெண்ணைக் கவர்ந்து கொண்டான்; தாய் தந்தை அனுமதியின்றி எவன்தான் பெண்ணைக் கவர்ந்து செல்வான்? இப்பாப காரியத்தைச்செய்து அவமானத்தையும் அபகீர்த்தி யையும் தேடிக்கொண்டான்." என நொந்து புலம்புகிறான். [பழந்தமிழ்ச் சங்கப்படல்களில் புலவர் பரணரும் புலவர்களும் சமாதானம் மேற்கொண்டு திருமண ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில்]: "பெண்ணை மணமுடிக்க, பாணிக் கிரகணம் செய்யும் வேளையில் ஓடிவிட்டான்; போக்கிரிகளின் தலைவனான கூத்தாடி, பாதிக்கல்யாணத்தில் அபகீர்த்தி உண்டாக்கினான்; அவரவரது இழி குணம் எவரையும் விடுவதில்லை; தாய் தந்தயரை அறியாத, மிகவும் அசுத்தமான பிறவி, வஞ்சகன்; அவனாகவே எனது பெண்ணை, பிராமண வேடமிட்டுக் காதலிப்பதுபோல் நடித்துக் கெடுத்தான்; நானும் அவனுக்கே பெண்கொடுக்க முன்வந்தேன்" எனப்புலம்புகிறான். தொல்காப்பியர் = இறையனார் நச்சினார்க்கினியர் கொடுக்கும் சிறப்புப் பாயிரத்தில் தொல்காப்பியரையும் அகத்தியரையும் சுருக்கமாகக் காண்போம்: "தேவரெல்லாருங்கூடித் தாம்சேர இருத்தலின் மேருத் தாழ்ந்து தென்றிசை யுயர்ந்தது, 'இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற்குரியர்' என்று அவரை வேண்டிக்கொள்ள அவரும் தென்றிசைக்கண் போதுகின்றவர்; 'கங்கையார் உழைச் சென்று காவிரியாரை வாங்கிக்கொண்டு பின்னர் யமதக்கினியாருழைச்சென்று அவர்மகனார் திரணதூமாக்கினியாரை வாங்கிக் கொண்டு புலத்தியனாருழைச்சென்று அவருடன்பிறந்த குமரியார் உலோப முத்திரையாரை அவர்கொடுப்ப நீர் ஏற்று இரீயிப்பெயர்ந்து; துவராபதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர்பதினெண்மரையும், பதின் எண்(குடி) கோடி வேளிருள்ளிட்டோரையும் அருவாளரையும் கொண்டுபோந்து; காடு கெடுத்து நாடாக்கி பொதியின்கண் வீற்றிருந்து இராவணனைக் காந்தருவத்தாற் பிணித்து, இராக்க தரை ஆண்டு, இயங்காமை விலக்கித் திரண தூமாக்கினி யாராகிய தொல்காப்பியனாரை நோக்கி 'நீசென்று குமரியாரைக் கொண்டு வருக' எனக்கூற அவரும் 'எம் பெருமாட்டியை எங்ஙனம் கொண்டு வருவல்' என்றார்க்கு 'முன்னாகப் பின்னாக நாற்கால் நீளம் அகலநின்று (பாதுகாப்புடன்) கொண்டு வருக' என; அவரும் அங்ஙனம் கொண்டு வருவழி; வைகைநீர்கடுகிக் குமரியாரை ஈர்த்துக்கொண்டுபோகத் தொல் காப்பியனார் கட்டளையிறந்து சென்று ஓர் வெதிர்கோலை முறித்துநீட்ட, அதுபற்றி யேறினார். 'அதுகுற்றம்' என்று அகத்தியனார், குமரியாரையும் தொல்காப்பியனாரையும் 'சுவர்க்கம் புகாப் பீர்' எனச்சபித்தார். 'யாங்கள் ஒருகுற்றமும் செய்யாதிருக்க; சபித்தமையால் எம் பெருமானும் சுவர்க்கம் புகாப்பீர்' என அவர் அகத்தினாரைச் சபித்தார். அதனால் வெகுண்ட அகத்தியனார், அதங்கோட்டாசிரியரை நோக்கி 'நீ தொல் காப்பியன் செய்த நூலைக் கேளற்க' என்றார்." இதில் இடம்பெறுவோரெல்லாம் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதை முதலில் உணர்ந்தாக வேண்டும். தேவர்= தமிழர் அல்லாத [அலெக்சாந்தன், செல்யுக்கஸ்நக்கந்தன் போன்றோரின் வழி] அந்நியர், அந்நியராற்பிறந்தோர் சேர்தல்= செல்குடி நிறுத்தல்; இந்தியாவிலேயே நிலைத்து வாழச்செய்தல்; சேர்ந்த இடம் உத்தரமேரூர்.. .. மேரு= உத்தரமேரூர் எனப்பட்ட உத்தமேரு.. .. தென்திசை= உத்தமேரூருக்குத் தெற்கே உள்ள பகுதிகளில் உள்ளோர் தேவர் முதலானோருடன் சேர்வதைக் கடுமையாக எதிர்த்தனர்; காரணம் தேவர்கள் கயவர்களாக, தெந்திசியின் சோழநாட்டுப் பெண்களை மதியாது நடந்து கொண்டதே. பெண்களை எப்படிப்பட்டோராக நடத்தினர் என்பதை இறையனார் களவியல் நூலின் பாயிரத்தில் காண்க.. .. அகத்தியனார்= விசுவாமித்திரர், கரவேல், கரிகால் என மூன்று அகத்தியர்கள் உள்ளனர். மூவரும் மட்டுமல்லாமல் அவர்களது மக்களும் நாடுகளும் தேவர்களால் கடுமையாகப் பாதிப்படைந்த போதிலும் தேவருடன் பரிவு காட்டினர்.. .. கங்கையார்= செங்குட்டுவனின் தந்தை; கங்கைப் பகுதி, நீரையும்; காவிரிப் பகுதி, நல்லியற்பாவையையும் கவர்ந்தவர் காவிரியார்= செங்குட்டுவனின் தாயும் கரிகாலின் தங்கையுமான நல்லியற்பாவை; காவிரிநாட்டுக்குரிய பெண்.. .. யமதக்கினியார்= செங்குட்டுவனின் தந்தையின் தந்தை; பரசுராமனின் தந்தை; அந்நியன் அலெக்சாந்தன் வசிட்டன்.. . யமதக்கினி மகன் திரணதூமாக்கினி= பரசுராமன் அக்னி இந்திரன் சினத்தால் அழிப்புவேலைகளில் ஈடுபட்டவன்.. .. . புலத்தியனார்= விதுரன் செழியன் இராவணன் பாண்டியன் அவருடன் பிறந்த குமரியார் உலோபமுத்திரை= விதுரனின் சகோதரி; கரவேல அகத்தியனால் கைப்பற்றப்பட்ட பெண்.. துவராபதி= பஞ்சாபின் குருத்துவாரா அல்லது வேங்கடத் திருப்பதி நிலங்கடந்த நெடிமுடியண்ணல்= வசிட்ட யமதக்கினியால் நாடுகடத்தப்பட்ட கரவேல் அகத்தியன் கிருஷ்ணன்.. .. அரசர் பதினெண்மர்= பதினெண் வேளிர்குடியினரின் தலைவர்கள் சிற்றரசர்கள் படைமுதலிகள் பதினெண்குடி வேளிர்= பதினெண் சிற்றரசர்களான படைமுதலின் படைவீரர்களும் குடிமக்களும் அருவாளர்= அறிவாளராக இருந்து அகத்திய விசுவாமித்திரர் சாபத்தால் அருவாளர் கோசர் கொலைகாரராக மாறியோர்.. காடுகெடுத்து நாடாக்கி குளம்தொட்டு வளம்பெருக்கிப் பொதியின்கண் வீற்றிருந்து இராவணனைக் காந்தருவத்தால் பிணித்து இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கியோர்= நின்றுபோன அந்நியநாட்டு வணிகத்தை ஊக்கிவிட்டு அந்நிய நாடுகளையும் சொர்கமாக்க அகத்திய கரவேல் கிருஷ்ணன் உதவியால் அகத்திய கரிகால் மேற்கொண்ட நடவடிக்கைகள்.. . இராவணன்= விதுரன் நகுஷன் செழியன் பாண்டியன் இராக்கதர்= செல்யுக்கஸ்நக்கந்தனின் கூட்டத்தர்; அலெக்சாந்த யமதக்கினியின் அடிமைப்படை; கடற்கொள்ளையர்.. . திரணதூமாக்கினியான தொல்காப்பியர்= அகத்தியர்களில் ஐந்திரத்தைச் சிதைத்துத் தொல்காப்பியமாக்கி அதனையும் சிதைத்து இறையனார் களவியலாக மாற்றியவர்; யமதக்கியின் மகன்; பரசுராமன்; செங்குட்டுவனின் தந்தை .. .. வைகைநீர்= பாண்டிய செழியனின் படைவீரர்கள் இராக்கதர்கள்.. .. எதிர்கோல்= வேளிர்படையின் சிறு பிரிவு சொர்க்கம்= மகதம் மற்றும் அந்நியநாடுகளும் திரிசங்குசொர்க்கமான வேங்கடத்திருப்பதியுமாம்.. .. அதங்கோட்டாசிரியர்= அவலோகி சந்திரகுப்தன் அல்லது விசுவாமித்திரர் தொல்காப்பியன் செய்தநூல்= சிதைக்கப்பட்ட தொல்காப்பியம் மற்றும் இறையனார் களவியல்.