Tuesday 24 December 2013

வரலாறு சரியா? நமது வரலாறு ஓர் அறிமுகம்

வரலாறு சரியா? நமது வரலாறு ஓர் அறிமுகம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனத் தொகுப்புநூல்கள் எவையும் இல்லை. பல்லாரிரம் பாடல்களில் சீராக வெளிப்பட்ட ஒரு வரலாற்றுப் பெருங்கதையைச் சிதறடித்து; அவற்றின் கருத்துக்களைத் தொகுத்து மாற்றி அமைக்கப்பட்டவையே இவை. பத்துப்பாட்டு. 1. திருமுருகாற்றுப்படை - முருகன் - செங்குட்டுவன் 2. பொருநராற்றுப்படை - கரிகால்வளவன் 3. சிறுபாணாற்றுப்படை - நல்லியற்கோடன் - செங்குட்டுவன் 4. பெரும்பாணாற்றுப்படை - இளந்திரையன் - செங்குட்டுவன் 5. முல்லைப்பாட்டு - நெடுநல்வாடையுடன் சேர்ந்தது - இரண்டாம்செழியன் - வெற்றிவேற்செழியன் - செங்குட்டுவன் 6. மதுரைக்காஞ்சி - சோழரால் ஆட்சிபெற்ற முதற்செழியனின் தந்தைக்கும் செழியனுக்கு அறிவுறுத்தியது 7. நெடுநல்வாடை - முல்லைப்பாட்டுடன் சேர்ந்தது - இரண்டாம்செழியன் - வெற்றிவேற்செழியன் - செங்குட்டுவன் 8. குறிஞ்சிப்பாட்டு - சிறைப்பிடிக்கப்பட்ட ஆரியவரசன் பிரகத்தனுக்கும் பிறருக்கும் களவுப் புணர்வு குறித்த எச்சரிக்கை 9. பட்டினப்பாலை - கரிகாற்பெருவளத்தான் 10. மலைபடுகடாம் - நன்னன் சேய்நன்னன் - செங்குட்டுவனின் தந்தை மற்றும் செங்குட்டுவன். இவற்றுள்; 8 ஒன்று, 6 ஒன்று, 2 9 சேர்ந்து ஒன்று, 3 4 5 7 10 சேர்ந்து ஒன்று, இறுதித் தொகுப்பாக 1; ஆக 5 தொகுப்பாகக் காணலாம். இவற்றுள் முல்லைப்பாட்டு; சில பாடல்களைச் சேர்த்து அரேபியருடன் சேர்ந்த முதல்செழியனையும் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. பழம்பாடல்களைத் தொகுத்த புலவர்களும் தொகைநூல்களாக்கிய பாண்டிய மன்னர்களும் மதுரையைச் சேர்ந்தவர்களே. மதுரையில் திரமிள சங்கம் உருவாக்கப்பட்ட காலம் முதலாகவே முந்தைய பாடல்களைத் திரட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. அலெக்சாந்தன் பிடித்துச்சென்ற அறிஞர்களும் புலவர்களும் கொலைசெய்யப்பட்ட பின்னர் எஞ்சியிருந்த புலவர்களையும் ஏடுகளையும் மதுரைக்குக் கொண்டுசென்று மதுரைப் புலவர்களாக மாற்றப்பட்டனர். இவற்றை உணர்த்துவனவே களவியல் நூலும் பாயிரமும் உரைகளும் பாண்டிய மன்னர்களைப் புகழ்ந்து பாடும் பாடல்களும். எஞ்சியிருந்த புலவர்களால் இயற்றப்பட்ட சிலபாடல்களும் பழம்பாடல்களுடன் சேர்க்கப்பட்ட சில அடிகளும் ஆடையாளப்படுத்த இயலாத வண்ணம் திறமையாகப் பண்ணப்பட்டுள்ளன. பாண்டியரைப் பெருமைப்படுத்தும் நோக்கிலும், செங்குட்டுவனின் தந்தையைப் பல பாடல்கள் முரண்மிகு செல்வன் எனக் குறிப்பிட்ட போதிலும்; கடவுளாகவும் தெய்வமாகவும் உயர்த்திக் காட்டும் எண்ணமும் மேலோங்கியதால் வரலாற்றை மாற்றிச் செங்குட்டுவனின் தந்தையின் பெயரைப் பலமாற்றங்களுக்கு ஆட்படுத்தி; பலவற்றை நீக்கியும் சேர்த்தும் சிதைத்தனர். செங்குட்டுவனின் தந்தையை; உள்ளம்கவர் கள்வன் எனத் தலைவனாகப் புகழ்ந்தனர். புலவர்களின் பெயர்களிலும் அவனது பெயர்களில் ஏதாவதொன்றைச் சேர்த்து; எங்கெங்கோ இருந்த செல்லூரை மதுரைக்கும் கொண்டுசெல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. செங்குட்டுவனின் தாய் கன்னியாக இருந்தபோது சோழநாட்டில் புணர்ந்து கெடுத்ததை மறைத்து வையையில் புணர்ந்ததாக மாற்றினர். கரவேலனால் அடித்து நொறுக்கி அடக்கப்பட்ட செழியன் குறித்த பாடல்களை நீக்கிப் புகழ்பரப்பும் பாடல்களச் சேர்த்தனர். செழியனைத் திருமாலின் அவதாரமாகக் காட்டும் முயற்சியும் நடந்தது. ஆனால் செங்குட்டுவனின் தாய்மாமன் கரிகாலுடன் சேர்ந்து வலிமைபெற்றபோது; வெள்ளை, பால்நிறவண்ணன், பனைக்கொடியோன் என்றெல்லாம் போற்றப்பட்ட பலராமனான பாண்டியன் செழியன் நீக்கப்பட்டான். குணாட்டியரால் இயற்றப்பட்ட; கபிலரின் குறிஞ்சிப்பாட்டின் அடிக்குறிப்பில் இடம்பெற்ற பிரகத்தனைத் தலைவனாகக் கொண்ட ஒரு மாபெரும் காப்பியநூல் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. மேலும் கண்ணில் கண்ட நூல்கள் சிலநாட்களில் காணாமல் போய்விடுவதாகப் பல நூல்களைப் பதிப்பித்த உ. வே. சா அவர்களும் மயிலை சீனி வேங்கடசாமி அவர்களும் குறிப்பிட்டுள்ளனர். பிரகத்தனை முதன்மையாகக் கொண்ட நூலான பிரகத்கதா என்னும் நூலைப் போன்றதே கொங்கு வேளரின் பிரகத் கதா அல்லது உதயணன் கதையும் ஆகும். அதிலும் முதற்காண்டமும் இறுதிக் காண்டமும் காணாமல்போய் விட்டதாகக் குறிப்பிடும் உ. வே. சா அவர்கள் அதற்குப் பெருங்கதை என்று பெயரிட்டுள்ளார். .பதிற்றுப்பத்தின் முதல் பத்தும் இறுதிப் பத்தும் நீக்கப்பட்டுவிட்டன. பரிபாடலின் பாடல்களில் 48ப் பாடல்களை நீக்கியுள்ளனர். வரலாற்றை வெளிப்படுத்தும் பாடல்களே பெருமளவில் நீக்கப்பட்டு விட்டதால் தெளிவான வரலாற்றை அறிவதும் ஆட்சியாளனை அடையாளப் படுத்துவதும் எளிதாக இல்லை. பத்துப்பாட்டு என்னும் தொகுப்பு எதிலுமே குறிப்பிடப்படவில்லை எனப் பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அவற்றைப் பெற்றோரும் வைத்திருந்தோரும் வெளியிடப் பலகாலம் தயங்கியதாகக் குறிப்பிடுகின்றனர். காரணம் அப்பாடல்களில் தங்களது விருப்பம்போலப் பல சேர்க்கைகளைச் செய்தவர்கள் அச்சப்படுமளவுக்குப் பல மாற்றங்களைப் புகுத்தினர் என்பதே. வேறு எவராவது வெளியிட்டு; வரலாற்றைச் சிதறடித்த தகவல்கள் வெளிவந்துவிட்டால் என்ன செய்வது என்கிற அச்சமும் இருந்துள்ளது. ஆயினும் பல முரண்பட்ட, ஒன்றுக்கொன்று மாறுபட்ட தகவல்கள் எல்லாத் தொகுப்புக்களிலும் இருக்கவே செய்கின்றன. சோழநாட்டை ஆட்சிசெய்வதற்கான நிலையை; சத்திரியன் அல்லாத செழியனிடம் ஒப்படைக்கும் முன்னர் நடந்த நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வரலாறுகொண்ட தமிழ்ப்பாடல்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டன. இங்கும் அங்குமாக சில மட்டுமே கிடைக்கின்றன. அவையும் புராணகால நிகழ்வுகளைப் போன்று தோற்றமளிக்கின்றன என்பதை உணர்ந்து அவற்றில் உள்ள உண்மை வரலாற்றைக் காணவேண்டும். வெற்றிடங்களை நிறப்ப; வேத இதிகாச புராணங்களுடன் அந்நியப்பயனிகளின் குறிப்புக்களும் உதவுகின்றன. காரணம் தமிழ்ப்பாடல்களை களவியல்நூலைப் புகுத்திய காலத்தில் இலக்கணங்களையும் திணை துறைகளையும் புகுத்தி சீரான வரிசியை நீக்கிச் சிதறடித்துவிட்டனர் என்பதே. சந்திரகொற்றனின் தந்தை போரசின் காலத்திலிருந்துதான் வரலாற்றை வெளிப்படுத்தும் சான்றுகள் கிடைக்கின்றன. பிளுடார்க்கின் நூற்குறிப்புக்கள் பலதொகுதிகளையும் பக்கங்களையும் கொண்டவை. அந்நூலில்: "போரசுடனான அலெக்சாந்தனின் போர் மாசிடோனியரின் வீரத்தை மழுங்கடித்து; அலெக்சாந்தனின் வீரத்துக்குச் சவால் விடுவதாகவும் மாசிடோனியரின் (ஒரு அலெக்சாந்தனும் அவனது வீரர்களும் மாசிடோனியர்கள்) வீரத்தை மழுங்கடிப்பதாகவும் [இந்தியாவுக்குள்] தங்களது 20 000 தரைப்படையினரும் 2000 குதிரை வீரரும் ஒரு பெரும் எதிரிப் படையை வீழ்த்துவது இயலாது என்பதை அலெக்சாந்தனுடன் வந்த படைவீரர்கள் அறிந்திருந்தார்கள்" என உள்ளது. சன்டிரகொட்டஸ் அல்லது அண்டிரகொட்டஸ் எனப்படும் சந்திரகொற்றன் சிறுவனாக இருந்தபோது தட்சசீலத்தில் அலெக்சாந்தனைப் பார்த்ததாக அமைச்சன் சாணக்கியனின் [விசுவாமித்திரன்] குறிப்பும் கிரேக்க வரலாறும் குறிப்பிடுகின்றன. சில ஆன்டுகளுக்குப் பிறகு பெரும்படையுடன் வந்து போரசுடன் மீண்டும் போடிட்டுள்ளான். ஆயினும் அவனால் முன்னேற முடியவில்லை. இந்நிலையில் சிந்து ஆப்கானிஸ்த்தான் பஞ்சாப்வரை வென்ற நிலையில் மேலும் வலிமையைப் பெருக்கும் எண்ணத்தில்; வெற்றிகொள்ளப்பட்ட நாடுகளை விட்டுத் திரும்பிச்செல்லும் வழியில் நோயுற்று மாண்டான் எனத் தெரிகிறது. ஏதோ ஒரு வகையில் அலெக்சாந்தனால் விசுவாமித்திரன் அவமதிக்கப்பட்டுள்ளான். விசுவாமித்திரனைச் சாணக்கியன் விஷ்ணுகுப்தன்; மகதத்தை மீட்கச் சபதமிட்டவன் என்றெல்லாம் பலநூல்களும் குறிப்பிடுகின்றன. மீண்டும் போர்தொடுக்கப் பெரும்படையுடன் வந்தவனே மற்றொரு அலெக்சாந்தன். செல்யுகஸ் நகந்தனின் படையையும் சேர்த்துக் கங்கைநதியைக் கடக்க முயன்றுள்ளனர். அதனை செல்யுகஸ்நக்கந்தன் ஏற்கவில்லை என்பதை: "32 பர்லாங் அகலமும் நூறடிக்கு மேற்பட்ட ஆழமும் கொண்ட கங்கையாற்றைக் கடந்து அக்கரையில் படைவீரர்களல் காக்கப்படும் எதிரியுடன் போரிடச்சொல்வது ஒரு சூழ்ச்சியாகக் கருதப்பட்டது" என ப்ளுடார்க் குறிப்பிட்டுள்ளான். "அக்கரையில் 80000 குதிரைவீரர்கள், 6000 யானைகள் எதிர்த்து நிற்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்; தட்ச சீலத்தின் அருகில் உள்ள நகரங்களை வீரர்கள் துணிவுடன் பாதுகாத்தனர்; அலெக்சாந்தனைப் பெருமளவுக்குத் தொல்லைப் படுத்தினர். இறுதியில் ஒரு ஒப்பந்தத்துடன் இருபடையினரும் பின்வாங்கினார்கள்" "பின்வாங்கிச் சென்ற அலெக்சாந்தன் தட்சசீலப் படையினரைத் தாக்கினான்; இந்த வாக்குத்தவறிய நடத்தை அலெக்சாந்தனின் சாதனைகளின் மீது ஒரு கலங்கமாகப் படிந்துவிட்டது" எனவும் குறிப்பிடுகிறது. அந்நிலையில் அலெக்சாந்தனுடன் கங்கைநதியைக் கடந்துசென்று போரிடுவதை செல்யுகஸ்நகந்தன் விரும்பவில்லை. செல்யுக்கஸ்நக்கந்தனின் மனைவியைப் புணர்ந்த முதல் அலேக்சாந்தனால் பிறந்த குழந்தையே ஹெலன். அப்பெண்ணை மாபாரதமும் புராணங்களும் கங்கை திசா சத்தியவதி எனப் பலவாறு குறிப்பிட்டுச் செல்யுக்கஸ்நகந்தனைப் பிரகத்தன் சம்பரன் வளர்ப்புத் தந்தை எனவும்; அலெக்சாந்தனை ரிச்சிகன் வசிட்டன் பூர்ணகாசியப்பன் எனவும் குறிப்பிடுகின்றன. சந்திரகொற்றன் இளைஞனாக பெருவீரனாக வளர்க்கப்பட்டதால் தடுத்து நிருத்தப்பட்டனர். அந்நிலையிலும் மகதத்தின் மீதும் அலெக்சாந்தன் மேலான்மை பெற்றுத் தலைமைப் புரோகிதனாகத் தன்னை நிறுவிக்கோண்டுள்ளான். மேலும் தான் வென்ற நாடுகளைச் செல்யுகஸ்நகந்தனிடம் கொடுத்துள்ளான் எனவும் தெரிகிறது. அவனுடனும் சந்திரகொற்றன் போரிட்டுப் பல பகுதிகளை மீட்டதாகவும் தெரிகிறது. "இந்தியர் வாய்மொழியாலேயே ஒப்பந்தங்களைச் செய்துகொண்டார்கள்; நேர்மையுடன் நிறைவேற்றினார்கள். ஒருபோதும் பொய்யுரைத்ததாகக் குற்றம்சாட்டப்படவில்லை". "கைவிட்டுப்போன எல்லைப்புறங்களைக் கைப்பற்ற செலூக்கஸ் நிகேடார் முயன்றான். ஆனால் துரத்தப்பட்டுச் சந்திரகொற்றனுடன் உடன்பாட்டுக்கு வந்தான். உடன்பாடு போலவே ஒருவித மண ஒப்பந்தமும் ஏற்பட்டது. அங்கு அதிககாலம் ஆட்சியிலிருக்காத சந்திரகோட்டஸ் தன்னால் வென்று கைக்கொள்ளப்பட்ட ஆறாயிரம் வீரர்களையும் ஒட்டுமொத்தமாக ஐநூறு யானைகளையும் செல்யுக்கஸ் நிகந்தனுக்குக் கொடுத்தான்" என்கிறது. "சில ஆன்டுகளுக்குமுன்; எல்லைப்பகுதிகளிலும் பஞ்சாப் பகுதிகளிலிருந்தும் 70 000 பேருக்குமேல் சிறைப்பிடித்துச் சென்றிந்தான். அலெக்சாந்தனுடன் சேர்ந்துகொண்ட அரசர்களையும் வீரர்களையும் வசைபொழிந்து அவனை எதிர்க்குமாறு வற்புறுத்திய குடியரசுகளின் முனிவர்களும் ஞானிகளும் அலெக்சாந்தனுக்குத் தொல்லைகொடுப்போராக இருந்ததால்; பலரைப் பிடித்துத் தூக்கிலிட உத்தரவிட்டான். " எனவும் குறிப்பிடுகிறது. ஞானியரும் முனிவர்களும் எனப் ப்ளுடார்க் குறிப்பிடுவது தமிழ் அமண அந்தண முனிவர்களையும் புலவர்களையும் தான். தொல்தமிழ்ப்பாடல்களில் பல்லாயிரக்கணக்கில் அதனை வெளிப்படுத்தும் பாடல்களும் தத்துவப்பாடல்களும் கொள்கைப்பாடல்களும் வெளிநாடுகளில் இயற்றிப் பாடப்பட்டவையும் உள்ளன. புலவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கவும் கூடும் என்பதையும் மறுக்கமுடியாது. அனைத்துப்பாடல்களும் சந்திரகொற்றன் முதலாக செங்குட்டுவன் வரையிலான கிட்டத்தட்ட 200 ஆண்டுகற்கு உட்பட்ட வரலாற்றையும் தென்னகம் ஓய்ந்துவிடவில்லை; மேலை நாட்டினரும் தங்களது நடத்தைகள மாற்றுமளவுக்கு நமது மேன்மைகள் வெளிப்பட்டன என வெளிப்படுதுகின்றன. அதன்பின்னர் எஞ்சிய புலவர்களால் இயற்றப்பட்டவையே திருமுருகாற்றுப்படை கலித்தொகை போன்றவை. மெகஸ்தனிசின் குறிப்புக்களுக்கு டயடோரஸ் சிக்யுலஸ் கொடுத்த விளக்கம்: "இந்திய முனிவர்களும் ஞானியரும் விதித்துள்ளவற்றுள் குறிப்பிடத்தக்க பண்டைய தத்துவமாக இருந்த ஒன்று மெச்சதக்கதாகும். அதன்படி இந்தியருள் எவரும் எந்தச் சூழ்நிலையிலும் அடிமையாக இருப்பதை ஏற்பதில்லை. அச்சுறுத்தலுக்குப் பணியாமல், அனைவரின் உரிமைகளையும் மதித்தார்கள். சூழ்நிலை மாற்றங்களுடன் தங்களைத் தகவமைத்துக் கொள்ளக் கற்றிருந்தார்கள்.. .. ."; "கிரீஸின் எந்த ஒரு அரசும் வரலாற்றின் எந்தக்கட்டத்திலும் நேர்மையுடன் நடந்துகொண்டதாக உரிமைகோர முடியாது. ஹெலனிய அரசில் அன்றாட நடப்பாக முடிவற்ற சட்டப்புரட்டுக்கள் நீதித்துறைகளில் நடந்தன" எனக் குறிப்பிடுகிறான். மனு: 11.75: "வேதமோதின, அக்னிஹோத்ரிகளாயும் இருக்கிற; மூன்று வருணத்தாருள் எவரேனும்; ஒழுக்கமில்லாத பிராமணனை அக்ஞானத்தால் கொன்றுவிட்டால்; தோஷம் நீங்க ஜிதேந்திரியாளாய், கொஞ்சமாகப் புசித்துக் கொண்டு, ஒரு வேதத்தை முழுவதுஞ் சொல்லிக் கொண்டு, நூறுயோசனை தூரம் புண்ணிய யாத்திரை செய்ய வேன்டும்; (நாடுகடத்துதல்) 11.78: இவ்விதமாகப் பன்னிரண்டு வருசம் விதிப்படி க்ஷவுளஞ் செய்து கொண்டு, அவ்வூர் ஓரத்தில் இருக்கப்பட்ட மாட்டுத் தொழுவத்தில் இருந்து; பசு, பிராமணர் இவர்களுக்குபகாரஞ் செய்யவேண்டியது; 11.81:இவ்விதவிரதமுள்ளவனாய் மனதையடக்கி 12வருசம் ஸ்த்ரீபோகமில்லாது சீவித்தால் தோசத்தினின்றும் நீங்குவான்"; மேற்கண்ட தண்டணைகளை மனுவின் பெயரால் அரசர்க்கும் மேலான படிநிலையை உருவாக்கி; தலைமைப் புரோகிதனான பூர்ணகாசியப்பன் மற்றும் காசியப்பன் என்னும் வசிட்ட அலெக்சாந்தர்களின் சந்ததியினரே விதித்துள்ளனர். வேதங்களில் இவற்றுக்கான சான்றுகள் விரிவாக உள்ளன. ரிக்வேதத்தில் போரஸ் என்னும் பெயர்; புருஷ், பூர்வசிரஸ் புருரவஸ் எனப் பலவாறு இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. மேலும் பல கிரேக்கப்பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ரிக்வேதம்: புருசசூக்தம்; 10ம் மண்டலம் 90ஆம் பாடல் முதலாக: புருடனை அசீவகனாக; ஆயிரம் தலைகளுடனும் ஆயிரம் கண்களுடனும் புவியின் எல்லாப்பகுதிகளிலும் பரவி; சீவர்களின் காவலனாக இருப்பதாகத் தெரிவிக்கிறது; அவனால் முன் நிருத்தப்பட்ட கடவுளர்- மன்னர்- காவலர்களாகச் செயல்பட்ட 1000பேரையும் குறிப்பிடுகிறது. பின்னர் போரசின் மகன் சந்திரகொற்றனையும் புருடனாகப் பலிகொடுத்ததைக் குறிப்பிடுகிறது. பலியிடுதல் என்றால் இந்தியத் தீபகற்பத்தை மூன்றாகப் பிரித்து ஒவ்வொன்றிலும் ஒரு தலைமைப்புரோகிதனை அமர்த்தி; ஆட்சியில் பல மாற்றைங்களைப் புகுத்தி; புருடனை மகா இந்திர பிரஜாபதியாக்கிப் பிற ஏழு ஆட்சியாளர்களைத் திசைக்காவலராக அமர்த்திப் பிரஜாபதியான தனக்குக் கட்டுப்பட வைக்கும் சடங்கு. பிரஜாபதி என அலெக்சாந்தர்களே வசிட்டன் எனவும் உள்ளனர்; உண்மைப் பெயர்கள் இல்லை. காசிநகரைப் பெற்றுக்கொண்ட அலெக்சாந்தன் வசிட்டனாகவும் பூர்ணகாசியப்பனாகவும் மனு எனவும் வேத இதிகாச புராணங்களில்; புருடனுக்கும் மேலானவனாக இடம்பெறுகிறான். ரிக்வேதம்: புருசசூக்தம்: 10ம் மண்டலத்தில் கிரேக்கர், சந்திரகொற்றனின் தந்தையையும் சந்திரகொற்றனையும் அடிமைப் படுதியதைக் குறிக்கும் பாடல்களின் எண்ணிக்கை வரிசைமாறி 15ம்; பிறவேதங்களில் 15முதல் 22வரையும் மொழிபெயர்ப்புக் குறைகளுடன் உள்ளன. வேதப்பாடல்களின் பொருளைச் சரியாக உணர்ந்து அனைவரும் ஏற்கத்தக்கதாக மொழிபெயர்ப்பது இயலாது. எழுத்துக்கள் அறியப்பட்டபோதிலும் அவற்றின் படிமவடிவ மொழியை எவராலும் துல்லியமாக அறிய இயலவில்லை. 1. புருஷன் புவியின் எல்லாப்பக்கங்களிலும் பரவி அதைவிட விஞ்சி நிற்கிறான். 2. புருஷனே இதுவரை இருந்துவந்துள்ள இனி இருக்கப்போகும் இந்த முழுப்பிரபஞ்சமும் ஆவான். அவன் அழியாமையைத் தரும் தலைவன். அவன் சீவர்களின் உணவாக எங்கும் பரவுகிறான். 3. அவனுடைய முக்கால் பங்கு அளவு சோதியில் (சூரியனில்) நிலைத்துள்ளது. 4. அது பல வடிவங்களில் உயிருள்ளவற்றிற்கும் உயிரற்றவற்றிற்கும் சென்றது. 5. அவனிடமிருந்து விராஜன் பிறந்தான்; விராஜனிடமிருந்து புருஷன் பிறந்தான்; பிறந்தவுடன் முன்னும் பின்னும் இருந்ததைவிடப் பூமியைப் பெரிதாக்கினான். 6. தேவர்கள் புருஷனைப் பலிப்பொருளாக்கி (தலைமைக் காப்பாளனாக்கி மூன்று நாடுகளாகப் பிரித்து) யக்ஞத்தை நடத்தியபோது அதற்கு வசந்தம் நெய்யாயிற்று; கோடை விறகாயிற்று; சரத்காலம் அவிப்பொருளாயிற்று. 7. சிருஷ்டிக்கு (மூன்றாகப்பிரிபதற்கு) முன்பிறந்த புருஷனை அவிப்பொருளாகத் தர்ப்பைப்புல்லால் தெளித்துப் பலியிட்டனர். சாத்தியர்களும் ரிஷிகளுமான தேவர்கள் புருஷனை அவிப்பொருளாகக்கொண்டு யக்ஞத்தை நடத்தினார்கள். 8. யக்ஞத்தில் தயிரும் நெய்யும் தோன்றி வானத்தில் சஞ்சரிக்கும் பிராணிகளையும் சாதுவான விலங்குகளையும் கொடிய வன விலங்குகளையும் உருவாக்கின. 9. யக்ஞத்திலிருந்து ரிக், சாம வேதங்கள் தோன்றின; சந்தங்கள் பிறந்தன, யஜுர் தோன்றியது. 10. யக்ஞத்திலிருந்து குதிரைகள் இருவரிசைப் பற்களுள்ள விலங்குகள் அனைத்தும்; பசுக்கள் ஆடுகளும் தோன்றின. 12: பிராமணன் அவனது வாயானான், ராசன்யன்-வேந்தன் கைகளானான், தொடைப்பகுதி வைசியனாயிற்று, பாதங்களில் சூத்திரர் பிறந்தனர் (எனவும்; இவற்றுக்கு மாறாக) 13. அவனது மனத்திலிருந்து சந்திரனும், கண்களிலிருந்து சூரியனும், வாயிலிருந்து இந்திரனும் அக்கினியும், சுவாசத்திலிருந்து வாயுவும் பிறப்பிக்கப்பட்டனர் (என ஐவரைக் குறிப்பிட்டு; மேலும் முரண்படுவதாக) 14. அவனது நாபியிலிருந்து காற்று, சிரசிலிருந்து வானம், பாதங்களிலிருந்து புவி, செவிகளில் இருந்து திசைகள் பிறந்தன; தேவர்களால் இவை பிறப்பிக்கப்பட்டன. 15: தேவர்கள் புருஷனைப் பலி உயிராகக் கட்டிப்போட்ட போது; நெருப்பைச் சுற்றிலும் ஏழு கழிகளை நட்டனர்; மூ ஏழு சமித்து விறகுகள் உருவாக்கப்பட்டன. இதன்பின்னராக மேலும் வெள்ளை யஜுர்வேத வாஜனேயிசமிதை xivல் சேர்க்கப்பட்ட 6 பாடல்கள் உள்ளன. 16. தேவர்கள் யக்ஞத்தால் யக்ஞத்தை நடத்தியது முதல் சடங்கானது; இப்பெரும் சக்திகள் பழைய சாத்தியர்களும் தேவர்களும் வசிக்கும் வானுலகுக்குச் சென்றன. 17. நீரிலிருந்தும் பூமியின் சாற்றிலிருந்தும் அவர் விசுவகர்மாவால் ஆரம்பத்தில் உருவாக்கப்படுகிறார்; துவஸ்தா அவருக்கு உருவைக் கொடுக்கிறார்; அதுதான் ஆரம்பத்தில் புருஷனின் பிரபஞ்சமாகும். 18. சூரியனைப் போன்ற வண்ணத்தையும் இரவைக் கடந்தும் உள்ள இம்மஹாபுருஷனை எனக்குத் தெரியும்; அவனை அறிவதன்மூலமே ஒருவர் இறப்பைக் கடந்திருக்க முடியும்; அதைவிட வேறுவழியில்லை. 19. பிரஜாபதி கர்ப்பப்பையின் உள்ளே நகருகிறார்; பிறவாதிருந்தபோதிலும் அவர் பல உருவங்களில் பிறந்திருக்கிறார். அறிவாளிகள் அவரது இருப்பிடத்தைப் பார்க்கிறார்கள்; அறிவாளிகள் மரீசிகள் இருக்கும் இடத்தைப் விரும்புகிறார்கள். 20: கடவுளர்களுக்காக ஒளிவீசிப் பிரகாசிக்கவும்; பூசாரிகளாகக் கடவுளர்க்கு முன் யார் அமர்த்தப்பட்டார்களோ; அந்தப் பிரமாவின் ஒளிவீசிப் பிரகாசிக்கும் பிள்ளைகளை வணங்குவோம். 21ல் பிரமாவின் ஒளிவீசும் பிள்ளைகளைப் படைத்து; பிராமணரின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியவர்களே கடவுளர்கள் என்பதை கடவுளர்க்கு ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டுள்ளதைப் பிராமணர் நன்கு அறிந்திருக்கிறார்கள். 22. ஸ்ரீயும் இலக்குமியும் அவரது மனைவிமார்கள்; பகலும் இரவும் பக்கங்கள்; வின்மீன்கள் அணிமணீகள்; அஸ்வினிகள் பிரகாசமான முகம்; நான் விரும்பியதை அளிப்பீராக; ஒவ்வொன்றையும் எனக்கு அளியுங்கள். மேற்கண்டவைதான் புருஷசூக்தப் பாடல்களாக; ம்யுர் அவர்களின் நூல்தொகுதி 1ல் காட்டப்பட்டுள்ளன. இவற்றுள் 15ல் குறிப்பிடப்பட்ட தகவல்கள் பழந்தமிழ்ப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன. ஆவூர் மூலங்கிழாரின், வேள்வி செய்த சோநாட்டுப் பூஞ்சாற்றுப் பார்ப்பான் சௌணியன் விண்ணந்தாயனைப் பாடியதாக புறநானூறு- 166: “நன்றாய்ந்த நீள்நிமிர்சடை முதுமுதல்வன் வாய்போகா தொன்றுபுரிந்த ஈரிரண்டின் ஆறுஉ ணர்ந்த ஒருமுதுநூல் இகல்கண்டோர் மிகில்சாய்மார் மெய்யன்ன பொய்யுணர்ந்து பொய்யோராது மெய்கொளீஇ மூவேழ்துறையும் முட்டின்றுபோஇய உரை சால் சிறப்பின் உரவோர் மருக விணைக்கு வேண்டி நீ பூண்ட புலப் புல்வாய்க் கலைப் பச்சை சுவல் பூண்ஞான் மிசைப் பொலிய மறம் கடிந்த அருங் கற்பின் அறம் புகழ்ந்த வலை சூடிச் சிறு நுதல் பேரகல் அல்குல் சில சொல்லின் பல் கூந்தல் நிலைக் கொத்தநின் துணைத் துணைவியர் தமக் கமைந்த தொழில் கேட்பக்; காடு என்றா நாடு என்று ஆங்கு ஈர் ஏழின் இடம் முட்டாது நீர் நாண நெய் வழங்கியும் எண் நாணப் பல வேட்டும் மண் நாணப் புகழ் பரப்பியும் அருங் கடிப் [எருங் காலை விருந் தூற்றநின் திருந் தேந்துநிலை என்றும் காண்கதில் அம்மயாமே குடாஅது பொன்படு நெடுவரைப் புயலேறு; சிலைப்பின் பூவிரிப் புதுநீர் காவிரி புரக்கும் தண்புனற்படப்பை எம்மூ ராங்கண் உண்டும் தின்றும் ஊர்ந்து மாடுகம் செல்வல் லத்தை யானே செல்லாது மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக் கழைவளர் இமையம் போல நிலீஇயர் அத்தைநீ நிலமிசை யானே?” என உள்ளபாடலின் குறிப்பில் வேள்வி பண்ணிய கரவேலனையும், வேள்வியை முன்நின்று நடத்திய விசுவாமித்திரனின் பெயரையும் மாற்றியுள்ளனர். அமணத்தை வழிநடத்திய முதுமுதல்வன் விசுவா மித்திரன் விதித்த முதுநூலின்படி வேள்வியை நடத்திக் கொடுத்தவன் விசுவாமித்திரனே. 'நீடிய சடையொடு ஆடாமேனி குன்றுறை தவசியர்'ஆன 'நன்றாய்ந்த நீள்நிமிர்சடை' அமண முதுமுதல்வன் விசுவாமித்திரனின் நூலை; இகல்கண்டு பொய்யுரைத் தோரின் பொய்கொளாது; மெய்கொண்ட, உரை சால் சிறப்பினராக போரசின் சூரியகுடியினர் காட்டப்படு கின்றனர். இம்முதுகுடியின் உரவோனாக ஆட்சியாளனாக கரவேலனைக் காட்டுகிறார். உரைசெய்தோர் 'நன்றாய்ந்த நீள்நிமிர் சடை முதுமுதல்வன்' சிவன் எனத் தவறாகக் காட்டுகின்றனர்; அக்காலத்தில் சிவன் என எங்குமே இடம்பெற்றதில்லை; முக்கண்ணான் கறைமிடற் றன்னல் கறைமிடற்றொருவன் மட்டுமே காணப்படுகிறான். எனவே மேற்கண்ட முதுகுடியின் உறவோனக இடம் பெறுவோனே சந்திரகொற்றனின் மகன் கரவேலன் எனக் காண்கிறோம். தலைமைப் புரோகிதனாக வசிட்டன் இருக்க விசுவாமித்திரன் எப்படி வேள்விசெய்தான்? சந்திரகொற்றனின் ஆட்சியின்போது வந்த அலெக்சாந்தனுக்குப் செல்யுக்கஸ்நகந்தன்= பிரகத்தன் உதவியுள்ளான். காரணம் பிரகத்தனின் மனைவிக்கும் முதல் அலெக்சாந்தனுக்கும் பிறந்த பெண்ணே ஹெலன்= சத்தியவதி. சிறுவனான சந்திரகொற்றன் இளைஞனானபோது இப்பெண்ணைப் புணரவைக்கக் கிரேக்கருள் அல்லது கிரேக்கனுக்குப் பிறந்து இங்கு வளர்ந்த ஒருவன் முயன்றாதாகத் தெரிகிறது. தேவவிரதன் =பீஷ்மன் என்பவன் தனது தந்தை சந்தனுவுக்குச் சத்தியவதியை மணம்பண்ணி வைக்க முயன்றான் என மாபாரதம் குறிப்பிடுகிறது. ரிக்வேதம் : மண்டலம் 10ல் 8. அதிதி[கங்கை]யின் உடம்பிலிருந்து எட்டுப் புதல்வர்கள் பிறந்தனர்; அவள் (எட்டாவதாகப் பிறந்த) மார்த்தாண்ட (பீஷ்ம)னை மேலேவானவெளியில் அனுப்பிவிட்டு ஏழுபுதல்வர்களுடன் கடவுளை (அலெக்சாந்த வசிட்டனை) அணுகினாள். அதிதி தனது ஏழு புதல்வர் (திசைக்காப்பாளர்)களுடன் கடந்த (எகிப்திய கிரேக்க) சந்ததியில் புகுந்துகொண்டு மார்த்தாண்டனைப் பிறப்பும் இறப்பும் உள்ள (பாரத)மனித வர்க்கங்களுக்காகப் பெற்றாள்; என்கிறது. சந்திரகொற்றனுடன் ஹெலனைப் புணரவைக்க முயன்றவனிடம் பிரகத்தன் குறிப்பிடுவதாக; நற்றிணை- 45: "இவளே கானல் நண்ணிய காமர்சிறுகுடி நீல்நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு மீன்எறி பரதவர்மகளே; நீயே நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க் கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே; நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி இனப்புள் ஓப்பும் எமக்குநலன் எவனோ? புலவு நாறுதும் செலநின் றீமோ? பெருநீர் விளையுள்எம் சிறுநல் வாழ்க்கை நும்மொடு புரைவதோ? அன்றே எம்ம நோரில் செம்மலும் உடைத்தே" எனக் குறிப்பிடுகிறான். அப்பெண்ணே ஹெலன்- சத்தியவதி எனவும் சந்திர கொற்றனுடன் புணர்ந்து கருவுற்றாள் எனவும் தெரிகிறது. இதனால் பல தொல்லைகள் வந்துசேர்ந்தன. சந்திரகொற்றனால் கருவுற்ற ஹெலன்- சத்தியவதியால் உருவான தொல்லைகளை; கலித்தொகை-பாலைக்கலி- 25: "வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்.. . .. .. சிறப்புச்செய் துழையராப் புகழ்பேத்தி மற்றவர் புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் தொடர்புபோல் .. ." எனக் குறிப்பிடுகிறது. ஏதோ ஒருவகைத் தூண்டுதலாலும் சதியாலும் ஏற்பட்ட ஒப்பந்தத்தால் இந்தியத் தமிழர் வாரிசுகளும் தொல்லைக்கு ஆளானதைக் குறிப்பிடுகிறது. "கைவிட்டுப்போன எல்லைப்புற மாகாணங்களைக் கைப்பற்ற செலூக்கஸ் நிகேடார் முயன்றான். ஆனால் துரத்தப்பட்டுச் சந்திரகொற்றனுடன் உடன்பாட்டுக்கு வந்தான். உடன்பாடு போலவே ஒருவித மண ஒப்பந்தமும் ஏற்பட்டது. அங்கு அதிக காலம் ஆட்சியிலிருக்காத சந்திரகோட்டஸ் தன்னால் வென்று கைக்கொள்ளப்பட்ட ஆறாயிரம் வீரர்களையும் ஒட்டு மொத்தமாக ஐநூறு யானைகளையும் செல்யுக்கஸ் நிகந்தனுக்குக் கொடுத்தான்." என ப்ளுடார்க்கின் நூல் குறிப்பிடுகிறது. சந்திரகொற்றனுக்கு மணம்பண்ணப்பட்ட சத்தியவதியும் பல நிபந்தனைகளை விதித்துக் கட்டுப்படுத்தியுள்ளாள். கிரேக்கன் உபரிசரவசு= அலெக்சாந்தனின் அடிமைப் படைத்தளபதி (ஒரு மீனவனாக=மீன் பாண்டியரின் சின்னமாக்கப் பட்டது; விதுரனின் பிறப்பும் விதுரனின் மகன் பாண்டியன் நெடுஞ்செழியனும் இவனது கால்வழியில் வந்தவர்களே) ஹெலன் =சத்தியவதி மீது மீன்வாடை வீசியதாகவும் கங்கைநதியில் [இலங்கைப்பகுதியில் நடந்ததை மாபாரதம் மறைத்துள்ளது] படகு ஓட்டியபோது பராசரனைப் புணர்ந்ததால் இவ்வாசம் நீங்கி வியாசன் பிறந்ததாகவும் குறிப்பிட்டு; [ஹெலன் ஒரு கிரேக்கரின் அடிமைப்பெண் என்பதை மறைத்து மாபாரதம் குழப்புகிறது] அவள் மீது சந்திரகுப்தன் ஆசை கொண்டான் அவளோ தனக்குப் பிறக்கும் புதல்வர்க்கே ஆட்சியுரிமை கொடுக்கவேண்டும் என நிபந்தனை விதித்ததால் மனம்தளர்ந்து திரும்பி விட்டான். சந்திரகுப்தனின் மகன் கரவேலன்= கிருஷ்ணன்; நீக்கப்பட்டு அவ்விடத்தில் அசோகன் என முசுகுந்தன்= காசியப்பன்= காசி ராசனின் மகன், தேவவிரதானகப் புகுத்தப்பட்டுச் சந்திரகுப்தனின் ஆசையை நிறை வேற்றுவதாக நடித்துத் தனது ஆட்சியுரிமையை விட்டுக்கொடுத்து ஹெலனை மணம் முடித்து பீஷ்மனானான் என மாபாரதம் குழப்புகிறது. மேலும் "விருந்தொன்றில் [சந்திரகொற்றன்]-சந்தனு; கங்கை (ப்பகுதி)ஊர்வசியின்மீது மனம் பரிகொடுத்தவனாகத் தனது கருத்தை வெளிப்படுத்தியதனால் கங்கைப் பகுதிக்கு அனுப்பப் பட்டான். கங்கைப்பகுதியை ஆட்சிசெய்த எட்டுக் காவலர்கள் -வசுக்களைவென்று; அவர்களின் பெண்களைச் சந்திரகுப்தன் மணந்தான். எட்டாவதாகத் தொடர்புகொண்ட பெண்ணுக்குப் பிறந்தவனே பீஷ்மன் எனப்பட்ட தேவவிரதன் எனவும் உள்ளது. கரவேலன்= கிருஷ்ணனும் எட்டாவதாகப் பிறந்தவனே. சந்திரகொற்றனை மணந்த சத்தியவதிக்கு மகன் பிறந்தவுடன் சந்திரகொற்றனின் மகன் கரவேலனைப் பொய்க்குற்றம் சுமத்தி நாட்டைவிட்டு நீக்கினர்; நீக்கப்பட்ட கரவேலனுக்கு வேங்கடமலைக் காட்டில் ஒரு நாட்டை உறுவாக்கி வீரர்களைக் குடியமர்த்தி வேள்விநடத்தினார் விசுவாமித்திரர் என மாபாரதமிம் குறிப்பிடுகிறது. “அரச[சந்திரகொற்ற]னுக்கும் வசிட்ட [அலெக்சாந்த]ருக்கு மிடையே; சீடன் மதகுரு என்ற உறவின் அடிப்படையில் வசிட்டர் அயோத்தி நகரத்தையும், நாட்டையும், அரசமாளிகையில் அமைந்துள்ள அந்தரங்க இருப்பிடங்களையும் தனது ஆளுகைக்குள் வைத்திருந்தார். ஆனால் வசிட்டருக்கு எதிராக விதியின் காரணமாகவோ அல்லது அறிவீனத்தின் காரணமாகவோ சத்தியவிரதன் (கரவேல்) கோபம் கொண்டிருந்தான். அவனுடைய தந்தை, அவனை அரசாங்க எல்லைக்கு வெளியே தள்ளி வைத்திருப்பதைத் தடுக்க, ஏதோ ஒரு காரணத்தால், குலகுரு வசிட்டர் தலையிடவில்லை. (மனுவின் சட்டப்படி சத்தியவிரதன் 12 ஆண்டுகள் ஆட்சிவகிக்கத் தடை செய்யப்பட்டிருந்தது. [காரணம் ஹரிவம்சத்தின் மற்றொரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது ஒரு குடிமகனின் மனைவியைத் தவறான எண்ணத்தோடு கடத்திச் சென்ற குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட்டு நாட்டைவிட்டு பிரஷ்டம் செய்யப்பட்டான் என. இதுவும் படிம வடிவில் உள்ளதால் சரியான பொருளை எவரும் கொடுக்கவில்லை. சத்தியவிரதனான கரவேலனும் ஒரு திசைக் காப்பாளனாக இருந்து மற்றொரு திசைக் காப்பாளனின் நாட்டைக் கைப்பற்ற முயன்றிருக்கவேண்டும். நாடுகளைப் பெண் என்றுதான் பெருமளவில் வேதங்களும் குறிப்பிடுகின்றன] வசிட்டர் இதனை தடுக்க விரும்பவில்லை. சத்தியவிரதனின்(காரவேலன்) வாதம் : ”திருமணச் [திசைக்காப்பாளரை அமர்த்தும்] சடங்குகளில் சூத்திரங்கள் மட்டுமே கட்டுப்படுத்துவதாக உள்ளன. ஏழாவது அடி எடுத்துவைத்து நான் எனது மனைவியை[நாட்டை]க் கைப்பற்றியபோது இச் சூத்திரங்கள் அனுசரிக்கப் படவில்லை. சட்டத்தை அறிந்த வசிட்டர் இவ்விசயத்தில் எனக்கு உதவ முன்வரவில்லை.” “எனவே சத்தியவிரதன் வசிட்டருக்கு எதிராகக் குரோதத்தை வளர்த்துக் கொண்டான். இந்த ஏழு அடி வைக்கும் சடங்கை ஏற்றுக்கொண்டதால் தனது குடும்ப கௌரவத்தை மீட்டான். தண்டனை விதிக்கப்பட்டதால் மகனுக்கு அரசுப்பதவி அளிக்கத் தீர்மானித்தார். வலிமிக்க சத்தியவிரதன் பன்னிரண்டு ஆண்டுகள் தண்டனை அனுபவித்தபின் கோபம், களைப்பு, ஏமாற்றம், பசியின்கொடுமை ஆகியவற்றின் காரணமாக வசிட்டரின் பால்தரும் பசுவை [வேங்கடமலைக் காடுகளிதான் மாட்டுப்பண்ணைகள் அனைத்தும் இருந்தன. அவற்றை விசுவாமித்திரரின் உதவியுடன் கைப்பற்றி]க் கொன்றான்/ [கொண்டான்], அதன் மாமிசத்தை [அங்குகிடைக்கும் வருவாயை]த் தானும் தின்று பிறகு விசுவாமித்திரரின் புதல்வர்க்கும் கொடுத்தான். (பசிவந்திட பத்தும் பறந்துபோம்) பத்துக் கடமைகளிலும் தவறியதாலும் மூன்று தவறுகளைச் செய்ததாலும் வசிட்டர் அவனை 'திரிசங்கு' ஆக்ககடவது எனச் சாபம் கொடுத்தார்”. (மூன்றுவிதமான தண்டனை: மனுவின் சட்டத் தொகுப்பில் உள்ள இம்மூன்று விதிகளையும் முன்னரே தனித்தனியாகக் கண்டுள்ளோம்.) இராமாயணம்: வசிட்டரும் புதல்வர்களும் திரிசங்குவைக் கைவிட்டபோது, விஸ்வாமித்திரர் திரிசங்குவுக்குத் தெற்கில் ஒரு நாட்டை உருவாக்கக் குடியமர்த்தியதாகப் புராணவடிவில்; சுவர்க்கமான துவராபதியிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகற்கு விலக்கி வைக்கப்பட்டு விஸ்வாமித்திரரின் தவவலிமையால் வேத வேள்விகளோடு சுவர்க்கத்துக்கு அனுப்பட்டபோது அவனை திருப்பி அனுப்பியதாகவும், ராசரிசியான விசுவாமித்திரர் மீண்டும் அவனை சுவர்க்கத்து அனுப்பியதாகவும், துவாராபதியின் இந்திரன் மீண்டும் ஒதுக்கியதாகவும் காண்கிறோம். இந் நிலையே திரிசங்குநிலை எனப்படுகிறது. இந் நிலையில் மகதத்துக்கும் துவராபதிக்கும் நடுவில் தென்பாகத்தில் அவனுக் கென ஒரு நாட்டை உருவாக்கி புதிய துருவம், புதிய சப்தரிஷிகள் என ஒரு நாட்டை நிர்மானித்ததாகக் காண்கிறோம். இதுவே இரேணாடு ஏழாயிரம். சதபத பிராமணம்(மேற்கோள்-ஆன்டன்பர்கின் நூல் 'புத்தர் வாழ்க்கை' பக் 404): பாஞ்சால மன்னன் சோஹன்(சோழன்) சத்திரகன்(சோழன் சத்தியவிரதன்=விராடன் என்னும் திரிசங்குவுக்கு வேங்கடமலைக் காட்டில் விசுவாமித்திரர்) யாகம் செய்த போது துர்வசர்கள்(துர் என, பெயருக்கு முன்னர் ஒட்டாகக்கொண்ட துர்வசர்கள்; விசுவாமித்திரனின் சோழ சூரிய குலத்தருக்கு எதிரிகள்)ஆறாயிரம்பேர் கவசமணிந்து எழுந்து(எதிராக)நின்றனர்" எனக் குறிப்பிடுகிறது. இந்த 6000 பேருமே சந்திரகொற்றனால் பிரகத்தன்= செல்யுக்கஸ்நக்கந்தனுக்குக் கொடுக்கப்பட்ட வீரர்கள் என்பதை முன்னரே கண்டோம். மஹாபாரதம்-ஆதிபருவம்: இதியில் வசிட்டருக்கும் விசுவாமித்திரருக்கும் நடந்த பல பூசல்கள் இடம்பெற்றுள்ளன, சத்திரிய ரிஷிக்கும் சோழராச குருவுக்குமானவை. தமிழ் அந்தணர்க்கும், சத்திரியபிராமணர்க்கும் இடையே சச்சரவுகள் நடந்துள்ளன, காரணம் பிராமணர்; தங்களுக்கு மட்டுமே தானம் பெறவும் பரிசில்கள் பெறவும், வேதங்களைக் கற்றுத் தரவும், புரோகிதராக இருந்து; வேள்வி நடத்தித்தரவும் உரிமை உள்ளது, பிறருக்கு இதில் எந்த உரிமையும் இல்லை என்பதாகும். இவை குறித்த சச்சரவுகளைத் திரிசங்கு என்னும் சத்தியவிரதனின் விவகாரத்தில்; திரிசங்குவுக்கு வசிஸ்டர் உதவ முன்வரவில்லை. அவரது 100 புதல்வர்களை நாடித் தெற்குத்திசைக்கு வந்து வேண்டியபோது அவர்களும் உதவில்லை. இதனால், தென்புலத்துக்கு வந்து விசுவாமித்திரரை நாடினான். உதவி செய்யவும் யாகம் நடத்திக் கொடுக்கவும் விசுவா மித்திரர் ஒப்புக்கொண்டார். வசிட்டரது குடும்பம் உட்பட அனைத்து ரிசிகளுக்கும் அழைப்பு அனுப்பப் பட்டது. வசிட்டரின் புதல்வர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்; "ஒருசண்டாளன் (நாடுகடத்தப்பட்ட கரவேலன்) யாகம் நடத்துகிறான், ஒரு சத்திரியன் புரோகிதனாகிறான், யாகத்தில் பலியிடும் உணவைக் கடவுளரும் (திசைக்காப்பாள அரசர்கள்- எழுவர்) ரிஷிகளும் (பிராமணர்) எப்படி உண்ண முடியும்; விசுவாமித்திரரின் ஆசியோடு ஒரு சண்டாளன் அளிக்கும் உணவை உண்டபிறகு மேன்மை மிக்க பிராமணர் எவ்வாறு (மகதம்- கிரேக்கம்) சொர்க்கத்துக்குச் செல்லமுடியும்?” எனக் கொடிய வார்த்தைகளைக் கூறினர். இதனைக் கேள்வி யுற்ற விசுவாமித்திரர், வசிட்டரையும் அவரது புதல்வர் நூற்றூவரையும் சபித்தார். அவரது சாபம் பலித்தது. ரிசிகளும் பயந்து நடுங்கி யாகத்தை நடத்திக் கொடுத்தனர். பெரும்பாணாற்றுப்படை: இப்பாடலில் விசுவாமித்திரனால் கரவேலனுக்காக வேள்வியாகத்தில் உருவாக்கப்பட்ட மூதூர்: “கடுங்கண் கானவர் கடறுகூட் டுண்ணும் அருஞ்சுரம் இறந்த உம்பர்: பருந்துபட ஒன்னாத் தெவ்வர் நடுங்க ஓச்சி வைந்நுதி மலுங்கிய புலவுவாய் எஃகம் வடிமணிப் பலகையொடு நிரைஇ முடிநாண் சாபம் சாத்திய கணைதுஞ்சு வியல்நகர் .. ..” “குட காற்று எறிந்த குப்பை செம்பொன் மலையின் சிறப்பத் தோன்றும் .. ..” “காந்தல் அம் சிலம்பில் களிரு படிந் தாங்கு பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண் வெயில்நுழைபு அறியா குயில்நுழை ெ பாதும்பர் ..” “நீல்நிற நெடி யோன்(காரவேல்) கொப் பூழ் நான்முக ஒருவற்( விசுவாமித்திரன்) பயந்த பல்இழைத் தாமரைப் பொகுட்டில் தாண்வரத் தோன்றி சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின் .. ..” விழவுமேம் பட்ட பழவிறல் மூதூர் .. ..” என இடம்பெறக்காண்கிறோம். அலெக்சாந்தனின் படையையும், அதனை நடத்திவந்த செல்யூக்கஸ் நிக்கந்தனையும், போரிட்டு வெற்றி கண்டான் சந்திரகொற்றன். ஆப்கானிஸ்தான் பலூசிஸ்தான் என, இன்றைய கர்நாடகம் வரை இவனது சாம்ராஜ்யம் இருந்தது. சந்திர கொற்றன் மௌரியன் அல்ல; அவனுக்கும் சத்தியவதிக்கும் பிறந்தோரே மௌரியராவர். 27 ஆண்டுகள் ஆட்சி செய்தபின் எண்ணாயிரம் அமணர்களுடன் பத்ரபாகு என்ற ஆசாரியரின் தலைமையில் இன்றைய கர்நாடகத்தின் சிரமண பெளகொள வந்துவிட்டான்; காரணம் அப்போது ஏற்பட்ட பஞ்சம் என 'வட்டாராதெனே' நூல்; வரலாற்றை மறைத்துக் குறிப்பிடுகிறது. மேலும் தூலபத்திரர் என்ற அமணரின் தலைமையில் பாடலிபுத்தரத்தில் செயல்பட்ட அமணர்கள்; சத்தியவதிக்குப் பிறந்த பிம்பிசாரனின் தலைமையில் முன்னர் இருந்த அமண நூல்களான அங்கம் உபாங்கம் போன்றவற்றைத் தொகுத்தனர்; ஆயினும் அத்தொகுப்பைப் 12ஆண்டுகற்குப்பின் சந்திரகொற்றனுடன் தாயகம் திரும்பிய எண்ணாயிரம் அமணர்கள் ஏற்க வில்லை எனவும் குறிப்பிடுகிறது. [பிம்பிசாரன் காலத்தில் அமணம் பற்பல மாற்றங்கற்கு ஆளானது. அவற்றையெல்லாம் மறைத்தே வைதீகக் கருத்துக்களும் பிராமணரும் பிராமணியமும் உலக மதங்களான கிரீஸ்தவமும் இசுலாமும் தோற்றுவிக்கப் பட்டன. இவற்றுள் எவற்றையும் ஏற்காத இலங்கையின் சிங்களர் அமணத்திலிருந்த இறுதித்தீர்த்தங்கரன் கரிகால்சோழனான புத்தன்- சித்திபெற்ற சித்தார்த்தனைத் தலைவனாக்கிப் பௌத்த மதத்தை உருவாக்கினர். இதனை ஏற்காத அமணத்தைக் கைப்பற்றி மகாவீராகிய பிம்பிசாரனை ஆதரித்தோர் சைவத்தையும் புத்தன்= கரிகால்சோழனை ஆதரித்தோர் வைணவத்தையும் உருவாக்கி; அமணரின் வரலாற்றை அழித்தனர். இவ்விடத்தில் பெரும் ஐயம் எழுகின்றது. பாடலிபுத்ரம் என காஞ்சியும் குறிக்கப்படுகிறது. காஞ்சியில் அமணத் தலைமையாக இருந்த கரவேலனுக்குப் பின்னர் கரிகால்சோழனின் தங்கை பாவை= கந்தி தீர்த்தங்கரியானாள். இப்பெண்ணை; கந்தி- கந்தியார் மற்றும் வெள்ளிவீதியார் எனவும் குறிப்பிடுவர். வெள்ளிவீதியாரின் சில பழந்தமிழ்ப் பாடல்களும் பிறர் பாடியவையும் உள்ளன. மதுரையிலும் வச்சிரநந்தியின் தலைமையில் ஒரு சங்கம் அமைக்கப்பட்டு அனைத்து நூல்களும் ஆய்வு செய்யப்பட்டதாகவும் அமணநூள்கள் குறிப்பிடுகின்றன. வரலாற்றை மறைத்த எத்தனையோ குழருபடிகளைக் காண்கிறோம். அகத்தியர்களின் வரலாற்றையும் சிதைத்து உருவாக்கப் பட்ட தீர்த்தங்கரர் வரலாறும் தெளிவாக இல்லை. பிம்பிசாரன்= மகாவீரால் அமணம் இரண்டாகப் பிளவுற்றதுதான் உண்மை. இதிகாசங்களும் காப்பியங்களும்; மறைக்கப்பட்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு மாற்றி உருவாக்கப்பட்டவையே.] எனவே அலெக்சாந்தனும் பீஷ்மனும் சந்திரகொற்றனையும் அவனது மகனும் இந்திய வாரிசுமான கரவேலனையும் மனு நீதிப்படி குற்றம் சுமத்தி நாடுகடத்தி; சத்தியவதியின் மகன் பிம்பிசாரனை அரசனாக்கிவிட்டனர் என்பது தெளிவாகிறது. இராமாயணம்: [மியூர் அவர்களின் முதல்தொகுதி பக்கம் 397- 400(சுருக்கம்)] முன்னொரு காலத்தில் பிரசாபதியின் மகன் குசன் என்னும் அரசன் இருந்தான், அவனது மகன் குசநாபன். குசநாபனுக்குக் காதி என்ற மகனிருந்தன் அவனது மகனே விசுவாமித்திரன். அவரது ஆட்சியில் வலம்வந்தபோது பிரமாவின் மகன் வசிட்டரின் ஆசிரமத்துக்கு வந்தார். அவர்கொடுத்த விருந்தைக் கொடுத்தது வசிட்டரிடம் இருந்த பசு என்பதை அறிந்து அதனைத் தன்னிடம் கொடுக்கும் படி வற்புறுத்தினார். அதற்குப் பதிலாக வேறு பசுக்களைத் தருவதாகச் சொன்னார். வசிட்டர் ஏற்காததால் விசுவாமித்திரர் பசுவை வலிக்கட்டாயமாகக் கைப்பற்றினார். வீரர்களிடமிருந்து தப்பிய பசு வசிட்டர் தன்னைக் காப்பாற்றவில்லை என அவரிடம் முறையிட்டது. அரசன் வலிமையானவன் அவனை எதிர்க்க முடியாது என்றார். பசுவோ பிராமணனே வலிமையானவன்; அவனது வலிமை தெய்வீகமானது என்றது. பிராமண வலிமையால் என்னைக் கைப்பற்றியுள்ளீர்கள். எனக்குக் கட்டலையிடுங்கள் அந்த அரசனின் அதிகாரத்தையும் வலிமையையும் அழித்துவருகிறேன் என்றது. தனது வலிமையால் பல வீரர்களை உருவாக்கி விசுவாமித்திரரின் படைகளையும் வலிமையையும் தனது வலிமையால் அழிக்க முயன்றபோது அவற்றை விசுவாமித்திரரின் வீரர்கள் அழித்தனர். பசுவோ மீண்டும் சகர்களையும் யவனர்களையும் கொண்டுவந்து போரிட்டு எதிரிகளை அழித்தது. ஆனால் அரசன் தனது வலிமையைப் பெருக்கிக்கொண்டு பசுவின் வீரர்களை அழித்தான். மீண்டும் பசு பலவகையான வீரர்களைக் கொண்டுவந்தது. அவர்கள் அனைவரும் விசுவாமித்திரரின் யானை குதிரை ரதங்கள் காலாட்படை அனைத்தையும் அழித்தனர். அதனால் விசுவாமித்திரர் தனது புதல்வர்களுள் ஒருவனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தவம்செய்யச் சென்றுவிட்டார்.; என்று குறிப்பிடுகிறது. மேலும்; தனது வலிமையால் பலவிதமான போர்முறைகளையும் கற்று வலிமையைப் பெருக்கிக்கொண்டு வசிட்டரின் ஆசிரமத்தை நிர்மூலமாக்கினார். விசுவாமித்திரரின் வீரத்தை வசிட்டர் தவிடுபொடியாக்கினார். இறுதியில் விசுவாமித்திரர் பிராமணப் பதவி பெற எண்ணித் தனது மனைவியுடன் தெற்குநோக்கிப் பயணம் செய்தார். அவரை மெச்சி பிரமா தோன்றி அவரை ராசரிசிகளின் மோட்சத்தை அடைந்துவிட்டதாகவும் பிராமப் பதவியை அடைந்துவிட்டதாகவும் அறிவித்தார்; என்கிறது. மேற்கண்டவை அனைத்தும் ப்ல்வேறு இடங்களில் வசிட்டனுக்கும் விசுவாமித்திரனுக்கும் நடந்த மோதல்களைப் படிம வடிவில் குறிப்பிடுவதாக உள்ளது. பசு என்பது பிராமணனையும் பின்னர் சத்திரியராக உருவெடுத்த பிராமணரையும் வசிட்ட குலத்தருக்கும் விசுவாமித்திர குலத்தருக்கும் நடந்த பல் மோதல்களையும் குறிப்பிடுவதாகும். விசுவாமித்திரனைத் தண்டித்து நாடுகடத்தியபோது விசுவாமித்திரன் இன்றைய ஒடிசாவுக்குச் சென்று ஒரு நாட்டை உருவாக்கி ஆட்சி செய்துள்ளான். அதன்மீதும் சத்தியவதிக்குச் சந்திரகொற்றன் கொடுத்த வாக்குறுதிப்படி கைப்பற்ற முயன்றுள்ளனர். வசிட்டனால் தண்டிக்கப்பட்ட விசுவாமித்திரனை; திரிசங்கின் மகன் அரிச்சந்திரன் என மாற்றி; அரிச்சந்திரனை விசுவா மித்திரன் கொடுமைப்படுத்தியதாக வரலாற்றையே தலைகீழாக மாற்றியுள்ளனர். ரிக்வேதம்;3-53.24: 'விசுவாமித்திரரின் குலத்தவரான பாரதர்களுக்கும், வசிட்டரின் குலத்தவர்களான திரித்சூக்களுக்கும் பகை இருந்தது.'- என குறிப்பிடுகிறது. (\இதனை சத்திரியர்க்கும், அந்நியர்க்குமான பகை எனக் காணவேண்டும்.

Sunday 8 December 2013

விரதியர் - பார்ப்பனர் ஸ்ரீரமகிருஷ்ணபரமஹம்சன் விரதியர் விரதியர் என்போர் தமிழ் அந்தணரைவிடத் தாழ்ந்தவர்கள்; மாணவ- பிரமச்சரிய வாழ்க்கையைக் கடைப்பிடிக்காததால் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். அவர்கள் நிலத்தை உழுது பண்படுத்திப் பயிரிடுவதில்லை. விரதியரை யார் எனத் துல்லியமாகக் காண்பது எளிதல்ல. ஆரியர்களா? ஆரியராக ஒருபோதும் இருந்திராதவர்களா? அந்தணரால் தங்களது சமயத்துக்குள் ஈர்க்கப்பட்ட ஆரியரல்லாதோரா? அறிய இயலவில்லை என அம்பேத்கர் குறிப்பிடுகிறார். இவர்களை நல்வழிப்படுத்த நான்குவிதமான விரதிய ஸ்தோமாக்கள் கைக்கொள்ளப் பட்டன. 1. எல்லாவிரதியருக்கும் உரியது; 2. பெரும் பாவங்கள் செய்யும் கொடிய அபிசஷ்டர்களுக் கானது. 3. இளம்வயதினராக இருந்து விரதிய வாழ்க்கை வாழ்பவர்கள். 4. வயது முதிர்ந்தோராக இருப்பினும் விரதியவாழ்க்கை ஒவ் ஒன்றிலும் எப்போதும் சொதஸ்தோமா செய்திருக்க வேண்டும். சொதஸ்தோமா குறித்து தந்தியா பிராமணத்தில் உள்ளது. 16 ஸ்தோத்திரங்களும் அனுஸ்டுப மந்திரங்களும் அடங்கியது. பழிபாவங்களை அகற்றும் சக்தி சொதஸ்தோமங்களுக்கு இருப்பதாகக் கருதப் படுகிறது. பின்னர் அவர்கள் வேதத்தைக் கற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். விரத்யத- சுத்திசம்கிரகத்தில் பன்னிரண்டு தலைமுறைக்குப் பிறகும்கூட விரதியர்களைத் தூய்மைப்படுத்த வகைசெய்யப் பட்டுள்ளது. ஆனால் உரிய பிராயச் சித்தங்களைச் செய்யவேண்டும் எனக் குறிப்பிடுவதாகவும் குறிப்பிடுகிறார். கபிலரின் குறிஞ்சிப்பாட்டின் அடிக்குறிப்பு குறிப்பிடும் பிரகத்தனான ஆரியவரசன் செல்யுக்கஸ்நக்கந்தனுக்கும் அவனது ஆரியப்படையினருக்கும் தமிழ் பயிற்றுவித்துள்ளனர். அவர்களுடன் வந்துசேர்ந்த மகத விரதியருக்கும் தண்தமிழ் பயிற்றுவித் துள்ளனர். இந்த விரதியரைத் தமிழ் அந்தணர்கள் தங்களுடன் ஒத்தவர்களாக ஏற்காமல் பார்ப்பனராக மட்டுமே ஏற்றுக் கபிலரின் உதவியுடன் பல புலவர்கள் தண்தமிழ் பயிற்றுவித்தனர் என்பதைப் பல தமிழ்ப்பாடல்கள் உணர்த்துகின்றனர். “தொல்காப்பியம்: ”..காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தன பயிற்றல் இறந்ததன் பயனே !.” எனவும்; அகநாநூறு”-41.21-24.புலவர்:பரணர். “ ....நெடுங்கால் மா அத்துக் குறும்பரை பயிற்றும் செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால்.. .. வேங்கட வைப்பிற் கறன் இறந்தோரே“ எனவும்; அகநாநூறு”-பாடல்-220-புலவர்:மருதன் இளநாகனார். ".....” ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ தேரோடு மறுகியும் , பணிமொழி பயிற்றியும் கெட அத்தீயின் உருகெழு செல்லூர்......” எனவும் குறிப்பிடுகின்றன. கபிலரின் குறிஞ்சிப்பாட்டு; ஆரியவரசனுக்கும் பிறருக்கும் தமிழரின் மரபையும் ஒழுக்கங்களையுமே பயிற்றுவித்து அறிவுறுத்துவதாக உள்ளது. பரசுராம துர்யோதனனே இவர்களைச் சிறைப்பிடிக்கக் கரிகால்சோழனின் தந்தையான தசரதன்- உருவப்பல்தேர் இளஞ்சேத்சென்னியின் படைகளைப் பெற்றுப் பரசுராம துர்யோதனன் சிறைப்பிடித்ததாகச் சிலப்பதிகாரமும் இராமாயணன்மும் குறிப்பிடுகின்றன. இராமாயணம் பரசுராம துர்யோதனனை வைஜயந்தி நகரத்து இந்திரன் எனவும் சிலப்பதிகாரம் முகரி= முக்கண்டி= முகண்டி அரசன் முசுகுந்தன் எனவும் குறிப்பிடுகின்றன. இவர்களுடன் சேர்ந்தே துர்யோதன பரசுராமனும் பயின்றுள்ளான். மாபாரதம் பரசுராமனை இராமன் என்றெ பல இடங்களில் குறிப்பிடுகிறது. தமிழருடன் பயின்ற போதிலும் அவனது பழிவாங்கும் எண்ணம் நீங்கவில்லை என்பதையும்; பின்னர் கபிலர் ஆரியவரசனிடம் எடுத்துறைத்துள்ளார். அது ஒரு தனிப்பாடலாகவே இருந்திருக்கவேண்டும். ஆயினும் பாடல்களைத் தொகுத்தோர் அதனையும் குறிஞ்சிப்பாட்டுடன் சேர்த்துவிட்டனர் எனத் தெரிகிறது. குறிஞ்சிப்பாட்டு மூன்று பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. பழந்தமிழ்ப் பாடல்கள் கற்பு குறித்து எந்த விதிமுறையையும் தெரிவிக்கவில்லை. பார்ப்பனரான அந்நிய பிராமனர் வந்த பின்னரே இதுகுறித்த சிந்தனை தோன்றியதைக் காண்கிறோம்: கபிலரிடம் பயின்ற விரதியரையே "படிவ உண்டிப் பார்ப்பனர்" எனக் குறுந்தொகை- 156: "பார்ப்பன் மகனே பார்ப்பன மகனே செம்பூ முருக்கின் நன்னார் களைந்து தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே எழுதாக் கற்பின் நின்சொ லுள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்து முண்டோ? மயலோ இதுவே" என ஒரு பார்ப்பனன் பண்புமீறிப் பெண்ணைக் கெடுத்து ஓடிவிட்ட காலத்து; கெடுத்தவனைப் பெண்ணுடன் மீண்டும் பிணைக்கும் மருந்து - கரணம் - விதிமுறை உள்ளதா? என வினவக் காண்கிறோம். ஒரு சோழநாட்டு அரசர்குடிப் பெண்ணை ஒரு பார்ப்பனன் கெடுத்து விட்டுப்பிரிந்து ஓடிவிட்டதால் அப்பெண்; தானும் தனது நெஞ்சும் வருந்தப் பாடும் பாடல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இதனை உறுதிசெய்ய; பாவையுடன் அந்தப் பார்ப்பனனைச் சேர்க்கத் தூதுசென்ற புலவர் பரணர்: நற்றிணை- 247ல்: " .. .கோடுயர் நெடுவரை ஆடும் நாடநீ நல்காய் ஆயினும் நயன்இல செய்யினும் நின்வழிப் படூஉம் என்தோழீ; நல்நுதல் விருந்திரை கூடிய பசலைக்கு மருந்துபிறி தின்மைநன் கறிந்தனை சென்மே" எனக் குறுந்தொகை 156 குறிப்பிட்ட மருந்தை வேண்டுகிறார். இத்தகைய குற்றங்களுக்கு மருந்து என எதுவும் இல்லை என்பதையும்; பெண்ணை ஏற்காவிட்டால் மரணம்தான் மருந்து என்பதையும் உள்ளுரையாகக் கொண்டனவே இவை. வேங்கடமலைக் காட்டுப்பகுதிகளைத் தாண்டி மகதம் சென்று பொருள் தேடி வருவதாகப் பொய்யுரைத்துத் தப்பி ஓடுவதிலேயே குறியாக இருந்தான் எனப் பல பாடல்கள் உணர்த்துகின்றன. மேலும் அவனைத் "துவர்வாய் நயவன்" எனச் சில பாடல்கள் குறிப்பிடுகின்றன. துர்வாடை கொண்டவன் என அடையாளப்படுத்தி உணர்த்துவதே நோக்கமாகும். மாபாரதத்தில் 'துர்' என்ற முன் ஒட்டுக் கொண்டோரெல்லாம் இத்தகையோரே. அவர்களுக்குச் சந்ததி- வழிமுறை என்பதே இருக்காது என்பதைத் துர்யோதனனே குறிப்பிடுகிறான். துர்நடத்தை கொண்டதாலேயே துர்யோதனன் எனப்பட்டான். புறநாநூறு- 358: புலவர்- வன்மீகி; பல படிமங்களைக் கொண்டது; சோதிடக் கோள்களையும் உள்ளடக்கியது; "பருதி சூழ்ந்த இப்பயங்கெழு மாநிலம் ஒருபகள் எழுவர் எய்தி யற்றே; வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு ஐயவி அனைத்தும் ஆற்றாது; ஆகலின் கைவிட் டனரே காதலர்; அதனால் விட்டோரை விடாஅள் திருவே; விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே" இதுவும் மிகநீண்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. காஞ்சிப்புராணத்தில்; ஏழுபடைகளை நதிக்ளாகக் குறிப்பிட்டுக் காஞ்சி காமகோடத்தில் இருந்த கரிகால்சோழனின் தங்கையைக் கெடுத்ததுமல்லாமல் நகரத்தையே அழிக்கமுற்பட்ட பரசுராம துர்யோதனனைக் காணலாம். சோதிடத்தில் ஒவ்வொரு கோளும் ஒரு பகளுக்குள் ஒருமுறை ஆட்சிபெற்றுச் சிறிதுநேரம் அரசனாகிறது. திருவும் அறிவும் என இரண்டையும் ஒப்பீடு செய்கிறது. தவத்தையும் அறத்தையும் வலியுறுத்துவதாகவும் உள்ளது. பெண்ணையும் பெண்ணுக்கே உரித்தான மண்ணையும் அதனைக் காப்பதையும், கைவிடுவதையும் ஒப்பிட்டுப் பேசுகிறது. 'ஐ அவி' என்பதும் பல படிமங்களைக் கொண்ட சொல். உலகம் விளைவிக்கும் உயர்ந்த அவி- பொருட்கள் எனவும்; ஐந்து பொறிகளால் நுகரப்படும் அனைத்தும் எனவும்; ஐந்தவித்தல் எனக் குறள் குறிப்பிடும் ஐங்குணங்களையும், அவித்தல் என்பது கடந்து செல்லுதல் என்பதையும் ஐந்தவித்தோரைத் திருமகள் ஒருபோதும் நீங்குவதில்லை எனவும் ஐங்குணங்களை உயர்ந்தனவாகக் கருதிப் பற்றற்றுப் பெற்றோரையும் திருமகள் நீங்குவதில்லை எனவும் பொருள்படுத்துகிறது. நடைமுறையில் அன்றைய வரலாற்றோடு தொடர்புகொண்டு காண்போருக்கு மற்றொரு விதமாகவும் பொருள் தருகிறது. சூரியகுடிச்சோழரால் ஆட்சிசெய்யப்பட்ட நிலத்தைக் கைப்பற்ற எண்ணிய பரசுராம துர்யோதனன்; திசைக்காப்பாளரான ஏழு அரசர்களைத் தன்வசமாக்கிக்கொண்டு சூரியகுலப் பெண், நல்லியற்பாவைக்கே உரித்தான சோழநாட்டைக் கைப்பற்ற வந்தான்; பாவையைக் கெடுத்துக் கைவிட்டு நாட்டைப் பெரிதாக எண்ணிக் கைப்பற்றிக்கொண்டான். பாவை துறவுபூண்டு மேன்மை யடைந்தாள். அவளது மேன்மையைக் கண்டு பொறாமையால் நாட்டைக் கைவிட்டான். துறவு பூண்டு மேன்மையடைய முயன்றான். துறவிகளையும் அமணர், பிர அமணர்= பிராமணர் எனப் பிளவுபடுத்தினான். இல்லறத்தாருக்கே உரித்தான துறவும் சீரழிந்தது, இல்லறமும் பாழ்பட்டது. எழுவரால் கைப்பற்றப்பட்ட நாட்டையும் கசியப அலெக்சாந்தனிடம் ஒப்படைத்ததால் அதுவும் சீரழிந்தது. துறவை மேற்கொண்ட பரசுராமன் துறவிலும் மேன்மையடைய முடியவில்லை. நாட்டையும் கைவிட்டு, பெண்ணையும் கைவிட்டதால் இறுதியில் பாழ்பட்டவன் பரசுராமனே. திருவும் அறமும் அவனைவிட்டு விலகின; எனவும் பொருள் தருகிறது. மாபாரதம்: சாந்திபருவம்: புவியை ஆளும் அதிகாரத்தை (கரிகால்சோழனுக்குத் தண்டனை விதித்து)ப் பெற்றவுடன் பரசுராமன் அதனைக் காசியபனிடம் கொடுத்துவிட்டுக் கானகத்துக்குச் [அமணத்தில் சேர்ந்து தீர்த்தங்கரியான பாவையை நீக்க; பிர அமணரின் ஆதரவைப்பெற்றுத் தீர்த்தங்கரன்=வர்தமான ம(க)ாவீர் ஆகி] சென்றுவிட்டார். பிராமணர்; முறை கேடாக வைசியரின்(விவசாய மற்றும் வணிகரின்)மனைவி மார்களுடன் நடந்து கொண்டனர்; அரசாங்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது; வலிமையானோரால் வலிமையற்றோர் ஒடுக்கப்பட்டனர்; எவரும் எந்தச் சொத்தின்மீதும் உரிமை கொண்டாட முடியவில்லை; கொடியவர்களின் பாவச்செயல்களால் பூமிதேவி[காவிரிப் பாவை= சோழன் மகள்] வருத்தமும் வேதனையும் அடைந்தாள்; விதி முறைகளின்படி, சத்திரியரால் ஆளப்படாததாலும் பிராமணரால் அமைதியும் ஒழுங்கும் குலைந்து மேன்மேலும் மோசமடைந்தது. பூமகள்[சட்சுமி= பூதேவி] திகிலும் பேரச்சமும் அடைந்தாள்; இதனை அறிந்த காசியபர் பூமகளைத் தனது தொடைகளில் (தொடைகளில் பிறந்த வைஷியரின் துணையுடன்) தாங்கிக்கொண்டார்; இதனால் அவள் யுருவி எனப்பட்டாள்; பூமாதேவி அவரது பாதுகாப்பை நாடி; ஒரு மன்னனைக் கொடுக்கவேண்டி: "(கேரலத்தில்) கேஹயர்களின் இனம் சார்ந்த சத்திரியரைப் பெண்களிடையே வைத்துக் காப்பாற்றி வருகிறேன்; மேலும் பௌரவர் வழித் தோன்றலும் (தாதி-வேலைக்காரிக்குப் பிறந்த) விதுரனது புதல்வனும், ரிஷாவத் மலைப்பகுதியில் (இலங்கை) கரடிகளால் வளர்க்கப்பட்டவனுமான (செழியன்= இராவணன்) ஒருவன் இருக்கிறான்; அவன் என்னை(இப்போதைக்கு) பாதுகாக்கட்டும்; பின்னர்(தண்டனைக் காலம் முடிந்து) அன்புள்ளம் கொண்ட பராசரன்[=விசுவாமித்திரனோ?]; அந்தண முனிவனாய் இருந்த போதிலும் ஒரு சூத்திரனைப் போல்; சௌதாசனின்[சந்திரகொற்றனின் தந்தை போரஸ்= பூர்வசிரவசு] வாரிசு[சந்திர கொற்றனு]க்குப் பணிவிடை செய்து பாதுகாத்ததால் சர்வகர்மன் எனப்பட்டான்; அவன் என்னைப் பாதுகாக்கட்டும். (இவ்வாறு மேலும் பலரைக் குறிப்பிட்டு) இவர்களின் சத்திரிய வழித்தோன்றல்கள் பல்வேறு இடங்களில் பாதுகாப்பாக உள்ளனர்; பொற்கொள்ளர் மத்தியில் வாழ்ந்துவரும் தியோகரர்கள் (விசுவாமித்திரனின் கால்வழியினர்) என்னைப் பாதுகாப் பார்களானால் நான் நிம்மதியாக இருப்பேன்; அவர்களது தந்தை மார்களும் பாட்டன் மார்களும் பரசுராமனால் (பார்கவன் முசுகுந்த துர்யோதன பரசுராமனால்) வேட்டையாடிக் கொல்லப்பட்டு விட்டனர்; அவர்(சோழர்)களுக்கு நீதிகிடைக்கச் செய்வது எனதுகடமை; கசியபர்(அலெக்சாந்தன்) போன்ற ஒருமாபெரும் மனிதரால் காக்கப்படுவதை விரும்பவில்லை; சாதாரன மன்னனே போதும்; இதனைத் துரிதமாக நிறைவேற்ற வேண்டும்" என்கிறாள். பூமிதேவி சொன்னபடி காசியபரும் அவர்களைத் தேடிக்கண்டு அரசர்களாக்கினார்" என உள்ளது. இதில் சந்திரகொற்றன் என்பவன் சந்திரகுப்தன் என மாற்றப்பட்டான்; இதனைத் தமிழ்ப்பாடலில் வடமொழிப் பெயர் எனக் காண்கிறோம். கலித்தொகை-பாலைக்கலிப் பாடல் 25: "வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்; ஐவர்என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தரா; கைபுனை அரக்குஇல்லைக் கதல்எரி சூழ்ந்தாங்கு கலிதிகழ் கடாஅத்த கடும்களிறு அகத்தவா முளிகழை உயர்மலை முற்றிய முழங்குஅழல் ஒள்ளுரு அரக்குஇல்லை வளிமகன் உடைத்துத்தன் உள்ளத்துக் கிளைகளொடு உயப்போகு வான்போல .. .. சிறப்புச்செய் துழைய்யராப் புகழ்பேத்தி மற்றவர் புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் தொடர்புபோல் ..." என; அலெக்சாந்தனுக்கும் அவனது அடிமைப்படைத்தளபதி செல்யுக்கஸ்நிகந்தனின் மனைவிக்கும் பிறந்த அந்நியப்பெண் ஹெலன் என்ற சத்தியவதி மீது ஆசைகொண்டு வடமொழிப் பெயர் பெற்ற சந்திரகுப்த அசுரனின் புணர்ப்பினால்; முதல்மனைவியின் மகன் கரவேலன்= கண்ணன்= திரிசங்கு= சத்திய விரதன்; உரிமையிழந்து தவித்தபோது விசுவாமித்திரன் ஆதரித்ததையும் சந்திரகுப்தனின் தங்கை பிரிதாவை மணந்த சேத்சென்னியை ஆதரித்ததால் விசுவாமித்திரனும் தண்டிக்கப்பட்டதையும் மாபாரதமே எடுத்துரைக்கிறது. திரிசங்குவின் உண்மைப்பெயர் கரவேலன் என கல்வெட்டுக்களில் உள்ளது. பலபெயர்களில் குறிப்பிட்டதோடு பல பொய்யுரைகளையும் மாபாரதத்தில் சேர்த்துள்ளனர். 'கிருஷ்ணனின் மக்கள் சராசந்தனால் மதுராவிலிருந்து விரட்டப்பட்டபோது மேற்குப் பக்கமாக நகர்ந்து; துவாரகையில் குடியேறினர்' என்பதை நச்சினார்க்கினியர், தொல்காப்பிய உரையில் மேற்கோள்காட்டியுள்ளார். இந்தச் சராசந்தனே அமண நூல்களில் புஷ்ய மித்திரனாகக் காட்டப்பட்டானோ? ஜராசந்தனை இரண்டாகப் பிளந்து மாற்றிப்போட்டு வெற்றி கண்ட வீமனே போரவைக் கோ பெருநற்கிள்ளி எனப் பழந்தமிழ்ப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. மேற்கோளாகக் குறிப்பிடும் பாடலை நச்சினார்க்கினியர் எங்கிருந்து பெற்றாரோ? அப்பாடல் பாரதப்போரில் ஈடுபட்ட முசுகுந்த பரசுராம துர்யோதனனைக் குறித்தது: வரலாற்றை மறைக்கவும் மாற்றவும் சமதக்கினி என ஒருவனைப் புகுத்தியுள்ளனர். "மறங்கெழு வேந்தன்; குறங்கறுத் திட்டபின் அருமறை யாசா னொருமகன் வெகுண்டு பாண்டவர் வேர்முதல் கீண்டெறி சீற்றமொ டிரவூ ரறியாது துவரை வேந்தொடு மாதுலன் றன்னை வாயிலி னிறீஇக் காவல் பூட்டி யூர்ப்புறக் காவயின் ஐவகை வேந்தரோ டரும்பெறற் றம்பியைக் கைவயிற் கொண்டு கரியோன் காத்தலிற் றொக்குடம் பிறீஇத் துறக்க மெய்திய தந்தையைத் தலையற வெறிந்தவ னிவனென துஞ்சிடத் தெழீஇக் குஞ்சி பற்றி வடாஅது பாஞ்சால னொடுமுதற் புதல்வனைக் கழுத்தெழத் திருகிப் பறித்த காலைக் கோயிற் கம்பலை யூர்முழு துணர்த்தலிற் றம்பியர் மூவரு மைம்பால் மருகரு முடன்சமர் தொடங்கி யொருங்குகளத் தவிய வாள்வாய்த்துப் பெயர்ந்த காலை யால்வினைக் கின்னோ ரினிப்பிற ரில்லென வொராங்குத் தன்முதற் றாதையொடு கோன்முத லமரர் வியந்தனர் நயந்து; விசும்பின் இயன்றதா யுலகமு மறிந்தா லதுவே" -பாஞ்சாலம்-திரௌபதி-பெண்ணல்ல-நாடு-திருப்பதி-பாஞ்சாலி; குறங்கறுத்தல்= தொடைபிளத்தல்-பிராமணரைப் பேணும் தொடையிற்பிறந்த வைசியர் தொடர்பை நீக்குதல்; மறங்கெழு வேந்தன்=தருமன்= கரிகால்; சமதக்கினியைப் பேணிய வைசியரின் தொடர்பைத் துண்டித்ததால் சமதக்கினியின் மகன் பரசுராம துர்யோதனன் வெகுண்டு சத்திரியரைப் பழிவாங்கினான் என்றெல்லாம் எங்கெங்கோ செல்கிறது. இடையன் எறிந்த மறம்: பழமொழி நாநூறு -செய்யுள்- 224ல் முடியாத செயலை முடியும் எனக் கூறி இக்கட்டான நிலையில் இருப்பவனை இப்பழமொழியால் குறிப்பார்கள். பெரியாழ்வாரின் பெரியதிருமொழி- "இடையன் எறிந்த மரமே ஒத்திராமே" என்று இக்கட்டிலிருந்து விடுபடவேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறார். சீவகசிந்தாமணி- செய்யுள்- 19. 14: சீவகன் "இடைமகன் கொன்ற இன்னா மரத்தினேன்" எனத் திருமாலின் அருள்பெறாமல் இருப்பதை நினைவுகொள்வதைக் காட்டுகிறது. இவற்றுக்கான உண்மைப் பொருள் என்ன என அறியாமல் தடுமாறியதாகக் குறிப்பிடும் உ. வே. சா; திருப்பனந்தாள் மடத்தில் ஒரு முதிய இடையரிடம் விளக்கம் பெற்றதாகக் குறிப்பிடுகிறார். அந்த முதிய இடையர் குறிப்பிட்டது "இடையன் வெட்டு அறா வெட்டு" என்பதாகும். வெட்டப்பட்ட கிளை மரத்திலேயே தொங்கிக்கொண்டிருக்கும்; கீழே விருந்துவிடாதவாறு வெட்டப்பட்டிருக்கும். அதனால் கிளையும் செத்திவிடாது கிளைத்து வளரும், கால்நடைகளும் அதனை மேய்ந்து பசியாரும்; "கிளையறா வெட்டு". நானும் பழந்தமிழ்ப் பாடல்களில் இதுபோன்ற செய்தி உள்ளதாகப் படித்தது நினைவுக்கு வந்தது. ஆனால் எந்தப் பாடலில் உள்ளதென்பதை அறிய மீண்டும் எல்லாப் பாடல்களையும் புரட்டிப்பார்க்க நேர்ந்தது. இறுதியில் புறநாநூறு- 58: "நீயே தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக் கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத் தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீ இ இளையது ஆயினும் கிளையறா எறியும்.. .." என்ற பாடலைப் பிடித்தேன். இப்பாடலின் இடையில் இடம்பெற்ற "இளையது ஆயினும் கிளையறா எறியும்" என்ற அடி, உ. வே. சா அவர்களின் கண்களில் படாமல் போயிருக்குமோ? இந்தப் பாடல் என்னதான் சொல்கிறது. திருமாவளவன்= கரிகால்சோழனின் தங்கையும்; பரசுராம துர்யோதனனால் கெடுக்கப்பட்டுக் கருவுற்று நல்லியற்கோடனான செங்குட்டுவனை ஈன்ற; தாயான நல்லியற்பாவையின் நிலையையும் குறிப்பிடுகிறது. பெண்வழிச்சமுதாயம்தான் அன்று இருந்தது என்பதையும் "கோளி ஆலத்துக் கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத் தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கள் செல்லாது நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇ இளையது ஆயினும் கிளையறா எறியும்" என இந்தியனல்லாத பரசுராம துர்யோதன துவர்வாய் நயவனுடன் தொடர்புகொண்டதால் பெற்ற புதல்வன் சூரியகுலச் சோழரின் வாரிசாக எஞ்சி நிற்பதைக் காண்கிறோம். அகநாநூறு 212 பரணர்: "தாஇல் நன்பொன் தைஇய பாவை விண்தவழ் இளவெயிற் கொண்டுநின் றன்ன மிகுகவின் எய்திய .. .. ..துவர்வாய் நயவன்.. .. அணங்குசால் அரிவையை நசைஇப் பெருங்களிற்று இனம்படி நீரின் கலங்கிய பொழுதில் பெறலருங் குரையள் என்னாய் .. .. .. .. . விரவுமொழித் தகட்டூர் வேண்டுவழிக் கொளீஇ மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன் பொருமுரண் பொறாஅது விலங்குசினஞ் சிறந்து செருச்செய் முனைப்பொடு முந்நீர் முற்றி ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய .. .ஆனாது எளியள் அல்லோட் கருதி விளியா எவ்வம் தலைத்தந் தோயே" என செங்குட்டுவன் தனது தாய் பாவைக்காகத் தந்தை துர்யோதனனுக்கு எதிராக அர்ச்சுனனாகச் செயல்பட்டதைக் காண்கிறோம். போர்க்களத்தில் தாயாதி உறவுகள் ஒருபக்கமும் தந்தை துர்யோதனின் உறவுகள் ஒரு பக்கமும் என நின்றபோது தடுமாறியதையும் ஒரு பாடல் காட்டுகிறது. புறநாநூறு 294: “வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக் கண்கூடு அத்த கடல்மருள் பாசரைக் குமரிப் படைதழீஇய கூற்றுவினை ஆடவர் தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து ' இறையும் பெயரும் தோற்றி நுமருள் நால்முறை தபுத்தீர் வம்மின் ஈங்கு'எனப் போர்மலைந்து ஒருசிறை நிற்ப யாவரும் அரவுஉமிழ் மணியின் குறுகார் நிறைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே" என; மாபாரதப்போர்க்களத்தைக் காட்டும் பல பாடல்கள் உள்ளன. புறம்:336,343,352,354,369 ஆகியவற்றில் பரணர்; மட்டுமின்றி, பெண்புலவர்களும் பாவைக்காக வருந்திப் பாடியுள்ளனர். பரணரின் அகநாநூறு ஆறாம் பாடலில் பல்வேறு வரலாற்றுத்தகவல்கள் இடம்பெறுள்ளன. 'ஆக வனமுலை அரும்பிய சுனங்கின் மாசில் கற்பின் புதல்வன் தாய்' 'வெய்யோள்' பாவையுடன் காவிரியில் 'பூந்தார் குழைய நெருநல் ஆடினை புனலே' என துர்யோதனனிடம் பாவையின் துயரத்தை நன்கு உணர்ந்த பரணர் அவனது நாட்டுக்கே தூதுசென்றதும், பாவையையும் புதல்வனின் பிறப்பையும் பழித்துரைத்த துர்யோதனனையும் உணர்த்தி; பாவை அவனை நீங்கித் தனது மகன் செங்குடுவனுடன் வாழ்ந்ததை யும்; தனது முதுமைக் காலத்திலும் பாவைக்காக வருந்தும் பரணரின் சலிப்பையும் காண்கிறோம். குறுந்தொகை- 26: கொடியோனான துவர்வாய்நயவன் கெடுத்ததை மறைத்துப் பொய்யுரைத்ததை; பூக்கொய்யும் பெண்டிர்போன்ற தோகையுடைய மயில் இருக்கும் வேங்கை மரங்களையுடைய மலை நாட்டவனின் தந்தையும் அறிவான் என்கிறது. சிலப்பதிகாரம்: ஆரிய மன்னர் ஐயிரு பதின்மரை, 'சீர்கெழு நன்னாட்டுச் செல்க' என்று ஏவி- தாபத வேடத்து உயிர் உய்த்து பிழைத்த மாபெருந் தானை மன்ன குமரர்; சுருளிடு தாடி,மருள்படு பூங்குழல், அரிபரந்து ஒழுகிய செழுங்கயல் நெடுங்கண், விரிவெண் தோட்டு,வெண்ணகைத் துவர்வாய்ச், சூடக வரிவளை,ஆடமைப் பனைத்தோள், வளரிள வனமுலை,தளரியல் மின்னிடை, பாடகச் சீறடி,ஆரியப் பேடியோடி; எஞ்சா மன்னர் இறைமொழி மறுக்கும் கஞ்சுக முதல்வர் ஈர்-ஐந் நூற்றுவர்;" என பிரகத்தன் முதலானோர் தோற்றொடியதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. மேலும் இதில் இடம்பெறும் கஞ்சுக மாக்கள் மற்றொரு இடத்தில்: "நீலன் முதலிய கஞ்சுக மாக்கள்" எனவும் இடம்பெற்றுள்ளனர். பாவைக்கு எதிராகவும் முசுகுந்தநுக்கு ஆதரவாகவும் பிரகத்தன்; அகநாநூறு- 27ல்: ” 'கொடுவரி இரும்புலி தயங்க; நெடுவரை நாம்அழ .. .பொருட்பிணிச் சென்றிவண் தருமார் செல்ப' என்ப, என்போய்; நல்ல மடவை மன்ற; நீயே; வடவயின் வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை.. .. துவர்வாய் தகைப்பத் “தங்கலர்” ஆயினும், இகப்ப யாங்கனம் விடுமோ? மற்றே - தேம்படத் தெள்நீர்க்கு ஏற்ற திரள்காற் குவளைப் பெருந்தகை சிதைத்தும் அமையா; பருந்துபட; வேந்துஅமர்க் கடந்த வென்றி நல்வேல்; குருதியொடு துயல்வந் தன்னநின் அரிவேய் உண்கண் அமர்ந்த நோக்கே?”எனப் பல ஐயங்களை முன்நிறுத்தி; பாவை அழ பிரிந்துசெல்லும் துர்யோதனனக் காட்டுகிறது. துர்யோதனனுக்கு 'அத்தன்' எனவும் ஒருபெயர் உண்டு; அத்தனுக்கும் பிரகத்தனுக்கும் என்னவேறுபாடு?; சாதத்துக்கும் பிரசாதத்துக்கும் என்ன வேறுபாடோ அதுதான் என்றால் மிகையாகாது. ஒரே தந்தைக்கும் வெவ்வேறு -ஒருத்தி பாப்பாத்தி-பெண்களுக்கும்; பிறந்தனரோ? சிறந்த அந்தணராகக் கருதப்படுபவர் கடைப்பிடிக்கும் ஒழுக்க மேன்மைகள் குறித்தும் பலபாடல்கள் உள்ளன. பிராமணர் என்போர் அப்போது உருவாகவில்லை என்பதும் அமணத்தைப் பரசுராம துர்யோதன மகாவீர் கைப்பற்றிய பின்னரே பார்ப்பனராக ஏற்கப்பட்டோர் தங்களைப் பிராமனராக அறிவித்துக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடிப்படை விதியாகத் 'முருகாற்றுப் படை' அடி 177முதல் 189முடிய; தமிழ் அந்தணர் மேற்கொள்ளும் நெறிகள் குறித்து நக்கீரர்: "இருமூன் றெய்திய வியல்பினின் வழாஅ திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி யருநான் கிரட்டி யிளமை நல்லியாண் டாறினிற் கழிப்பிய வறனவில் கொள்கை மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத் திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல" எனக் குறிப்பிடுகிறார். பிராமணர் யார்? சந்திரகொற்றன் மற்றும் சத்தியவதி குறித்துப் புத்தனின் கூற்றாக அம்பத்த சூத்தா மற்றும் லோகிக்க சூக்தா ஆகியவற்றில் உள்ளவற்றைச் சுருக்கமாகக் காணலாம்: "அம்பத்தா! ஒக்ககா(என்னும் சாக்கியகுடியின் அரசன் சந்திரகொற்றன்) தனது ஆசை மனைவி(ஹெலன்- சத்தியவதி)யின் விருப்பப்படி மூத்தமனைவியின் ஐந்துகுழந்தைகள்; ஒக்கமுகா, கரண்டா, ஹத்தினிகா, சினிபுரா மற்றும் ஒரு பெண்(பெயர் இல்லை)ஆகியோரை நாடுகடத்தினார். சாக்கிய ஒக்ககா மன்னனிடம் திசா என்னும் அடிமைப் பெண் இருந்தாள்; அவளுக்குக் கருப்பான குழந்தை(வியாசன்) பிறந்தது. பிசாசைக் கருப்பானவன்-கன்ஹா என்றனர்; அதிலிருந்து தான் கன்ஹயனா எனும் பெயர் வந்தது. அம்பத்தா! இப்போது உனது மூதாதையர் கன்ஹனர்(கங்கர்=கொங்கணர்?) என்பதையும் அவர்கள் சாக்கியர்களின் அடிமைப்பெண் திசாவின் பரம்பரையில் பிறந்தவர்கள் என்பதையும் காண்கிறாய்." என உரைத்து; அம்பத்தா! உனது பரம்பரையைக் கண்டுகொண்டாயா? என வினவினார். அம்பத்தா அதனை ஏற்பதாகச் சொன்னான். அங்கிருந்தோர்; 'அம்பத்தா அடிமைப்பெண் பரம்பையில் வந்ததாக அமணகோதமர் கூறுகிறார்' என இழிவாகப்பேசினர், (லோகிக்கா சூத்தாவிலும் புத்தரை அமணகோதமர் என்றே குறிப்பிட்டுள்ளனர்) அதனை அடக்கிய புத்தர்: "கன்ஹா வளர்ந்து ஒரு பெரிய ரிஷியானான்; தக்கணம் சென்று மந்திரங்கள் கற்றுத் திரும்பிவந்து ஒக்ககா மன்னனின் மகளான மத்ரூபியை(ஒரு நாடு; அதற்கு அரசனாக்க) மணமுடிக்கக் கேட்டான்; அடிமைக்குப் பிறந்தவன் தனது மகளை மணமுடிக்கக் கேட்டதும் கோபமடைந்த மன்னன் தனது வில்லில் அம்பு தொடுத்தான்; ஆனால் அம்பைச் செலுத்தமுடியவில்லை; அதனால் அச்சமுற்ற மன்னன் மத்ரூபியை (நாட்டை)க் கன்ஹாவுக்குக் கொடுத்தான்" என மேலும் விரிவாக உள்ளது. அம்பு என்பது படையையே குறிக்கும் ஒரு படிமம். சந்திரகொற்றனுக்கும் ஹெலன் சத்தியவதிக்கும் பிறந்த துர்யோதனாதியரே பரசுராமன் எனப் பார்கவ பிராமணராக மாபாரதத்தில் புகுத்தப்பட்டனர். முன்னர் அவர்கள் பார்ப்பனராக்கப்பட்டனர். சந்திரகொற்றனின் முன்னோரைப் பிப்பிலிவன= அத்திமரக்காட்டு மூதாதையர் என்பர். அத்திமாலை சோழரின் பூமாலையாகும்; செங்குட்டுவனுக்கும் அத்தி என ஒரு பெயர் உண்டு. காரணம் சோழ- சூரியகுலப் பெண்ணுக்கும் பார்ப்பனப் பரசுராமனுக்கும் பிறந்தபோதிலும் தனது தாயையும் தனது தாய்மாமன் கரிகால்சோழனையும் சார்ந்தே அவன் வாழ்ந்தான் என்பதாகும். பௌத்த நூல்களில் கௌசாம்பியரை முருடர் எனவும் கள்ளுண்போர் எனவும் குறிப்பிடக் காண்கிறோம். கோசாம்பியரின் தலைவன் அழிக்கும் தொழிலை மேற்கொண்டவனெனக் குறிப்பிட்டுக் கோசர் குடியில் அவதரிக்க மறுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். புத்த சாதகக்கதைகளில் சுரா பானம்= கள் அல்ல; மேலைநாட்டினரின் சோமபானம் போன்றது; அதனை அருந்தக்கூடாது எனப் புத்தர் கோசாம்பியருக்கு அறிவுறுத்திக் கழுவாய்புரிய வேண்டும் என விதித்ததாகவும் உள்ளது. வத்சன் என்னும் அரசன் ஆண்ட நாடு வத்சதேசம் எனப்பட்டது. அவனை முதற்கோசனாகக் குறிப்பிடுகின்றனர். இந்த வத்சராசனின் மகனே பெருங்கதையின் உதயணன். பெருங்கதை: "வாழ்த லாற்றான் வாய்மொழி யரசன்" எனக் குறிப்பிடுகிறது. இதுவும் ஒரு நீண்ட வரலாறுதாண் பிரகத்கதா என்ற குணாட்டியரின் நூலே பெருங்கதை எனப்பட்டது. அந்நூல் முற்றிலுமாகக் காணாமல் போய்விட்டது. காரணம் அந்நூல் பிரகத்தனின் வரலாற்றையும் அவனுடன் தொடர்புகொண்டு இந்தியாவை அடிமைகொள்ள நினைத்த அலெக்சாந்தன் மற்றும் துர்யோதனன் ஆகியோரின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதென்பதை அதன் பெயரே வெளிப்படுத்துகிறது. அடுத்ததாக கொங்குவேளர் என்பவரும் ஒரு பிரகத்கதா நூலை எழுதியுள்ளார். அதன் முன்னுரை, பாயிரம் மற்றும் முதல் காண்டமும் இறுதிக் காண்டமும் காணாமல் போய்விட்டன. கோசம் என்பது உறுதிமொழியைக் கடைப்பிடிப்பதைக் குறிக்கும். ஆயினும் மகாவீரால் கைப்பற்றப்பட்ட ஒரு பிரிவினரான கோசர் என்போர் நல்வழியில் நடந்தோராகத் தமிழ்ப்பாடல்களில் இல்லை. காளிகோயிலிலும் வைரவர் கோயிலிலும் அபிமந்திரித்த நீரைக் குடித்து உறுதிகொள்வது; ரத்தகோசம் என்பது வாய்மையிலும் நட்பைப் பிழையாமல் கடைப்பிடிப்பதைக் குறிக்கும்; ஹஸ்தி கோசம் என்பது யானையை மட்டுமே எதிர்ப்போர்; வீரகோசம் என்பது தன்னை எதிர்க்கும் வீரரை எதிர்ப்போர் எனக் காண்கிறோம். செங்குட்டுவனின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வேளிரிடமிருந்து பிரிந்து சென்றோரான கோசர் சேர்ந்துவிட்டனர் எனத்தெரிகிறது. வத்சரை குருகுலத்தின் வழியினர் என்பதை; "சோழன் உய்யவந்தான் குருகுல ராயன்" எனக் கல்வெட்டுக்கள் குறிப்பிடு கின்றன; பெருங்கதையில்; வத்சராயனின் மறுபெயர் குருகுல ராயன் என்பதாகும்; உதயணனைக் குருகுலக் குருசில் என்கிறது. (4-15: 26-27) "கோடாதுயர்ந்த குருகுலக் குருசில் வாடா நறுந்தார் வத்தவர் பெருமன்" எனக் குறிப்பிடுகிறது. பெருங்கதையில் "ஐம்பெருங்குழுவும் அத்திகோசமும்" என்னும் தொடர் உள்ளது. அத்தி என்பது செங்குட்டுவனுக்கும் பொருந்தும். அத்திமாலையைச் சோழரின் ஆத்திமாலை எனக் குறிப்பிடுகின்றனர். வத்ஸன் என்பது சீனரின் பௌத்த நூல்களில் வம்சன் என வழங்கப்படுகிறது; நமது நூல்களில் வஞ்சன் எனவும் குறிக்கப்பட்டுள்ளனர். பாண்டியருள்ளும் வத்சராயன் எனக் குறிப்பிடப்பட்ட சாசனங்கள் உள்ளன. கொளுவில் சேரமான் வஞ்சன் எனச் சோழனைச் சேரனாகக் குறிப்பிட்ட புறநாநூறு- 398: "மதிநிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர .. .. வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன் நகைவர் குறுகின் அல்லது பகைவர்க்குப் புலியினம் மடிந்த கல்லளை போலத் துன்னலம் போகிய பெரும்பெயர் மூதூர்" எனக் குறிப்பிடுகிறது. காரணம் செங்குட்டுவனின் தாய்வழியினர் சேரலத்தினர். புத் எனும் அரபுச்சொல் உருவச்சிலையைக் குறிப்பததென அம்பேத்கர் குறிப்பிடுகிறார். பகுத எனவும் காணப்படுகிறது; பகுதகச்சாயனர் என ஒரு கணியர் அறிவாளராக இருந்துள்ளதையும் காண்கிறோம். ஐரோப்பா கிரேக்கம் பிரிட்டன் (கெல்தியர்) நாடுகளிலும் பௌத்தம் இருந்ததென 'கிருத்துவுக்குமுன் பௌத்தம்' நூலில் டோனால்டுமெக்கன்ஸி தவறாகக் குறிப்பிடுகிறார். கரிகால்சோழனின் நெறிகளை ஏற்ற நாடுகளெல்லாம் பௌத்த மதத்தை ஏற்றதாகக் கொள்வது ஏற்புடைய தல்ல. அமணகோதமரின் நெறிகளைக் கைப்பற்றிய ஒரு அடிமை(சிங்களர்)இனம்; பின்னாளில் தோற்றுவித்ததே புத்தம். லோகிக்காசூத்தா: இதில் "அமணகோதமர் ஒரு அர/றகதர்(அறவர்); முற்றும் உணர்ந்து மேலுலகில்(மகதம் மற்றும் கிரேக்கத்தில்) வாழும் தேவர், பிராமணர், மாரர்?(பார்கவரோ?); கீழுலகில்(தென்னகத்தில்) வாழும் அமணர், மன்னர்கள், அந்தணர், மக்கள் ஆகியோரை அறிந்து மற்றவர்களுக்குக் கூறுகிறார்; வழிகாட்டியாக உள்ளார்" என மக்கள் குறிப்பிடுவதாக உள்ளது. "பொருளும் சாரமும் இல்லை; மாற்றம் மட்டுமே உள்ளது"; என்ற புத்தனின் கூற்று மாபாரதத்திலும் உள்ளது; தமிழ்ப்பாடல் ஒன்றில் "நிலையாமையே நிலையிற்று" என உள்ளதே கரிகால்=புத்தனின் கண்டுபிடிப்பு என்பதைப் பல தமிழ்ப்பாடல்கள் உணர்த்துகின்றன.

Wednesday 4 December 2013

மதுரையை எரித்தவர் சோழரே

மதுரையை எரித்தவர் சோழரே - ஸ்ரீராமகிருஷ்ணபரஹம்சன் புறநாநூறு :367: இந்தப் பாடலில் ஒரு சூரிகுலச்சோழன்; தேவையானதையெல்லாம் செய்து கொடுத்தும் உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்த பார்ப்பனரை நினைந்து வருந்துகிறான். “ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து” புறநாநூறு- 361: பெருமளவில் பல அடிகள் நீக்கிச் சிதைக்கப்பட்டுள்ள இப் பாடலில் கேள்விக்குரிய வேள்வியைத் தடுத்து நிறுத்த முயன்ற அந்தணர் தண்டிக்கப்பட்டபோது அவர்களுக்காக ஆட்சியை இழந்தாலும் அதற்காக அஞ்சாமல் அந்தணரைக் காத்துநின்ற சூரியகுலச்சோழனைப் புகழ்கிறது. "காரெதிர் உருமின் உரறிக் கல்லென ஆருயிர்க் கலமரும் ஆராக் கூற்றம் நின்வரவு அஞ்சலன் மாதோ நன்பல கேள்வி முற்றிய வேள்வி அந்தனர்க்கு அருங்கல நீரொடு சிதறிப் பெருந்தகைத் தாயினன்று பலர்க்கீத்து" சிலப்பதிகாரம்- துன்பமாலை- 51- 54: " 'காய்கதிச் செல்வனே கள்வனோ என்கணவன்?' எனச் சூரியகுலச் சோழனைக் கேள்விகேட்கிறாள் ஒரு பெண்; 'கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய் ஒள்ளெரி உண்ணுமிவ் வூரென்ற தொருகுரல் என்றனன் வெய்யோன்" அதற்கு வெய்யோனான சூரியச்சோழன்; 'இல்லை, கள்வனல்ல' எனச் சொல்கிறான். மேலும் கள்வனெனக் குற்றம் சுமத்தியவனது கூடல் நகர் எரியூட்டி அழிக்கப்படும் எனவும் சொல்கிறான். சிலப்பதிகாரம் வஞ்சினமாலை- 47- 57: இதில் அங்கி எனச் செவ்வாய்- சேஎய் தோன்றி 'என்ன செய்ய வேண்டும்' என அப்பெண்ணைக் கேட்கிறான். இதில் அங்கியைப் பார்ப்பனக்கோலத்து வந்ததாகக் குறிப்பிடுவது பொருளுடையது. காரணம் சேஎய்- செவ்வாய்- அங்கி; பார்ப்பனனுக்கும் சோழகுலப் பெண்ணுக்கும் பிறந்தவன் என்பதாகும். இவ்வரலாறு மிகநீண்டது. அப்பெண் சிலரை நீக்கித் தீத்திறத்தோரை மட்டும் அழிக்கச் சொல்கிறாள். பாடலில் அழிக்காமல் நீக்கச் சொல்லப்பட்டோருள் பார்ப்பனர் என்னும் சொல் இடம்பெற்றுள்ளது; அதனை அந்தணர் என மாற்றினால் பாடலின் அடி இயல்பானதாகத் தோன்றுகிறது. நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப் பால்புரை வெள்ளெயெற்றுப் பார்ப்பனக் கோலத்து மாலை எரியங்கி வானவன் தான்தோன்றி 'மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள் பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர் ஏவ லுடையேன் யார்பிழைப்பார் ரீங்கென': 'அந்தணர் அறவோர் பசுபத் தினிப்பெண்டிர் ரத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்'கென்று காய்த்தீயை பொற்கொடி ஏவப் புகையழல் மண்டிற்றே நற்றேரான் கூடல் நகர்" குறள்: "அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக ழான்" என்கிறது. மேலும் "மறப்பினும் ஓத்து கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்" எனவும் குறிப்பிடுகிறது. புறநாநூறு- 9: இப்பாடல் ஒருவனை நெடியோன் போல வாழ்க என வாழ்த்துகிறது. இப்பாடலிலும் பார்ப்பன என்ற சொல்லை அந்தண என மாற்றினால் பாடல் இயல்பானதாகத் தோன்றுகிறது. "ஆவும் ஆனிய அந்தண மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போர்ப் புதவர்ப் பெறாஅ தீரும் எம்அம்பு கடிவிடுதும் நுன்அரண் சேர்மின்என கொல்களிற்று மீமிசை கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ வாழிய குடுமி தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த முந்நீர் விழவன் நெடியோன்" பார்ப்பனர் வருகை ஒருகாலத்தில் பார்ப்பார் இல்லை. பிறநாட்டினர் இங்குவந்து நாடுகளைக் கைப்பற்றியபோது நிகழ்ந்த புணர்வுகளாலும் பூசல்களாலும் பிறந்து பெருகிய பார்ப்பாரை ஏற்கவேண்டிய சூழல் துவங்கியதாகத் தமிழ்ப் பாடல்கள் உணர்த்துகின்றன. ஒழுக்கம் மேன்மை பெற்றதாக, மானத்தோடு கூடியதாகவும், மானம் கெடின் உயிர்நீக்கும் நிலையும் இருந்தது. இந்நிலை சீரழிந்த சூழ்நிலை மிகநீண்ட வரலாற்றைக் கொண்டது என்பதால் சுருக்கமாகக் காண்போம். அந்தணர் தமிழர்; பார்ப்பனர் என்போர் விரதியச்சடங்கு செய்து தென்னகத்தில் அந்தணமுனிவர் சமூகத்தோடு சேர்க்கப்பட்டனர் என்பதை; திரு ஹரஹரப் பிரசாத் சாஸ்த்திரி அவர்களின் "பௌத்த ஆய்வுகள்" என்ற நூல்: “விரதியரைத் தூய்மைப்படுத்த வேண்டி நிகழ்த்தப்பட்டதும், 'பஞ்சவிம்ச' பிராமணத்தில் கூறப்பட்டிருப்பதும் ஆன இச்சடங்கு வேதகாலச் சடங்குகளுக்கு மாறுபட்டதாக இருந்தது. பிற சடங்குகளில் வேள்விக் கூடத்தில் ஒரு வேள்வியாளரும் அவரது துணைவியும் இருக்க, இச்சடங்கில் ஆயிரக்கணக்கில் வேள்வியாளர்கள் இருந்துள்ளனர், இச்சடங்கின் முதல்வனாகக் 'குலபதி' இருக்க மற்ற அனைவரும் குலபதியைத் தொடர்ந்து சென்றனர். ஒரே சடங்கில் ஆயிரக்கணக்கில் விரதியரை (தமிழ்) அந்தனர் சமூகத்தில் சேர்த்துக்கொள்வதற்கான உபாய மென்று நான் கருதுகிறேன். இதுபோன்ற சடங்குகள் அடிக்கடி நிகழ்ந்தன, கூட்டம் கூட்டமாக ஆரியர் நிலைத்துஓரிடத்தில் வாழும் நிலைமைக்குக் கொண்டுவரப்பட்டனர். இவர்கள் தங்கள் விரதிய வாழ்க்கையில் வைத்திருந்த உடைமைகளை உடன் கொண்டுவர அனுமதிக்கப்படவில்லை, அவற்றை இன்னும் விரதியராகவே வாழ்பவருக்கு அல்லது மகததேச பிராமணருக்கு விட்டுவிட்டு வர வேண்டும். வேறொரு இடத்தில் நான் குறிப்பிட்டுள்ளபடி மகததேச பிராமனர் என்போர் [தமிழ்முனிவர்] அந்தனர்களால் தாழ்நிலையினராக கருதப்பட்டவர்கள். அதுமட்டுமின்றி அவர்கள் ஒரு சிறந்த [தமிழ்முனி]அந்தனரான உயரிய திறனைப்பெற்ற 'கௌசிதாகி' என்ற புனிதமடைந்த [முனிவ] அந்தனரையும் பெற்றனர்”; எனக் குறிப்பிடுகிறார். புலவர் எனவே புஷ்யமித்திரனால் துரத்தப்பட்ட ஆரியர்க்கும்; ஆரியவரசன் பிரகத்தனுக்கும் மகதத்தைக் கைப்பற்றி இழந்த பார்ப்பனர்க்கும் தண்தமிழ்க் கல்வியை அந்தனர் கபிலர் பயிற்றியது உறுதிப்படுகிறது. மேலும் கௌதாகி முனிவர் எனக் கபிலர் குறிக்கப்படுவதால் விசுவாமித்திரகுல அந்தணராகிறார். தன்னை அந்தனன் என்று புறநாநூறு- 200 மற்றும் 201ல் அவரும் குறிப்பிடுகிறார். அவரிடம் பயின்ற விரதியரையே குறுந்தொகை- 156: "பார்ப்பன் மகனே பார்ப்பன மகனே செம்பூ முருக்கின் நன்னார் களைந்து தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே எழுதாக் கற்பின் நின்சொ லுள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்து முண்டோ மயலோ இதுவே" என "படிவ உண்டிப் பார்ப்பனர்" எனக் குறிப்பிடுகிறது. கற்பும் களவும் பழந்தமிழ்ப் பாடல்கள் கற்பு குறித்து எந்த விதிமுறையையும் தெரிவிக்கவில்லை. பார்ப்பனரான அந்நிய பிராமனர் வந்த பின்னரே இதுகுறித்த சிந்தனை தோன்றியதைக் காண்கிறோம்: குறுந்தொகை- 156: "பார்ப்பன் மகனே பார்ப்பன மகனே செம்பூ முருக்கின் நன்னார் களைந்து தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே எழுதாக் கற்பின் நின்சொ லுள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்து முண்டோ மயலோ இதுவே" என ஒரு பார்ப்பனன் பண்புமீறிப் பெண்ணைக் கெடுத்து ஓடிவிட்ட காலத்து; கெடுத்தவனைப் பெண்ணுடன் மீண்டும் பிணைக்கும் மருந்து - கரணம் - விதிமுறை உள்ளதா? என வினவக் காண்கிறோம். ஒரு சோழநாட்டு அரசர்குடிப் பெண்ணை ஒரு பார்ப்பனன் கெடுத்து விட்டுப்பிரிந்து ஓடிவிட்டதால் அப்பெண்; தானும் தனது நெஞ்சும் வருந்த; பாடும் பாடல்கள் ஆயிரக்கணக்கில் இடம்பெற்றுள்ளன. இதனை உறுதிசெய்ய; பாவையுடன் அந்தப் பார்ப்பனனைச் சேர்க்கத் தூதுசென்ற புலவர் பரணர்: நற்றிணை- 247ல்: " .. .கோடுயர் நெடுவரை ஆடும் நாடநீ நல்காய் ஆயினும் நயன்இல செய்யினும் நின்வழிப் படூஉம் என்தோழீ; நல்நுதல் விருந்திரை கூடிய பசலைக்கு மருந்துபிறி தின்மைநன் கறிந்தனை சென்மே" எனக் குறுந்தொகை 156 குறிப்பிட்ட மருந்தை வேண்டுகிறார். பல ஆண்டுகளுக்கு பரணர் தனது முதுமையிலும் இப்பெண்ணுக்காக வருத்தும் பாடல்களும் உள்ளன.