Saturday, 16 November 2013

நம்பிக்கை = குருடு ஸ்ரீராமகிருஷ்ணபரமகம்சன் "தமிழரும் இசுலாமியரும்"

தமிழரும் இசுலாமியரும் உலகம் முழுமைக்கும் இந்திய நாட்டிலிருந்து சூரிய குலச் சோழரால் உப்பு மிளகு சந்தனம் மணிக்கற்கள் ஆடை போன்றவை வணிகப் பெருவழி, கடல்வழிகளிலும்; கொண்டுசெல்லவும் ஏற்றுமதியும் செய்யப்பட்டன. இதனைப் பழந்தமிழ்ப் பாடல் புறநாநூறு-66: "நளியிறு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உறவோன் மருக ! களி இயல் யனைக் கரிகால் வளவ ! ..."என; காற்றை வசப்படுத்திச் செலுத்தப்படும் நாவாய் ஒட்டுவதில் வல்ல கரிகாலின் முன்னோரின் மகதமும் வங்கமும் இருந்தன. அரபு வணிகர்கள் வணிக மையங்களைப் 'பந்தர்'- கடைவீதி என அழைத்ததை; பத்.ப 6/5, 7/7, 8/4ல் காணலாம். பிறநாட்டு வணிகமையமாக செங்கடல் வணிகம் திகழ்ந்தது; அங்கும் நமது வணிகமே மேலோங்கியிருந்தது. யவனரால் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட Periplus of the Erythraei- நூல் எழுதியவரின் பெயர் இல்லை; தமிழ்நாட்டுடனான வணிகம் குறித்தது. கிரேக்கரும் ரோமரும் யவனர் எனக் குறிக்கப்பட்டனர். கி மு 1ஆம் நூ ஆ- ல் ரோமர் எகிப்தைக் கைப்பற்றினர். எகிப்தின் அலெக்சாண்றியத் துறைமுகம் வணிக மையமானது. எரிதிரைக்கடல் என்பதை Maris Erythaei எனக் குறிப்பிட்டனர். அரேபியருடனும் கடல்வழி வணிகமையங்களாக மகதமும் வங்கமும் இருந்ததன. இதனை முல்லைப்பாட்டு: "நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போல பாடுஇமில் பனிக்கடல் பருகி வலன்ஏர்பு கோடுகொண்டு எழுந்த கொடுஞ்செலவு எழிலி.. ." என உலகம் முழுதும் வணிகத்தால் வளைக்கப்பட்ட நிலையில் ஆரியர் மற்றும் அலெக்சாந்தர்களின் வரவால் நம்நாட்டின் வணிகம் சீர்குழைந்தது. அதனை நீக்க நீள மேகவண்ண நிறம்கொண்ட தமிழரின் சூரிகுலச்சோழரின் அயல்நாட்டுத் தூதுவன்- வருணன்; அரேபியரின் படைத்துணை பெற அங்குச்சென்றதைக் குறிப்பிடுகிறது. அத்துடன் அரேபியரின் உடல் வலிமை, உடை, வழிபாட்டு முறை குறித்தும் குறிப்பிடுகிறது. இதனால் இசுலாமிய சகோதரர்களின் வழிபாட்டுமுறை எத்துனை தொன்மையானது என்பதை அறிகிறோம். ஆனால் இன்றுவரை அவர்களது வழிபாடு மற்றும் தொழுகை முறைகளை இசுலாமிய சகோதரர்களே அறியாமல் இருந்துள்ளனர் என்பதோடு தமிழரின் தொடர்பும் நம்பிக்கைகளும் எத்தகையதாக இருந்தன என்பதையும் காண்கிறோம். முல்லைபாட்டு: "வேறுபல் பெரும்படை நாப்பன்; வேறுஓர் நெடுங்காழ்க் கண்டம் கோலி; அகம்நேர்பு குறுந்தொடி முன்கை கூந்தலம் சிறுபுறத்து இரவுபகல் செய்யும் திண்பிடி ஒள்வாள் விரவுவரிக் கச்சின் பூண்ட மங்கையர்; நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ கையமை விளக்கம் நந்துதொரும் மாட்ட; நெடுநா ஒள்மணி நிழத்திய நடுநாள்; அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர் சிதர்வரல் அசைவளிக் கசைவந் தாங்கு; துகில்முடித்துப் போர்த்த தூங்கல்; ஓங்குநடைப் பெருமூ தாளர் ஏமம் சூழ; பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள்; தொழுதுகாண் கையர் தோன்ற; வாழ்த்தி 'எறிநீர் வையகம் வெல்இய செல்வோய்நின் குறுநீர்க் கன்னல் இனைத்து' என்றிசைப்ப; மத்திகை வளைஇய மறித்துவீங்கு செறிவுடை மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்; புலித்தொடர் விட்ட புனைமாண் நல்இல் திருமணி விளக்கம் காட்டி திண்ஞாண் எழினி வாங்கிய ஈர்அறைப் பள்ளியுள் உடம்பின் உரைக்கும் உரையா நாவின் படம்புகு மிலேச்சர் உழையர் ஆக.. ." என அரேபியரின் படையைப் பெற சூரியகுல வேந்தன் அரேபியா சென்றதையும்; அரேபியர் அவர்களாது பள்ளிவசலில் அவனை வாழ்த்திப் பாடுவதையும்; [பிறதகவலுடனான முழுப்பாடல் இல்லை] சோழனது மனைவி தனது இல்லத்தில் அவனை நினைந்து வாடுவதையும் மிக அழகாக எடுத்துரைப்பதே முல்லைப்பாட்டு. அரேபபியருடன் தொடர்பும் அவர்களது படை மதுரையைக் காத்ததையும் நெடுநல்வாடை: ஆறுகிடந் தன்ன அகல்நெடுந் தெருவில் படலைக் கண்ணி பருஏர்எறுழ்த் திணிதோள் முடலை யாக்கை முழுவலி மாக்கள் வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து துவலத் தண்துளி பேணார் பகலிறந்து இருகோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர" என இரவில் பனிபெய்யும் நாளில் மதுரையைக் காத்த "முழுவலிமமாக்கள், பொய்யா மாக்கள்" நமதுநநாட்டில் சிறைப்பட்ட ஆரியரையும் மோரியரையும் அவுணரையும் பாதுகாத்த அரேபியக் காவலரைக் காட்டுகிறது. சிறைப்பட்டோரைப் பாதுகாத்ததுது குறித்த தகவல்களைப் புலவர் ககபிலரின் குறிஞ்சிப்பாட்டிலும் காணாலாம். நெடுநல்வாடை. அரபு வணிகர்கள் வணிக மையங்களைப் 'பந்தர்'- கடைவீதி என அழைத்ததை; பத்.ப 6/5, 7/7, 8/4ல் காணலாம். பிறநாட்டு வணிகமையமாக செங்கடல் வணிகம் திகழ்ந்தது; யவனரால் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட Periplus of the Erythraei- நூல் எழுதியவரின் பெயர் இல்லை; தமிழ்நாட்டுடனான வணிகம் குறித்தது. கிரேக்கரும் ரோமரும் யவனர் எனக் குறிக்கப்பட்டனர். கி மு 1ஆம் நூற்றாண்டில் ரோமர் எகிப்தைக் கைப்பற்றினர். எகிப்தின் அலெக்சாண்றியத் துறைமுகம் வணிக மையமானது. எரிதிரைக்கடல் என்பதை Maris Erythaei எனக் குறிப்பிட்டனர். அதனை வென்று மேம்பட்ட கரிகாள்சோழனை 'எறிநீர் வையகம் வெல்இய செல்வோய்' என வாழ்த்துவதைக் காண்கீறோம். பழந்தமிழ்ப் பாட்டுக்களில் பத்துப்பட்டுள் ஒன்றான முல்லைப்பாட்டு: ".. .'எறிநீர் வையகம் வெல்இய செல்வோய்நின் குறுநீர்க் கன்னல் இனைத்து' என்றிசைப்ப மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவணர் புலித்தொடர் விட்ட புனைமாண் நல்இல்.. .." என அக்காலப் பள்ளிகளில் வெளிநாட்டவரை வவரவேற்று அவர்களது வேந்ததனின் புகழையும் வாழ்த்திப் பாடும் மரபைக் காண்கிறோம். சோழநாட்டில் கிரேக்க ரோம யவணர்க்கும் சிறைப்பிடிக்கப்பட்ட ஆரியவரசன் பிரகத்தனுக்கும் கல்வி பயிற்றுவித்ததையும்; ஆனால் ஆரியவரசன் பிரகத்தன் என்னும் செல்யுக்கஸ்நக்கந்தனும் அவனது கூட்டத்தாரும் தமிழையும் தமிழரின் வாழ்வியல் நெறிகளையும் பயிலாமல்; நம்மால் உருவாக்கிக்கொடுக்கப்பட்ட வடமொழியைப் பயின்றனர் என்பதையும் குறிப்பிடுகிறது. சொல சொற்களின் பொருள்: மத்திகை- குதிரை ஓட்டும் சம்மட்டி என முல்.பா- 59ம்; சுருங்கை- சுரங்கவழி என பரி.பா 20/104, சிலம்பு 14/65; கலம்- மரவீடு- படகுவீடு என அகம்149, புறம் 56; கன்னல்- காலத்தை அளக்கும் கருவி- Time glass- நீராலானது; காழகம்- பர்மா, தாரங்கள்- பண்டங்கள்; கள்- தோப்பி- பிழிநறவு, மகிழ், மட்டு, மது, தேறல்; மருங்கம்- ஊணூர் மது.கா; சாலியூர்- நெல்லூர்: யுடாலமி- ஸலௌர், கொற்கை- kolklus, துளுநாடு- மங்களூர்; கடம்பறுத்தல்- கடலில் கொள்ளையிடும் கூட்டத்தை அடக்குதல். பழந்தமிழ்ப் பாடல்களில் நந்தர்கள் வடகிழக்கில் பாடலியைக் கைப்பற்றி வாழ்ந்ததைக் குறிப்பிட்டு, நீர்வழிகளையும் தெற்கே செல்ல விடாமல் தடுத்ததாக உள்ளன. எகிப்திய கிரேக்க ரோமனிய நந்தர்; அலெக்சாந்தர்கள் எத்தனைபேர் இங்கு வந்தனர் என்பது தெளிவாக இல்லை; மூவர் அல்லது இருவர் எனத் தெரிகிறது. அவர்களுடன் கடற்கொள்ளையரான செல்யுக்கஸ்நகந்த கூட்டத்தாரும் பெருமளவில் வந்துள்ளனர். உலகம் முழுதும் பற்பல மொழிபேசும் மக்கள் தமிழருடன் வங்கம், மகதம் முதல் கலந்தினிது வாழ்ந்ததாகப் பட்டினப்பாலைப் பாடல் குறிப்பிடுகிறது. உலகில் எந்த மொழியிலாவது; தொன்மையான வரலாற்றில் இத்தகைய தகவல்களைக் காணமுடியுமா? பிற நாட்டினரின் வரலாற்றுநூல்களிலோ சம்ஸ்கிருதத்திலோ தமிழர் மற்றும் தமிழ் மொழி குறித்தோ தகவல்கள் உள்ளனாவா? தமிழனின் மேன்மையையும்; பிற இன மொழி கலாச்சாரம் கொண்ட மக்களுடன் சேர்ந்து வாழ்ந்ததாக எங்கேனும் காணமுடியுமா? இந்த உலக மக்கள் யாவரும் தமிழனுக்கும் தமிழுக்கும் கடன் பட்டவர்கள் என்னும் உணர்வு ஏன் எவருக்கும் இல்லாமல் போனது. சிந்தியுங்கள்!?!

Monday, 11 November 2013

கரவேல் கரிகால் மற்றும் செங்குட்டுவன்

நம்பிக்கை = குருடு - ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சன் கரவேல் கரிகால் மற்றும் செங்குட்டுவன் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் பலவாறு திரட்டப்பட்டவை. விக்கிப்பீடியா இணையதளமுவம் உதவியுள்ளது. மேலும் டி.டி.கோசாம்பி அவர்களின் இந்திய வரலாறு ஓர் அறிமுகம் தமிழ் நூலில் உள்ள தகவல்களும் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவற்றில் கவுதமிபுத்ர சதகர்னி என்பவனே பலபெயர்களில்; புஸ்யமித்திரன், அசோகன், வஜ்ரகரன், இந்திரன், அலெக்சான்டனின் மகன் மகததேசன்- மாதேசன்- மாதேவன்- மஹாதேவன்- மாடோபா- மாடப்பன்- முசிக- முகடி- முக்கண்டி- முகரி- முக்கண்ணன், அரசன் முசுகுந்தன், பரசுராமன், மாறீசன், மாபாரதத்தின் கவுரவர் தலைவன் துர்யோதனன், என மேலும் பல பெயர்களில் இடம்பெற்றவன். பழந்தமிழ்ச் சங்கப்பாடல்களில் மேலும் பல பெயர்களில் இடம்பெற்றுள்ளான். இவனது மகனே செங்குட்டுவன். செங்குட்டுவனது பெயர்களும் பலவாறு இடம்பெற்றுள்ளது. கரவேலனின் கல்வெட்டுக்களில் குடபஸ்ரீ -குட்திசையான மேற்கே அமைந்துள்ள குடகு- அன்றைய சேரநாட்டுப் பகுதியைத் தனது தாய்வழி உரிமையாகப் பெற்றவன். அவனது தாயே கரவேலனின் தந்தையான சந்திரகுப்தனின் தங்கையான பிரிதாவின் மகள். பிரிதா ரிக்வேத்த்தில் குறிப்பிடப்படுகிறாள். பிரிதாவை மணந்தவனே சேதி குலத்தின் சேத்சென்னி எனத் தொல்தமிழ்ச் சங்கப்பாடல்களில் இடம்பெற்றவன். சேத்சென்னியே கரிகால்சோழனின் தந்தை என்பதும் குறிப்பிடத் தக்கது. அசோகன் எனப்பட்ட செங்குட்டுவனின் தந்தையான மேலே குறிப்பிடப்பட்டவனே கரவேலனால் வெல்லப்பட்டவன். கரவேலனே புராணங்களில் சத்தியவிரதன் என்னும் திரிசங்குவாக வசிட்ட அலெக்சாண்டனால் தண்டிக்கப்பட்டு நாடுகட்த்தப்பட்டவன். அவனுக்கு முன்னர் விசுவா மித்திரனும் வசிட்ட அலெக்சாண்டனால் நாடுகடத்தப்பட்டான். இவ்விருக்கும் முன்னதாக சந்திரகுப்தனும் வசிட்ட அலெக்சாண்டனால் நாடுகட்த்தப்பட்டு இன்றைய பஞ்சாப் -குருத்வாராவில் வாழ்ந்தவன். பின்னர் சிரமண பெலுகொள என்னும் வெள்ளைக் குன்றில் வாழ்ந்தவன். செங்குட்டுவனின் தந்தையை அடக்கி அவனிடமிருந்து மகத நாட்டின் ஆட்சி யுரிமைக்கான முடியையும் ஆரங்களையும் மதிப்புமிக்க பொன்நகைகளையும் கைப்பற்றிணான். அலெக்சாண்டனுக்குப் பின்னரான மகதமே அலெக்சாண்டனுக்கும் அவனது அடிமைப்படைத்தளபதி செல்யுகஸ்நிகேடார்- செல்யுக்கஸ் நக்கந்தனின் மனைவிக்கும் பிறந்த ஹெலனின் காலமாக்க் கருதப்பட்ட்து. காரணம் இந்த ஹெலன் என்னும் சத்திய வதியையே சந்திரகுப்தனைக் கெடுத்துக் கர்ப்பமுற்றுத் தனது மக்களுக்கு ஆட்சியுரிமை கொடுக்கவேண்டும் எனத் தனது தந்தை அலெக்சாண்டனின் உதவியுடன் தனது மக்களுக்கு; பிந்துசாரனுக்கும் பிம்பிசாரனுக்குமாக ஆட்சியைக் கைப்பற்றிச் சந்திரகுப்தனையும் அவனது புதல்வர்களான விசுவ ஆமித்திரனையும் கரவேலனையும் நாடுகடத்தக் காரணமானவள். ஹெலனே மாபாரதத்தில் சத்தியவதியாகவும் மச்சகந்தியாகவும் தீஸ்சாவாகவும் கங்காதேவியாகவும் பலவாறு இடம்பெற்றாள். சந்திரகுப்தன் மவுரியன் அல்ல; சூரியச்சோழர் குடியின்ன். அவனுக்கும் ஹெலனுக்கும் பிறந்தோரே மவுரியர் எனப்பட்டனர். ஹெலனது புதல்வர்களே சித்ராங்கதனும் விச்சித்ரவீர்யனும். வரலாற்றில் இடம்பெறும் பிம்பிசாரனே விச்சித்ரவீர்யன். மஹாவீர் எனவும் அமணத்தைக் கைப்பற்றித் தீர்த்தங்கரனானான். .பிம்பிசாரனே அசோகனாகவும் மாற்றப்பட்டான். இந்த அசோகனே சேத் கரவேலனின் கலிங்கத்தையும் வேங்கடமலையையும் தாக்கிச் சந்திரகுப்தனின் படிமத்தைக் கைப்பற்றிச் சென்ற புஸ்யமித்ரனாகவும் காட்டப்படுகிறான். அவனது மகனான செங் குட்டுவனே; ஆஜாதச்சத்ரு, ருத்ரதாமன், பர்வதகன், குடபஸ்ரீ எனவும் இடம்பெற்ற குடதிசையின் குட்டுவன். அந்நியனான வசிட்ட அலெக்சாண்டனுக்குப் பிறந்த மகளான ஹெலன் வழியில் பிறந்ததால் செந்நிறமாக இருந்தான். அதனாலேயே செங்குட்டுவன் எனப்பட்டான். அசோகனின் கல்வெட்டுக்கள் எனக் குறிப்பிடப்படும் செங்குட்டுவனது கட்டளைப்படியும் கரவேலன் மற்றும் கரிகாலன் ஆகியோரின் ஆணைப்படியும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் 14ஆவது கல்வெட்டைக் காண்போம். 14th Major Rock Edict This inscription of Dhamma was engraved at the command of the Beloved of the Gods, the king Piyadassi. It exists in abridged, medium length, and extended versions, for each clause has not been engraved everywhere. Since the empire is large, much has been engraved and much has yet to be engraved. There is considerable repetition because of the beauty of certain topics, and in order that the people may conform to them. In some places it may be inaccurately engraved, whether by the omission of a passage or by lack of attention, or by the error of the engraver. Inscription of Dhamma என்பது தருமனான திருமாவளவனே; தருமபுத்திரன் எனச் சங்கப்பாடல்களில் கரிகால் உள்ளான். Command of the beloved of Gods என்பதில் கடவுளராகக் கரவேலன்- கண்ணனும், கரிகாலன்- திருமாவலளவன்- திருமாலும், கடவுளரால் நேசிக்கப்பட்டவன் எனச் செங்குட்டுவனும் இடம்பெற்றனர்; The king Piyathassi என செங்குட்டுவனே அரசன் பியதசி எனவும் குறிக்கப்பட்டுள்ளான் The engraver என்பது கல்வெட்டை வெட்டுவிக்கச் செய்த செங்குட்டுவனின் தந்தையான அசோகனைக் குறிக்கும். ஒடிஸ்சாவில் கரவேலின் கலிங்க புவனேஸ்வரில் உதயகிரிமலை ஹாதுகும்பா - அகத்தியர் குகையில், இரு பகுதிகளைக் கொண்ட பிரமி எழுத்து, பிரகிருத மொழியில் சிதைந்தநிலைக் கல்வெட்டு ஒன்றில் 17 அடிகள் உள்ளன; பிற பகுதிகளிலும் கந்தகிரியிலும் ராணிகும்பாவிலும் உள்ள அனைத்துத் தகவல்களும் கொண்ட கல்வெட்டில் அரசனின் பெயர் [AIRA அல்ல] சிதைக்கப்பட்டு கரவேலா எனக் காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர். கரவேலனின் பெயரைச் சிதைக்கும் முயற்சி செய்யப்பட்டதைக் காண்கிறோம். கரவேலன் குறித்து அவனது கல்வெட்டுக்களில் பிறருக்காகவும் தனக்காகவும் அந்நியருக்கெதிராகவும் போரிட்டுள்ளான். யாருக்காக மற்றும் என்ன காரணங்களுக்காகப் போரிட்டான்; விரிவான தகவல்கள் இல்லை. சீரான வரலாற்றைப் பிற சான்றுகளைக் கொண்டே அறியவேண்டியுள்ளது. இடங்கள் மற்றும் சில மாந்தரின் பெயர்களை அடையாளம் காண்பது எளிதல்ல. (இந்தியநாடு யாருக்கானது?) ப/பாரதவர்சம் என்னும் சொல் முதன்முதலில் இக்கல்வெட்டில்தான் காணப்படுகிறது. கரவேலனின் கல்வெட்டுக்கு எதிர்த்திசையில் 6 மைல் தொலைவில் அசோகனின் கல்வெட்டும் உள்ளது. இரண்டு கல்வெட்டுக்களும் ஒருவருக் கொருவரை எதிரிகளாகக் காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வாதாபியை வென்ற நரசிம்மவர்மபல்லவனின் கல்வெட்டு ஒன்றில் அகத்தியர் இடம்பெற்றுள்ளார். "வாதாபி என்னும் அசுரனை அழித்த அகத்தியர்போன்றவன்” என அக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. மேலும் சில வரலாற்றுத்தகவல் இடம்பெற்ற பகுதி சிதைக்கப்பட்டு, வாதாபி என்னும் எழுத்துக்களும் நரசிம்மவர்மனின் பெயரும் மட்டுமே தெளிவாக அறியத்தக்கனவாக உள்ளன. கரவேலனால் அவனது 7ஆம் ஆண்டு நடவடிக்கையாக இந்திரனான வஜ்ரகரனுக்கும் கரவேலனின் அத்தை மகளான கரிகால்சோழனின் தங்கைக்கும் பிறந்த குழந்தை செங்குட்டுவனுக்குப் பாதுகாப்பளிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறான். இந்தச் செங்குட்டுவனே கரவேலனின் உதயகிரியமலையில் அகத்தியர்குகையில் கரவேலன் வாழ்ந்தபோது இராமாயணத்தில் அனுமனாக இந்திரனின் வஜ்ராயுத்த்தால் அடிக்கப்பட்டுத் தாடை எலும்பு உடைந்து அறுபட்ட முகம் மீண்டும் ஒன்றுகூட்டப்பட்டு அறுமுகன் அனுமன் ஸ்கந்தன் கார்த்திகேயன் எனவும் குறிக்கப்பட்டான். செங்குட்டுவனின் பிறப்புக்கு எதிராகச் செயல்பட்டவனே அவனது தந்தை அசோகன் எனப்பட்ட பிம்பிசாரன். கரவேலன்= கண்ணன், கரிகாலன்=திருமால், செங்குட்டுவன்= கார்த்திகேயன் என மூவரும் சேர்ந்தே அசோகனை அடக்கினர். பத்து ஆண்டுகளுக்கு பாரத நாட்டின் பாசரைக் காப்பாளனாக அடங்கிக்கிடந்து பின்னர் இறந்துவிட்டான். இவற்றுக்கான சான்றுகள் பல மொழிகளிலும் வேத இதிகாச புராணங்களிலும் சிதறிக் கிடக்கின்றன. சில கல்வெட்டுக்களையும் விளக்கங்களையும் காண்போம். கரவேலனின் கல்வெட்டுக்களில் காணப்படும் எகிப்திய கிரேக்க மற்றும் பிற மொழிச்சொற்களைக் காணும் நாம் உணரும் தகவல்கள்ளையும் சில சொற்களுக்கான விளக்கங்களையும் அறிந்து தெளிவுகாண்பது அவசியமாகிறது: பாடலிபுத்தரம் = மலர்- பூ நகரம்; மலர்கள் நிறந்த நகரம் - KUSUMUDHVAJA என மாபாரதம் குறிப்பிடுகிறது. யோனா - பாலிமொழிச் சொல்; பொருள்: கிரேக்கச்சொல்: YOna - I ONIAN - அயோனியன். அலெக்சாண்ற்றியா - யோனர்களின் நகரம் என மஹாவம்சம் குறிக்கிறது. அவுனர் யவனர் யானர் என்னும் சொற்கள் தொல்தமிழ்ப் பாடல்களிலும் காப்பியங்களிலும் காணப்படுகின்றான. ஹீப்ரு மொழியில் யாவான் - யோவான் என்றேல்லாம் உள்ளன. அரபி, துருக்கி, பெர்சி மொழிகளில் YUNAN - ஊனன் - ஊணன். சீனாவிலும் இச்சொல் பயன்பாட்டில் உள்ளது. பௌத்த நூல்களான தீபவம்சம், சசன வம்சம் போன்றவை; மகரகிதன் யோனாவுக்கும்- அலெக்சாண்றியாவுக்கும், கம்போசத்துக்கும் சென்று புத்தநெறிகளைப் போதிக்கச்செய்தான் எனக் குறிப்பிடுகின்றன. மகரம் யாளிமீனைக் குறிக்கும். முந்தர ராட்சசா எனும் பௌத்த நாடகத்தில் யவனர் கம்போசர் சகர் போன்றோர் இமாலயராசா பர்வதகனுடன் சேர்ந்து அலெக்சாண்டனைத் தோற்கடித்ததாகக் காணப்படுகிறது. யவனர், கம்போசர், சகர், பஹ்லவர் போன்றோர் கலியுக மிலேச்ச-MLECCA-ஆட்சியர். மினாண்டன் ஒரு அயோனியன்; மீனுடன் தொரடர்புடைய செல்யுக்கஸ்நகந்தன் எனத் தெரிகிறது. இவனது படையினர் முதல் அலெக்சாண்டனுக்கு உதவியாகப் போரிட்டு; கங்கைநதியைக் கடக்க மறுத்து விலகிவிட்டவர்கள். திரும்பிச்செல்லும் வழியில் பாபிலோனில் முதல் அலெக்சாண்டன் இறந்துவிட்டதாகத் தெரிகிறது. VIMAKADH PHISES - ஒரேசொல்லாகக் காணப்பட்டுள்ளது; மீனுடன் தொடர்புடைய இரண்டு சொற்களில்; முதற் சொல்லின் முதல் எழுத்து H சிதக்கப்பட்டு V ஆகியிருக்கலாம்; கிழக்கு மேற்காக இமையத்துக்கு அப்பால் மேற்கிலிருந்து வந்து சேர்ந்தவர்கள்; நீரின்பயன், பயிர்விளைச்சல், உழவுத்தொழிலும் அறியாதோருடன் தொடர்புடையதாகத் தெரிகிறது. இவர்கள்ளும் இராமாயணம் பாலகாண்டத்தில் இடம்பெற்று; வசிட்டனுடன் சேர்ந்து விசுவாமித்திரனை எதிர்த்தனர். அலெக்சாண்டனால் மகதம் கைப்பற்றப்பட்ட பின்னர் அவனது புதல்வன்; மகத தேசன் - மாதேசன்; மகத அப்பன் - மாடப்பன் - மாடோபா - மாசோபா - மகாதேவன் என்றெல்லாம் பல பெயர்களில் காணப்படுகிறான். மாபாரதம் உத்யோக பருவத்தில் சுதக்சினன் தலைமையில் காம்போச ராசன் செயல்பட்டான். அலெக்சாண்டனின் பெயர் பலவாறு இடம்பெற்றுள்ளது; சதகர்னியரைச் சதவாகனர் எனவும் குறிப்பிடலாம்; சதம் = 100; நூற்றுவர் கன்னர், ஈரைம்பதின்மர், ஐ இருபதின்மர் என்றெல்லாம் தொல்தமிழ்ப் பாடல்களில் உள்ளனர். அலெக்சாண்டனுக்குப் பின்னரான மகதம் அலெக்சாண்டனின் மகள் ஹெலனின் காலத்ததாகக் குறிக்கப்பட்டது. கரவேலனின் மகதமும் பிறவும்; சதகர்னி மற்றும் இரண்டாம் சதகர்னி- புலுமாயி கூட்டத்தால் கைப்பற்றப்பட்டன. கரவேலனின் ஹாதிகும்பா அகத்தியர் குகைக் கல்வெட்டுக்களைப் படித்தறிநோர் கொடுக்கும் தகவல்கள் 13 ஆண்டுகளை உள்ளடக்கியதாகக் தெரிகிறது. 1. கலிங்கநாட்டுக்குச் சென்றான்; 2. சதகர்னியைப் பொருற்படுத்தாமல் (Asikanagara) அசிகநகராவைப் பெரும்படைகொண்டு தாக்கினான்; 3. ரதிகளும் போசகர்களும் தாக்கப்பட்டு சதகர்னியை வென்று 'முசிக' பகுதி சேர்க்கப்பட்டு எல்லையானது; குடையும் முடியும் ஆரங்களும் திரும்பக் கைபற்றப்பட்டன. ரதிகள் - RASTRIKA என்பது ராட்சசர் எனத் தெரிகிறது. 4. நல்லுபதேசங்களும் நடனங்களும் கற்பிக்கப்பட்டன; 5. ராடச்சசர்களும் போஜர்களும் வெல்லப்பட்டனர்; 6. நீர்வழிகளும் நீர்நிலைகளும் செப்பனிடப்பட்டன; 7. பௌரா மற்றும் ஜனபதாக்களுக்கு உரிமைகளும் சலுகைகளும் கொடுக்கப்பட்டன; கரவேலனின் ஒரு உறவுப் பெண் வஜ்ரகரனுடன் கூடியதால் பிறந்த மகனுக்குப் பாதுகாப்பளிக்கப்பட்டது. 8. மகதத்தின் மீது படையெடுத்து; ராஜகிரகத்தையும் பாடலிபுத்தரத்தையும் தாக்கி; கலிங்கப்போரில் நந்தனும் சதகர்னியரும் கைப்பற்றிச் சென்ற தீர்த்தங்கரரின் உருவையும் அங்க மற்றும் மகதத்தின் செல்வங்களும் மகதமும் பாடலிபுத்தரமும் உத்ரபத மன்னனிடமிருந்து கைப்பற்றப்பட்டன; ஆட்சிசெய்வதற்கான முடியையும் ஆரங்களையும் பிற மதிப்புமிக்க நகைகளையும் திரும்பக் கைப்பற்றினான்; 9. மகத்தில் தனது வெற்றிச்சின்னமாக; நதிக்கரையில் புவனேசுவர் அருகில் ஒரு அரண்மனையை அமைத்தான்; 10. வட இந்தியப் பகுதிமீது பெரும்படையுடன் போரிட்டான்; 11. தமிழ்மன்னர்களை வென்று கேதுபத்ரரின் மர உருவை மீட்டான்; 12. மீண்டும் மகதத்தின்மீது போரிட்டு; சுங்கன் விரட்டப்பட்டான். சுங்கனின் வாரிசு ப்ரகஸ்பதிமித்ரன்- Brhaspatimitra; கரவேலனின் காலடியில் பணிந்தான் / ஆசிபெற்றான். கைப்பற்றப்பட்ட பொருட்களால் அமணருக்குக் கோயில் எழுப்பினான்; அமராவதியில் ஞானியர்க்காக MahamekavaruNa PAsathi - பாசாதிகோயில் கட்டப்பட்டது; பாண்டியனை வென்று மணிமுடி, ஆரங்கள் பொன்மணிகள் முத்து யானைகள் குதிரைகள் மதிப்புமிக்க கற்கள் கைப்பற்றப்பட்டன; 13. மகதத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. காரவேலனுக்குப் பிறகு KUDAPASIRI உள்ளான். தொல்தமிழ்ப் பாடல்களில் இடம்பெறும் படிமமான குதிரை; படைத்தலைவன் -சேனா அதிபதியையே குறிக்கும்; இதனைத் தொல்காப்பிய இலக்கணமும் உறுதிசெய்துள்ளது. அச்சடங்கில் அனைத்துப்படைகளும் போரின் தலைமைப் பதவியும் குதிரை எனக் குறிக்கப்படும் சேனாபதியிடமே ஒப்படைக்கப்படும். ரிக்வேதம்: 3.53.11: சுதாசனின் குதிரையான குஷிகாசை அணுகுங்கள்; அவனைச் செயல்படத்தூண்டுங்கள்; ராஜாவுக்காகச் செல்வங்களைப் பெற்றுத் தரவும், வெற்றிபெறவும் அதனை அவிழ்த்து விடுங்கள்; ஏனெனில் தேவர்களின் மன்னான அவன் கிழக்கு, மேற்கு, வடக்கிலும் விருத்திரனைத் துவம்சம் செய்தான். ஆகவே பூமியின் மிகச்சிறந்த பிராந்தியங்களில் அவனை வழிபடவும் செயல் படவும் சூதாசனை அனுமதியுங்கள்" எனக் குறிப்பிடுகிறது. கரிகால்சோழன் -சுதாசனின் சேனாதிபதியான குஷிகாஸ் -செங்குட்டுவன்- சேனாபதியாக- குதிரையாக; மகதம் உட்பட அனைத்துப் பகுதிகளையும் வென்றபின் அசுவமேத யாகம் நட்த்தப்பட்டதை ரிக்வேதம் தெளிவாக்குகிறது. படிமங்களை உடைத்துத்தான் சரியான பொருளையும் விளக்கங்களையும் காணவேண்டும்; விருத்திரனால் வெல்லப்பட்ட அனைத்துப் பகுதிகளும் மாபாரதப்போரில் வென்றெடுக்கப்பட்டதையும் போர் நடந்த பகுதி தெற்கல்ல; போருக்குப் பின்னரும் தெற்குப்பகுதி இடம்பெறவில்லை என்பதையும் உணரவேண்டும். மஹாவகம் 10.2; ஜாதகம் -428: பனாரஸ் மன்னன் பிரமதத்தன் கோசலத்தில் கொஞ்சம்வெற்றிபெற்றுக் கோசல ராசா தீகீயை, ராணியுடன் தீர்த்துவிட்டான், தப்பியோடிய கோசல இளவரசன் தீகாவு மூன்றுவேதங்களிலும் தேர்ச்சிபெற தட்ச சீலத்துக்கு ஓடி; இழந்த ராச்சியத்தை மீட்டான்; ஜாதகம்- 371: ஒருவேளை பிரமதத்தனின் மருமகன் என்ற முறையில் காசியை இணைத்துக்கொண்டான் .கோசல இளவல் சாத்தன் பற்றியும் இக்கதை கூறுகிறது .தந்தை தோற்கடிக்கப் பட்டபின் சாத்தன் பிரமதத்தனிடமிருந்து கோசலத்தை மீட்டான் .வெல்லமுடியாதபடி சாவதத்துக்கு அரண் செய்தான். அசோகனால் வெட்டுவிக்கப்பட்ட கிர்னார் கல்வெட்டுபோன்ற அதேபாறைகளில் மொழியிலும் உள்ளடக்கத்திலும் தாக்கம் உண்டாக்கும் மாறுபாட்டுடன்; ருத்ரதாமனின் சம்ஸ்கிருதப் பொறிப்புக்கள் உள்ளன. பொறிப்பின் ஏழாம்பகுதி அழிக்கப்பட்டோ அழிந்தோ இருக்கிறது. அதில் சந்திரகுப்தனின் ஆளுநரான வைஷியன் புஷ்யகுப்தனால் கட்டப்பட்டு அசோக மவுரியன் கீழ் யவன - பாரசீக மன்னன் துசாபனால் ஒரு கால்வாய் அமைப்புடன் இருந்த அணை தகர்க்கப்பட்டு இரண்டுமடங்கு அளவில் மறுபடியும் ருத்ரதாமனின் சொந்தச்செலவில் பிற எவருடைய, பவுர ஜனபத குடிகளிடமிருந்து பொருளும் பங்களிப்பும் உழைப்பும் பெறப்படாமல் கட்டப்பட்ட சாதனை அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களைக் கொல்வதை நிறுத்தியதையும், அவந்திமுதல் சிந்து -அபராந்தாவரை ஏராளமான மாகானங்களையும் அத்துடன் பழங்குடிக் காட்டு வாசி -நிசதரையும், தாக்கியதையும் வெற்றிகொண்டதையும், தீரமிக்க யுதேயர்களைப் பூண்டோடு அழித்ததையும், அவர்களோடு மண உறவுகொண்டுள்ளதால் விட்டுவைக்கப்பட்ட யுதேயரின் தலைவன் சதகர்ணியை இருமுறை தோற்கடித்ததையும் பெருமையோடு குறிப்பிடுகிறான் ருத்ரதாமன். மேலும் உரைநடையாயினும் கவிதை யாயினும் எல்லா இலக்கியப் பாங்குகளிலும், வெளிப்படுத்துவதிலும் சம்ஸ்கிருத்த்திலும்; தனக்குள்ள ஆளுமையைக் குறிப்பிடுகிறான். தங்கம் வெள்ளி நகைகள் என தனது பொக்கிசங்களையும் கூறிக்கொள்கிறான். பெஸ்நகரில் உள்ள தூணை நிறுவிய ஹெலியடோரியஸின் கிருஷ்ண -வசுதேவ பாகவத வழிபாடு இதனை உறுதிப்படுத்துகிறது. பின்னாளில் பாரசீகமும் பிறகு ஆங்கிலமும் இந்திய நகரங்களிலும் சபைகளிலும் சம்ஸ்கிருதத்தின் இடத்தைப் பிடித்ததும் இதே நோக்கத்தில்தான். சதவாகனராகக் கருதப்படும் ஹாலா என்பவரால் எழுதப்பட்டவற்றுடன் சேர்த்துத் தொகுக்கப்பட்ட 700 அடிகள் கொண்ட நேர்த்தியான கவிதை; பத்திகளிடையே தொடர்புபடுத்தும் கண்ணி இல்லாமலேயே சாமானிய மக்களைப் பற்றியும் நாட்டுப்புறக் காட்சிகளையும் பேசுகிறது; காமச்சுவையுடனும் உள்ளது. குணாத்தியரின் பிருஹத் கதாவும் அதே அரசவைக்காக பைசாசி என்ற ஒரு பாமர மொழியில் எழுதப்பட்டதும் நம்பத்தக்கதே. இதில் மீதமுள்ளதெல்லாம் சோமதேவரின் கதா சரித் சாகரம், க்ஷேமேந்திரனின் பிருஹத் கதா மஞ்சரி போன்ற சம்ஸ்கிருதத் தழுவல்களிலேயே உள்ளன; இவர்களிருவருமே காஷ்மீரிகள். புத்தகாலக் கோவையான மஹாவம்சோ; இலங்கையில் தற்காலம்வரை திரும்பத்திரும்ப ]மாற்றி [ எழுதப்பட்டது. அதன் இடையில் 60 ஆண்டுகள் எவ்வித விளக்கமுமின்றி விடப்பட்டுள்ளது. இரட்டைக் கதைகள் -நீதிக்கதைகள்- பழங்கதைத் தொகுப்பான ஜாதகக் கதைகளில் ஒவ்வொரு கதையும் ஒரு நடப்பு நிகழ்வைக் கொண்டு புத்தரால் கூறப்பட்டதாகக் கருதப்படுகிறது. இருந்தாலும் புத்தரின் கால சமூக உறவுகளின் சித்திரத்தை நேரடியாகக் காட்டப் பயன் படுத்த முடியாது; சதவாகன காலத்தில் இவை எழுத்தில் வடிக்கப் பட்டன; மறைந்துபோன இலங்கை வடிவங்களின் செல்வாக்குக்கு ஆட்பட்டிருந்தன. அதன் உதவியுடனே தற்போதைய பாடமாகப் பாலியில் ஆக்கப்பட்டன. மஜ்ஜிம நிகாயம் 93ல் அஸ்ஸல்லாயனனிடம் புத்தர் கூறியது :'யோனா கம்போஜா மற்றும் எல்லைகளில் ஆரியா, தாசா என இருசாதிகள் மட்டுமே உள்ளதாக அறிந்திருக்கிரீர்; ஆரியர் தாசராகலாம், தாசர் ஆரியராகலாம்' என்பதாக. ஆப்கானிஸ்த்தானில் யோனா -அயோனியா என்ற பெயர் இருப்பதால்; பாரசிகப் பேரரசை அலெக்சாந்தர் வெற்றி கொண்டதற்கு முன் புத்தனின் மேற்கண்ட சொற்கள் வெளிப்பட்டிருக்க முடியாது. ரிக்வேதப்படி ஒரு ஆரியன் தாசனாக முடியாது; கிரேக்க அடிமைமுறையே வெளிப்படையாகக் குறிப்பிடப்படுகிறது .அமணர் சாதிகளை ஒத்துக்கொண்டார்கள்; மூல சாதிகள் நான்கின் கலப்பையும் ஏற்றார்கள் . வளர்கருக்கள் பரிமாற்றம் என்ற கருத்தால் மஹாவீரரும் பிராமணப் பின்னணிகொண்டவர் என ஏற்றிக்கூறும் முயற்சியும் நடந்தது. ஸ்ரீ கந்த மஹாபுராணத்தில் முசுகுந்தன்; தக்ஷனான சேத்சென்னியின் மகளைப் பிராமணவேடமிட்டுக் கெடுத்துவிட்டுத் திருமணம் செய்துகொள்வதாக்ச் சம்மதித்துவிட்டு; பாணிக்கிரகனத்தின் போது வராமல் எமாற்றி ஒடிவிட்ட தகவல் இடம்பெற்றுள்ளது. ஸ்ரீ கந்த மகா புராணம்: முதற் பாகம்; தச்ச காண்டம் 7ல்: “முசுகுந்தன், தக்கனின் பெண்ணைத் தூக்கிச் சென்று விட்டான்." இதனை அறிந்த தக்கன்: "திருட்டுத்தனமாக எனதுபெண்ணைக் கவர்ந்து கொண்டான்; தாய் தந்தை அனுமதியின்றி எவன்தான் பெண்ணைக் கவர்ந்து செல்வான்? இப்பாப காரியத்தைச்செய்து அவமானத்தையும் அபகீர்த்தி யையும் தேடிக்கொண்டான்." என நொந்து புலம்புகிறான். [பழந்தமிழ்ச் சங்கப்படல்களில் புலவர் பரணரும் புலவர்களும் சமாதானம் மேற்கொண்டு திருமண ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில்]: "பெண்ணை மணமுடிக்க, பாணிக் கிரகணம் செய்யும் வேளையில் ஓடிவிட்டான்; போக்கிரிகளின் தலைவனான கூத்தாடி, பாதிக்கல்யாணத்தில் அபகீர்த்தி உண்டாக்கினான்; அவரவரது இழி குணம் எவரையும் விடுவதில்லை; தாய் தந்தயரை அறியாத, மிகவும் அசுத்தமான பிறவி, வஞ்சகன்; அவனாகவே எனது பெண்ணை, பிராமண வேடமிட்டுக் காதலிப்பதுபோல் நடித்துக் கெடுத்தான்; நானும் அவனுக்கே பெண்கொடுக்க முன்வந்தேன்" எனப்புலம்புகிறான். தொல்காப்பியர் = இறையனார் நச்சினார்க்கினியர் கொடுக்கும் சிறப்புப் பாயிரத்தில் தொல்காப்பியரையும் அகத்தியரையும் சுருக்கமாகக் காண்போம்: "தேவரெல்லாருங்கூடித் தாம்சேர இருத்தலின் மேருத் தாழ்ந்து தென்றிசை யுயர்ந்தது, 'இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற்குரியர்' என்று அவரை வேண்டிக்கொள்ள அவரும் தென்றிசைக்கண் போதுகின்றவர்; 'கங்கையார் உழைச் சென்று காவிரியாரை வாங்கிக்கொண்டு பின்னர் யமதக்கினியாருழைச்சென்று அவர்மகனார் திரணதூமாக்கினியாரை வாங்கிக் கொண்டு புலத்தியனாருழைச்சென்று அவருடன்பிறந்த குமரியார் உலோப முத்திரையாரை அவர்கொடுப்ப நீர் ஏற்று இரீயிப்பெயர்ந்து; துவராபதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர்பதினெண்மரையும், பதின் எண்(குடி) கோடி வேளிருள்ளிட்டோரையும் அருவாளரையும் கொண்டுபோந்து; காடு கெடுத்து நாடாக்கி பொதியின்கண் வீற்றிருந்து இராவணனைக் காந்தருவத்தாற் பிணித்து, இராக்க தரை ஆண்டு, இயங்காமை விலக்கித் திரண தூமாக்கினி யாராகிய தொல்காப்பியனாரை நோக்கி 'நீசென்று குமரியாரைக் கொண்டு வருக' எனக்கூற அவரும் 'எம் பெருமாட்டியை எங்ஙனம் கொண்டு வருவல்' என்றார்க்கு 'முன்னாகப் பின்னாக நாற்கால் நீளம் அகலநின்று (பாதுகாப்புடன்) கொண்டு வருக' என; அவரும் அங்ஙனம் கொண்டு வருவழி; வைகைநீர்கடுகிக் குமரியாரை ஈர்த்துக்கொண்டுபோகத் தொல் காப்பியனார் கட்டளையிறந்து சென்று ஓர் வெதிர்கோலை முறித்துநீட்ட, அதுபற்றி யேறினார். 'அதுகுற்றம்' என்று அகத்தியனார், குமரியாரையும் தொல்காப்பியனாரையும் 'சுவர்க்கம் புகாப் பீர்' எனச்சபித்தார். 'யாங்கள் ஒருகுற்றமும் செய்யாதிருக்க; சபித்தமையால் எம் பெருமானும் சுவர்க்கம் புகாப்பீர்' என அவர் அகத்தினாரைச் சபித்தார். அதனால் வெகுண்ட அகத்தியனார், அதங்கோட்டாசிரியரை நோக்கி 'நீ தொல் காப்பியன் செய்த நூலைக் கேளற்க' என்றார்." இதில் இடம்பெறுவோரெல்லாம் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதை முதலில் உணர்ந்தாக வேண்டும். தேவர்= தமிழர் அல்லாத [அலெக்சாந்தன், செல்யுக்கஸ்நக்கந்தன் போன்றோரின் வழி] அந்நியர், அந்நியராற்பிறந்தோர் சேர்தல்= செல்குடி நிறுத்தல்; இந்தியாவிலேயே நிலைத்து வாழச்செய்தல்; சேர்ந்த இடம் உத்தரமேரூர்.. .. மேரு= உத்தரமேரூர் எனப்பட்ட உத்தமேரு.. .. தென்திசை= உத்தமேரூருக்குத் தெற்கே உள்ள பகுதிகளில் உள்ளோர் தேவர் முதலானோருடன் சேர்வதைக் கடுமையாக எதிர்த்தனர்; காரணம் தேவர்கள் கயவர்களாக, தெந்திசியின் சோழநாட்டுப் பெண்களை மதியாது நடந்து கொண்டதே. பெண்களை எப்படிப்பட்டோராக நடத்தினர் என்பதை இறையனார் களவியல் நூலின் பாயிரத்தில் காண்க.. .. அகத்தியனார்= விசுவாமித்திரர், கரவேல், கரிகால் என மூன்று அகத்தியர்கள் உள்ளனர். மூவரும் மட்டுமல்லாமல் அவர்களது மக்களும் நாடுகளும் தேவர்களால் கடுமையாகப் பாதிப்படைந்த போதிலும் தேவருடன் பரிவு காட்டினர்.. .. கங்கையார்= செங்குட்டுவனின் தந்தை; கங்கைப் பகுதி, நீரையும்; காவிரிப் பகுதி, நல்லியற்பாவையையும் கவர்ந்தவர் காவிரியார்= செங்குட்டுவனின் தாயும் கரிகாலின் தங்கையுமான நல்லியற்பாவை; காவிரிநாட்டுக்குரிய பெண்.. .. யமதக்கினியார்= செங்குட்டுவனின் தந்தையின் தந்தை; பரசுராமனின் தந்தை; அந்நியன் அலெக்சாந்தன் வசிட்டன்.. . யமதக்கினி மகன் திரணதூமாக்கினி= பரசுராமன் அக்னி இந்திரன் சினத்தால் அழிப்புவேலைகளில் ஈடுபட்டவன்.. .. . புலத்தியனார்= விதுரன் செழியன் இராவணன் பாண்டியன் அவருடன் பிறந்த குமரியார் உலோபமுத்திரை= விதுரனின் சகோதரி; கரவேல அகத்தியனால் கைப்பற்றப்பட்ட பெண்.. துவராபதி= பஞ்சாபின் குருத்துவாரா அல்லது வேங்கடத் திருப்பதி நிலங்கடந்த நெடிமுடியண்ணல்= வசிட்ட யமதக்கினியால் நாடுகடத்தப்பட்ட கரவேல் அகத்தியன் கிருஷ்ணன்.. .. அரசர் பதினெண்மர்= பதினெண் வேளிர்குடியினரின் தலைவர்கள் சிற்றரசர்கள் படைமுதலிகள் பதினெண்குடி வேளிர்= பதினெண் சிற்றரசர்களான படைமுதலின் படைவீரர்களும் குடிமக்களும் அருவாளர்= அறிவாளராக இருந்து அகத்திய விசுவாமித்திரர் சாபத்தால் அருவாளர் கோசர் கொலைகாரராக மாறியோர்.. காடுகெடுத்து நாடாக்கி குளம்தொட்டு வளம்பெருக்கிப் பொதியின்கண் வீற்றிருந்து இராவணனைக் காந்தருவத்தால் பிணித்து இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கியோர்= நின்றுபோன அந்நியநாட்டு வணிகத்தை ஊக்கிவிட்டு அந்நிய நாடுகளையும் சொர்கமாக்க அகத்திய கரவேல் கிருஷ்ணன் உதவியால் அகத்திய கரிகால் மேற்கொண்ட நடவடிக்கைகள்.. . இராவணன்= விதுரன் நகுஷன் செழியன் பாண்டியன் இராக்கதர்= செல்யுக்கஸ்நக்கந்தனின் கூட்டத்தர்; அலெக்சாந்த யமதக்கினியின் அடிமைப்படை; கடற்கொள்ளையர்.. . திரணதூமாக்கினியான தொல்காப்பியர்= அகத்தியர்களில் ஐந்திரத்தைச் சிதைத்துத் தொல்காப்பியமாக்கி அதனையும் சிதைத்து இறையனார் களவியலாக மாற்றியவர்; யமதக்கியின் மகன்; பரசுராமன்; செங்குட்டுவனின் தந்தை .. .. வைகைநீர்= பாண்டிய செழியனின் படைவீரர்கள் இராக்கதர்கள்.. .. எதிர்கோல்= வேளிர்படையின் சிறு பிரிவு சொர்க்கம்= மகதம் மற்றும் அந்நியநாடுகளும் திரிசங்குசொர்க்கமான வேங்கடத்திருப்பதியுமாம்.. .. அதங்கோட்டாசிரியர்= அவலோகி சந்திரகுப்தன் அல்லது விசுவாமித்திரர் தொல்காப்பியன் செய்தநூல்= சிதைக்கப்பட்ட தொல்காப்பியம் மற்றும் இறையனார் களவியல்.

Thursday, 24 October 2013

நம்பிக்கை=குருடு ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சன்

கரிகால்சோழன் கரிகால்சோழன் இலங்கையின் வங்கநாஸிகனுடன் போரிட்டு வென்று பன்னீராயிரம் சிங்களரைக் கொண்டுசென்று காவிரிக்குக் கரையெடுத்தான் என இலங்கை வரலாறு கூறுகிறது. ஒட்டக்கூத்தர் கரிகால்சோழனைப் "பொன்னிக் கரைகண்ட பூபதி" என விக்கிரமசோழன் உலாவில் குறிப்பிடுகிறார். இன்றைய ஆந்திரத்தின் வடக்கே இருந்த ரேநாட்டுச்சோழனான புண்ணிய குமாரனுடைய மேல்பாடு செப்பேடுகளிலும் கங்கைகொண்ட சோழனின் திருவாலங் காட்டுச் செப்பேடுகளிலும், வீரராசரேந்திரசோழனின் கன்னியாகுமரிக் கல்வெட்டிலும் கரிகால்சோழன் காவிரிக்குக் கரையெடுத்தகவல் இடம்பெற்றுள்ளது. கரையெடுத்த காலத்தை உணர்த்தும் ஒரு பழைய வெண்பா: "தொக்க கலியில் மூவாயிரத்துத் தொண்ணூற்றில் மிக்ககரி காலவேந் தனுந்தான் - பக்கம் அலைக்கும் புகழ்ப்பொன்னி யாறுகரை கண்டான் மலைக்கும் புயத்தானும் வந்து" என; கலியாண்டு 3090ல் கரிகால்சோழன் கரையெடுத்ததாகக் குறிப்பிடுகிறது. கபிலர் என்னும் புலவர் இயற்றியதாக் கருத்தப்படும் நமது தொன்மையையும் சிறப்பையும் குறிப்பிடும் புறநாநூறு- 201 : ".. நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி செம்புபுனைந் தியற்றிய சேண்நெடும் புரிசை உவரா ஈகைத் துவரை ஆண்டு நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே விறற்போர் அண்ணல் தாரணி யானைச் சேட்டிருங் கோவே ஆண்கட னுடைமையின் பாண்கட ணாற்றிய ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல் ... பொன்படு மால்வரைக் கிழவ வென்வேல் உடலுநர் உட்கும் தானைக் கெடலருங் குரைய நாடுகிழ வோயே" என; கபிலன்வாழ்ந்த காலத்தில் 49 வழிமுறை முடிந்து 50ஆவது தமிழனான வடபால்முனி அகத்தியன் கரவேலனின் 'தடவினுள்' (இருங்)கோ வேள் அரசனைக் காண்கிறான். கரவேலனே அகத்தியன் என்பதை அன்றை புவனத்தின் தலைநகரான புவனம் (இன்றைய புவனேஸ்வர்) அருகில் கரவேலனது உதகிரிமலையில் உள்ள அகத்தியர் குகைக் கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன. வழிமுறை என்பது நமது ஆண்டுக்கணக்கீட்டு வட்டத்தில் 60 ஆண்டுகளைக் குறிக்கும். இப்போது கலியாண்டு 5114 நடக்கின்றது. இதில் 3090 ஆண்டுகளைக் கழித்தால் கிடைப்பது 2024. எனவே கலி ஆண்டுக்கணக்கீட்டின்படி 2024 ஆண்டுகற்கு முன்னர் கரிகால்சோழனால் காவிரிக்குக் கரையெடுக்கப்பட்டுள்ளது. நடப்பில் உள்ள கிருத்துவ ஆண்டு 2013 கழித்தால் கிடைப்பது, கி.மு. 11. எனவே கி.மு. 11 கரிகால்சோழன் காவிரிக்குக் கரையெடுத்த ஆண்டாகும். மேலைநாட்டினர் செங்குட்டுவனைத்தான் கிருத்துவாகக் கொண்டனர். எனவே அப்போது செங்குட்டுவனுக்குப் 11 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். கிருத்துவ ஆண்டுக் கணக்கீடு துல்லியமானதா என்பதை அறிய இயலவில்லை. 5114 ஆண்டுக்கு மேற்பட்ட வரலாற்றைக்கொண்ட சிறப்புப்பெற்ற நம்மை உணராத எவனோ ஒரு பிராமணன்; வழிமுறை என்பதை; தலைமுறை என உரை செய்ததை ஏற்றுக்கொண்டு; தவளைகள் போலப் பிதற்றி; ல், ழ், ற், ன் ஆகிய மெய் யெழுத்துக்களைச் சூத்திர மெய் எழுத்துக்கள் எனக் கற்பித்ததை உணராமல்; அப்படியே ஏற்றுக்கொண்டதையும் காண்கிறோம். கரிகால்சோழனின் பட்டினத்தில் கலந்தினிது உறைந்த அயல் நாட்டினர்; சோனகர், சீனர், யவனர் எனப் பாடல்களில் காண்கிறோம். யவனருள் மூன்று பிரிவினர் இருந்தனர். அவர்களைஆரியர் மோரியர் அவுணர் எனப் பழந்தமிழ்ப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. இம்மூவருள் அவுணர் என்போரே இலங்கையின் சிங்களர். ஆரியர் என்போர் கொள்ளையராக நிலத்திலும் நீரிலும் இணையற்றுத் திகழ்ந்த செல்யுக்கஸ் நக்கந்தனின் கூட்டத்தராவர். அந்நியக் கொள்ளையரான கிரேக்க வணிகருள் அலெக்சாந்தனுக்குத் துணையாக நின்றவர்களே அவுணரும் ஆரியரும் மோரியரும். மோரியர் என்போர் அந்நிய வணிகரால், இங்கிருந்த பெண்களுடன் புணர்வு கொண்டதால் 1500 ஆண்டுகளாகப் பிறந்தோரின் வழிவந்தோராவர். சோனகர் என்போர் அரேபியராவர். இந்தச் சோனகரே தங்களுக்கெனத் தேர்வுசெய்த நமது சான்றோரின் வழிகாட்டுதலில் இசுலாமிய சமயத்தைத் தோற்றுவித்துக் கொண்டனர். அவர்களது நாநயம் போற்றத்தக்கதாக இருந்தது. வணிகத்தில் முதன்மையாகத் திகழ்ந்த சோனக- அரேபியருக்கு எதிராக வணிகத்தில் ஈடுபட்ட கொள்ளையரே அலெக்சாந்தனின் கிரேக்கர் கூட்டம். எனவே இங்கிருந்த மேலைத்தேயத்தவர் தங்களுக்கென ஒரு சமயத்தை உருவாக்க விழைந்தனர். அப்போது கிரேக்கம் மட்டுமல்லாமல் எகிப்து ரோம் முதலான நாடுகளும் செங்குட்டுவனுக்கும் கரிகால்சோழனுக்கும் அடிமைப் பட்டுக் கிடந்தன. சிறிது காலத்துக்குப் பிறகு அந்நாடுகளின் மக்கள் வணிகக் கொள்ளையரின் கொள்கைகளை எற்காமல் இசுலாமிய சமயத்துக்கு ஆதரவாக மாறிவிட்டதையும் காண்கிறோம். மேலைநாட்டு வணிகக் கொள்ளையருக்கு அஞ்சிய நமதுமக்களும் இங்கிருந்த மேலைத்தேயத்தவரும் பலநாடுகளுக்குச் சிதறி ஓடினர். அப்படி ஓடிய தமிழரும் இங்கிருந்த தமிழரும் தங்களுக்கெனத் தோற்றுவித்துக் கொண்டதே வைணவம் எனத் தெரிகிறது. வணவம் உருவாகும்வரை அமண நன்நெறிகளே கடைப்பிடிக்கப்பட்டன. அவற்றிலிருந்தே வைணவம் உருவானது. இறுதி அகத்தியனாக இருந்தவனே கரிகால்சோழன்.

Wednesday, 23 October 2013

நம்பிக்கை - குருடு ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சன் பழந்தமிழ்ப் பாடல்களின் அடுக்கம் வரிசைமாறியுள்ளது. திருமுருகாற்றுப்படை இயற்றப்பட்ட காலத்தை அறிய இயலவில்லை. அதேபோன்று கலித்தொகையும் பரிபாடலும் பிற்பட்ட காலத்தவையே. ஆயினும் நமது பார்வையில் பழந்தமிழ்ப் பாடல்களின் உதவியுடன் சில திருத்தங்களையும் மாற்றங்களையும் புகுத்திச் சிதைத்து வரலாற்றை மறைத்து; புகழ்பெற்ற சிலரைக் கடவுளர் நிலைக்கு உயர்த்தும் நோக்கத்துடன் மாற்றப்பட்டவையே திருமுருகாற்றுப்படை பரிபாடல் கலித்தொகை போன்றவை. பொதுவாகவே அனைத்துப் பழந்தமிழ்ப் பாடல்களும் வஜ்ஜிரநந்தி என்பாரின் காலத்தில் அன்றைய புலவர்களின் துணையுடன் ஒரு மாபெரும் காவியப் பெருங் கதையைப் பல மாற்றைங்களுக்கும் சிதைவுகளுக்கும் நீக்கங்களுக்கும் ஆட்படுத்தி வரலாற்றை மறைக்கும் நோக்கத்தோடும் புகழ்பெற்ற வரலாற்று மாந்தரைக் கடவுளர்நிலைக்கு உயர்த்தியும்; பழம்பெரும் இலக்கணத்தைச் சிதைத்துத் தொல்காப்பியம் என்னும் இலக்கணத்தை இயற்றி அதனைப் புகுத்தி; திணை துறை எனப் பகுத்தும் தொகுத்தும் சிதைத்துச் சிதறடிக்கப் பட்டவையே பதிப்பிக்கப்பட்ட பழந்தமிழ்ப் பாடல்கள். இவற்றில் பலவும் மூலத்தில் என்ன அல்லது எந்த வடிவில் எப்படி இருந்தன என்பது புதிராக்கப்பட்டுவிட்டது. 49 வழிமுறை அகத்தியர்களது கொள்கைகளைக் கொண்ட அகத்தியம் என்னும் நூலும் 50ஆவது அகத்தியரின் தலைமையில் பழந்தமிழ்ப் பாடல்களும் சிறப்புப்பெற்றிருந்தன. 5ஆம் நூற்றாண்டில்தான் அனைத்து நெறிகளும் ஏடுகளும் திரட்டப்பட்டு உலக அளவில் பலமாற்றங்களுக்குப்பின் அமயங்களை உருவாக்கும் முயற்சிகள் உருப்பெற்றன. அவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து நெறிகளும் அசீவகத்திலும் அமணத்திலும் இருந்த நெறிகளே. தீர்த்தங்கரர்கள் அப்போது இல்லை. ஆயினும் நீருடன் தொடர்புகொண்ட சில சடங்குகள் இருந்ததைப் பழந்தமிழ்ப் பாடல்கள் உணர்த்துகின்றன. அசீவக நெறியை மேம்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட அமணத்தையே அப்போது நாம் ஏற்றுள்ளோம், கிருத்துவத்தைப் பிறர் ஏற்றுக்கொண்டனர். கிருத்துவத்தின் தலைவர்களாகத் தேர்வுசெய்யப்பட்டோர்; மக்களுக்காகப் பாடுபட்ட மாபெரும் புகழ் படைத்தவர்களாகப் பழந்தமிழ்ப் பாடல்களில் இடம்பெற்றவர்கள். இச்செயல்களில் ஈடுபட்டோர் உலக அளவில் மேலான்மை பெற்றுப் போரற்ற உலகை உருவாக்க ஒற்றுமையுடன் பாடுபட்டவர்கள். புதிதாக உருவாக்கப்பட்ட கிருத்துவத்தின் தலைவன் வேற்றுநாட்டவன் என எவரும் அடையாளப்படுத்த விடாமல் தடுக்கவேண்டிய கட்டாயம் நேர்ந்தது. காரணம் கொள்கைகள் உயர்வானவை என்பதோடு அவர்கள் பிறநாடுகளிலும் தங்களது கொள்கைகளின் மேலான்மையை நிறுவிப் புகழ்பெற்றவர்கள். இந்நிலையில் அனைத்துவரலாற்றையும் கொண்ட சீரும் சிறப்பும் பெற்று விளங்கிய ஒரு பழந்தமிழ்ப் பெருங்கதையின் பாடல்களைச் சிதைக்க வேண்டிய நிலை உருவானது. அன்றைய பன்னாட்டு வணிக மையமாகத் திகழ்ந்த நம்நாடு தலைமைபெற்றிருந்தது. இடையறாத போர் கொலை கொள்ளைகள் நிறந்திருந்த உலகை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதை உணர்ந்த உலக நாடுகளின் வணிக முகவர்கள் கூடி அமைதியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தனர். அமைதிக்காக உருவாக்கப்பட்ட்வையே அமையங்கள். அமயங்களை உருவாக்கியவர்களால் சிதைக்கப்பட்டதே பெருங்கதை எனத் தமிழ் மொழியில் பிரகிருத எழுத்தில் இருந்த நூல். பிரகத் கதா எனப் பெயர்பெற்ற அதனை குணாட்டியர் என்னும் அமணர் எழுதி முற்றிலும் அழிந்துவிட்டதாகச் சொல்கின்றனர். இந்தப் பிரகத்கதா நூலுக்குத் தமிழில் பெருங்கதை எனப் பெயரிட்டவர் திரு உ. வே. சாமிநாத ஐயர் ஆவார். கொங்குவேலர் என்பவரும் அதே பெயரில் ஒரு நூலை எழுதி அதன் முதற் காண்டமும் இறுதிக் காண்டமும் அழிந்துவிட்டதாகவும் பிறவற்றை உதணன் கதை அல்லது பெருங்கதை எனப் பெயரிட்டுப் பதிப்பித்து வெளியிட்ட உ. வே. சா ஐயர் குறிப்பிடுகிறார். குணாட்டியரின் பிரகத்கதா என்பது கபிலர் என்னும் பிற்காலப் புலவரால் மாற்றி எழுதப்பட்ட குறுஞ்சிப்பாட்டின் அடிக்குறிப்பில் இடம்பெற்ற ஆரியவரசன் பிரகத்தன் எனப்பட்ட கொள்ளையர் தலைவன் செல்யுக்கஸ்நக்கந்தனை அடிப்படையாகக் கொண்டது. அவனது உதவிபெற்றே அலெக்சாந்தன் என்னும் ஒரு கொள்ளையர் பிரிவினர் நமது நாட்டுக்குள் புகுந்தனர். பிரகத்தனிடமிருந்தே முழுமையான உலக வரலாறு தொடங்குவதாக உணரப்பட்டது. அன்றைய நிலையில் பிரகத்தனே நீரிலும் நிலத்திலும் புகழ்பெற்ற கொள்ளையன். நமது பழந்தமிழ்ப்பாடல்களில் இடம்பெற்றுக் கடவுளர் நிலைக்கு உயர்த்தப்பட்ட சிலரைக் காண்போம். குண்டலகேசியில் ஒரு பாடலில் கரிகால்சோழன் குறித்து: "முன்றான் பெருமைக்க ணின்றான்முடி வெய்து காரும் நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான்;தனக்கென்று ஒன்றானு மில்லான்; பிறர்க்கே யருதிக்கு ழந்தான் அன்றே; யிறைவனவன்றாள் சரணாங்க ளன்றே" எனக் குறிப்பிடுகிறது. பத்துப்பாட்டில் பட்டினப்பாலை- கரிகால்சோழன் குறித்து: ".. . திருத் துஞ்சும் தின் காப்பின் ......... கிளை களித்துப் பகை பேணாது .. .. கொலை கடிந்தும் களவு நீக்கியும் அமரர்ப் பேணியும் ஆவுதி அருந்தியும் நல் ஆ னொடு பகடு ஓம்பியும் நான் மறையோர் புகழ் ஓம்பியும் .. . கொடுமேழி நசைஉழவர் நெடுநுகத்துப் பகல்போல நடுவு நின்ற நல் நெஞ்சினோர் வடு அஞ்சி வாய் மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப நாடி கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்ப தூஉம் மிகை படாது .. . பற்பல மொழி பேசுவோர் உறையும் பட்டினம் .. மொழி பல பெருகிய பழிதீர் தேஎயத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்தினிது உறையும் முட்டாச் சிறப்பின் பட்டினம் .. ." என்றெல்லாம் அவனது நாட்டையும் நகரத்தையும் மக்களையும் குறிப்பிடுகிறது. மாபாரதப்போரில் செங்குட்டுவ-அர்ச்சுனன்; கடல்போன்ற வேளிர் அறிவாளர் சேனைகளுடன் தருமன் கரிகாலனின் தலைமையில் கண்ணன் கரவேலனின் வழிகாட்டுதலுடன் சென்றான். திருமால் கரிகால் குறித்த பரிபாடலில் உள்ள முக்கியமான வரலாற்றுக் குறிப்புக்களைக் கொண்ட அடிகள்: 1-6: "ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை தீயுமிழ் திறலொடு முடிமிசை அணவர மாயுடை மலர்மார்பின் மைஇல்வால் வளைமேனிச் சேய்உயர் பணைமிசை எழில்வேழம் ஏந்திய வாய்வாங்கும் வளைநாஞ்சில் ஒருகுழை ஒருவனை எறிமலர் சினைஇய கண்ணை .. ." எனக் குறிப்பிடுகிறது. மூன்றாம் பாடலில் நால்வகை நிலங்களுக்கேற்பத் தனது நிலைகளை 'நால்வகையாக செங்கட்காரி, கருங்கண் வெள்ளை, பொங்கட் பச்சை, பைங்கண் மால்' எனத்தோற்றங்கொண்டு; ' கூந்தல் எரிசினம்' கொன்றதும்; 'திரிந்து அயர்ந்து அகன்றோடி நின்அஞ்சி கடற்பாய்ந்த பிணிநெகிழ்பு அவிழ்தண்தார் அன்னவர் படஅல்லா அவுணர்க்கும் முதல்வன்' எனத் தன்னை நிநாட்டியதும்; 'அறம் கோலாக இருநிலழ் படாமை மூஏழ் உலகமும் ஒருநிழல் ஆக்கிய' தகவல்களும்; 'மாநிலம் இயலா முதல்முறை அமையத்து நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய வாய்மொழி (கரவேலன்)மகனொடு மலர்ந்த தாமரைப் பொகுட்டுநின் நேமி நிழலே' என வாழ்ந்த கரிகாலனைக் குறிப்பிடுவதும் இடம்பெற்றுள்ளன. முருகன் செங்குட்டுவனின் தலைமையில் அனைத்துப்படைகளும் இயங்கின என்பதையும் காண்கிறோம். செங்குட்டுவன் குறித்த எட்டாம் பாடலில் இருபெரும் பிரிவாக எதிரும் புதிருமாக இருந்த அனைவரும் செங்குட்டுவனின் சொந்தங்களே. இந்நிலையை மாபாரதமும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இதனைப் புறநாநூறு- 294: "வெண்குடை மதியம் மேல்நின்று திகழ்தரக் கண்கூடு இறுத்த கடல்மருள் பாசரைக் குமரிப் படைதழீஇய கூற்றுவினை ஆடவர் தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து இறையும் பெயரும் தோற்றி 'நுமருள் நால்முறை தபுத்தீர் வம்மின் ஈங்கு'எனப் போர்மலைந்து ஒருசிறை நிற்ப யாவரும் அரவுமிழ் மணியின் குறுகார் நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே”என அர்ச்சுனனின் மனைவி மற்றும் தாயையைக் கண்ணன்- காரவேலன் அமைதிப்படுத்தக் காண்கறோம். செங்குட்டுவன் முருகனால்; 'யாவரும் பிறரும் அமரரும் அவுணரும் மேஅரு முதுமொழி விழுத்தவ முதல்வரும் பற்றாகின்று நின்காரணமாக; பரங்குன்று இமையக் குன்றம் நிகர்க்கும்' எனக் குறிப்பிடுவதையும்; இமையக்குன்றைவிட மேம்பட்டது என வேங்கட மலையைக் குறிப்பிடுவதையும்; மீண்டும் செங்குட்டுவனுக்கும் கரிகாலனுக்கும் சோழர்குடியினருக்கும் கலப்பிரருக்கும் எதிராக அலெக்சாந்தனின் கொள்ளையர் பூசலிட்டதை: 'நின்யானை முழக்கம் கேட்ட கதியிற்றே காரின் குரல் குரல்கேட்ட கோழி குன்றதிரக் கூவ கூவ மதநனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப எதிகுதிர் ஆகின்று அதிர்பு' எனவும்; 'குன்றத்தான் கூடல் வரவு' காரணமாக அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டதையும்; செங்குட்டுவனின் கல்மலைச் சொற்பொலிவு குறித்து: 'கூடல் மன்றல் கலந்த மணிமுரசின் ஆர்ப்பெழ காலொடு மயங்கிய கலிழ் கடலென மால்கடல் குடிக்கும் மழைக் குரலென ஏறதிர்க்கும் இந்திரன் இரும் உருமென மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும்நின் குன்றம் குமுறிய உரை' எனவும்; 'கடம்பமர் செல்வன் கடிநகர் பேண மறுமிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த நெறிநீர் அருவி அசும்புறு செல்வம் மண்பரிய வானம் வரப்பினும் மன்னுகமா தன்பரங் குன்றம் நினக்கு' எனவும் குறிப்பிடக் காண்கிறோம். மீண்டும் பிராமண வடவரின் தொல்லையால் தென்னகத்தில் பூசல் நிகழ்ந்ததை; 'மைஇருநூற்று இமைஉண்கண் மான்மறிதோள் மணந்தஞான்று'" நூற்றுவர்கண்ணர் என்போரின் தேவசேனையை அடக்கிச் செங்குட்டுவன் கைப் பற்றியதைத் தேவசேனாவை மணந்ததாக மாற்றிப் பெண்ணாகவும் உருவகித்தனர். மாபாரதம்- ஆதிபருவம்: " ஞானமுள்ள புரூரவன்(வேலவன்), இளை(கரிகாலனுக்கு இளையவள்)க்குப்பிறந்தான்; தாயும், தந்தையுமாக இளையே இருந்தாள் என நாம் கேள்விப்பட்டுள்ளோம். (தன்னை ஏமாற்றிக் கெடுத்த அந்நியனை ஒதுக்கி விட்டாள்) மாகடலிலுள்ள பதிமூன்றுதீவுகளை ஆண்டுவந்தான்(பாரதம் மற்றும் அதனைச் சேர்ந்த இலங்கை முதலான தீவுகளுக்கும் படைத்தளபதியாக இருந்தான்). இவனைச் சுற்றியுள்ளோரும் அ மானுஸ்ய மானவர்கள்(மனிதர்களல்ல). மிகு புகழ்பெற்றவன். தனதுபராக்கிரமத்தில் மயங்கி ஆணவத்தில் பிராமணர்க்கெதிராக மோதலில் ஈடுபட்டான். பிராமணர் (பரசுராமன், செழியன் முதலானோர்) வலிமையாக எதிர்த்தபோதிலும் ஆபரனங்களை(படைகளை)க் கைப்பற்றிக்கொண்டான். [இந்திராதி தேவர்களின் (தனது தந்தை மற்றும் ஏழுவள்ளல்)படையுடன் போரிட்டுத் தேவ(ர்)சேனையைக் கைப்பற்றினான்] பிரம்மலோக சனத்குமாரர்(?) வந்து கண்டித்தார். அதனைப் புரூரவன் பொருட்படுத்தவில்லை" என்கிறது. ரிக்வேதம்: சுதாசனின்- தசாரஞ்னயுத்தம் அல்லது பத்துமன்னர்களுடனான யுத்தம். எனவும் குறிப்பிடுவர்; 7 ஆவது மண்டலத்தில் இராவண- செழியனுடனான போர் குறித்த தகவல்கள் இடம்பெறுகின்றன. இதில் கரிகாலன்- சுதாசனை எதிர்த்துப் போரிட்ட 30 பெயர்களைத் தனக்கே உரிய மரபுப்படி அடையாளப்படுத்த முடியாதவகையில் குறிப்பிடுகிறது. இந்த மாபெரும் வெற்றியாலும் மற்றொரு மாபாரதப்போர் வெற்றியாலும்; சுதாசன்- கரிகால்சோழனை ரிக்வேதம் 27 இடங்களில் புகழ்நு பாடுகிறது. போர்ப்படையினர் (கரவேலன் கண்ணனின் கைக்கொள் பாசப் படையினர்) நீரோடு ஒப்பிடப்பட்டுள்ளனர். “சுதாசனின் குதிரையான குசிகாசை அனுகுங்கள், அவனைச் செயல்படத் தூண்டுங்கள், ராசாவுக்காக செல்வங்களைப் பெற்றுத் தருவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அவனை அவிழ்த்து விடுங்கள்; ஏனெனில் தேவர்களின் மன்னனான அவன் கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும் விருத்திரனைத் துவம்சம் செய்தான். ஆகவே பூமியின் மிகச்சிறந்த பிராந்தியங்களில் அவனை வழிபட சுதாசனை அனுமதியுங்கள்” எனக்குறிப்பிடுகிறது. இதில் தெற்குத்திசை ஏன் இடம்பெறவில்லை?!? இதில் குசிகாஸ் என்பது சுதாசன்- கரிகால்சோழனின் தங்கைமகனான செங்குட்டுவ- வேலவனே. இவர்கள் இருவரும் தெற்குத் திசையை நீக்கிப் பிற மூன்று திசைகளிலும் போரிட்டு அனைவரையும் வென்றனர் என்பதே நமது குறிப்புகளுக்கு சான்றாக விளங்குகின்றது. "குஸிகாஸ்" என்பதை குதிரை என முருகன்- சேய்- வேலவன்- செவ்வே(ள்)ல் குறித்ததே. அதனை உறுதி செய்யும் விதமாகத் தொல்காப்பியத்தில்- பொருள் 563: " சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் மாயிருந் தூவி மயில் அலங் கடையே..... குதிரையுள் ஆணினை சேவல் என்றலும்....." என்னும் அடிகள் சேவல் கொடியோனான செவ்வே(ள்)ல் வேலவன் இடம்பெற்றுள்ளது நோக்கத்தக்கது. தமிழறியாத வடமொழிக்குச் சென்ற தமிழர் வரலாறு மீண்டும் தமிழுக்கு வரும்போது புரிந்துகொள்வதில் தவறுகள் எளிதில் நேர்கின்றன; அவற்றுள்ளும் புராணமொழியில் உள்ளவற்றை அறியாதவர்கள் மொழி மாற்றம் செய்யும்போது குழப்பமடைந்து அப்படியே எழுதிவிடுகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. வேலவன் - செவ்வேல் குறித்த பரிபாடல் - பரி என்பது குதிரைதயையும் குறிப்பதும் நோக்கத்தக்கது. செங்குட்டுவனால் வதைப்பட்ட விருத்திரன் யார்? நாயகன்-விநாயகன், ஆழம்-வியாழம், தவ்வை-விதவ்வை போன்று- ருத்திரன்= சுரர்களின் அல்லது எதிரிகளின், அழிப்போரின் தலைவன்- விருத்திரன் என பொருள்படும்?) பிராமணீய, அமண இலக்கியங்களில் தங்களது எதிரிகளைச் சூத்திரர்களகவும்; ஆதரவளிப்போரை இந்திரனின் தேவர்களாகவும் குறிப்பிடுவர். தமிழர்களனைவரும் அசுரர்களக, தாசர்களக, தஸ்யுக்களாகக் குறிக்கப்படுவர். தனிநபர் இழைக்கும் குற்றம் அவனது இனம் முழுதும் இழைத்த குற்றமாகக் கருதப்படும், ஒரு இனம் இழைக்கும் குற்றம் அந்த இனத்தின் தலைவன் இழைத்ததாகக் கருதப்படும். பல துயரங்களுக்கு ஆளான ஒரு பெண்ணும்; அவளது மகன் என ஒருவனுக்குச் சொந்தமான ஏழு மலைப்பகுதிகளில் வெவ்வேறான பெயர்களில் குறிப்பிடப்படுகிறான். அவனைப் பரணரின் குறிஞ்சித்திணைப் பாடல் அகநாநூறு- 152: "நெஞ்சுநடுங் கரும்படர் தீர வந்து குன்றுழை நண்ணிய சீரூர் ஆங்கண் செலீஇய பெயர்வோள் வணர்சுரி ஐம்பால் நுண்கோல் அகவுநர்ப் புரந்த பேரிசைச் சினங்கெழு தானைத் தித்தன் வெளியன் இரங்குநீர்ப் பரப்பின் கானலம் பெருந்துறைத் தனம்தரு நன்கலம் சிதையத் தாக்கும் சிறுவெள் இறவின் குப்பை அன்ன உறுபகை தரூஉம் மொய்ம்மூசு பிண்டன் முனைமுரண் உடையக் கடந்த வென்வேல் இசைநல் ஈகைக் களிறுவீசு வண்மகிழ்ப் பாரத்துத் தலைவன் நார நன்னன் ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பிற் களிமயில் கலாவத் தன்ன தோளே; - வல்வில் இளையர் பெருமகன் நள்ளி சோலை அடுக்கத்துச் சுரும்புண விரிந்த கடவுற் காந்த ளுள்ளும் பலவுடன் இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோற்கு சாலவிழ் நெடுங்குழி நிறைய வீசும் மாஅல் யானை ஆஅய் கானத்துத் தலையாற்று நிலைஇய சேய்உயர் பிறங்கல் வேயமைக் கண்ணிடை புரைஇச் சேய ஆயினும் நடுங்குதுயர் தருமே" எனக் குறிப்பிடுகிறது. பாடலின் தொடக்கத்தில் உள்ள பெண்ணைக் குறித்து எவரும் ஆய்வுசெய்ததாகத் தெரியவில்லை. மகனின் ஈகைத்தன்மைகளையும் வீரத்தையும் இயல்புகளையும் மட்டுமே விவரித்துச் செல்லும் பலரது உரைகளில்; தாய்குறித்த தகவல்களை ஒதுக்கிவிடுகின்றனர்; அவனது தந்தையும் இடம் பெறும் பாடல்களில் உள்ள தகவல்களை விளக்காமல் மறைத்து மழுப்பிவிடுகின்றனர். அவனது தந்தைக்கும் பல பெயர்கள் உண்டு. மேற்கண்ட- தசாரஞ்னயுத்தம் அல்லது பத்து மன்னர்களுடனான இராமாயணப் போரில் மூன்று இனக்குழுக்கள் உள்ளன. அவை பிருகுக்களான பரசுராம பார்கவபிராமணர், திருத்சுக்கள் மற்றும் பரதர்களான பிற கரிகால்சோழன் இனத்தினர். இதில் 'வெற்றிபெற்றவர்களே பரதர்கள்' எனவும்; 'அவர்களது பெயராலேயே இந்த நிலப்பகுதி பரதகண்டம் எனப்பட்டது' எனவும் குறிப்பிடுகிறது. மாபாரதம் பரதர்களை சகுந்தலை, துஸ்யந்தன் ஆகியோரின் வழித்தோன்றலான ஒரு மகனைக் குறிப்பிடுகிறது. பாகவதம் அதனை உறுதிப்படுத்துகிறது. “ஸ்வயம்புவின் மகனான மனுவுக்கு பிரியவிரதன் என்ற மகன் இருந்தான், அவனுடைய மகன் ஆக்னிபுத்திரன்; அவனுடைய மகன் நாபி, அவனுடைய மகன் ரிஸபன், அவனுக்கு நூறு புதல்வர்கள்; அனைவரும் வேதம் பயின்றனர், அவர்களில் (கரிகால்சோழன்) நாராயணனுக்கு தன்னை அர்ப்பனித்துக் கொண்ட பரதனே மூத்தவன், அவனுடைய பெயராலேயே இந்த அற்புதமான நாடு பாரதம் என அழைக்கப்படுகிறது.” எனக் குறிப்பிடுகிறது. இதனையே மேற்கண்ட : ".. .பாரத்துத் தலைவன் நார நன்னன் ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பிற் களிமயில் கலாவத் தன்ன தோளே; -.. ." அடிகளில் உள்ள நார நன்னன் என்பதும் உணர்த்துகின்றது. எனவே செங்குட்டுவனும் கரிகால்சோழனும் கரவேலனும்; அவர்களுக்கு எதிரிகளான இராவணன் மற்றும் துர்யோதன பரசுராமாதியரும் பழந்தமிழ்ப்பாடல்களில் மட்டுமல்லாது பிற வேத இதிகாச புராணங்களிலும் பலபெயர்களில் இடம்பெற்று அடையாளப்படுத்த இயலாதவர்களாக உள்ளனர் எனக் காண்கிறோம். நமது இலக்கியங்கள் அடையாளப்படுத்துவோரை உணர்ந்துகொண்டால் வரலாற்றைத் தெளிவாக உணர முடியும்; முடியாதோக்கு வேத, இதிகாச, வடமொழி இலக்கிய புராணங்களும் உணர்த்தத் தயாராக உள்ளன செந்தமிழ் முருகனின் வரலாற்றைச் சிலப்பதிகாரம் பரிபாடல் முருகாற்றுப்படை கலித்தொகை போன்றவற்றிலிருந்து பிரித்துப் புராணமாக்கி, வடமொழியில் மாற்றப்படதே குமாரசம்பவம். சிலம்பில்; கண்ணகிக்கதை புகுத்தப்பட்ட ஒன்று. மலைநாடன் செங்கோட்டு ஐயன்-சிலம்பன் செங் கோடனின் வரலாற்றை ஆய்வுசெய்த மேலைநாட்டினர்; தங்களுக்கு இசைவான கருத்துக்களைக்கண்டு திகைத்திருக்க வேண்டும். இதனால் அவனது தந்தையை மறைத்து; ஆங்கிலநூல்களில் செங்கோடனின் பிறப்பை இழிவுபடுத்துவதைப் பிராமணர் ஊக்கப்படுத்தினர். பாவையின் மகன் செங்குட்டுவன்; வஞ்சிக் கோன்; திருமா வின் மகள் ஆதி மருதியின் கணவன் ஆட்டனத்தி, உருத்திர சூரர்க்கு எதிரி, அஞ்சன ஏயன், அனுமன், தழும்பன், நல்லியற்கோடன், நன்னன்சேஎய் நன்னன், முருகன், புரூரவன், குசிகாஸ், அங்கி, சேஎய், செவ்வாய், கந்தன், செவ்வேல், செங்குந்தன், செங்கோடன் எனப் பல பெயர்களில் குறிக்கப்பட்டான். வடமொழியில் கந்த புராணத்தில் தேவ காண்டம் அத். 6 மற்றும் தக்ககாண்டம் அத். 6,7ல்; பாவையைக் காதலித்து; திருமண-கன்யாதானத்தின்போது ஏமாற்றி ஓடிவிட்ட செங்குட்டுவனின் தந்தையின் நடத்தைகண்டு; தக்கன்(இளஞ்சேட்சென்னி) தவிப்பதைக்காணலாம். தக்கனின் யாகம் குறித்து அகநாநூறு- 13, புறநாநூறு- 43 போன்றவை தெளிவாக உணர்த்துகின்றன. அனைத்து வடமொழி நூல்களிலும் அடித்தளமாக; பிரளய மாற்றமாகச் சிறுசிறு திருத்தங்களுடன் இவை இடம்பெற்றுள்ளன. சிலப்பதிகாரம்: “ஆறிரு மதியினும் காருகர் அடிப்பயின்று, ஐந்து கேள்வியும் அமைந்தோன் .. ." "வஞ்சினம் சாற்றிய மாபெரும் பத்தினி, "அஞ்சில் ஓதி அறிக"எனப் பெயர்ந்து.."எனவும்; குறிஞ்சிப்பாட்டில் ஆரியவரசன் பிரகத்தனுக்குக் கரிகால் சொன்னதாக: " ..பெருந்தகை"அம்சில் ஓதி அசைவல்" எனக் கபிலர் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கன. கண்ணகி; செழியனின் அவையில்; கணவன் கள்வனல்லன் என நிறுவி, அறிவுரையும் படிப்பினையும் உரைக்க; தவறை உணர்ந்தவுடன் செழியன் இறக்கவில்லை. 'ஐந்தில் ஓதி அறிக' என அறிவுறுத்தி எச்சரித்து; காருகரான பஞ்ச அங்க கணிதத்தில் சிறந்த; கைக்கொள் பாசபடை- தொல் அறிவாளர் வேளிர்படையினரால் பாடம் புகட்டப்படும் என உணர்த்துவதும்; அகத்தியமும், ஐந்திரமும், பயின்ற பாவையின் கூற்றே. அமணரின்; தொழிலை அடிப்படையாகக் கொண்ட பகுப்புமுறைக்கு மாறாக; அசீவகத்தில் (கரவேல்) குந்தகுந்தாச்சாரியும், உமாவும்; உணர்வு, அறிவு அடிப்படையில் உயிர்களை ஆறு பிரிவாக்கியதையும் காண்கிறோம். தொல்காப்பிய மரபியலிலும் இதுவே உள்ளது. மேலும் பரணரின் புறநாநூறு- 341ம் உறுதிப்படுத்துகிறது. இதனாலேயே; மனு நீதியில் பெண்களுக்குக் கல்விபயிலும் உரிமை தடைசெய்யப்பட்டது. 'ஐ-இருநூற்று மெய்ந்நயனத் தவன்மகள் மலர் உண்கண்' - என ஆயிரம் குடியரசுகளை வடிவமைத்துத் தலைமை ஏற்று நடத்திய கரிகாலனின் மகளைச் செங்குட்டுவன் மணந்த தகவல் குறிப்பிடப்படுகிறது. திருமால் குறித்த பரிபாடல் 13: 'ஞாயிரு: பருவம் வாய்த்தலின் இருவிசும்பு அணிந்த இருவேறு மண்டிலத்து இலக்கம் போல நேமியும் வளையும் ஏந்திய' கையினனாகக் குறிப்பிடப்படுவதைக் காண்கிறோம். 'மின்அவிர் சுடர்மணி ஆயிரம் விரித்த அறிதுயிலோன்' திருமால் கரிகாலன்; 15ம் பாடலில் தமிழ்வளர்த்த புலவர்கள் வாழ்ந்த குன்றுகள் பல எனினும் அவற்றுள் மிகச்சிறந்ததாகத் தனது தாய்மாமன் மகன் கரவேலனுடன் இணைந்து; 'வேறுவேறு உருவின் ஒருதொழில் இருவர்த் தாங்கும் நீள்நிலை ஓங்கிருங் குன்றம்' என வேங்கடம் விளங்கியதைக் காண்கிறோம். வேங்கடக்குன்றம் ஏறுவது எளிதல்ல எனினும் மால் இருங்குன்றம் அடைதற்கு எளிது எனக்குறிப்பிடுவதையும் காண்கிறோம். "ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு லார்கோமான் இந்திரனே சாலும் கரி" - திருக்குறள். புறநாநூறு- 228: அய்யூர் முடவனார்; கிள்ளிவளவன் குறித்து: "கலஞ்செய் கோவே! கலஞ்செய் கோவே! இருள்தினிந் தன்ன குரூஉதிறள் பரூஉப்புகை அகலிரு விசும்பின் ஊன்றுஞ் சூளை நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே! அளியை நீயே; யாங்கா குவைகொல்? நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப் புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந் தன்ன சேண்விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன் கொடிநுடங்கு யானை நெடுமா வளவன் தேவர் உலகம் எய்தினன்; ஆதலின் அன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழி வனைதல் வேட்டனை ஆயின் எனையதூஉம் இருநிலம் திகிரியாப் பெருமலை மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே?" இந்தப் பாடலுக்குச் சரியான பொருளையொ வரலாற்றையோ எவராவது வெளிப்படுத்தியுள்ளனரா? குறிப்பில் கிள்ளிவளவன் எனவும் பாடலில் நெடுமாவளவன் எனவும் உள்ளது; கரிகால் வளவனைப் பல பெயர்களில் குறிப்பிடக் காரணம்; எப்படியாவது வரலாற்றை மறைத்துவிட வேண்டும் என்பதே. தனது சிறப்புமிக்க படைகள் அனைத்தையும் திரட்டி; சூரியன் போன்ற அவன் படைகளைப் பரப்பி உலைகையே தன்வசப் படுத்துவது போல இந்திரனின் தேவருலகின்மீது போர்தொடுக்கச் சென்றுள்ளான். ஈமத்தாழி செய்வோனே; உன்னைப் பார்த்தால் வருத்தமாக உள்ளது. கரிகால்வளவனாலும் அவனது பெரும்படையினராலும் போரில் இறப்போர்க்கு ஈமத்தாழி செய்துமுடிக்க உன்னால் முடியுமோ? அதுவும் "இருநிலம் திகிரியாப் பெருமலை மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே?" என்பதே பொருள். இப்பாடலில் 'எனையதூஉம்' என உள்ள சீரின் எழுத்துக்கள் சரியாக அமையவில்லை எனத் தெரிகிறது. சிலரது (கரிகால் வளவன் இறந்துவிட்டான் எனும்) உரையைக் காணும்போது புலவரின் வருத்தத்தைவிட நமது வருத்தம் அளவற்றதாகிறது. 17ல் கரிகாலனின் சோழர்குடியினர் வேள்வியில் நிகழ்ந்த பூசல்களால் நாட்டைநீங்கிக்காடுசேர்ந்ததை: 'வசை நீங்கிய வாய்மையால் வேள்வியால் திசை நாறிய குன்றமர்ந்து ஆண்டுஆண்டு ஆவி உண்ணும் அகில்கெழு கமழ்புகை வாய்வாய் மீபோய் உம்பர் இமைப்பு இறப்ப தேயா மண்டிலம் காணுமாறு இன்று' நிலவச் செய்த செங்குட்டுவனையும் காண்கிறோம். 18ம் பாடலில் சுராபாணத்தைப் பெருக்கிப் படைவீரர்களிடையேயும் மக்களிடையேயும் பூசலை விளைவித்த கொள்ளையர் சூரர் கூட்டத்தாரைத் தனது குன்றிலிருந்து கடல் எல்லைவரை துரத்திய செங்குட்டுவன் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 19ம் பாடலில்; 'அருமுனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சிமன் இருநிலத் தோரும் இயைகஎன ஈத்தநின் தண்பரங் குன்றத்து' அனைத்துப் புலவர்களும் சோழபாண்டியரும் கலந்து இயங்க வழிவகை செய்த செவ்வேல் செங்குட்டுவனைக் காணப் பாண்டியன் தனது மனைவியருடனும் பிற அனைவருடனும் வந்து பாடி வலம்வந்த தகவலும்; கலைகள் அனைத்தும் வளர்க்கப்பட்டதோடு வேள்வி குறித்துத் தெளிவான வழிமுறைகள் வகுக்கப்பட்டதும்; 68ம் அடியில் பல்லவனும் இடம்பெற்றதையும் காண்கிறோம். மேலும் மற்றுமோர் குன்றில் பூசலை நீக்கி அமைதி நிலவச்செய்ததை; 'எவ்வத்து ஒவ்வா மாமுதல் தடிந்து தெவ்வுக் குன்றத்துத் திருந்துவேல் அழுத்தி அவ்வரை உடைத்தோய்நீ இவ்வரை மருங்கில் கடம்மர் அணிநிலை' என இடம்பெற்றுப் பாடப்பட்டுள்ளது. அகநாநூறு-61ம் பாடலில் மாமூலனார் பல வரலாற்றுத்தகவல்களையும் கரவேலனையும் வேங்கடமலைப்பகுதியையும் குறித்த தகவல்களுடன் துயரத்தால் வருந்தும் 'நெடுவேள் ஆவிப் பொன்னுடை நெடுநகர்ப் பொதியன்ன' பெண்ணுக்காக; மழபுலம் வணக்கிய மாவண் கள்வர்கோமான் புல்லி கரவேலன் வேங்கடத்தைக் கைப்பற்றியபோதிலும் அங்கேயே இருந்துவிட மாட்டான் என ஆறுதல் மொழிவதைக் காண்கிறோம். இத்தகவல் விசுவாமித்திரரால் குடியமர்த்தப்பட்ட கரவேலன் மீண்டும் மகதத்தைக் கைப்பற்றி துயர்நீர்க்க மீண்டு வருவான் என அவனது மனைவிக்கு உரைப்பதாக உள்ளது. 70ம் பாடலில் காணப்படும் தகவல்கள்; செல்யூக்கஸ் நிக்கந்தனின் தூதன் மெகஸ்தனிஸ் குறிப்பிடும் "சம்பரன்(பிரகத்தன்) தானவனை 40ம் ஆண்டில் கண்டு கொன்றவன் இந்திரன்-இராமன்-கரிகால்சோழன்?" என்னும் தகவலோடு ஒப்பிடத்தக்கதாக உள்ளன; "வெண்வேற் கவுரியர் தொல்முது கோடி முழங்குஇரும் பௌவம் இறங்கும் முன்துறை வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம் போல ஒலியவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே" என இராமாயணக் காட்சியையும் காண்கிறோம். கம்பரின் இராமாயணத்தில்; "நாடிய பொருள்கை கூடும் ஞானமும் புகழு முண்டாம் வீடியல் வழிய தாக்கும் வேரியங் கமலை நோக்கும் நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை சூடிய சிலையி ராமன் தோள்வலி கூறு வோர்க்கே" என்னும் பாடலில்; "அரக்கர் சேனை நீறாகி அழிந்தது" எனக்கம்பர் கூற; "நீர் எதைச் சொன்னாலும் சொல்லிக்கொள்ளும்; அந்த ராட்சத சேனை எங்கள் சுவாமியின் நீறு பட்டுத்தான் அழிந்தது" என்று தில்லை மூவாயிர பிராமணருள் ஒருவர் திருப்திப்பட்டாராம். நான்காம் பாடலில் இத்திருநாட்டின் 'நடுவண் ஓங்கிய பலர்புகழ் குன்றினொடு' தோன்றி 'பாம்புபடி மதம் சாய்த்த' என எவரெவரோ பிற்காலத்தில் அமணத்தையும் பௌத்தத்தையும் நம்நாட்டிலும் மேலைத்தேய நாடுகளிலும் விரட்டியதைச் செங்குட்டுவன்மீது ஏற்றித் தாங்கள் தப்பிக்க முயன்றதையும் காண்கிறோம். சோதிடத்தில் செம்பாம்பு எனப் பௌத்தத்தையும்; கரும்பாம்பு என அமணத்தையும் குறிப்பிட்டு அவர்களை வீடு-நாடு அற்றோராக்கினர். செவ்வேள் குமரன் செங்குட்டுவன் குறித்த ஐந்தாம்பாடல் முதலாக: 'பாய்இரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்கு சேய்உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர்உழக்கி சூர்மா முதல் தடிந்து .. .. மாய அவுணர் மருங்கறத் தபுத்த' என கடற்கொள்ளையரை முற்றிலுமாக நீக்கிய தகவுலும்; அலெக்சாந்தனை ஆதி அந்தணன் எனக்குறிப்பிடவும் காண்கிறோம். நூற்றுக்கணக்கான இத்தகைய பாடல்கள் உள்ளதைப் பிண்ணர் காண்போம். எனவே அன்றைய செல்யுக்கஸ்நக்கந்தன் அனைத்துநாட்டு வணிகர்களையும் அச்சுறுத்தும் கொள்ளையனாகக் கடல் வழிகளிலும் வணிகப் பெருவழிகளில் ஆறலைகள்வராக இருந்ததையும்; அவர்களது துணையுடன் அலெக்சாந்தர்கள் நமது நாட்டின் வணிக மையத்தைக் கைப்பற்ற முயன்றதையும் காணத் தவறிவிட்டோம். உலக நாடுகளில் உள்ள அனைத்து இலக்கியங்களிலும் வேதங்களிலும்; நமது வேத இதிகாச புராணங்களிலும் வரலாறு சிதறிக்கிடப்பதையும்; ஏதேனும் ஒன்றிலிருந்து அனைத்து வரலாற்றையும் வெளிப்படுத்திவிடலாம் என எண்ணாது அனைத்தையும் ஆய்வுசெய்து வரிசைப்படுத்திதான் வரலாற்றை வெளிப்படுத்த முடியும் என்பதையும் உணர்ந்தாக வேண்டும். மாபாரதமும் இதனை: 1: 56-33: “இங்கிருப்பவைதான் எங்கும் இருக்கும்; இங்கில்லாதவை வேறு எங்குமே இருக்காது” எனும் வியாசனின் கூற்று; அனைவருக்கும் ஒருசவாலாக முன் நிற்கிறது. விடையும் அக்கூற்றிலேயே மறைந்துள்ளதையும்; சிதறிக்கிடக்கும் பழந் தமிழ்ப்பாடல்களுக்கும் பொருந்துவதையும்; இவற்றின் துணையுடன்; "மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்" எனத் தலைகீழாகத் தமிழிலிருந்து மாபாரதத்தை உருவாக்கியதை மறைத்துத் திருத்தினர். திருத்தப்பட்டதோடு மாபாரதம் அனைத்தையும் ஒருவரே எழுதவில்லை என்பதைப் பலரது கூற்றுக்களில் உணரலாம். இச்சவாலை ஏற்று; வரலாற்றை வெளிக்கொண்டுவர எந்தத் தமிழனும் முன்வரவில்லை. மாபாரத்தில்; 12ஆண்டு முடிந்து; ஒர்ஆண்டுமறைந்துவாழ்ந்ததாக மாற்றியதை எவரும் உணரவில்லை. என்ன நடந்தது? விடை இராமாயணத்தில் உள்ளது. நாட்டை ஒப்படைக்க மறுத்த இராவண பாண்டிய செழியன்; தென் இலங்கை சென்று மறைந்து வாழ்ந்ததோடு; சோழர் ஒப்படைத்த; நாட்டை ஆளும் தகுதிக்கான ஆரத்தை- சீதையை மறைத்து வைத்தான். வேங்கடத்திருப்பதியிலிருந்து இலங்கை செல்வது எளிதல்ல. பருவமாற்றத்தால்; மழைக்காலத்தில் வனப்பகுதிகளிலும் சேரலவனப்பகுதியிலும் குமரிப்படை உதவியின்றி, கடல்சூழ்ந்த இலங்கையை அடைவதும் எளிதல்ல. 2000 ஆண்டுகற்கு முன் கரிகால்சோழனாலும் செங்குட்டுவனாலும் வாழவைக்கப்பட்டோரால்தான் இன்று தமிழர்கள் நெறுக்கப்படுகிறார்கள். கரிகால்சோழனும் செங்குட்டுவனும் என்ன செய்தனர் என்பதைப் பத்துப்பட்டுக்கள் மிகநீண்ட பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை சிலப்பதிகாரம் போன்றவற்றிலும் விரிவாகக் காணலாம்: ".. .வடிமணிப்புரொவியொடு வடவர்வீழ .. முனைகெடச்சென்று.. . அருங்கடிவரைப்பின் ஊர்கவின் அழியப் பெரும்பாழ்செய்தும் அமையான்;மருங்குஅற; மலை அகழ்குவனே கடல்தூர்க்குவனே வான்வீழ்க்குவனே வளிமாற்றுவன் என; தான்முன்னிய துறைபோகலின்; பல் ஒளியர் பணிபு ஒடுங்க தொல் அறிவாளர் தொழில் கேட்ப வடவர் வாட குடவர் கூம்ப தென்னவன் திறல்கெடச் சீறி; மன்னர்; .. . மாத்தானை மறமொய்ம்பின் செங்கண்ணால் செயிர்த்துநோக்கி; புன்பொதுவர் பொலிவுபொன்ற இருங்கோவேள் மருங்குசாய காடுகொன்று நாடாக்கி குளம்தொட்டு வளம்பெருக்கி .. ..கோயிலொடு குடிநிறீ இ .. . நடுவு நின்ற நல் நெஞ்சினோர் வடு அஞ்சி வாய் மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப நாடி கொள்வ தூஉம் மிகை கொளாது கொடுப்ப தூஉம் குறை படாது .. . பற்பல மொழிபேசுவோர் உறையும் பட்டினம். .. மொழிபல பெருகிய பழிதீர் தேஎயத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்துஇனிது உறையும் (கலப்பிரர்) முட்டாச் சிறப்பின் பட்டினம். .." என அனைவரையும் அனைத்தையும் மாற்றி; கலப்பிரர் குடியரசைத் தோற்றுவித்து; இந்திர விழாக்கண்ட திருமாவளவன் கரிகால்சோழனான தமிழனை மறந்ததாலேயே அவனால் குடியமர்த்தப்பட்ட வடுகர், மோரியர், குறும்பர், பிராமணர், அந்தர ஆந்தரர், கருநடர், ஒளியர், சிங்கள இலங்கையர் என அனைவரையும் ஒற்றுமையுடன் அந்நிய கிரேக்க ரோம எகிப்திய அடிமையர் என அனைவரிடமிருந்தும் காத்து ஒற்றுைப்படுத்தியதைக் காண்கிறோம். வாழவைத்த தமிழினத்தின்மீதுதானே இன்று அனைவரும் பாய்கின்றனர். இந்தியாவுக்குள் எங்கிருந்து ஒற்றுமை வளரும். நம்மால் வாழவைக்கப்பட்டோர்தானே நம்மை நெறுக்குகின்றனர். சிலப்பதிகாரத்தில் குந்தி- கவுந்தி அடிகள்- பெண் துறவி: "வானம் பொய்யாது; வளம்பிளைப்பு அறியாது; நீர்நில வேந்தன் கொற்றம் சிதையாது; பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு;என்னும் அத்தகு நல்லுரை அறியா யோநீ?" தவத்தோர் அடைக்கலம் தான்சிறிது ஆயினும் மிகப்பேர் இன்பம் தரும்;அது கேளாய்; காவிரிப் படப்பைப் பட்டினம்"......................என சோழநாட்டுப் பெண்டிர் புகழப்படுகின்றனர். மேலும் சிலப்பதிகாரம்: "வேயா மாடமும் வியன்கல இருக்கையும் மான்கண் காலதர மாலிகை இடங்களும் கயவாய் மருங்கின் கான்போர் தடுக்கும் பயனற அறியா யவணர் இருக்கையும் கலந்தரு திருவில் புலம்பெயர் மாக்கள் கலந்திருந்து உறையும் இலங்குநீர் வளர்ப்பும்" நிரைநிரை எடுத்த புரைதீர் காட்சிய; மலைப்பல் தாரமும், கடற்பல் தாரமும், வளம்தலை மயங்கிய துளங்குகல -இருக்கை அரசுஇளங் குமரரும், உரிமைச் சுற்றமும்; பரத குமரரும், பல்வேறு ஆயமும்; ஆடுகள மகளிரும், பாடுகள மகாளிரும்; தோடுகொள் மருங்கில் சூழ்தரல் எழினியும்- விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன் தன்பதம் கொள்ளும் தலைநாள் போல, வேறுவேறு கோலத்து, வேறுவேறு கம்பலை, சாறுஅயர் களத்து வீருபெறத் தோன்றி- கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று இடம்கெட ஈண்டிய நால்வகை வருணத்து அடங்காக் கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப-" எனக் கலப்பிரர் ஆட்சியைத் தோற்றுவித்த கரிகாலனைக் காண்கிறொம். கிரேக்கத்திலிருந்து அலெக்சாந்தர்கள் இங்குவந்து பலகாலம் ஆட்சிசெய்தார்கள் என்று எழுதினால் அதனைத் தமிழனும் நம்புகிறான். ஆனால் தமிழரான கரிகால்சோழனும் அவனது தங்கை மகன் செங்குட்டுவனும் எகிப்திய அடிமைகளையும் அங்குச்சென்று விடுவித்தார்கள் என்றால் நம்பமறுக்கிறான். அந்த அளவுக்குத் தமிழனின் மண்டையில் மதங்கள் குடியேறி இருக்கின்றன. புத்தன்தான் கரிகால்சோழன் என்றும் கிருத்துதான் செங்குட்டுவன் என்றும் செங்குட்டுவனின் தாய்தான் கன்னியாகுமரி, கன்னிமரி என்றும் அவளது குமரன் செங்குட்டுவன்தான் குமாரன் என்றும். வேளிர்குலப்பெண்ணான அவனது தாய்தான் வேளான்கன்னி என்றும் அவளது அண்ணன்தான் திருமால்- கரிகால்சோழன் என்றும்; தாய்மாமன்தான் கலிங்கத்தின் கரவேலன்- கண்ணன் என்றும் தமிழனை எப்படித்தான் நம்பவைப்பது. இறகுகளுடன் இருக்கும் பெண்தெய்வங்களை வேதங்களிலும் புராணங்களிலும் சிலை ஓவியங்களிலும் பார்த்திருப்பீர்கள். அவர்கள் வேறு யாரும் அல்ல. தமிழ்ப் பெண்கள்தான். அந்நிய அலெக்சாந்தர்கள் காலத்தில் கெடுக்கப்பட்டவர்களே படிம வடிவில் காட்டப்பட்டனர். அவர்களது துயரைத் துடைக்க வெகுண்டெழுந்தவர்களே கரவேலனும் கரிகாலனும் செங் குட்டுவனும். இமையம்வரை மட்டுமல்ல; எகிப்து கிரேக்கம் ரோம் என அலெக்சாந்தர்களும் அவனது கூட்டத்தரும் எங்கெல்லாம் வெற்றிக்கொடி நாட்டினரோ அங்கெல்லாம் சென்று செழு வில் கயல் புலி பொறித்து வந்தவர்கள். சிங்கத்தலைத் தூண்களில் பொறித்திருப்பவை பியதசி கரிகால்சோழனின் ஆணைகளே. அவற்றைப் பொறிக்கக் கட்டளையிட்டவன் சேனாதிபதி செங்குட்டுவன். போறிப்புக்களை முன்நின்று வெட்டுவித்தவன் செங்குட்டுவனின் தந்தை; ஆனால் அசோகன் எனக் கட்டுக்கதைகளைப் பரப்பிவிட்டனர். அதனையும் தமிழன் நம்புகிறான். காஞ்மாநகரில் சிங்கத்தலைத்தூண் இருந்ததாகச் சீனப்பயணி யுவான்சுவங் குறிப்பிட்டபோதிலும் உண்மை வெளிப்பட்டுவிடுமோ எஞ்கிற அச்சத்தால் 8ஆம் நூற்றாண்டில் அதனை உடைத்து நீக்கிவிட்டனர்; இங்குமட்டுமல்ல பிற மாநிலங்களிலும் பல தூண்கள் உடைத்து நீக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. காரணம் தமிழனின் கட்டளைகள் என்பதே. செங்குட்டுவனின் தந்தையை வரலாற்றில் இல்லாத அசோகன் எனப்புகுத்தினர்; மேலும் முசுகுந்தன் பரசுராமன் தித்தன் நன்னன்; நந்தன் என்பதை நன்னன் என மாற்றிவிட்டனர்; நன்னன் சேய்நன்னன் என்பது நாரநன்னன் எனவும் உள்ளது; அதுவே நரநாராயணன் எனவும் புராணப் படிமமாகிவிட்டது. புத்தனின் சீடனாகக் காட்டப்படும் அநந்தன் செங்குட்டுவனே; நந்தனல்ல அநந்தன் எனப்பட்டான். கங்கைநீரைத் தெற்கே செல்லவிடாமல் கங்கைகவர்ந்தவர்கள் நந்தர்களே. நந்தர்குறித்த தகவல்கள் பழந்தமிழ்ப் பாடல்களில் உள்ளன. மாபாரதத்திலும் கங்கைநீரைத் தெற்கே செல்லவிடாமல் தடுத்தவன் பீஷ்மன் என்பதை மாபாரதத்தின் தொடக்கத்திலேயே காணலாம். செங்குட்டுவன் நக்கந்தன் அல்ல கந்தன் எனப்பட்டான்; மேலும் அவனது தந்தையை இரும்பொறை என்பர்; இரும்பொறையின் மகன் செங்குட்டுவனை இளஞ்சேரல் இரும்பொறை எனவும் குறிப்பிட்டனர். வரலாற்றை மறைக்க எப்படியெல்லாம் பாடுபட்டனர் என்பதைக் கந்தனின் பிறப்பு குறித்த திரு முருகாற்றுப்படை, பரிபாடல் கலித்தொகை ஆகியவற்றிலும் காணலாம்; 70 பரிபாடல்களில் 20 மட்டுமே கிடைத்துள்ளன. கந்தபுராணம் ஸ்ரீகந்த மகாபுராணம் சிவபுராணம் போன்றவற்றிலும் செங்குட்டுவனின் வரலாற்றைக்காணலாம். இராமாயணத்தில் கரிகால் இராமனின் தம்பி இலக்குவனாகவும் அனுமனாகவும்; மாபாரதத்தில் அர்ச்சுனனாகவும் காணலாம். அவனது தந்தையைப் மாறீசனாகவும் பரசுராமனாகவும் துர்யோதனனாகவும் காணலாம்; வரலாற்றை மறைத்து உத்தமனாக்கிக் காட்டப் பீஷ்மனாகவும் புகுத்தியதைக் காணலாம். தமிழனின் வரலாறு எங்கெல்லாம் எப்படியெல்லாம் மறைத்தும் மாற்றியும் அழித்தும் சிதைத்தும் நீக்கப்பட்டன என்பதைக் காணவேண்டுமா? தேடுங்கள் பழந்தமிழ்ப் பாடல்களில்! கண்டடைவீர்கள்!!

Saturday, 12 October 2013

சரஸ்வதி பூசை ஆயுத பூசை

சரஸ்வதி பூசை ஆயுத பூசை சரசுவதியைத்தான் 2106 ஆண்டுகளுக்கு முன்னரே மாசிடோனியன் அலெக்சாந்தன் கொன்றுவிட்டானே; அதற்குப்பிறகு வெறும் சரசுவதி பூசைதான 2000 ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது. பரிபாடல் திரட்டு: 2/95-97 "அருமரபின் அந்தர வான்யாற்று ஆயிரம் கண்ணினான் இந்திரன் .. .." (அந்தரவான்யாறு=திரிசங்கு சொர்க்கம்-திருப்பதி) பரிபாடலில் செவ்வேலாக்கப்பட்ட செங்குட்டுவனிடமிருந்து தப்பியோர்; "கொல்லாக் கோலத்து உயிர் உய்த்தோர்" எனச்சிலம்பில் இடம் பெற்றனர். சிந்தா மணியில் கத்தியாரின் இடைச்செருகற்பாடல் பல உள்ளதை நச்சர் குறிப்பிடுவது போலவே பரிபாடலிலும் கந்தியாரின் பாடற் செருகல் உள்ளதை; அதன் பாயிரம் உறுதிப்படுத்துகிறது. அமணத்தில் ஆரியர் ஆசாரியர் ஆயினர்; ஆர்யா என்னும்சொல் பிரகிருதத்தில் பெண்பிக்குணிக்கு அஜ்ஜா என; தமிழில் ஐயை எனவும்; கந்தி, குரத்தி, அடிகள், மாதவத்தாட்டி எனவும் மாறுகிறது; கந்தி எனும் சொல்லே கவுந்தி, குந்தி எனவும்; ஆர்யநந்தி (நந்தி=சிலம்பு=மலை=உயர்ந்த) அஜ்ஜநந்தி எனவும்; தமிழில் அச்சநந்தி எனவும் மாறுகின்றன.அமணத்தில் ஆடவரும் பெண்டிரும் சாத்தன் சாத்தி என இடம்பெற்றனர் என்பதற்குச் சங்கப்பாடல்களை இயற்றியோராகப் பல சாத்தர்களும், ஒக்கூர் மாசாத்தியும் உள்ளனர். நந்தர் ஆட்சியில் கலிங்கத்திலிருந்து மகதத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட அருகனின் படிமத்தைக் கலிங்கத்தில் மீட்டு வைத்த கரவேலன்; அங்காகமங்களையும் மீட்டுத் தொகுப்பித்தான். குமரிப்பகுதியில் யாமளசாஸ்திர அமணர் என (ஸ்வேதாம்பரர், திகம்பரர் இரண்டுக்கும் பொதுவர்) வாழ்ந்தோருக்கு உதவிய சிலப்பதிகாரத்தின் "பாசன்டைச்சாத்தன்" கரவேலன்; "சர்வ பாசண்ட பூஜகோ" எனப்பட்டான். பாசனேந்தி என வடமொழிநூல்களில் காண்கிறோம். கைக்கொள் பாசம் எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறாது. செண்டுப்படை என சிலப்பதிகாரம், அடியார்க்குநல்லார் மற்றும் சேத்கிழாரின் பெரியபுராணம் போன்றவை குறிப்பிடுகின்றன. இன்றும் திருமால் கண்ணன் பெருமால் விஷ்ணு கோயில்களில் செண்டு என்னும் படையைக் கையில் கொண்டு இரண்டு பகுதியாகப் பிரிந்த வளைந்த வடிவில் ஒரு படைக்கருவியைக் கொண்டு விளங்குவதைக் காணலாம். அனைத்து வேளிர் அறிவாளர்களையும் ஒன்றுபடுத்தி ஆயுத பூசைக்கும் சரஸ்வதி பூசைக்கும் வழியமைத்தவனே கரவேலன். அமணத்தின் விரதியரையே மகத அமணத்தில் விராத்தியர் எனக் குரிப்பிட்டனர். இவ்விராத்தியருடன் அமணத்தைக் கஈப்பற்றிக்கொண்ட மாவீரின் கூட்டத்தரே தங்களை அமணரிலும் மேம்பட்ட பிர-அமணர்= பிராமணர் எனக் குறிப்பிடப்பட்டனர். மாவீருக்கு முன்னர் பிராமணர் என எவரும் வரலாற்றில் இல்லை. அமண நூல்களில் பிற அனைத்துத் தீர்த்தங்கரர் குறித்த தகவல்களும் வரலாறும் நீக்கப்பட்டன. தென்னகத்தில் பிராமணரின் வேதவேள்வி, யாகங்கள் கரிகால்சோழனால் நிறுத்தித் தடைசெய்யப்பட்டு; "நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி அடல் அற முந்நீர் அடைந்த ஞான்று குரங்குகொணர்ந் தெறிந்த நெடுமலை யெல்லாம் அணங்குடை யார்கள் வயிறுபுக் காங்கு" என; சேதுப்பாலம் அமைக்கப்பட்டு இலங்கையில் இராவண தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அடக்கப்பட்டபிறகு அமைதியாக இருந்தது தமிழகம். சிலம்பில் மாடல மறையோன் மறக்கள வேள்வியைத் தவிர்த்து அறக்கள வேள்வியை ஓம்பும்படி செங்குட்டுவனை: "நாளைச் செய்குவம் அறம் என்னாது இன்றே செய்க" என வேண்டுகிறான். "சூழ்கலன் வேந்தன்" கரிகால் நோக்கில்: அறக்கள வேள்வி; "நான்மறை மரபின் நயந்தெரி நாவின், கேள்வி முடித்த, வேள்வி மாக்களை மாடலமறையோன் சொல்லிய முறைமையின் வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவி" எனச் சிலம்பு குறிப்பிடுகிறது. மூன்றாம் பதிற்றுப்பத்து-24ல் புலவர் கௌதமனார்(விசுவாமித்திரர்) செங்குட்டுவனை: ".. ..ஓதல், வேட்டல், அவைபிறர்ச் செய்தல், ஈதல்,ஏற்றலென நானுபுரிந் தொழுகும் அறம்புரி அந்தணர் வழிமொழிந் தொழுகி............." எனப் பிராமணரை எதிர்த்த தமிழ் அந்தணரை; ஆதரித்ததாகக் குறிப்பிடுகிறார். ரிக்வேதம்:"சரஸ்வதி நதி சிதைந்து / மறைந்துபொனது" என்றெல்லாம் குறிப்பிடுவதைக் காண்கிறோம். பிரமாவின் மனைவி என சரசுவதி குறிக்கப்படுகிறாள்; சரசுவதி என்பது அன்றைய அகத்தியனாக இருந்த தமிழன் விசுவ ஆ மித்திரனின் அவையினரான அறிவாளரைக் குறிக்கும். சந்திரகுப்தனின் தந்தை ஆட்சி செய்த சிந்து நாட்டை; படையெடுத்து வந்த எகிப்திய கிரேக்க மாசிடோனியன் அலெக்சாந்த வசிட்டனின் தலைமையில் தாக்கிக் கைப்பற்றிக்கொண்டனர். சிறிது காலத்துக்குப்பிறகு விசுவாமித்திரனுடனும் போரிட்டுத் தமிழ் அவையின் அறிவாளரையும் அவர்களால் பாதுகாக்கப்பட்ட அனைத்துத் தமிழ் நூல்களையும் கைப்பற்றிக் கிரேக்கத்துக்குக் கொண்டுசென்றனர் என அவனது வரலாற்றிலும் புளூடார்க்கின் குறிப்புக்களிலும் காண்கிறோம். "அலெக்சாந்தனுடன் சேர்ந்துகொண்ட அரசர்களையும் வீரர்களையும் வசைமாரிபொழிந்து அலெக்சாந்தனை எதிர்க்குமாறு வலியுறுத்திய குடியரசுகளின் முனிவர்களும் ஞானியரும் தொல்லைகொடுப்போராக இருந்ததால் அவர்களில் பலரைப் பிடித்துத் தூக்கிலிட உத்தரவிட்டான்; சில ஆண்டுகளுக்கு முன்னர் எல்லைப்பகுதிகளிலும் பஞ்சாப் பகுதியிலிருந்தும் 70 000 பேருக்குமேல் சிறைப்பிடித்துச் சென்றிருந்தான்" எனக் குறிப்பிடுகிறான். வசிட்ட அலெக்சாந்தனும் அறிவாளரைக் கொன்றுவிட்டதாலேயே அன்றைய தொல்தமிழ்ப்பாடமரபினரும் பாடல்களும் தொடர்ச்சியில்லாமல் கைவிடப்பட்டுள்ளன. அத்தகையபாடல்கள் பின்னர் இயற்றப்படவே இல்லை. இப்படித்தான் நமது சரசுவதி நதி மறைந்துபோனது. சரசுவதி நதி-அறிவாளர் அவை; சிதந்து மறைந்துபோனது. ஒவ்வொருமுறையும் இந்தத் தமிழ் அவை உருவாக்கப்பட்டு வளர்ந்து உச்சநிலையை அடையும்போதெல்லாம் அந்நியரால் தாக்கப்பட்டு; புலவர்களையும் நூல்களையும் கைப்பற்றிஸ் சென்றுள்ளனர் என்பதைச் சிலபாடல்கள் உணர்த்துகின்றன. ரிக்வெதம்: 3-33.2: விஸ்வாமித்திரர், கௌ/குசிகரின்மகன். 3-1.23: இவரதுபரம்பரையினர் தலைமுறை தலைமுறையாக (சூரிய குலத் அறிவாளரை)'அக்னி'யைத் தூண்டிவிட்டு(வலிமைப்படுத்தி)க் கொண்டிருந்தனர். 3-62.10; காயத்திரி மந்திரம் இவரால் இயற்றப்பட்டது(பிராமணர் தினமும் பாராயணம்செய்வது); பாரதவர்களின்(இக்ஷவாகு) குடும்பத்தைச் சேர்ந்தவர். விஷ்ணுபுராணம்: விஸ்வாமித்திரரை மன்னன்(சந்திரகுப்தனின் தந்தை போரசின்)புரூரவசுவின் வழித்தோன்றலான காதியின் மகன் எனக் குறிப்பிடுகிறது; ஹரிவம்சமும் உறுதிசெய்கிறது. அந்நிய அலெக்சாந்த வசிட்டனின் வரவுக்குப்பின்னர் வசிஷ்டன் மற்றும் வசிட்டனின் மகன் சமதக்கினியும் கைப்பற்றிக்கொண்ட இக்ஷவாஹு(சோழர்) பரம்பரைக்கு; புரோகித குருவாக விசுவாமித்திரர் முயன்றதாக மாபாரதம் ஆதிபருவத்திலும் காணப்படுகிறது. கட்டுப்பாடுமிக்க தொல் அறிவாளர், வேளிர் படை; அகத்தியன் கரவேல், கரிகால் மற்றும் பாவையின் ஆசியோடு; செங்குட்டுவனுக்கு வழங்கப்பட்டு(பதிற்-ப 81/13-18) பரசுராமனின் வேள்வி மோகம் கொண்ட சுரரும், ராச்சச சிங்களரும் அடக்கப்பட்டனர் என்பதே(பரி பா: 17)வரலாறு. அனைவரும் வெல்லப்பட்டு இந்திரவிழா நடத்தப்பட்டதைத் திரித்து ரிக்வேதத்திலும் இதிகாசங்களிலும் மறைக்கப்பட்ட வரலாற்றைச் சிலம்பும் மணிமெகளையும் வெளிப்படுத்துகின்றன. விழாவுக்கு " ஓங்குயர் மலையத்து அருந்தவன்" பொதியை அகத்திய கரவேலை-அழைத்தபோது; இந்திரவிழா நடத்தும் முறைகுறித்து; மணிமேகலையின் தொடக்கத்தில் குறிப்பிடுவது: "வான்பதி தன்னுள் கொடித்தேர்த் தானைக் கொற்றவன் துயரம் (கரிகால்சோழனின்) விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின் (துயரத்தை நீக்கிய) மடித்த செவ்வாய் வல்லெயிறு இலங்க (சேனைத்தலைவன் செவ்வேலின் வேளிர்) இடிக்குரல் முழக்கத்து இடும்பை செய்திடும் (குன்றம்குமுரிய உரையுடன்) தொடுத்த பாசத்துத் தொல்பதி நகரைப் (நீதிநெறிகளால் மக்கள் மனதை) புடைத்துணும் பூதமும் பொருந்தா தாயிடும் (சுத்தப்படுத்தும்அறிவாளர்) மாயிரு ஞாலத்து அரசுதலை ஈண்டும் (ரிக் -ல் வருணப்பாகுபாட்டுடன்) ஆயிரம் கண்ணோன் விழாக்கால் கொள்க" என (புருஷ சூத்தத்திலும்) "திருவிழை மூதூர் வாழ்கஎன் றேத்தி (இவ்விழா இடம்பெற்றுள்ளது) வானமும் மாரி பொழிக; மன்னவன் கோள்நிலை திரியாக் கோலோன் ஆகுக"எனச் சோழனின் துயர்தீர்த்த சேனைத்தலைவன் செவ்வாய் செங்குட்டுவனின் வேளிர்; குற்றவாளிகளைத் தடியும் அறிவாளர்; தலைமைகளுக்கும் சிறப்புச்செய்ய வேண்டுகிறான். இவ்விழாக்களே சரஸ்வதி பூசை ஆயுத பூசை எனக் குருதிப்பலிகளற்றுக் கொண்டாடப்படுகின்றன. சிலப்பதிகாரமும் இதனை: "அரைசு மேம்படீஇய அகநிலை மருங்கில், 'உரைசால் மன்னர் கொற்றம் கொள்க'என, மா இரு ஞாலத்து மன் உயிர் காக்கும் ஆயிரத்து ஓர்எட்டு அரசுதலைக் கொண்ட தன்நருங் காவிரி, தாதுமலி பெருந்துறை, புண்ணிய நல்நீர் பொற்குடத்து ஏந்தி மண்ணகம் மருள,வானகம் வியப்ப, வின்னவர் தலைவனை விழுநீர் ஆட்டி..."; "வின்பொரு பெரும்புகழ்க் கரிகால்வளவன் தன்பதங் கொள்ளும் தலைநாள் போல... ..இடம்கெட ஈண்டிய நால்வகை வருணத்து(வருணப்பாகுபாட்டுக்குள் அடங்காத) அடங்காக் கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப.." எனக்குறிப்பிடுகிறது. ரிக்வேதத்திலும்; பிராமணன் ராசன்யன் வைசியன் சூத்திரனைப்புகுத்தியோர்; ஆரிய கிரேக்க புலத்தியச் சிங்களராகவே இருத்தல் வேண்டும். புறம்-135,136ல்: "வேண்டார் உறுமுரண் கடந்த ஆற்றல் பொதுமீக் கூற்றத்து நாடுகிழவோன்" செவ்வேல் செங்குட்டுவனிடம்; "யாழ்ப்பத்தர் புறம் கடுப்ப; இழைவலந்த பஃறுன்னத்து(சிங்களர்) இடைப்புரை பற்றிப் பிணிவிடாஅ ஈர்க்குழாத்தொடு இறைகூர்ந்த பேஎன்பகையென ஒன்று எங்கோ? உண்ணாமையின் ஊன்வாடித் தெண்ணீரின் கண்மல்கிக் கசிவுற்ற என் பல்கிளையடு பசியலைக்கும் பகைஒன் றெங்கோ? அன்னதன்மையும் அறிந்துஈயார் 'நின்னதுதா'என நிலைதளர; மரம்பிறங்கிய நளிச்சிலம்பின் குரங்கன்ன புன்குறுங்கூளியர்; பரந்தலைக்கும் பகை ஒன்றெங்கோ? 'ஆஅங்கு எனைப்பகையும் அறியுனன்ஆஅய் என .. .. .. ..உண்குவம் பெரும நீ நல்கிய வளனே" என: சிங்கள யாழ்ப்பத்தரின் இயல்பையும் செங்குட்டுவனின் ஈகைப்பண்பையும்; கரிகால் இராமனுக்குக் குரங்குகளாக; இலங்கை சென்று சிங்கள இராவண புலத்தியரை அடக்கியதையும் காண்கிறொம். இராமாயணப் போரில்; செங் குட்டுவன்: இலக்குவன்-அஞ்சனையின் மைந்தன் அனுமன்; சேதுநாட்டு(கலிங்கம்-இன்றைய ஒடிஸ்சா) மன்னன் கரவேலன் -கண்ணனின் அனைத்து வேளிரும்; குரங்குகளாக; அங்குள்ள கற்களால் " சேதுப்பாலம்" ; “இராமர்பாலம்” கட்டியதை; மணிமேகலை: 17:11-12ல்: " நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி அடலரும் முந்நீர் அடைத்த ஞான்று குரங்குகொணர்ந் தெறிந்த நெடுமலை யெல்லாம் அணங்குடை யார்கள் வயிருபுக் காங்கு" என; இலங்கைக்கு ஓடிய புலத்திய இராவண நெடுஞ்செழியனிடமிருந்து ஆரத்தை மீட்டுவரப் பாலம் அமைத்ததை; துயரமடைந்த இராமன்-நெடியோனுடன் இலக்குவன்-செங்கோடன்-அனுமனுடன் குரங்குகளாக; பெருங்கற்களைக் கடலில் போட்டுப் பாலம் அமைத்ததைக் காண்கிறோம். இவர்களை; மாபாரதத்தில் பீஷ்மனும் குறிப்பிடுகிறான். மாபாரதம்-சாந்திபருவம்-அத் 46: கண்ணன்(கரவேல்)உருவத்தைப் படிமவடிவில் பீஷ்மன்: "ஆயிரம் தலை முகம் கை கால் களுடைய; புத்திக்கும் இந்திரியங்கற்கும் புலப்படா உருவுடைய, உலகங்களுக்குப் பதியான அந்த ரகஸ்யரூபியான பகவனுக்கு நமஸ்காரம்; சடைமுடியுள்ள, தடியுள்ள, தொங்கும் தொந்தி தொப்பை வயிறுள்ள, கமண்டலத்தை அம்புக்கூடாகக் கொண்ட பிரம ரூபியான(கரவேல்-கண்ணன்) பகவானுக்கு நமஸ்காரம்"; என சடைமுடி, தடி, தொங்கும் தொந்தி தொப்பை வயிறு, கமண்டலம், அம்புக்கூடு என ஒவ்வொன்றும் படிம வடிவில் கண்ணனின் ஆணைக்குக் கட்டுப்பட்ட படைகளாகக் குறிப்பிடுகிறான்.இப்படை; பிரமா- பெருமாலான விசுவாமித்திரனால்; திருசங்கு எனவும் சத்தியவிரதன் எனவும் இடம்பெற்ற கண்ணன்- கரவேலுக்கு; வேளிர் அறிவாளர் படையின் துணையுடன் அந்தர-ஆந்தரத் திருப்பதியில் ஒரு தேசத்தை உருவாக்கிக் கொடுத்துக் குடியமர்த்தினான். இதிகாசங்களுள்; இராமகீர்த்தனம் இராமாயணத்தில்; கரவேலால்: இப்படை கரிகாலுக்குக்கொடுக்கப்பட்டு, அனுமனுடன் மூவரும் தலைவராக; (முன்னர் ஆ/அந்தர தேசம் இப்போது)ப்ரம்ம (தேசம்) ஸ்தானம்- திருப்பதியில் விசும்பு செல் இவுளி-வேளிர் அறிவாளர் படை; செவ்வேல் செங் குட்டுவனிடம்: “நாம மூன்றிலைப் படையுடைப் பிள்ளை” எனச் சேக்கிழார்குறிப்பிட்ட மும் முனைப் படை; (கிருத்துவத்தில் சிலுவை)கரவேலன் கரிகால் பாவை என மூவரால் செவ்வேலிடம் ஒப்படைக்கப்பட்டன. செங்கோட்டையின் செங் கோட்டுப்புலி - ஐ அப்பன்-குட்டுவனை எதிர்த்துப் போரிட்டோராகச் சிலம்பதிகாரத்தில் உள்ளோர்: "உத்தரன், விச்சித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன், வடதிசை மருங்கின் மன்னவர் எல்லாம், தன்தமிழ் ஆற்றல் காண்குதும்' என(வெஞ்சினமுரைத்த குட்டுவன்) நிலந்திரைத் தானையொடு நிகர்ந்து மேல்வர.. ." “காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப"(பெரும்பாணாற்றுப்படை: அடி 420) என அழிப்புவேலைக்கான கடவுளராகக் குறிக்கப்படுவோருள் சிங்கன் என இலங்கையின் சிங்களனைக் காண்கிறோம். இதனைப் பிற்காலச் சித்தரான குமரகுருபரர் "சிங்கமுகனை வென்று வாகை முடித்தோய்" என; "பூமேவுசெங்கமல.. ." எனத்தொடங்கும் மிகநீண்ட பாட்டில் குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரம் குறிப்பிடும்; "பாசன்டைச்சாத்தன்"; “சர்வ பாசண்ட பூஜகோ” வான கரவேலன்-கண்ணனே; வேளிர் அறிவாளரை ஒன்று படுத்திய வேலாயுதன்-செங்குட்டுவனால்; ஆயுத பூசைக்கும், சரஸ்வதி பூசைக்கும் வழியமைத்தவன். கிருத்துவத்தின் புதிய ஏற்பாட்டிலும் முதல் அதிகாரத்தில் இதேதகவல் உள்ளதை இன்றும் காணலாம். சிங்கள மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம், புத்தசாதகக் கதைகள் உட்படப் பலவும் பொய்யானவை. இவற்றை நம்பியே புத்தனின் வரலாற்றைப் பாலி மொழியில் பெயர்த்தனர். இவையனைத்தும் தமிழனான கரிகால்சோழன்-புத்தனை மறைப்பதற் காகவே எழுதப்பட்டவை. புத்தசாதகக்கதை 177,516,528ல்: 'அனுமன் (செங்குட்டுவனால்) சிங்க(ள)ம் தீயிட்டு அழிக்கப் பட்டதால்; குரங்குகளைக் கொன்று; அதன் மாமிசத்தைப் பிராமணர் உட்பட சிங்களர் அனைவரும் உண்டனர்' எனக் குறிப்பிட்டு வரலாற்றையும் மாற்றி எழுதினர். மேலும் "தனக்கு 500 ஆண்டுகள்வரை சிலைவைத்து வணங்கக்கூடாது எனப் புத்தன் ஆணையிட்டதாகவும்" எழுதிவைத்தனர்; அதாவது கரிகால்வளவன் பிறப்பதற்கு 400 ஆண்டுகற்கு முன்னரே பிறந்தவன் புத்தன் எனப் பொய்யுரைத்தனர். அதனாலேயே பட்டயங்களிலோ கல்வெட்டுக்களிலோ கரிகால்வளவனுக்கு முன்னரும் பின்னரும் வரலாறற்ற நாடாகப் பாரதம் மாற்றப்பட்டது; தமிழ் நூல்கள் சங்கப்பாடல்கள் அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டன.

Saturday, 28 September 2013

பகவான் புத்தர்

பகவான் புத்தர் பகவான் புத்தர் - நூலாசிரியர் - 1876ல் கோவாவில் ஒரு சிற்றூரில் பிறந்தார். 1947ஆம் ஆண்டு இறந்தார். மராத்தியும் சம்ஸ்கிருதமும் பாலி மொழியும் அறிந்தவர். அவர் குறிப்பிடும் சில முக்கியமான தகவல்களைக் காண்போம்: பௌத்த தருமத்தை அறிய முயன்று நேபாலம், கயை சென்று முயன்றார்; ஆனால் இலங்கையில்தான் பௌத்த சாத்திரம் மற்றும் திரிபிடக நூல்களை அறியமுடியும் எனத் தெரிந்துகொண்டு இலங்கை சென்று தீட்சை பெற்று பாலி நூல்களை ஆழ்ந்து பயின்றார். பர்மாவுக்குச்சென்று தியானவழியைப் பயின்று பின்னர் இந்தியாவுக்குத் திரும்பினார். பௌத்த தர்மப்படி மீண்டும் குருவின் இசைவுபெற்று இல்லறத்துக்குத் திரும்பினார். தர்மானந்த கோசாம்பியின் நூலை மராத்தியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. விடியல் பதிப்பகம் -2012; (முதல்பதிப்பு சாகித்ய அகடெமி 1957). பாலிமொழி நூல்களையும், பௌத்த நூலான திரிபிடகத்தையும் ஆய்வுசெய்து சான்றுகளுடன் எழுதப்பட்ட நூலே தர்மானந்த கோசாம்பி அவர்களின் பகவான் புத்தர். பொது: அமணநூல்களில் உள்ள சில சொற்களுக்குப் பொருள்: காபோதம் -புறா அல்ல; புறாவண்ணமுள்ள வெள்ளைப் பூசணி. குக்குடம் -கோழி அல்ல; எழுமிச்சம்பழம்; மாமிசம் என்பது பழத்தின் சதைப்பற்று, அஸ்தி என்பது எலும்பல்ல பழத்தில் உள்ள விதை மற்றும் கொட்டை; மார்ஜாரம் பூனையல்ல, குக்குடம் - எழுமிச்சையை உண்டு அடக்கவேண்டிய ஒருவித வாயுவையும் குடறிப்பன. எட்வின் ஆர்னால்டு எழுதிய ஆசிய ஜோதி - Light of Asiya - நூலில் புத்தர் பெருமானைப் புராணவடிவில் உலகிற்கு அறிமுகப்படுத்தினார். சுவையுள்ளதாக இருந்ததால் மேலை மற்றும் கீழநாடுகளில் பெரும்செல்வாக்கைப் பெற்றது. அமணசமயத்தின் 23ஆம் தீர்த்தங்கரரின் "சாதுர்யாம தருமம்" என்னும் நூல் தர்மானந்த கோசாம்பியின் உள்ளத்தைக் கவர்ந்ததால் அதுகுறித்து ஒரு சிறப்பு நூலை எழுதினார்; அந்நூல் அவரது இறப்புக்குப் பின்னர் வெளிவந்தது. இந்திரனுடைய சாம்ராஜ்ஜியமத்தைப் பரீச்சித்தின் சாம்சாஜ்யத்துடனோ, ஜனமேஜயனுடைய சாம்ராஜ்யத்துடனோ ஒப்பிட முடியாது; அவர்கள் பலிகொடுத்து யக்ஞங்கள் செய்ய ஊக்கமூட்டினார்கள். அவர்களின் முயற்சியால் கங்கைக்கும் யமுனைக்கும் இடைப்பட்டபகுதி ஆரியவர்த்தம் ஆனது என்பதோடு அவர்களது பெருமை தீர்ந்துவிடுகிறது. ஆரியர்க்கும் தாசர்க்கும் நிகழ்ந்த போராட்டத்தில் பலிகொடுக்கும் வேள்விப்பண்பாடு மட்டும் உறுதிபெற்று ஓங்கி வளர்ந்தது. புத்தருக்கு முன்பு இந்த பலிகொடுக்கும் வேள்விப் பண்பாடே பாரதநாட்டில் நிலவிவந்தது. புத்தரின் வரலாற்றை கி.பி 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழகத்தின் புத்தகோஷரின் நூல்களையும் பாலி மூலநூள்களையும் தவிற பிறமொழிகளில் நூல்கள் இல்லை. [அதே காலத்தில் வச்சிரநந்தி ஆசாரியர் மதுரையில் ஒரு தமிழ்ச்சங்கத்தை நிறுவியதாக உள்ளதும்; அங்கு தொல்தமிழ்ப்பாடல்கள் தொகுப்புக்களாக எழுதப்பட்டதும், தமிழில் அதே காலத்தில் உருவான மணிமேகலை உள்ளதும்; குண்டலகேசி அழிக்கப்பட்டுவிட்டதையும் கலித்தொகையும் பரிபாடலும் எழுதிச்சேர்க்கப்பட்டதும்; இறையனார் களவியல் எழுதப்பட்டுத் தொல்காப்பியம் மாற்றியமைக்கப்பட்டதும்; அன்றுவரை அமண சமயம் மட்டுமே இருந்தது பௌத்த சமயம் என்பதாக ஒன்று இல்லை என்பதும் ஆசிரியர் அறியாதன என்பது குறிப்பிடத்தக்கது.] பாலி இலக்கியத்தில் திரிபிடகம்; சுத்தபிடகம், விநயபிடகம், அபிதம்மபிடகம் ஆகியவை முக்கியமானவை. புத்தகோஷர் தமது நூல்களில் இவற்றிலிருந்து மேற்கோள்களைல் குறிக்கும்போது 'பாலி கூறுவதாவது, பாலியில் கூறியிருப்பதாவது எனக் குறிப்பிடுகிறார். அட்டகதாயம் என சிங்கள மொழியில் வழங்கிய அட்டகதை என்ற சொல்லையும் குறிப்பிட்டுச் சில வாக்கியங்களை எழுதுகிறார். சிங்களத்தீவுக்கு வெளியில் உள்ளோருக்கு அவை பயன்படுவதில்லை. புத்தகோஷர் சிங்களரின் அட்டகதாயத்தைச் சுருக்கித் திரிபிடகமொழியில் அவற்றுக்கு உருக்கொடுத்தாதால் அவையும் பாலி என வழங்கப்பட்டு மதிக்கப்பட்டன. அங்கர் மகதர் காசியர் போசலர் வச்சியர் மல்லர் கேசியர் வம்சர் குருநாட்டினர் பாஞ்சாலர் மச்சர் சுரசேனர் அஸ்ஸகர் அவந்தியர் கந்தரர் ஆகியோரின் நாடுகள் அங்குத்தரகாயத்தில் நான்கு இடங்களில் வருகின்றன. புத்தர் பிறப்புக்கு முன்பு நாவலந்தீவில் பதினாறு நாடுகள் இருந்ததாக லலிதவிஸ்தாரத்தின் மூன்றாம் அத்யாயம் குறிப்பிடுகிறது. 1. அங்கம் - அங்குத்தராபம்; மகதத்துக்குக் கிழக்கே இருந்ததை மகதநாட்டவன் வென்றதால் மக்கள் ஆட்சிமுறை மறைந்தது. நாலடைவில் மகதத்தோடு இணைந்து அங்கமகதம் எனலாயிற்று. இங்கு சம்பாநகரத்தில் கக்கரா ராணி கட்டிய குளத்தின் கரையில் தங்கிய புத்தர் தர்மோபதேசம் செய்ததாகத் திரிபிடகம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. பிம்பிசாரன் இதனைப் பெருவேள்விகள் செய்துவந்த பிராமணன் சோணதண்டனுக்கு நன்கொடையாக அளித்தான். 2. மகதம் மற்றும் கோசலம் பசேநதியாலும் பிம்பிசாரனாலும் ஏகாதிபதிகளாக ஆட்சிசெய்யப்பட்டன. 3. கோசலம்: தலைநகரம் சிராவஸ்தி; இது அசிரவதி (இப்போது ராப்தி) நதிக்கரையில் இருந்தது. பிரசேனஜித்-பசேநதி ஆண்டான். லலிதவிஸ்தாரத்தில் கோசல அரசர்களின் இழிகுலப்பெயர் மாதங்ககுலம்; மாதங்க [புலைய]குலப்பெண்ணை மணந்ததாகக் குறிப்பிடப்படுகிறான். தம்மபத அட்டகதையில் இது விடுடபன் (விதுர்த்தபன்) கதையில் தெரிகிறது. 4. ராஜகிருகம்: மகதரின் ராஜதானி பீகார் மாநிலத்தில் திலையா ரயிலடியிலிருந்து பதினாறுகல் தொலைவில் உள்ளது. 5. காசி: இந்நாட்டு அரசர்களைப் பிரமதத்தன் என்பர் எனச் சாதக அட்டகதையில் தெரிகிறது. அமணரின் 23ஆவது தீர்த்தங்கரர் பார்சுவநாதர்; வாரனணாசி அரசன் அசுவசேனனின் ராணி வாமராணிக்குப் பிறந்தவர். புத்தரின் காலத்தில் இந்நகரின் சுதந்திரம் கெட்டுக் காசிகோசலம் எனக் கோசலநாட்டுடன் சேர்ந்துவிட்டது. 6. வஜ்ஜி: மூன்று மகாஜன ஆட்சியைக்கொண்ட வஜ்ஜி பவா குசிநாரா ஆகியவற்றில் ஒன்று வஜ்ஜி. இவற்றை ஆண்டவர்கள் மல்லவர்கள். வஜ்ஜி -லிச்சவிகளின் அரசு வலிமையானது. அவர்களது தலைநகரம் வைசாலி. 7. வைசாலிக்குக் கிழக்கே விதேகர்களின் நாடு இருந்தது. ஜனகனைப் போன்ற வள்ளல்கள் அங்கே அரசாண்டார்கள். விதேகர்களின் கடைசி அரசன் சுமந்தரன் மிதிலையை ஆண்டதாக லலிதவிஸ்தாரம் குறிப்பிடுகிறது. 8. மலைநாடு: மல்லர்களின் நாடு; வஜ்ஜிக்குக் கிழக்கிலும் கோசலத்துக்கு மேற்கிலும் இருந்தது. வஜ்ஜிநாடு போலவே இங்கும் குழு ஆட்சிமுறையே இருந்தது. ஆனால் மல்லரிடையே பிளவேற்பட்டு பவா குசிநாரா என இரண்டானது. 9. சேதி: சேதிஜாதகம் வேஸ்ஸந்தர ஜாதகம் இருண்டிலும் சேதி -சிவி -மத்த -மத்தர -சைத்தியநாடு குறித்த செய்தி உள்ளது. அங்கு பிராமணர்கள் வலிமையாக இருந்தனர்; அதன் வேஸ்ஸந்தரனுடைய மனைவி மத்தி - மாத்திரி. மத்த -மத்தர நாடுதான் சேதிநாடு; தலைநகரம் ஸ்வஸ்திவதி -ஸோத்திவதி. கடைசி அரசன் உபசரன் அல்லது அபசரன்; பொய் சொன்னதால் அவனது புரோகிதன் சாபமிட்டு அவர்களது புதல்வர் ஐவருடன் நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவிட்டான். வெளியேற்றப்பட்ட ஐவரும் வெவ்வேறு நகரங்களை உருவாக்கியதாக சேதிய சாஜதகம் கூறுகிறது. வேஸ்ஸந்தரனுடைய சொந்தநாடு சிவி; சேதிநாட்டுக்கருகில் இருந்தது. அவன் தனது கண்களைப் பிராமணனுக்குக் கொடுத்த கதை ஸிவி ஜாதகத்தில் உள்ளது. வேஸ்ஸந்தர அரசகுமாரனும் தனது இரண்டு குழந்தைகளையும் பட்டத்து யானையையும் மனைவியையும் தானம் கொயடுத்தான் எனவும் கூறுகிறது. வம்சம் -வத்ஸம்: வத்ஸரின் தலைநகரம் கோசாம்பி -கௌசாம்பி; உதயனான் என்ற உல்லாசமன்னன் ஆண்டதாக தம்மபத அட்டகதையில் தெரிகிறது. 10. குருநாடு: தலநகரம் இந்திரப்பிரஸ்தம்; இதனைக் கௌரவியன் என்ற அரசன் ஆண்டுவந்தான். அங்கு கல்மாஷதம்மம் என்ற நகரருகில் வைதிகர்கள் அதிகம் இருந்துள்ளனர். 11. பஞ்சாலம் -பாஞ்சாலம் -மச்சம் -மத்ஸ்யநாடு: உத்தரபஞ்சாலரின் தலைநகர் தம்பில்லம்- தம்பில்யம் என ஜாதக அட்டகதையில் குறிப்பிடும் மத்ஸ்யநாடு பற்றிய தகவல் இல்லை; பிற பௌத்த நூல்களிலும் மிகுதியாக இல்லை. 12. ஸுரசேனம்: தலைநகரம் மதுரை -வடமதுரை; அரசன் அவந்திபுத்திரன் ஆண்டுவந்தான். வருணாசிரமத்தைப்பற்றி வாத்ஸ்யாயனருடன் விவாதித்த தகவல் உள்ளது. மதுரையில் ஐந்து குறைகள் இருந்ததாகப் புத்தர் குறிப்பிட்டுள்ளார். அவை; சாலைகள் மேடும் பள்ளமுமாகவும், புழுதி அதிகமாகவும், நாய்கள் பொல்லாதனவாகவும், பேய்கள் கொடியன வாகவும், பிட்சை கிடைப்பது மிகவும் அடரிதாகவும் இருந்தது என்பதாம். 13. அஸ்ஸகம் -அச்மகம்: கோதாவரி ஆற்றின் மருங்கில் இருந்ததாகத் தெரிகிறது. அஸ்ஸகனும் அளகனும் ஆந்தர -அந்தக அரசர்கள்; அவர்களின் நாடுகளுக்கிடையே பாவரி என்பவன் தனது ஆறுமாணவர்களுடன் ஊரை அமைத்தான்; அது மேன்மேலும் வளர்ந்தது என அட்டகதை சொல்கிறது. 14. அவந்தி: தலைநகர் உஜ்ஜைனி; அரசன் சண்டப்பிரதத் யோதனன் கொடுமையான சர்வாதிகாரம் படைத்தவன்; நோய்வாய்ப்பட்டபோது மகதநாட்டின் மருத்துவன் ஜீவகன் கௌமாரபிம்பியன் வந்தான். இந்த வைத்தியன் ராஜகிருகத்தில் ஆயுர்வேதம் பயின்றான். 15. கந்தாரம் -காந்தாரம்: தலைநகரம் தக்கசிலா -தட்சசிலை; புக்குசாதி என்ற அரசன் ஆண்டுவந்தான். தனது தளர்ந்த வயதில் ராஜகிருகயத்துக்குச் சென்று அங்கு திரிந்தபோது ஒரு வெறிகொண்ட பசு அவனைக் கொன்றது. 16. கம்பொஜம் -காம்போஜம்: வடமேற்கில் இருந்தது; தலைநகரம் துவாரகை என பேராசிரியர் ரைஸ் டேவிட்ஸ் குறிப்பிடுகிறார். ஆனால் மஜ்ஜிமநிகாயத்தில் இந்நாடு யவனர்களோடு சேர்த்துக் குறிப்பிடப்படுகிறது. யவனகாம்போஜர் நாட்டில் ஆரியர் தாசர் என இரண்டு சாதிகளே இருந்தனர் சில சமயம் ஆரியன் தாசனாகவும் தாசன் ஆரியனாகவும் மாறியதுண்டு ஏனவும் குறிப்பிடுகிறது. குணாலஜாதகத்து அட்டகதையில் இந்நாட்டு மக்கள் காட்டுக்குதிரைகளைப் பிடிப்பதில் வல்லவர்கள் என்கிறது. லலிதவிஸ்தாரம் என்ற நூலிலும் 16 நாடுகள் குறிப்பிடப்படுகின்றன; அவற்றில்: மகத, கோசல, வம்ச, வைசாலி, அவந்தி, மதுரை, குரு, மைதிலக என எட்டுக்குல அரசர்கள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றனர். அவர்களுள் சுமந்திரனுடைய மைதில - மிதிலை மிகவும் அழகானது; ஏறாளமான படைகளை உடையவன்; பொன்னும் முத்தும் மணிகளும் அவனிடம் குவிந்துள்ளன; அவனது வீரத்தைக் கண்டு சிற்றரசர்கள் அடங்கிக்கிடந்தனர்; நண்பர்கள் நிறைந்தது, அறத்தில் பரற்றுடையவன்; அவனுக்கு நிறையச் சந்ததிகள் உள்ளனர் எனக்குறிப்பிட்டுவிட்டு புத்த்கர் பிறப்பதற்கு ஏற்ற இடம் இந்தப் பதினாறும் அல்ல என அவர்களுக்குத் தோன்றின எனக் குறிப்பிடுகிறது. மைதிலகுலம் சுமந்தரனுக்குப் பிறகு அழிந்துவிட்டது. விதேகரும் வஜ்ஜியரும் சேர்ந்தோராகத் தெரிகின்றனர். பாண்டவரின் பரம்பரையில் எந்த அரசன் ஆண்டான் என்பது இல்லை; வேறு பௌத்த நூல்களிலும் இதுபற்றிய குறிப்புக்கள் இல்லை. குருநாட்டைக் கௌரவியன் ஆண்டதாக ரட்டபாலசூத்தம் கூறுகிறது. அவன் பாண்டவகுலத்தைச் சேர்ந்தவன் என்பதற்குச் சான்றுகள் இல்லை எனத் திரிபிடகத்தில் உள்ளது. சாக்கியர்குலம்: பௌத்த நூல்களில் விரிவாக இடம்பெறும் சாக்கியகுலம் மேற்கண்ட அரச குலங்களுள் எங்கும் இடம்பெறவில்லை. கோசலத்தைச் சேர்ந்த ஒரு பகுதி தனது நாடு எனவும்; தனது ஆதித்திய கோத்திரத்தையும் சாக்கிய சாதியையும் புத்தனே குறிப்பிடுவதாக சுத்தநிபாகத்தில் உள்ளது. கொசல அரசன் பசநேதியின் ஆட்சியை ஏற்றிருக்கும் மகாநாபன்; சாக்கியப் பெண்ணைப் பசநேதிக்குக் கொடுக்க ஏன் மறுக்கவேண்டும் எனப் பேராசிரியர் ரைஸ் டேவிட்ஸ் வினவுகிறார். மகாநாபனுடைய அடிமைகளைப் பசநேதி மணந்திருக்கும் நிலையும் குறிப்பிடப்படுகிறது.  சிலமாந்தர்களும் அவர்களோடு தொடர்புகொண்டோரும் வரலாற்றில் ஏற்கத்தக்க தகவல்களும் சான்றுகளும் பௌத்த நூல்கள் சாக்கியகுலம் பற்றி விரிவாக்க் குறிப்பிடுகின்றபன. ஆனால் பிரசேனஜித் - பசேநதி: கோசல அரசன்; இழிகுலமான மாதங்கள் என்னும் வழியில் வந்தவன் என லலிதவிஸ்தாரமும் தம்மபத அட்டகதையில் விதூதபன்-விதுர்த்தபன் கதையிலும் தெரிகிறது. சாக்கிய குலத்தில் ஒரு அரசகுலப்பெண்ணை மணம்புரிய விரும்பினான்; அவனது குலத்தை இழிவாக எண்ணியதால் சாக்கியகுலப் பெண்ணைக் கொடுப்பதைத் தவிர்க்க மகாநாம சாக்கினுக்கும் அவனது தாசிக்கும் பிறந்த பெண்ணை - வாசவதத்யாவைச் சாக்கிய குலப்பெண் என ஏமாற்றிக் கொடுத்துவிட்டனர். அறியாத பசேநதி அவளைப் பட்டமகிசியாக்கினான். அவளுக்கு விதூதபன் எனும் மகன் பிறந்தான். அவனுக்குப் 16வயதானபோது சாக்கியப் பாட்டனார் வீட்டுக்குச் சென்றபோது தான் தாசியின் மகன் என்பதை அறிந்தான். தக்க பருவத்தில் கோசலநாட்டைக் கைப்பற்றினான். கிழத்தந்தை பிரசேனஜித்தை விரட்டியடித்தான். அஜாத சத்ருவிடம் பாதுகாப்புத்தேடச் செல்லும் வழியில் ராஜகிருகத்துக்கு வெளியே ஒரு தருமச்சத்திரத்தில் காலமானான். விதூதபன் -விதுர்த்தபன்: தந்தை இறந்ததும் சாக்கியரின்மீது படையெடுத்து அவர்களைப் படாதபாடு படுத்தினான்; சரணடைந்தவர்களையும் தப்பியோடியவர்களையும் தவிர்த்து மற்றவர்களைக் கொலைசெய்தான். அவர்களது குருதியால் தனது அரியணையைக் கழுவினான். சிரவஸ்தியில் அசிரவதி ஆற்றங்கரையில் தங்கியிருந்தபோது ஆற்றில் பெருவெள்ளம்வந்து சுழலில் சிக்கி மாண்டான். [மேற்கண்ட தகவல்களிலிருந்து நமக்குத் தெரியவருவது: வரலாற்றை மறைப்பதற்காகவே அனைத்து நூல்களும் சீனராலும் சிங்களராலும் எழுதப்பட்டன. புத்தனின் காலத்தை 500 அல்லது 1000 ஆண்டுகற்கு முற்பட்டதாக மாற்றி வரலாற்றை மறைக்க முயன்றனர் என்பதாகும். பசேநதி என்பவனே சந்திரகுப்தன். அவனை ஏமாற்றி அலெக்சாந்த மகாநாபனின் அடிமைப்படைத் தளபதி செல்யுக்கஸ்நகந்தனின் மனைவிக்கும் மகாநாபன் என்னும் கிரேக்கன் அலெக்சாந்தனுக்கும் பிறந்தவளைச் சந்திரகுப்தனுடன் புணரச்செய்து கட்டாயப்படுத்தி மணக்கச் செய்து; அவளுக்குப் பிறக்கும் வாரிசுகளுக்கே ஆட்சியுரிமை என அறிவித்து நாட்டைக் கைப்பற்றிக்கொண்டனர்; பசேநதியின் மகன் கரவேலனையும் நாடுகடத்திவிட்டனர். பசேநதியின் மகள் பிரிதாவை மணந்த சேத்சென்னிக்கும் நாட்டைக் கொடுக்க மறுத்துவிட்டனர். சேத்சென்னியின் மகன் கரிகால்சோழனே இறுதியில் அனைவரையும் வென்று; அலெக்சாந்தனின் மகனால் கெடுக்கப்பட்ட தனது தங்கையின் மகன் செங்குட்டுவனிடம் நாடுகள் அனைத்தையும் ஒப்படைத்தான். அமணத்தில் சேர்ந்து இறுதித் தீர்த்தங்கரனானான். அவனது சீடனாக இடம்பெறும் அநந்தனே செங்குட்டுவன். இதனையும் மறைத்து; கரிகால்சோழனைப் புத்தனாக்கி பல்வேறு பொய்யான வரலாறுகளைப் புனைந்து கல்வெட்டுக்களையும் உருவாக்கினர். கரவேலனின் கல்வெட்டுக்களைக் குறித்து மௌனம் சாதித்தனர். வரலாற்றில் இல்லாத அசோகனைப் புகுத்தினர். This inscription of Dhamma was engraved at the command of the Beloved of the Gods, the king Piyadassi. It exists in abridged, medium length, and extended versions, for each clause has not been engraved everywhere. Since the empire is large, much has been engraved and much has yet to be engraved. There is considerable repetition because of the beauty of certain topics, and in order that the people may conform to them. In some places it may be inaccurately engraved, whether by the omission of a passage or by lack of attention, or by the error of the engraver. அசோகனால் சிங்கத்தலைத் தூணில் வெட்டப்பட்டதாகக் காணப்படும் 14 முக்கியமான கல்வெட்டு வாசகங்களில் ஒன்று ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டுள்ளது. அதில் உள்ளபடி: " 'தம்மம்' குறித்துக் கடவுளர்க்குப் பிரியமான வேந்தர் பியதஸ்ஸியின் கட்டளைப்படி .. .. .. . இக்கல்வெட்டுக்கள் (என்னால் = Engraver) உருவாக்கப்பட்டுள்ளன." இதன்படி Gods - கடவுளர் எனப் பலரும், கல்வெட்டுக்களை உருவாக்கும்படி Commander - கட்டளையிட்ட வேந்தர் எனப் பியதஸ்ஸியும், கல்வெட்டுக்களை Engraver - வெட்டுவித்தவன் என ஒருவனும் உள்ளனர். பதினான்கு கல்வெட்டுக்களிலும் புத்தன், அசோகன் என்ற சொற்கள் இடம்பெறவில்லை. கடவுளர்க்குப் பிரியமான வேந்தர் பியதஸ்ஸி என மட்டுமே உள்ளன; கடவுளர் யார் என்பதும் இடம்பெறவில்லை. புத்த சமய நூல்கள் என நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள நூல்கள் பெருமளவில் புத்தர் பிறந்த இந்தியக் குடிமக்களுள் எவராலும் எழுதப்படவில்லை. சீனராலும் சிங்களராலும் எழுதப்பட்ட நூல்களே பெருமளவில் காணப்படுகின்றன. இவ்விரு நாடுகளும் சிங்கத்தைத் தங்களது அடையாளச் சின்னமாகக் கொண்டவை. புத்த சமயம் குறித்த நூலாகக் கருதப்படும் "அம்பத்த சூத்தா" என்னும் நூலில் 'ஞானம்' (விக்கா) என்பதன் கீழ் போக்கசாதி என்னும் பிராமண குருவின் சீடனான அம்பத்தா என்னும் பிராமணனுடன் புத்தரின் உரையாடல் இடம்பெற்றுள்ளது. அதில் புத்தர் குறிப்பிடுவது: "அம்பத்தா, கோசல வேந்தர் பசேனதியின் மானியத்தில் பிராமணர் போக்கசாதி வாழ்ந்துவருகிறார். ஆனால் அரசர் அவரைத் தம் எதிரில் வர அனுமதிப்பதில்லை அவருடன் ஆலோசனை செய்யும்போது ஒரு திரைச்சீலைக்குப் பின்னால் இருந்தே பேசுகிறார். .. .. "அம்பத்தா, வேந்தர் யானைமீதோ குதிரை மீதோ அமர்ந்து அல்லது நின்றுகொண்டு முக்கியப்பிரமுகர்களுடன் அல்லது மன்னர்களுடன் ஏதேனும் அரசாங்க விசயம்பற்றிப் பேசுகிறார் என்று வைத்துக்கொள்; அவர் அந்த இடத்தைவிட்டுப் போன பிறகு ஒரு பணியாள் (சூத்திரன்) அல்லது பணியாளின் அடிமை அந்த இடத்தில் நின்றுகொண்டு "வேந்தர் பசேனதி இப்படி இப்படிச் சொன்னார்" என்று கூறுவதாக வைத்துக்கொள்; அவன் வேந்தர் சொன்ன அதே வார்த்தைகளைத் திருப்பச் சொன்னாலும் அதனால் அவன் வேந்தராகவோ அல்லது அவரது அதிகாரிகளில் ஒருவராகவோ ஆகிவிடுவானா?" என்று அம்பத்தனிடம் கேட்பதாக உள்ளது. மேலும் புத்தருடன் இருப்பவர்கள் அனைவரும் புத்தரை "அமணகோதமர்" என்றுதான் குறிப்பிடுகிறார்கள். புத்தசமயம் தோற்றுவிக்கப்பட்டிருந்தால் அமணகொதமர் எனக் குறிப்பிடுவது ஏன்? அக்காலத்தில் வேந்தனே கடவுளாகக் கருதப்பட்டான். அவனுக்கு உதவியாக உள்ள மன்னர்களும் கடவுளராகக் கருதப்பட்டனர். மேற்கண்ட கல்வெட்டு வாசகங்களையும் அதற்குக்கீழே கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களையும்; புத்தரின் அம்பத்தனுடனான உரையாடலையும் கேள்வியையும்; சேர்த்து ஆய்வுசெய்ய வேண்டியது நமது கடமையாக உள்ளது. வரலாற்று நூல்களும் பிற்பட்ட வச்சிர நந்தியின் காலத்தில் எழுதப்பட்டவையே. மல்லிபாய் என ஒரு பெண்ணும் தீர்த்தங்கரியாக இருந்துள்ளாள். அப்பெண்ணே கரிகால் சோழனின் தங்கை. அவளைத் தீர்த்தங்கரிப் பதவியிலிருந்து நீக்கிவிடப் பெரும்முயற்சி செய்துள்ளனர். அலெக்சாந்தனின் மகனால் கெடுக்கப்பட்ட அவளைத் துரத்திவிட்டு; அலெக்சாந்தனின் மகனே தனைத் தீர்த்தங்கரனாக அறிவித்துக்கொண்டான். அவனே மகாவீர் என அமணத்தில் இடம்பெற்றவன். அப்பெண்ணின் பெயரை மல்லிநாத் என மாற்றியுள்ளனர். தீர்த்தங்கரர்களில் எண்ணிக்கையை 24 மற்றும் 25 எனக் குழப்பி; இறுதித் தீர்த்தங்கரனாக இருந்த கரிகால்சோழனையும் நீக்கிப் புத்தனாக்கி விட்டனர். 24 அல்லது 25 தீர்த்தங்கரரும் சைவைத்தில் சேர்க்கப்பட்டு மகாதேவனின் அவதாரங்களாக்கப்பட்டனர். அமணத்தில் இருந்த 63 ஸ்லோகிர்புருஷர்களை 63 நாயன்மார்களாக்கினர்.]

Saturday, 14 September 2013

வன்புணர்வுக்குத் தண்டனை தேவைதான்

வன்புணர்வுக்குத் தண்டனை தேவைதான் வன்புணர்வு குறித்து விழிப்புணர்வு இல்லாத கடந்த பல நூற்றான்டுகளாக எத்தனைபேர் தண்டனை பெற்றனர் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் 2000 ஆண்டுகற்கு முன்னர் ஒரு தமிழ்ப்பெண்ணை; அந்நியன் ஒருவன் கெடுத்தபொது சோழநாடே கொதித்தெழுந்து; கெடுத்தவனை இமையம்வரை துரத்திச் சென்றதோடு அவனது நாடான எகிப்துக்கும் ரோமுக்கும் சென்று நீதியை நிலைநாட்டிய தகவல்கள் நமது தொல்தமிழ்ப் பாடல்களில் இருப்பதை எந்த வரலாற்றாளராவது வெளிப்படுத்தினார்களா? தங்களது உயிரையும் மதியாது இறந்தோர் எத்தனைபேர் என்பது தெரியுமா? எத்தனை புலவர்களும் கணியர்களும் அலெக்சாந்தனால் கடதிச்செல்லப்பட்டார்கள் என்பது தெரியுமா? கரிகால்சோழனாலும் செங்குட்டுவனாலும் மீட்டுவரப்பட்ட புலவர்களால் பாடப்பட்டவையே கலித்தொகையும் பரிபாடலும் என்பதாவது தெரியுமா? திருமுருகாற்றுப்படையில் இடம்பெற்ற திருச்செந்தூர்; பரிபாடல் பாடல்களில் ஏன் இடம்பெறவில்லை என்பதாவது தெரியுமா? பரிபாடலில் 70 பாடல்களில் 22 மட்டுமே கிடைத்துள்ளன; காணாமல்போன 48ப் பாடல்களில் என்ன தகவல்கள் இருந்திருக்கும்? ஒரு விழுக்காடாவது இன்றைய ஆய்வாளர்களால் வெளிப்படுத்தப்பட்டதா? திருச்சந்தூர் மட்டுமல்ல வேடசந்தூரும் அன்று சந்தூர்களாக; இராவணனையும் இராக்கதரையும் அடக்கி; அவனுக்கு ஆதரவாக வந்த இந்திரனை விரட்டி; பின்னர் சந்து = சமாதானம் மேற்கொள்ளப்பட்ட இடங்கள் என்பதாவது தெரியுமா? சுரன் யார், சூரசம்ஹாரம் ஏன் நடந்தது, வெளிப்படுத்தும் பாடல்கள் எங்ஙே போயின? அமைதி நிலைநாட்டப்பட்ட பிறகும் தொல்லைகொடுத்த இந்திரன் யார் என்பதாவது தெரியுமா? இறையனார் கலவியல் ஏன் எழுதப்பட்டது? எந்தப்பெண்ணின் காதலையும் எந்த இந்திரனால் கெடுக்கப்பட்ட பெண் என்பதையும்; இறைவனே கலவுகொண்ட ஏமாற்றப்பட்ட பெஞையும் அவளது காதலையும் களவுப் புணர்வையும் ஒரு பொருட்டாக மதிக்கத் தேவையில்லை என இலக்கணம் வகுத்த இறையனாரையும் தேடுங்கள்! கண்டடைவீர்கள்! நற்றிணை:290: "வயல்வெள் ஆம்பல் சூடுதரு புதுப்பூக் கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் ஒய்நடை முதுபகடு ஆரும் ஊரன் தொடர்புநீ வெஃகினை ஆயின் என்சொல் கொள்ளல் மாதோ முள்எயிற் றோயே; நீயே பெருநலத் தையே அவனே 'நெடுநீர்ப் பொய்கை நடுநாள் எய்தி தண்கமழ் புதுமலர் ஊதும் வண்டு'என மொழிப; 'மகன்' என்னாரே" அகநாநூறு 36 புலவர் மதுரை நக்கீரன்: " பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்து கொடிவாய் இரும்பின் கோள்இறை துற்றி ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக் கூம்புவிடு பன்மலர் சிதையப்பாய்ந் தெழுந்து அரில்படு வள்ளை ஆய்கொடி மயக்கித் தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது கயிறிடு கதச்சேப் போல; மதம்மிக்கு நாள்கயம் உழக்கும் பூக்கேழ் ஊர; வருபுனல் வையை வார்மணல் அகன்றுறைத் திருமருது ஓங்கிய விரிமலர்க் காவில்; நறும்பல் கூந்தற் குறுந்தொடி மடந்தயொடு வதுவை அயர்ந்தனை என்ப அலரே; கொய்சுவற் புரவிக் கொடித்த்தேர்ச் செழியன்; ஆலங் கானத்து அகந்தலை சிவப்பச் சேரல், செம்பியன், சினங்கெழு திதியன், போர்வல் யானைப் பொலம்பூண் எழினி, நாரரி நறவின் எருமை யூரன், தேம்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மான், இயல்தேர்ப் பொருநனென்று; எழுவர் நல்வலம் அடங்க; ஒருபகல் முரைசொடு வெண்குடை அகப்படுத்து உரைசெலக் கொன்றுகளம் வேட்ட ஞான்றை வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே". அகம் 246: "பிணர்மோட்டு நந்தின் பேழ்வாய் ஏற்றை கதிர்மூக்கு ஆரல் கள்வன் ஆக நெடுநீர்ப் பொய்கைத் துணையொடு புணரும் மலிநீர் அகல்வாய் யாணர் ஊர! போதார் கூந்தல் நீவெய் யோளொடு தாதார் காஞ்சித் தண்பொழில் அகல்யாறு ஆடினை என்ப நெருநை;அலரே காய்சின மொய்ம்பின் பெரும்பெயர்க் கரிகால் ஆர்கலி நறவின் வெண்ணி வாயில் சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின் மீழிசை முரசம் பொருகளத்து ஒழியப் பதினொரு வேளிரொடு வேந்தர் சாய மொய்வலி அறுத்த ஞான்றை தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே". அகநாநூறு 212 பரணர் : "தா இல் நன்பொன் தைஇய பாவை விண்தவழ் இளவெயிற் கொண்டுநின் றன்ன மிகுகவின் எய்திய .. .. ..துவர்வாய் நயவன்.. .. அணங்குசால் அரிவையை நசைஇப் பெருங்களிற்று இனம்படி நீரின் கலங்கிய பொழுதில் பெறலருங் குரையள் என்னாய் .. .. .. .. . விரவுமொழித் தகட்டூர் வேண்டுவழிக் கொளீஇ மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன் பொருமுரண் பொறாஅது விலங்குசினஞ் சிறந்து செருச்செய் முனைப்பொடு முந்நீர் முற்றி ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய .. ..ஆனாது எளியள் அல்லோட் கருதி விளியா எவ்வம் தலைத்தந் தோயே" என செங்குட்டுவன் செயல்பட்டதைக் காண்கிறோம். நற்றிணை10: "அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும் பொன்நேர் மேனி மணியின் தாழ்ந்த நல்நெடுங் கூந்தல் நரையடு முடிப்பினும் நீத்தல் ஓம்புமதி பூக்கேழ் ஊர .. ." என. தூதுசென்ற புலவர் பரணர்: 247ல்: " .. .கோடுயர் நெடுவரை ஆடும் நாடநீ நல்காய் ஆயினும் நயன்இல செய்யினும் நின்வழிப் படூஉம் என்தோழீ; நல்நுதல் விருந்திரை கூடிய பசலைக்கு மருந்துபிறி தின்மைநன் கறிந்தனை சென்மே" என வேண்டுகிறார். அவனை நம்பி; ஓடிவிட்ட பாவையை மறுத்து; வழக்கு மன்றத்தில் முசுகுந்தன் மன்றாடியதைக்கண்டு வருந்தும் இளஞ்சேட்சென்னியை 184ல் காண்கிறோம்: " பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள், இனியே தாங்குநின் அவலம் என்றிர்; அதுமற்று யாங்கனம் ஒல்லுமோ அறிவுடை யீரே; உள்ளின் உள்ளம் வேமே, உண்கண் மணிவாழ் பாவை, நடைகற் றன்னஎன் அணியியற் குறுமகள்; ஆடிய மணிஏர் நிச்சியும் தெற்றியும் கண்டே" என.அவளது பாதுகாப்பு; பாரிக் குன்றின் பாதுகாப்பை ஒத்தது என; 253ல்: " புள்ளுப்பதி சேரினும்; புணர்ந்தோர்க் காணினும் பள்ளி யானையின் வெய்ய உயிரினை கழிபட வருந்திய எவ்வமொடு பெரிதழிந்து எனவ கேளாய் நினையினை நீநனி உள்ளினும் பனிக்கும் ஒள்இழைக் குறுமகள் பேர்இசை உருமொடு மாரி முற்றிய பல்குடைக் கள்ளின் வண்மகிழ்ப் பாரி பலவுஉறு குன்றம் போல பெருங்கவின் எய்திய அருங்காப் பினளே" எனக் கபிலன் குறிப்பிடுகிறான். பொய்நடத்தையால் ஏமாந்த சோழருக்காக கடிந்துரைக்கப்பட்டதைக் குறிப்பிடும் மருதன் இளநாகன்- 283ல்: " ..வல்லோர் ஆய்ந்த தொல்கவின் தொலைய இன்னை ஆகுதல் தகுமோ ஓங்குதிரை முந்நீர் மீமிசைப் பலர்தொழத் தொன்றி ஏமுற விளங்கிய சுடரினும் வாய்மை சான்றநின் சொல்நயந் தோர்க்கே" எனக்குறிப்பிடுகிறான்; மேலும் இழிநடத்தையைப் பாவையிடம் விளக்குவதாக; 290ல் : "... .. ... .. முள்எயிற் றோயே; நீயே பெருநலத் தையே அவனே 'நெடுநீர்ப் பொய்கை நடுநாள் எய்தி தண்கமழ் புதுமலர் ஊதும் வண்டு'என மொழிப; 'மகன்' என்னாரே" ஆண்மகனல்ல எனவும்;. 291ல்:முள்ளுர்த் துவன்றிய ஆரியர்க்கு; ஆ இனம் கைப்பற்றியதனால் பாவை கெட்டழிந்ததாகச் சோழன்சென்னிக்கு கபிலன் தகவல்கொடுக்கிறான். ".. .மாஇரு முள்ளூர் மன்னன் மாஊர்ந்து எல்லித் தரீஇய இனநிரை; பல்ஆன் கிழவரின் அழிந்தஇவள் நலனே" எனக்குறிப்பிடுகிறது. சுற்றத்தைப் பிரிந்த பாவையையும் கரவேலைப் பழித்த வனின் இழிவும் வெளிப்பட365ல்; ".. .."கல்வயற் படப்பை அவன்ஊர் வினவிச் சென்மோ? வாழி தோழி பல்நாள் .. .வான்தோய் மாமலைக் கிழவனைச் சான்றோய் அல்லை என்றனம் வரற்கே" என. இயற்றியவர் கிள்ளி மங்கலம் என்னும் ஊரைச்சேர்ந்தவர்; சோழன் கிள்ளி யார்? நற்றிணை15ல்: "முழங்குதிரை கொளீஇய மூரி எக்கர் நுணங்குதுகில் நுடக்கம் போல கணம்கொள .. .. பூவின் அன்ன நலம்புதிது உண்டு நீபுணர்ந் தனை.. .. மாசுஇல் கற்பின் மடவோள் குழவி பேஎய் வாங்கக் கைவிட் டாங்கு சேனும் எம்மொடு வந்த நாணும் விட்டேம் அலர்க இவ்ஊரே"என முசுகுந்தனால் கெடுத்துக்கைவிடப்பட்ட பாவையையும்; முசுகுந்தனுக்குப் பிறந்த மைந்தன் செங்குட்டுவனையும் குறிப்பிடப்படுகின்றனர். அகநாநூறு 212 ல் பரணர்: விண்தவழ் இளவெயிற் கொண்டுநின் றன்ன மிகுகவின் எய்திய .. .. ..துவர்வாய் நயவன்.. .. அணங்குசால் அரிவையை நசைஇப் பெருங்களிற்று இனம்படி நீரின் கலங்கிய பொழுதில் பெறலருங் குரையள் என்னாய் .. .. .. .. ." என்கிறான். இந்த்ச் சோழநாட்டுப்பெண்ணின் துயரத்தையும் முடிவையும் அறிய விரும்புவோர் தொல்தமிழ்ப்பாடல்களில் உள்ள கலித்தொகைப் பாடல்களையும் அதற்கு உரை செய்த நச்சினார்க்கினியரின் உரையும் கண்டு; அப்பெண்ணைப் புணர்ந்து கெடுத்தவன் யார் என்பதை வெளிப்படுத்தலாம்.